Sunday, June 5, 2011

ஜல்சா குருவா? சாதனை குருவா? – (1,2 மற்றும் இறுதி பகுதி )

1


” அன்புள்ள பதிவர் தமிழ் வெறியனுக்கு ,
நான் உங்கள் எழுத்துக்கு அடிமை. ஒரு நல்ல எழுத்து , ஆயிரம் நல்ல மனிதர்களுக்கு சமம் என என் சத்குரு சொல்வதை நிரூபித்து வருகிறீர்கள்… ஒரு முறை என சத் குருவை நீங்கள் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர் ஆசி கிடைத்தால் இன்னும் சிறப்பாக நீங்கள் எழுத முடியும். உங்கள் வாழ்வில் நம்ப முடியாத மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். அவர் நடத்தும் முதல் கட்ட தேர்விலெயே பலர் தோல்வி அடைந்து வெளியேறி விடுவார்கள்… ஒரு வயது பெண்ணுடன் , ஒரு மணி நேரம் தனியாக இருக்கும் சோதனை முதல் கட்ட தேர்வாக நடக்கும். அதில் தேர்ச்சி அடைய உங்களை போல திட சித்தம் கொண்டவர்களால்தான் முடியும் என்பதாலேயே உங்களை அழைக்கிறேன்.
அன்புடன்,
துடியலூர் மெய்யப்பன்…


கடித்ததை படித்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. முக்தி அடைய வகுப்புகள் , முற்பிறவி வினைகளை நீக்க வழிமுறைகள் என்றெல்லாம் இந்த சாமியார்கள் பற்றி பல கடிதங்கள் பிரபல எழுத்தாளர்களுக்கு வருவதுண்டு. அதை அவர்கள் கேலி புன்னகையுடன் புறக்கணிப்பார்கள்.. ஆனால் என்னால் அப்படி புறக்கணிக்க முடியவில்லை..
பதினெட்டு வயது இளைஞன் நான். எனவே எனக்கு முக்தி குறித்தோ , பாவ பதிவிகளை நீக்குவது குறித்தோ அக்கறை இல்லை… பெரிய கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும். எழுத்தாளன் ஆக வேண்டும் எனப்து மட்டுமே என் இலக்கு. ஆனால் இதை எல்லாம் அந்த சாமியார் சாதித்து தருவார் என நான் நம்பவில்லை.. அந்த “ முதல் கட்ட “ சோதனைதான் என்னை சுண்டி இழுத்தது…  ஒரு வயசுப் பொண்ணோட தனியா இருக்கணுமா? ம்ம்ம்ம்ம்…..
கிளம்ப முடிவு செய்தேன்…
************************************************************************
காட்டை அழித்து பிரமானடமாக உருவாக்கப்பட்டு இருந்தது ஆசிரமம் . மரம் நடுவதை பிரச்சாரம் செய்யும் சாமியார் , இப்படி காட்டை அழித்து இருக்கிறாரே என தோன்றினாலும் , வந்த வேலைதான் முக்கியம் என சொல்லிக்கொண்டேன்.. ஆசிரம பெண் என்னை வரவேற்றாள்..
”  சத்குரு வாழ்க… சார் , இங்கே தியான பயிற்சி, வாழ்வியல் பயிற்சி என பலதும் உண்டு .. ஞானம் அடையும் சர்டிஃபிகேஷன் கோர்ஸ் கூட இருக்கு,, யூ ஆர் என்லைட்டண்ட் பெர்சன் அப்படீனு நாங்க தற சர்ட்டிஃபிகேட் உலக அளவில் மட்டும் அல்ல . பிரபஞ்ச அளவில் மதிப்பு மிக்கது… உங்களுக்கு என்ன வேணும் ? “
“  எனக்கு அதெல்லாம் வேண்டாம் மேடம்.. நான் பெரிய கிரிக்கெட் வீரரா மாறி உலக அளவில் புகழ் பெறணும் . இதற்கு சத்குரு உதவுவாரா? “
“ கடவுளால் முடியாதது கூட சத்குருவால் முடியும். சத்குருவால் முடியாதது யாராலும் முடியாது . கண்டிப்பா அவர் உதவுவார்.. முதலில் உங்களுக்கு சோதனை வைப்போம். அதில் தேறினால் சத் குருவை நீங்க சந்திக்கலாம் “
எனக்கு ஆவல் அதிகரித்தது…
” பக்கத்து ரூம்ல இருங்க… ஒரு வயசுப்பொன்னை அங்கே அனுப்புவோம்.. ஒரு  மணி நேரம் கழிச்சு உங்க நடத்தையை வைத்து , நீங்க உள்ளெயா , வெளியேயானு முடிவு எடுக்கப்படும்.. “
என்னை ரூமில் உட்கார வைத்து விட்டு சென்றாள்..
டென்ஷனாக அமர்ந்து இருந்தேன்..
நேரம் மெதுவாக ஊர்வது போல இருந்தது…
கதவு மெதுவாக திறக்கப்பட்டது..
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை..
உலக அழகை எல்லாம் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது போல இருந்த ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.. திராட்சை நிற கண்கள், ஆரஞ்சு சுளை போல உதடுகள், சதைப்பற்றுள்ள வாளிப்பான நிற மாம்பழங்கள் போன்ற இரண்டு ……… கன்னங்கள்… …
” சத்குரு ஜெய்ஹோ….. வாழ்க..வணக்கம் … ஹி ஹி… “ வழிந்தேன்.
“ வணக்கம் “ அவள் மென்மையாக புன்னகைத்தாள்..
‘ இவளுடன் ஒரு மணி நெரம் என்ன ..ஒரு வாழ் நாள் முழுதும் இருக்கலாமே… சரி , அவள் கையில் என்ன குழந்தை? “
“ குழந்தையை விட்டு விடலாமே.. அதுதான் வசதி .” ஹி ஹி த்தேன்..

” குழந்தையை விடத்தானே நான் வந்து இருக்கிறேன்.. இந்த ஒரு வயது பெண் குழந்தையை அழாமல் எப்படி வைத்து கொண்டு இருக்க போகிறீர்கள் எனப்துதான் சோதனை “ என்றவள் குழந்தையை விட்டு விட்டு வெளியேறினாள்..
அதிர்ந்தேன்..
”ஒரு வயசு”  பெண் என்பது இதுதானா?
கடுப்பாக இருந்தாலும் , வேறு வழியில்லை..
அந்த குழந்தை திடீர் என அழ ஆரம்பிக்க , விதியை நொந்த படி தாலாட்டு பாட ஆரம்பித்தேன்.
****************************************************
” பொறுமைதான் வெற்றிக்கு முதல் படி ..  பிரச்சினையை கண்டு ஓடி விடாமல், அந்த குழந்தையை ஒரு மணி நேரம் பொறுமையாக பார்த்து கொண்டீர்கள்… எனவே சத்குருவை சந்திக்கலாம்”
சத்குருவிடம் அழைத்து செல்லப்பட்டேன்.. உலகை துறந்த சாமியாரின் அறை சகல வச்திகளுடன் அபாரமாக இருந்தது.. நாமும் உலகை துறந்து விடலாமா என்ற ஆசையும் ஏற்பட்டது…

” சாமியார் கண்டிப்பானவர்.. பாத்திரம் அறிந்து பிச்சை போடுபவர்.. கவனமாக பேசுங்கள் “ எச்சரிக்கை என் காதில் ஒலித்தது…

நான் வந்த நேரம், மூன்று நடிகைகள் அவர் முன் அமர்ந்து இருந்தனர்… பயிற்சி வகுப்பு போல..
முதல் நடிகை பேசினாள்..
“ சாமி… படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் என் லட்சியம்.. ஆனால் பணத்துக்காக இதில் தள்ளிட்டாங்க… உடல் ரீதியா பல சமரசங்கள் செய்ய வேண்டியாதா போச்சு… ஆரம்பத்தில் கஷ்டமா இருந்தலும், இப்ப இது எனக்கு பிடிச்சு இருக்கு “
சாமியார் முகம் சிவந்த்தது..
“ பாவத்தை விரும்பி செய்றீயா? இவளை நான் ஏசி ரூம்ல தங்க வைங்க” உத்தரவிட்டார்…
அடுத்த நடிகை..
“ சாமி..ஆரம்பத்துல பல அட்ஜஸ்ட்மெண்ட் செஞ்சேன். அது தப்புனு உணர்ந்துட்டேன்… சினிமா சான்ஸ் இல்லைனாலும் பரவா இல்லை… இனி தப்பு பண்ண மாட்டேன்..
சாமியார் முகம் கனிந்தது “ இவளை ஏஸி ரூம்ல த்ங்க வைங்க..”
மூவரில் அழகாக இருந்த அடுத்தவள் பேசினாள்
“ சாமி.. கலை சேவைக்காகத்தான் நடிக்க வந்தேன்… இது வரை “ தப்பு’ செஞ்சதே இல்லை.. அழகு, திறமையை மட்டும் நம்பியே திரை உலகில் இருக்கிறேன் “
அனைவரும் அசந்தனர்,,
“ இவளை எங்க தங்க வைக்கணும் “ உதவியாளர்கள் பரபரத்தனர்..
“ நீங்க ஒண்ணும் தங்க வைக்க வேணாம்..இவளை நானே என் பெட் ரூம்ல த்ங்க வச்சுக்க்ரேன் “
கேட்ட நான் அதிர்ந்தேன்…சரியான பிராடு சாமியார் போல இருக்கே…
“ சாமி..எனக்கு கொஞ்ச அவசர வேலை இருக்கு  . அடுத்த வாரம் சந்திக்றேன்”
அவசரமாக கிளம்பினேன்..
**************************************************************
ஒரு பிராடிடம் இருந்து தப்பினோம் என நிம்மதியாக வீடு வந்த நான் டீ வியை ஆன செய்தேன்..
ஆச்சரியம்… சிறுவயது தோழன் ராமசாமி டீவியில் பாடிகொண்டு இருந்தான்… சூப்பர் சிங்கர் ஃபைனல்…
ஆர்வமாக கவனித்தேன்,,,
வெற்றி அவனுக்கே….
“ இந்த வெற்றிக்கு காரணம் என் சத்குருதான் குப்பையாக இருந்த என் வாழ்க்கை கோபுரமாக ஆனதற்கு காரணம் அவர் ஆசிதான் “
அவன் பேசியதை பார்த்து திகைத்தேன்..
அவர் உண்மையிலேயே சக்தி மிக்கவரா? நான் தான் தப்பு கணக்கு போட்டு விட்டேனா?


****************************************************************
2

அடுத்த சேனலை மாற்றினேன், என் ரோல் மாடல் , இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சிதானந்தம் பேசிக்கொண்டு இருந்தார்.
” கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார் என்கிறார்கள்… அப்படி படைக்கும் போது அவர் எங்கு இருந்தார் ? யாரும் சொல்ல முடியாது… சரி, பிரபஞ்சத்தை படைத்த கடவுளை யார் படைத்தது?
சுருக்கமாக சொன்னால் கடவுள் என்பது கற்பனையான விஷ்யம்… சாமியார்கள் நம்பாமல் உழைப்பை நம்பினால் வெற்றி நிச்சயம் “
அவர் பேச்சு என்னை ஈர்த்தது…
ஆனாலும் சாமியாரை நம்பலாமா வேண்டாமா என முடிவுக்கு வர முடியவில்லை..
காலிங் பெல் அடித்தது….
பேச்சுலராக இருந்தாலும், மேன்ஷனில் தங்காமல் தனி வீடு பிடித்து தங்கி இருந்தேன்,,, இந்த நேரத்தில் யார் ?
ஒரு வேளை கேர்ள் ஃபிரண்ட் ஷாலினியா?
கத்வை திறந்தேன்..
“ சார்.. நீங்க? .. ?
வந்தவன் ஹிந்தி பட ஹீரோ மாதிரி பளிச் என பொறாமைப்பட வைத்தாலும் , தமிழ் பட ஹீரோ மாதிரி பேசினான்.
“ டேய்.. நான் தாண்டா கிராமத்து நண்பம் பரமசிவம்.,… ஒரு மாடலிங் பிராஜக்ட் விஷ்யமாக வந்தேன்..உன்னையும் பார்க்கலாம்னு வந்தேன் “
திகைத்து போனேன்,.,
ஊரில் ஒல்லி குச்சியாக இருந்த பரமசிவம் ஹீரோ போல ஆகி, மாடலிங் வேறு செய்கிறானா?
ஒரு மணி நேர பேச்சில் என் பொறாமை இன்னும் அதிகரித்தது..
இந்த வயதிலேயே , லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான்…
“ மச்சான்.. எல்லாத்துக்கும் காரணம் சத்குருதான்… அவர் யாருடன் படுத்தால் உனக்கு என்ன? உனக்கு நல்லது நடக்குதா இல்லையா? அதை மட்டும் பாரு..
அவர் யாரையும் ரேப் செஞ்சாரா? இல்லையே?
விரலை பார்க்காதே..விரல் எதை சுட்டி காட்டுதுனு பாரு… அவரை நம்புனா நீயும் பெரிய ஆள் ஆகலாம்… அப்புறம் உன் இஷ்டம் “
அவன் கிளம்பியபோது உறுதி செய்து விட்டேன்.
“ நடப்பது நடக்கட்டும்… சத்குருவை முயற்சித்து பார்க்கலாம் “
**********************************************************************************************************
இந்த முறை சோதனை எல்லாம் இல்லை.. நேரடியாக அவரை பார்க்க முடிந்தது…
புன் சிரிப்புடன் வரவேற்றார்..
“ நீ வருவாய் என எனக்கு தெரியும்.. உனக்கு நல்ல நேரம் வந்து விட்டது… அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் நீ இருப்பாய்..எழுதி வைத்து கொள்”
உறுதியாக சொன்னார்..
என்னால் நம்ப முடியாவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை….
அவரிடமே கேட்டு விட்டேன்..
“ சாமி… இது எல்லாம் எப்படி சாத்தியம் ஆகுது”
சிரித்தார்..
“ வெற்றி = நம்பிக்கை+ வழிகாட்டுதல்+அறிவியல் …..   அறிவியல் சார்ந்த ஆன்மீகம்தான் என் பாணி….  நம்பிக்கை இல்லாத அறிவியல் இயந்திரத்தனமானது….  அறிவியல் இல்லாத வெற்று நம்பிக்கை முட்டாள்தனமானது..
உன் வாழ்க்கை பாடம் ஏற்கனவே துவங்கி விட்டது.. வா..இன்னும் விளக்குகிறேன்”
இன்னொரு அறைக்கு அழைத்து சென்றார்.
இனம் தெரியாத பயத்துடன் பின் தொடர்ந்தேன்


**************************************************************

3

”தமிழக வீரர் தமிழ் வெறியன்  இந்திய அணியில் இடம் பிடித்தார்,,, முதல் போட்டியிலேயே சதம் “

“ எல்லா புகழும் சத் குருவுக்கே , அடக்கத்துடன் பேட்டி “


” தமிழக கிரிக்கெட் வீரர் காதல் திருமணம்.. காதலி ஷாலினியை மணந்தார்.. கிரிக்கெட் அணி கேப்டன் சச்சிதானந்தம், சத்குரு நேரில் வாழ்த்து “

” சத்குரு ஆசி எங்களுக்கே..அடுத்த மாதம் நடக்கும் உலக கோப்பையை இந்தியாவே வெல்லும் - த்மிழ் வெறியன் பேட்டி “

  மிக குறிகிய காலத்தில் நான் அடைந்த வெற்றிகளும், புக்ழும் எனக்கே ஆச்சரியமாக இருந்தன. எனவே மற்றவர்கள் ஆச்சர்யம் அடைவது இயல்பானதுதான்.. ஆனால் எல்லா புகழும் சத்குருவுக்கே என நான் அடக்கத்துடன் சொல்வதுதான் அவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்து சென்றது..

என் அடக்கத்துக்கு காரணம் நன்றி உணர்வு மட்டுமா? வெற்றி கிடைத்தும் எனக்கு ஏன் அமிதி இல்லை... என் நினைவுகள் பின்னோக்கி சென்றன..

சாமியார் தீட்சை அறைக்கு, அறிமுகம் கொடுக்கும் அறைக்கு  என்னை அழைத்து சென்றார்.. ” முதல் நாள் நீ என்னை பார்க்கிறாய்.. நான் நெடுங்காலமாக உன்னை பார்க்கிறேன்.. உனக்கு இன்னும் குழப்பம்.. சரியான இடத்துக்கு வந்து இருக்கிறோமா என சந்தேகிக்கிறாய்.. இந்த ஆல்பத்தை பார்”

ஆல்பத்தை புரட்டினேன்.... பிரபல தொழில் அதிபர்கள்,    நடிகர்கள்,  பிரமுகர்கள்


” இவர்கள் அனைவரும் உன்னைப்போல வந்தவர்கள்தான்.. கல்லாக இருந்த அவர்களை சிற்பமாக ஆக்கியது நான்.. உன்னையும் ஒரு பிரபல கிரிக்கெட் வீரன் ஆக்குவேன்.. இதற்கு கட்டணம் உன் நம்பிக்கை மட்டுமே...காணிக்கை என்பது நீ சாதித்த பின் தந்தால் போதும்... பெரும் பணமாக தரலாம் , அல்லது என்னைப்பற்றி பலரிடன் எடுத்து சொல்லும் விளம்பர ஏஜண்டாக செயலப்பட்டால் பணம் தர தேவை இல்லை... “

அவர் பேசுவதை புரியாமல் பார்த்தேன்.. டென்ஷனில் அவர் முன்பே சிகரட் பத்த வைத்தேன்... “ சாரி சாமி... இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது “

சத்குரு புன்னகைத்தார்... “ இந்த பழக்கத்தை இன்னும் பத்து நிமிடத்தில் மாற்றி காட்டுகிறேன். அப்போதுதான் என் செயல் முறைகள் மீது உனக்கு நம்பிக்கை வரும் “

பதிலுக்கு நான் சிரித்தேன்.. “ பலரின் கண்டிப்புக்கும், என் கேர்ள் பிரண்ட் ஷாலினி அறிவுரைக்கும் மாறாத நான் , இப்போது எப்படி மாறுவேன் ?”

அவர் தீர்க்கமாக என்னை பார்த்தார்...

” அதுதான் என் செயல் முறை .. இப்போது பார் “வீடியோவை ஓட விட்டார்

********************************************************

சத்குரு வழியில் சாதனை பயணம் - வீடியோ ஷோ 

.. ஆசிரமத்தில் செய்யப்பட்ட ஒரு சோதனை .. ஆய்வு கூடம் போல இருந்தது...  பல்வேறு உபகரணங்கள் இருந்தன...

இயல்பு -  உயிரை கொன்று வாழ்தல் 

பசியில் வாடியிருந்த ஒரு பூனை கொண்டு வரப்பட்டது... ஏதாவது உணவு கிடைக்குமா என அதன் கண்கள் அலைபாய்ந்தன...

ஓர் எலி பத்தடி முன் வைக்கப்பட்டது... பூனை ஒரே பாய்ச்சலாக பாய்ந்து எலியை கவ்வியது...

அன்பு வழி 

பூனையை செல்லமாக தடவி கொடுத்த சீடர்கள் , ஊன் மறுத்தல் திருக்குறள் படித்தனர்... கொல்ல கூடாது என அறிவுரைத்தனர் .

அதன் பின் மீண்டும் எலி... மீண்டும் அதே பாய்ச்சல்

ஆன்மீக வழி 


அசைவம் சாப்பிட்டால் முக்தி கிடைக்காது.கடவுள் தண்டிப்பார்.. அடுத்த பிறவியில் எலியாக பிறப்பாய்.. என்பது போன்ற அறிவுரைகள் தரப்பட்டன். மீண்டும் எலி- மீண்டும் பூனை பாய்ந்தது..


சத்குருவின் சாதனை வழி 


பூனை அதன் இடத்தில் விடப்பட்டது.. பத்தடி தூரத்தில் எலி வைக்கப்பட்டது... பூனை உற்சாகமாக எலியை நோக்கி ஓடியது... ஒன்பது அடி சென்ற நிலையில், தூக்கி எறியப்பட்டது பூனை... சுவரில் மோதி கீழே விழுந்தது....  வீடியோ கேமிரா  பூனை ஓடிய பாதையை காட்டியது.. அது சிமெண்ட் தரை அல்ல... இரும்பால் செய்யப்பட்ட தரைப்பகுதி... ஒயர் இணைப்புகள் இருந்தன... அது எலியை பிடிக்க இருந்த கடைசி நொடியில்,  குறைவான அளவு மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருக்கிறது...


மீண்டும் பூனை வழக்கமான இடத்தில். எலி வைக்கப்பட்டது..பூனை சற்று தயங்கியது.. ஆனால் பசி,, மெதுவாக நடந்தது எலியை நோக்கி... ஒன்பது அடியில் பயந்து நின்றது... ஒன்றும் ஆகவில்லை... எலியை பிடிக்கும் கடைசி கணத்தில் மின்சார இணைப்பு கொடுக்கப்பட, தூக்கி எறியப்பட்டது..

அதற்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை.. ஆனால் எலி அரிகில் சென்றால் ஆபத்து என்பது மட்டும் புரிந்துவிட்டது...

மீண்டும் அதே இடத்தில் பூனை... எலி கொண்டு வந்து வைக்கப்படதும், பூனை நடுங்க தொடங்கியது... எதிர்திசையில் பாய நினைத்தது.. ஆனால் ஓட முடியவில்லை..பசி மற்றும் காயம்..

எலியை ஏக்கத்துடன் பார்த்தது ... ஆனால் அதை நோக்கி செல்ல முயற்சிக்கவே இல்லை... ஒரு சீடன் எலிக்கு சற்று தள்ளி தயிர் சாதம் வைத்தான்.. பூனை மெதுவாக நடந்து சென்று, எலியை புறக்கணித்து விட்டு தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்தது,,,.

கடவுளால் முடியாதது , சத்குருவால் முடியும் 


***********************************************************


இவர் சாமியாரா சைக்கோவா .. பயந்து போய் பார்த்தேன்..இந்த வீடியோ மூலம் என்ன சொல்ல விரும்புகிறார்...

அவரை கலவரத்துடன் பார்த்தேன்...

” நோ டென்ஷன்... சிகரட் எடுத்துக்கோ “ கொடுத்தார்... கையில் வாங்கி பற்ற வைத்தேன்..

சுவரில் மாட்டி இருந்த டீ வீ  ஆன் ஆகியது...

வாட் இஸ் திஸ்... திரையில் ஒரு பேருந்து நிலையம். ஷாலினி பஸ்சுக்காக நின்று கொண்டு இருந்தாள்...


சடாரென எழுந்த்தேன்... இந்த சாமியார் ஒரு கிரிமினல்...

அவர் புன்னகைத்தார்,,, ”அந்த சிகரட்டை பற்ற வை...”

பற்றவைத்தேன்...  திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ஒன்று சாலியில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது பாய்ந்தது....

பயத்தில் சிகரட்டை த்வற விட்டேன்.. ஆட்டோ ஷாலினிக்கு சில அடிகள் முன் பிரேக் அடித்து நின்றது...

இந்த சாமியாரை விட கூடாது... செல் போனை எடுத்தேன்..

சாமியார் சிரித்தார்,,, “ யாருக்கு போன் போடணும்... உன் காசை வீணடிக்காதே.. ஆசிரம போனிலேயெ பேசு... யார் நம்பர் வேனுமோ கேளு... நானே தறேன்.. எல்லோரும் என் சீடர்கள்தான் “:

ஒன்றும் செய்வதற்கில்லை...

”இன்னொரு சிகரட் வேணுமா” குறும்பாக கேட்டார்..

சிகரட்டை எடுத்தால் என்ன நடக்கும் என்பது எனக்கு புரிந்து இருந்தது ..

அவர் பேச ஆரம்பித்தார்..

“ இங்கு வரும் சீடர்கள் அனைவரையும் 24 மணி  நேரமும் நாங்கள் கண்காணிப்போம்... நான் சொல்வதை மீறுபாவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள்.. ஆனால் நேரடியாக அல்ல... உதாரணமாக, நீ தவறு செய்தால், தண்டிக்கப்படுவது ஷாலினி... பீ கேர் ஃபுல்...  இதை வெளியே சொல்ல நினைத்தாலும் உடனடி தண்டனை உண்டு....

இந்த முறையை கொடூரமாக தோன்றினாலும், பயன் பெற்றவர்கள் அனேகம்.... நீயும் பயன் பெறுவாய்...

சிகரட் பிடிக்க கூடாது...   எங்கள் கிரிக்கெட் பயிற்சியாளர் கொடுக்கும் கடும் பயிற்சிகள் செய்ய வேண்டும்... இது போல பல நிபந்தனைகள் உண்டு... மீறினால் தண்டனை உண்டு

******************************************************
மாட்டிகொண்டாகி விட்டது.. வேறு வழியில்லை... ஆனாலும் நல்லதுக்காத்தானே இப்படி செய்கிறார் என மனதை தேற்றி கொண்டேன்... என் ஆட்டத்திறன் மேம்பட தொடங்கியது..

“ என்னடா.. என் கூட பேசக்கூட நேரம் இல்லையா”
சிணுங்கிய ஷாலினியை பார்க்க பார்க்க காதலும், பயமும் தோன்றின... தேவையில்லாமல் சாமியாரிடம் சென்று இவளை ஆபத்தில் வைத்து இருக்கிறேனே..

ஆனால் என் வளர்ச்சி அவளுக்கு பிடித்து இருந்தது...

என் திறன் , பயிற்சி இத்துடன் சாமியாரின் செல்வாக்கும் சேர்ந்ததால் அணியில் இடம் கிடைத்தது..


ஷாலினி மேல் இருந்த அக்கறை, அவளுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற துடிப்பு என்னை உயர்த்தியது...

******************************************************

 நம்ப முடியாத அதிர்ஷ்டம்தான்.. நெடுனாள் கனவுதான்.. ஆனால் பெரிய மகிழ்ச்சியெல்லாம் இல்லை.. ஷாலினியுடன் நடந்த திருமணமும், கேபட்ன் சச்சிதானந்தின் அன்பும்தான் எனக்கு கிடைத்த ஆறுதல்..

சாமியாரை சந்திக்க்கும் முன்பு கேப்டன் சச்சிதானந்தை பார்த்து இருந்தால் என் வாழ்க்கை வேறுவிதமாக இருக்கும்.. வாழ்வை தெளிவாக புரிந்து கொண்டவர் சச்சிதானந்தம்...

” தவறு செய்தால் கடவுள் தண்டிப்பாராம்.. ஏன் இந்த வேலை.. தவறு செய்யாத மனிதர்களை உருவாக்கும் ஆற்றல் அவருக்கு இல்லையா?

கோயிலுக்க்கு பாதுகாப்பு அளிப்பது மனிதன்...  கோயிலையே பாதுகாக்க முடியாத கடவுள் மனிதனை எப்படி பாதுகாப்பான்...”

என்றெல்லாம் கடவுளை சாடுவார் அவர்....

” இன்ஸூரன்ஸுக்கு ஏஜண்ட் இருக்கலாம்..  இறைவனுக்கு இருக்கலாமா என சாமியார்களையும் சாடுவார்...

அவர் கருத்தை நான் ஏற்றாலும் ஒப்பந்தப்படி சத்குருவை புகழ்ந்து கொண்டு இருந்தேன்...

என் திருமணத்துக்கு மனைவியுடன் வந்து வாழ்த்தினார் சச்சிதானந்தம் .. அவர் மனைவி ஓட்ட்ப்பந்தய வீராங்கனையாக இருந்து ஓய்வு பெற்றவர்...

********************************


உலக கோப்பை... ஃபைனல் வரை வந்து விட்டோம்....

நாளை ஃபைனல்...

டென்ஷனான இரவு... போன் அடித்தது...

சாமியார்...

“  நாளை நடக்கும் போட்டியில் அதிக ரன் எடுப்பது நீயாக இருக்கவேண்டும்... ஒரு ரன் குறைவாக இருந்தாலும், ஷாலினியின் கால் கட்டை விரல்கள் இரண்டும் துண்டிக்கப்படும் “ 


*************************************
வழக்கத்தை விட அதிக டென்ஷனாக களம் இறக்கினேன்..

எதிர் அணி முதல் பேட்டிங்...

அதிக பட்ச தனி நபர் ஸ்கோர் 80... மொத்த ரன் 280 ..

நான் 81 எடுத்தாக வேண்டும் என்ற நோக்கத்திலும், அணி வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சச்சிதானந்தமும் ஓப்பனர்களாக இறங்கினோம்...

மிக கவனமாக ஆடினேன்..

ஐம்ப்து ரன்னில் ஒரு கேட்ச்சில் இருந்து தப்பினேன்... உயிர் வந்தது போல இருந்தது... ஒரு வழியாக எண்பது ரன் எடுத்தேன்.. ஆனால் இன்னொரு சோதனை.. எதிர் முனையில் சச்சிதானந்தமும் அவுட் ஆகாமல் இருந்தார்... வாழ்வில் நினைக்க கூடாத நினைப்பு வந்தது... இவர் சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் ..

துரோக நினைப்புதான்.. ஆனால் வேறு வழி இல்லை...

ஆனால் அவர் அவுட் ஆகவில்லை... வெற்றிக்கு இன்னும் இரண்டு ரன்கள் மட்டுமே தேவை.. இருவரும் சம  ரன்களில் இருந்தோம்... 160 , 160... மொத்தம் 279 ஃபார் நோ லாஸ்...

48வது ஓவரின் கடைசி பந்து... இதில் அவர் அவுட் ஆனாலோ, ரன் எடுக்காமல் இருந்தாலோதான் அடுத்த ஓவரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்...

டென்ஷன்...

பந்து வீசப்பட்டது... ஸிக்ஸ் தூக்கினார் அவர்...
போச்சு ... எல்லாம் போச்சு..

ஆனால் அது சிக்ஸ் போகவில்லை.. எல்லைக்கோட்டில் கேட்ச் ஆனது..

“ சத்குரு வாழ்க “ கசப்புடன் நினைத்து கொண்டேன்...

அடுத்த ஓவர் .. முதல் பந்திலேயே ஃபோர் அடித்தேன்... அணி வெற்றி..அதிக பட்ச ரன் நான்..

கோப்பை... கொண்டாட்டம்... மேன் ஆப் த மேட்ச்..  சத்குரு பெருமை குறித்த பேட்டி எல்லாம் முடிந்தது...

அடுத்த நாள் கேப்டன் சச்சிதானந்தம் தன் இல்லத்தில் விருந்து கொடுத்தார்...

நான் அங்கு செல்வது அதுவே முதல் முறை...

அழகான வீடு... ஓவியங்கள் கண்களை கவர்ந்தன... தற்செயலாக அவர் தனி அறையை பார்த்த நான் அதிர்ந்தேன்..

சத்குருவின் பிரமாண்டமான போட்டோ...

’ அட ..இவரும் சீடரா... “ என்னால் நம்பவே முடியவில்லை.. காணிக்கையை பணமாக கொடுத்து விட்டு, நாத்திக வேடம் போடுகிறாரா...

”வாழ்த்துக்கள்  ” சச்சிதானந்தத்தின் மனைவியின் குரல் என்னை திரும்பி பார்க்க வைத்தது...

கை குலுக்கினாள்.. முகத்தில் மகிழ்ச்சி இல்லை..

பயத்துடனும், எதிர்பார்ப்புடனும், அவளுக்கு தெரியாமல் அவள் கால்களை கவனித்தேன்..

அவள் கால் கட்டை விரல்கள் வெட்டப்பட்டு இருந்தன,., 


( இது ஒரு கற்பனை கதை )





5 comments:

  1. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கேன்.
    நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

    ReplyDelete
  2. //சத்குருவின் சாதனை வழி


    பூனை அதன் இடத்தில் விடப்பட்டது.. பத்தடி தூரத்தில் எலி வைக்கப்பட்டது... பூனை உற்சாகமாக எலியை நோக்கி ஓடியது... ஒன்பது அடி சென்ற நிலையில், தூக்கி எறியப்பட்டது பூனை... சுவரில் மோதி கீழே விழுந்தது.... வீடியோ கேமிரா பூனை ஓடிய பாதையை காட்டியது.. அது சிமெண்ட் தரை அல்ல... இரும்பால் செய்யப்பட்ட தரைப்பகுதி... ஒயர் இணைப்புகள் இருந்தன... அது எலியை பிடிக்க இருந்த கடைசி நொடியில், குறைவான அளவு மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருக்கிறது.//

    முடியல ...அழுதுடுவேன் :)

    ReplyDelete
  3. பல விடையங்களில் எனக்கும் இருந்த சந்தேகங்கள்தான். இன்று இரவு ஆறுதலாக வருகின்றேன் குருவே...

    ReplyDelete
  4. Nice creativity in the story. :)

    ReplyDelete
  5. பயத்துடனும், எதிர்பார்ப்புடனும், அவளுக்கு தெரியாமல் அவள் கால்களை கவனித்தேன்..

    அவள் கால் கட்டை விரல்கள் வெட்டப்பட்டு இருந்தன,., //

    படைப்புத்திறனுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா