Sunday, April 15, 2012

கொள்கைகள் முட்டாள்தனமானவை - ஜே கிருஷ்ணமூர்த்தி

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சற்றே வித்தியாசமானவர். ஆத்திகம் , நாத்திகம் என எல்லா சித்தாத்தங்களையும் விமர்சிப்பவர். கன்சிஸ்டென்சி புனிதமானதல்ல என அதிரடியாக பேசுபவர். அவர் பொன்மொழிகளில் சில , உங்கள் பார்வைக்கு


************************************************
 ஜே கே பொன்மொழிகள் 

  • ஒருவர் தன் சிந்தனையில் ஒரே மாதிரியாக இருந்தால் , அவருக்கு  சிந்திக்கும் ஆற்றல் இல்லை என்று அர்த்தம். குறிப்ப்பிட்ட சிந்தனை வட்டத்திற்குள் அவர் சிக்கி கொண்டுள்ளார். ஒரே மாதிரியாக வாழ்க்கை முழுதும் பேசுகிறார்.








  • பயம் இல்லாத ஒருவனிடம் வன்முறையோ ஆக்கிரமிப்பு எண்ணமோ இருக்க முடியாது. எந்த வடிவிலும் அச்சம் இல்லாதவன் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பான் .





  • மதம் சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த  எந்த வகையாக இருந்தாலும் , கொள்கைகள் கோட்பாடுகள் போன்றவை முட்டாள்தனமானவை. இவை மனிதர்களை பிரிக்கின்றன. 

  • ஒரு பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டுமானால், பிரச்சினைக்கான தீர்வை பெற வேண்டும் என்ற பதட்டம் நம்மிடம் இருக்க கூடாது. 

  • அனைவரிடமுமே ஆதிக்க எண்ணமும், அதிகாரத்துக்கான ஆவலும் மறைந்து இருக்கின்றன. ஹிட்லரிடமும் , முசோலினியிடமும் இது வெளிப்படையாக தெரிகிறது. ஒவ்வொருவரிடமும் மறைந்து இருக்கும் இந்த வித்து அகற்றப்படாவிட்டால் , வெறுப்பு , யுத்தம் , பகைமை போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

  • உண்மையை அடைவதற்கு பாதை ஏதும் இல்லை. எந்த மதமோ , எந்த இயக்கமோ உண்மையை அடைய உங்களுக்கு உதவாது. 

  • பிரச்சினையை சரியாக புரிந்து கொண்டு விட்டால் , தீர்வு அதில் இருந்தே கிடைத்து விடும். ஏனென்றால் பிரச்சினையும்  , தீர்வும் வெவ்வேறு அல்ல. 

  • உலகம் ஒவ்வொருவரிடமும் உறைந்துள்ளது. எப்படி கற்பது என தெரிந்து விட்டால், கதவுக்கான சாவி உங்கள் கையில் கிடைத்து விடும். உங்களை தவிர வேறு யாரும் அந்த சாவியை உங்களுக்கு தர முடியாது. கதவை உங்களுக்காக யாரும் திறந்து விட முடியாது. 


  • ஒரு நம்பிக்கை மீண்டும் மீண்டும் உறுதி படுத்தி கொள்வது, உங்கள் மனதில் இருக்கும் அச்சத்தின் அடையாளம். 

  •  நாம் அனைவருமே பிரபலமாக விரும்புகிறோம்.  ஏதோ ஒன்றை அடைய விரும்பும் அந்த கணமே நம் சுதந்திரத்தை இழந்து விடுகிறோம். 




3 comments:

  1. அனைத்து பொன்மொழிகளாக வாசிக்கும்போது நல்லா இருக்கு, இந்த பொன்மொழிகளை ஒரு புதினத்தில் பரிசோதித்து பார்த்தால் அது அனைவராலும் எற்றுக்கொள்ள முடிவதில்லை, அப்புறம் இதை நாம் வாழ்வில் கடைபிடித்தால் அவனுக்கு பெயர் முன்னுக்கு பின் முறனாய் பேசுபவன்

    ReplyDelete

  2. வணக்கம்

    கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
    நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

    ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

    இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

    நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

    இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

    திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

    உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
    இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

    அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

    லிங்க்ஐ படியுங்க.

    http://tamil.vallalyaar.com/?page_id=80


    blogs

    sagakalvi.blogspot.com
    kanmanimaalai.blogspot.in

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா