Tuesday, December 25, 2012

எருமை மாட்டு மனப்பான்மையும் இஸ்லாமும்- இது மதக்கட்டுரை அல்ல

முன் குறிப்பு :  நான் எந்த மதத்திற்கும் பிரச்சாரகன் அல்ல. எந்த மதத்துக்கும் எதிரானவன் அல்ல..  தேசங்களின் அடிப்படையில்  ஒரு பிரச்சினை எப்படி பார்க்கப்படுகிறது என்பதை அலசுவதே என் நோக்கம். 


பாலியல் வக்கிர செய்திகள், பெரிய விபத்துகள் , மற்ற குற்றங்கள் பற்றிய செய்திகள் வரும்போது  மக்கள் எதிர் வினைகளையும் எலைட் க்ரூப் எனப்படும் அறிவு ஜீவிகளின் எதிர் வினைகளையும் கவனித்து இருக்கிறீர்களா?

குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும், கல்லெறிந்து கொல்ல வேண்டும் என சாதாரண எளிய மக்கள் ஆவேசம் அடைவார்கள்.. இவர்கள் உணர்ச்சி உண்மையானதுதான் என்றாலும் இது நிரந்தர தீர்வு ஆகாது... ஆனாலும் சிறுமை கண்டு பொங்கும் அடிப்படை உணர்ச்சியாவது அவர்களிடம் இருப்பது , இன்னும் கொஞ்சம் சுரணை நம்ம்மிடம் இருப்பதன் அறிகுறி என எடுத்து கொள்ளலாம்.

   டில்லி சமீபத்தில் , குற்றவாளிகளுக்கு கிடைத்த டிரீட்மெண்ட் இந்த எளிய மனிதர்களின் சிறுமை கண்டு பொங்கும் அடிப்படை உணர்ச்சியின் வெளிப்பாடே.

  இந்த நிலையில் அறிவு ஜீவுகள் களம் இறங்குவார்கள்.. ( அதுவும் தமிழ் பெண்கள் பாதிக்கப்பட்டால் களம் இறங்க மாட்டார்கள். “ இந்திய பெண்கள் “ என்றால்தான் இவர்களுக்கு கருணை சுரக்கும் )

இது போன்ற குற்றங்களுக்கு அந்த குற்றவாளிகளை பழி சொல்லக்கூடாது . இந்த குற்றத்துக்கு காரணம் சமூக பொருளாதார நிலைமைதான். அவர்களை பழி சொல்லி பயன் இல்லை. குற்றத்தினால் பாதிக்கப்பட்டவரை போல குற்றம் செய்தவர்களும் பரிதாபத்துக்கு உரியவர்கள்தான் என்பார்கள்... “ பாதிக்கப்பட்ட்டவர் என் சகோதரி , பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என் சகோதரர்கள்.. அவர்களை தூக்கிலிடக் கூடாது என கமல் சொன்னதை கேட்டு இருப்பீர்கள்.

சரி. இதற்கு இந்த அறிவு ஜீவிகள்  முன் வைக்கும் தீர்வு என்ன ?

சமூக மாற்றம் வேண்டும். சமூகம் மாறினால் , குற்றங்கள் குறைந்து விடும்.


அவ்வளவுதான் இவர்கள் தீர்வு.

நமக்கெல்லாம் இந்த எளிய தீர்வு தெரியாமல் போய் விட்டதே... நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. சமூகம்  மாறினால் போதும் .

சரி. சமூகம் என்பது என்ன .. ? நாம் எல்லாம் சேர்ந்ததுதானே சமூகம்? நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால் , அழுகிப்போன நம் போன நம் சமூகம் அதுவாகவே மாறி விடுமா என்ன ?

    எதுவும் செய்யாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமா அதைத்தான் இவர்கள் செய்கிறார்கள்..

எப்படி எல்லாம் நொள்ளை சொல்கிறார்கள் ..பாருங்கள். லாஜிக்கலாக பேசி மடக்குவவதை கவனியுங்கள்..

   குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டங்களை மாற்ற வேண்டும்...

 செல்லாது .செல்லாது... சட்ட மன்றம் , பாராளுமன்றம் , காவல் துறை , நீதி துறை போன்ற எல்லா இடங்களிலும் குற்றவாளிகள்தான் பதவிகளில் இருக்கிறார்கள்.  கடும் தண்டனை கொடுக்க இவர்களிடமே கேட்பதா... கூடாது.  இப்போது இருப்பதே இருக்கட்டும்.

பாலியல் கல்வி , பாலியல் விழிப்புணர்வு தேவை.

செல்லாது செல்லாது. கல்வித்துறையில் இல்லாத பாலியல் குற்றங்களா.. இந்த முய்ற்சி வெற்றி பெறாது. இப்போது இருப்பதே இருக்கட்டும்.


இது ஒரு காட்டுமிராண்டி தேசம். பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.

செல்லாது செல்லாது. எச்சரிக்கையாக இருந்தால் மட்டும் குற்றங்கள் குறைந்து விடுமா. எச்சைரிக்கையாக , பூட்டிய வீட்டில் இருந்தால் கூட குற்றங்கள் நடக்கத்தானே செய்கின்றன.. எச்சரிக்கையக இருக்க சொல்வது ஆணாதிக்கம். அதெல்லாம் முடியாது. இப்போது இருப்பதே இருக்கட்டும்.


பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகள் பாணியில் மிக கடுமையான தண்டனைகள் , மரண தண்டனை வழங்க வேண்டும்.

செல்லாது செல்லாது. மரண தண்டனையால் குற்றங்கள் குறையாது. மேலும் மரண தண்டனை உண்மையில் தண்டனை அல்ல. இதன் மூலம் இந்த உலகில் இருந்து குற்றவாளிக்கு விடுதலைதான் கிடைக்கிறது .  எனவே இப்போது இருப்பதே இருக்கட்டும்.

************************************************
இப்போது ஒரு பயங்கரமான உண்மையை பார்ப்போம். அப்போதுதான் இஸ்லாமிய பாதைதான் நமக்கு தீர்வு அளிக்கும் என்பது புரியும்.

அறிவு ஜீவிகள் அனைவரும் மேற்கண்ட  status quo  மனோபாவத்தை பெற்று இருப்பதை பார்க்கிறோம். அதற்கு மக்கள் ஆதரவும் இருப்பதை பார்க்கிறோம்.

இந்த அறிவு ஜீவிகள் யார் என கவனித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்.

 இடது சாரிகள், வலது சாரிகள் , ஆளும் கட்சி , எதிர் கட்சி , பகுத்தறிவாளர்கள் , ஆன்மீக வாதிகள் என எல்லா தரப்பில் இருக்கும் அறிவு ஜீவிகளும் ‘இப்போது இருப்பதே” போதும் என்ற மன நிலையில் இருப்பதை கவனிக்க முடியும்.

இவர்களுக்குள் எந்த தொடர்பையும் , பொது தன்மையையும் கண்டு பிடிக்க முடியாது.. எதிரெதிர் முகாம்களில் இருப்பார்கள்.

எருமை மாட்டில் மழை பெய்வது போல , இப்படி அசமந்தமாக இருக்கும் இவர்களிடம்  ஒரே ஒரு பொது தன்மை உண்டு.

அவர்கள் அனைவரும் இந்தியர்கள் எனப்தே அந்த பொது தன்மை .


இப்படி மந்தமாக இருப்பதற்கும் , இந்தியர்களாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம்.

பசுமையே இல்லாத பலைவன பூமி , கடும் வெப்பம். சூடான ரத்தம் . கடும் விஷம் கொண்ட உயிரிகள்.

இந்த சூழ்னிலையில் சில நாடுகள் இருக்கின்றன. இங்கு வாழ்பவர்கள் அதற்கேற்ற தகவமைப்பை காலப்போக்கில் பெறுகிறார்கள். அரபு நாடுகளை உதாரணமாக சொல்லலாம்.

இங்கு தோன்றும் இசை , கலை , எழுத்து போன்றவை அதீத உணர்ச்சி கொந்தளிப்புடன் இருக்கும்.


கடும் குளிர் நிலவும் நாடுகள் சில இருக்கின்றன,. வெயில் வருவது அபூர்வம். அப்படி வரும் வெயிலை முழுதும் பயன்படுத்திக்கொண்டாக வேண்டும் , பனி பொழியும் கடும் குளிர் காலத்தில் எந்த பணியும் செய்ய முடியாது.

இந்த சவாலான நிலையில், குறைந்த நேரத்தில் வேலையை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் , காலப்ப்போக்கில் செயல் திறன் மிக்கவர்கள் ஆகி விடுகிறார்கள்.


இந்தியாவில் இந்த இரண்டு எக்ஸ்ட்ரீமும் கிடையாது. மிதமான குளிர் , மிதமான வெயில். சோம்பலான வாழ்க்கை , அடிமையாக வாழும் சுகம். மாற்றங்களை சந்திக்க வேண்டியிராத தட்ப வெப்ப்பம். இந்த சூழ் நிலையிலே வாழ்ந்து வாழ்ந்து , passion என்பதே இங்கு இல்லாமல் போய் விட்டது.

 எதிலுமே மந்த தன்மைதான். மது வா ? அதில் தண்ணீரை கலந்து மந்தமாக்குவது. தே நீரா ? பாலை கலந்து மந்தமாக்குவது . இப்படியே செய்து செய்து , சித்தாதாங்களும் இங்கே வரும்போது , நீர்த்து விடுகின்றன.

 உலகையே கலக்கிய கம்யூனிசம் , நம் ஊரில் ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் அலையும் அரசியலாக மாறிவிட்டதா இல்லையா ?

சோவியத் யூனியன் இருந்த காலத்தில் கம்யூனிச புரட்சிகளுக்கு ஆதரவளித்து வந்தனர். இதை தவிர இன்னொன்றும் செய்தனர். சில நாடுகளில் கம்யூனிச புரட்சி நடக்கும் சூழல் இருக்காது.. ஆனால் குறைந்த சதவிகித்தினர் மட்டும் புரட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அந்த குறைந்த சதவிகிதத்தினரை கைக்குள் போட்டுகொண்டு , சோவியத் யூனியன் மேற்பார்வையில் , ஒரு வித போலி புரட்சி ஏற்படுத்தி, ஆட்சியை கைப்பற்றுவார்கள்.

ஆனால் இந்தியாவில் மட்டும் அப்படி செய்ய முடியவில்லை. நம்மூர் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ரஷ்ய அதிபர் ஸ்டாலினை சந்தித்தபோது , நம் மக்களின் ஈர விறகு தன்மையை பார்த்து அதிர்ந்து விட்டாராம். இந்தியா இன்னும் புரட்சிக்கு தயாராகவில்லை என சொல்லி அனுப்பி விட்டாராம்.

 கடவுள் மறுப்பு கொள்கை , கம்யூனிசம் என எந்த விஷ்யமும் இந்தியாவுக்குள் வரும்போது நீர்த்து போய் விடும்,

எனவேதான் இந்தியாவில் இருக்கும் எந்த இயக்கங்களாலோ , கட்சிகளாலோ ஒன்றும் செய்ய முடியவில்லை. செய்யவும் முடியாது.

 பகுத்தறிவு , இடது சாரி, வலது சாரி  , இந்துத்துவா, இந்துத்துவாவுக்கு எதிரானத்துவா என லேபிள்கள் மாறலாம். ஆனால் சரக்கு ஒன்றுதான்.

 இந்திய தன்மை எனும் இந்த விஷத்தால் பாதிக்கப்படாமல் தாக்கு பிடிக்கும்  ஒரே ஒரு சிந்தனை முறை இஸ்லாம் மட்டுமே.

காரணம் அது கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட மார்க்கம். அப்படியும் சிலர் இந்திய தன்மையால் பாதிக்கப்படத்தான் செய்தனர். ஆனால் அவர்கள் அதன் பின் இஸ்லாமியராக தொடர முடியாது. அஹமதியா முஸ்லிம் என்பது போல புதிய பிரிவினராக  மாறிக்கொள்ளலாம். அசல் இஸ்லாம் அப்படியே இருக்கும்.

எனவெதான் , இந்தியாவில் என்றாவது மாற்றம் என ஏற்பட்டால் அது இஸ்லாமால் மட்டுமே முடியும் என குறிப்பிட்டேன்.  வேறு எந்த இயக்கமோ , கட்சியோ , சிந்தனை முறையோ இங்கு எதுவும் செய்ய முடியாது என்பது மறுக்க முடியாத யதார்த்தம்.

  பாலியல் குற்றங்களை பொறுத்தவரை , நமக்கெல்லாம் அது வெறும் செய்தியாகத்தான் மனதில் பதிகிறது. எனவேதான் மனித உரிமை ,ஆணாதிக்கம் என்றெல்லாம் பேசுகிறோம்.

ஆனால் , காலப்போக்கில் இந்த வக்கிரங்களின் கொடுமையை ஒவ்வொரு இந்தியனும் நேரடியாக உணரப்போவது உறுதி. நேரடியாக இல்லாவிட்டாலும் , தெரிந்தவர் , தெரிந்தவருக்கு தெரிந்தவர் என்ற அடிப்படையிலாவது பாதிப்பை உணர முடியும்.

அப்போது தான் இஸ்லாமிய வழிமுறைகளை , பிற்போக்கு என்று கிண்டல் அடிக்கும் மனோபாவம் மறைந்து , அதுதான் முற்போக்கான சிந்தனை , ஆணாதிக்க எதிர்ப்பு சிந்தனை என்பது புரியும்.



 இந்த பிரச்சினையை  முகமது நபி எப்படி கையாண்டார் என பாருங்கள். அதில் இருப்பது பெண்ணடிமைத்தனமா , பெண்கள் மேல் பரிவா என தெரியும்.



 நபி (ஸல்) தண்டனை காலத்தில் ஒரு முறை பெண் ஒருத்தி ஒருவனால் பலவந்தமாக கற்பழிக்கப் படுகிறாள். பிறகு அவள் தன்னை கற்பழித்தவனை மக்கள் முன் அடையாளம் கூறியவுடன் மக்கள் அவனை கைது அந்த பெண்ணையும் நபி (ஸல்) அவர்களிடம் கூட்டிக் கொண்டு போகிறார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்த பெண்ணை நோக்கி “இங்கிருந்து செல், அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்” என்று கூறிய பின்பு கற்பழித்தவனை நோக்கி “இவனை கல்லெறிந்து கொல்லுங்கள்” என்று கூறினார்.


    முன்பு  நாயை வைத்து ஓர் ஆராய்ச்சி செய்யப்பட்டது .  சாப்பாட்டு வேளையில் ஒரு மணி ஒலிக்கப்படும் , மணி சத்தத்தை தொடர்ந்து நாய்க்கு உணவு அளிப்பார்கள்,  ஒவ்வொரு முறை மணி ஒலித்தபின்பும் நாய்க்கு சாப்பாடு கிடைக்கும் . சில தினங்களில் மணி சத்தம் கேட்ட உடனேயே  நாய்க்கு உமிழ் நீர் சுரக்க ஆரம்பித்தது , அதன் ஆழ் நினைவில் மணி சத்ததுடன் உணவு இணைந்து விட்டது.

   அதே  போல் சமூகத்தின் மனதில் , கற்பழிப்புடன் கல்லெறி இணைந்து விட்டால் என்ன ஆகும் , தவறாக கை வைக்கும் முன்பு கல்லெறி நினைவுக்கு வருமா இல்லையா..

 இதெல்லாம் காட்டுமிராண்டி முறை என சிலர் சொல்லக்கூடும் , இப்போது மட்டும் , நாம் மனிதர்களாகவா வாழ்ந்து வருகிறோம் ?

60 comments:

  1. வாவ்.. யார் யாரோ எப்படியெல்லாம் யோசிக்கும் போது நீங்கள் இப்படியெல்லாம் யோசிக்க முடியும் என்று யோசித்து எங்களையெல்லாம் இந்த கோணத்திலும் யோசித்து பாருங்கள் என்று எங்களை யோசிக்க வைத்ததற்கு நன்றி! எனக்கு இன்னும் கூட நம்பிக்கையில்லை உங்கள் கருத்து ஒரு வாசகனின் சிந்தனையை தட்டி எழுப்பி புரட்சிக்கு வித்திடும் என்று. ஏனென்றால் உங்கள் கருத்தையும் மதத்தோடு இணைத்து அதனை நீர்த்துப் போக செய்ய விசைப்பலகையில் விரலை தாளமிட்டு பின்னூட்ட புலிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் பிரதர்,

    செவுளில் பளீரென்று அறைந்திருக்கிறீர்கள் . உணர்வுள்ளவர்களுக்கு மட்டும் உறைக்கும் ..கீப் going !!!

    Wonderful article !!

    ReplyDelete
  3. சிங்கப்பூர் வந்து பாருங்கள் அங்கே இந்த பிரச்சினை இல்லை. ஆனால் மலேசியாவில் இஸ்லாமிய ஆட்சி ஆனால் பாலியல் வல்லுறவு சாதாரணம். சிங்கப்பூரில் இஸ்லாமிய ஆட்சி இல்லை.
    இதையும் படித்து பார்க்கவும்

    http://www.kodangi.com/2012/12/blog-post_25.html

    மோடி தலைமையில் இஸ்லாமிய வழி முறை ஆட்சி கேட்கவே நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர் பிச்சை,
    உங்களின் கருத்தை ஏற்க இத்னை பரிசோதித்து பார்ப்பது அவசியமாகும். ஒரு மருத்துவரின் மேல நம்பிக்கை கொள்ளுதல் பாதி நோயைக் குணமாக்கும் என்பார்கள் அந்தவகையில்.

    இந்த ஷாரியாவை முதலில் நம்பிக்கை உள்ள முஸ்லிம்களுக்கு மட்டும் உடனே அமல் படுத்தி ஒரு 10 வருடம் பார்க்கலாம்!!.

    முஸ்லிம் குற்றவாளிகளுக்கு மட்டும் ஷாரியா பலன் அளித்தால் , அதாவது முஸ்லிம் குற்றவாளிகளே இல்லாமல் போனால் இந்தியாவில் அனைவருக்கும் பயன் படுத்துவது பற்றி ஆலோசிப்போம்.

    முஸ்லிம் குற்றவாளிகளின் தண்ட்னை பார்த்தே காஃபிர் குற்றவாளிகளும் திருந்தி விடலாம்.

    ஆகவே மூமின்களுக்கு மட்டும் ஷாரியா குற்றவியல் நடைமுறைகள் உடனே கொண்டுவரப் பட வேண்டும்.

    சாஃப்ட்வேர் பைரேசிக்கு கூட கையை வெட்டி விட வேண்டும்!! ஹி ஹி

    காஃபிர்கள் ரெடி மூமின்கள் ரெடியா??

    நன்றி!!

    ReplyDelete
  5. தங்களின் மீது அமைதி உண்டாகட்டும் சகோதரரே !

    ஒரு முஸ்லிமாக பிறந்தே எங்களில் பலர் இஸ்லாமை சரியாக விளங்காமல் உள்ளோம்.. உங்களின் சிந்தனை உங்கள் மீது பொறாமை கொள்ள வைக்கிறது...

    நன்றி !!!

    ReplyDelete
  6. அன்பின் ஆனந்த்,
    எந்தவொரு இசத்துடனும் கலக்காமல் இஸ்லாம் எப்போதுமே எந்த நிலப்பரப்பிற்கு சென்றாலும் அதன் தனித்தன்மையை பாதுகாத்தே வருகிறது. இனிவரும் காலங்களிலும் பாதுகாத்தே வரும். இதற்கான மூல காரணிகள் குர்ஆனும் சுன்னாவும் தான். அது உலக முடிவு நாள் வரைக்கும் எத்தகைய மாற்றமும் கலப்பும் இல்லாமல் இருக்கும். இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நோக்கி முதல் நடையை இன்று நம் தேசம் எடுத்து வைத்திருக்கிறது. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை முழுமையாக சுவீகரித்துக் கொள்ளும் தேசமாக இந்தியா மாற வேண்டும். சாமானியனுக்கும் சமநீதி என்ற ஒப்பற்ற சூழல் உருவாக வேண்டும்.

    ReplyDelete
  7. செவுளில் பளீரென்று அறைந்திருக்கிறீர்கள் . உணர்வுள்ளவர்களுக்கு மட்டும் உறைக்கும் ..கீப் going !!!

    ReplyDelete
  8. எருமை மாட்டில் மழை பெய்வது போல...
    காட்டுமிராண்டிகள்...//
    சரியான விளாசல் கேள்விகள்....

    ReplyDelete
  9. சட்டங்கள் கடுமை ஆனால் தான் குற்றங்கள் குறையும்.. இதைத் தவிர்த்து மாற்று வழிகளை யோசிப்பவர்கள் சமூகத்தை வழிகெடுக்கிறார்கள் என்பதே நிதர்சனம்... அவர்கள் அறிந்தோ அறியாமலோ...

    ReplyDelete
  10. @@மணி சத்தமும் சாப்பாடும் நல்லாருக்கு.... ஆனா கற்பழிப்பும் கல்லெறிதலும் ஒத்துவராதே... "பார்வைகளைத் தழ்த்திக்கொள்ளுங்கள்" அதெல்லாம் தாழ்த்திக்க மாட்டோம்..அப்படித்தான் அலைய விடுவோம்... அதாவது அலைவோம்... @@ ஹி..ஹி...ஒரு சேஞ்சுக்கு எதிர்க்கருத்து போடலாமேன்னு பார்த்தேன் :)

    உங்களால் முடிந்த அளவிற்கு எத்திவைத்து விட்டீர்கள் ... உங்களுக்கு நிச்சயம் மறுமையில் நற்கூலிகள் காத்துக்கிட்டிருக்கு.... வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
  11. யார் சொன்னால் என்ன சமுதாயத்துக்கு சரியாக வருமென்றால் செய்ய வேண்டியதுதானே. அருமையான மற்றும் அவசியமான கட்டுரை. கமல் போன்ற அதிமேதாவிகள் இதை சிந்திக்கவேண்டும்.

    ReplyDelete
  12. தங்கள் தளத்தின் முகப்பில் உள்ள // தேடலில் பிச்சைக்காரனாய் இரு // என்ற வரிகளுக்கேற்ப தங்களின் தேடல் மிக சிறந்ததாய் எங்கு நல்லது உண்டோ அதை வரவேற்று சுவீகரிக்கும் தங்களின் மனப்பக்குவம் போற்றுதலுக்குறியது.

    ReplyDelete
  13. மாஷா அல்லாஹ் அருமையான சிந்தனை, சரமாரியான சிந்திக்க கூடிய கேள்விகள் சகோ... உங்கள் பயனுள்ள எழுத்து பணி என்றென்றும் தொடரட்டும்..

    ReplyDelete
  14. First of all we love humanity then,,,,,

    ReplyDelete
  15. Good article ,,,, first of all we love humanity then the thing is well ,,,,,,,,, Allah bless you ,,,,,

    ReplyDelete
  16. A good review and reporting.

    One of the major root causes is cinemas
    which teaches these kind of atrocities as normal as kamal portraid.

    ReplyDelete
  17. சகோ.சார்வாகன்

    //இந்த ஷாரியாவை முதலில் நம்பிக்கை உள்ள முஸ்லிம்களுக்கு மட்டும் உடனே அமல் படுத்தி ஒரு 10 வருடம் பார்க்கலாம்!!.
    //

    உங்களின் கருத்து நியாயமானதே.! அதே மருத்துவர் ஒரு நோய்க்கு மருந்து தருவார் என்றால் அதை ஏற்கனவே சோதனை சாலையில் பரிசோதித்து பின்பே மார்கெட்டுக்கு வரும்..ஒவ்வொரு வாட்டியும் வரும் நோயாளியிடம் பரிசோதிக்க தேவை இல்லை அல்லவா..! மெடிகல்ல வாங்கி வாயில போடுறதுதான் பாக்கி..அந்த இடத்தில சோதனை அவசியம் இல்லைதானே..! அது போல் சோதனைகூட சோதனை போல சவூதி யை வைத்து கொள்வோம்..இந்தியாவை விட குற்றங்கள் மிகவும் குறைவு தானே..பின்பு ஏன் மீண்டும் மெடிகல் வாசல்ல நின்னு மாத்திரையை சோதிக்க வேண்டும்..கப்புன்னு வாயில போட வேண்டியது தானே.. ! நான் ரெடி இதோ..வாயை திறந்து மாத்திரைக்காக காத்திருக்கிறேன்..நீங்களும் வாயை திறங்கள்...ஆ ஆ ஆ...

    ReplyDelete
  18. சொல்ல வந்த கருத்தை நேரடியாகச் சொல்லியிருக்கலாம். புரிய கஷ்டம்.

    உங்கள் கருத்து: அறிவு ஜீவிகளால் குற்றங்கள் பெருகும். ஏனெனில் அவர்கள் குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்ககூடாதென்கிறார்கள் என்பதே.

    பார்த்தீர்களா! நீங்கள் சொன்னதை ஆமோதித்தலில் கூட இவர்களால் சாந்தமாக எழுத முடியவில்லை. அறிவு ஜீவிகளுக்குச் செவிட்டில் பளீரென்று அறைவிட்டீர்கள் என்று வன்முறைச்சொற்களை பிரயோக்கும் இவர்களுக்குத்தான் அறிவுஜீவுகள் உதவுகிறார்கள் எனலாம்.

    அதாவது. அறிவுஜீவிகள் கற்றவர்கள்; பலதுறைகளிலும் இருப்பவர்கள். சாதாரண மக்களல்ல. அவர்கள் தங்கள் நலத்தைப்பேண எதையும் சொல்வதில்லை. ஆனால் இவர்கள்? இவர்களிலிருந்தே குற்றவாளிகள் வருகிறார்கள். அதாவது மரணதண்டனை கொடு என்று உணர்ச்சி பொங்க எழுதுமிவர்கள்ம் இந்தியா கேட்டில் போலிசோடு சண்டையிட்டவர்களில் சந்தர்ப்பம் கிடைத்தால் வன்புணர்வர்களும்ம் உள்ளடக்கம்.தில்லி பேருந்தில் வ‌ன்புண‌ர்ந்து கொலை செய்த ஐவர் வேறு ந‌ப‌ர்க‌ளாக‌யிருந்தால் இந்த‌ ஐவ‌ரும் ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை கொடுங்க‌ள் என்ற‌ கூட்ட‌த்தில் ஐவ‌ராக‌த்தான் இருப்பார்க‌ள். அறிவு ஜீவிகள் கூட்டத்தில் இந்த ஐவரும் வரமாட்டார்கள். அறிவுஜீவிகள் எண்ணிக்கை குறைவு. அவர்கள் வெள்ளத்துக்கு எதிராக நீச்சல் போடுபவர்கள்.

    ஆக, அறிவுஜீவிகள் மரண தண்டனை வேண்டாமென்றால், அதனால் இலாபம் பெறுவோர் அறிவுஜீவிகள் அல்ல. உங்களால் அறிவுஜீவுகளுக்கெதிராக வைக்கப்படுவோரே.

    ReplyDelete
  19. இதெல்லாம் காட்டுமிராண்டி முறை என சிலர் சொல்லக்கூடும் , இப்போது மட்டும் , நாம் மனிதர்களாகவா வாழ்ந்து வருகிறோம் ? // நல்ல கேள்வி. இனியாவதும் திருந்துவார்களா இயக்கவாதிகள். திருத்துவார்களா அரசியல் சட்டங்களை.

    ReplyDelete
  20. @சார்வாகன்: நாங்க முஸ்லிம்கள் ரெடி.. முஸ்லிம்களுக்கு ஷரிஆ சட்டங்கள் அடிப்படையில் தீர்ப்பு கூறுவதர்க்கு.. அரசு ரெடியா..?

    ReplyDelete
  21. Anonymous said...

    ///இதையும் படித்து பார்க்கவும்

    //kodangi////

    அனானி கற்பழிப்பு திர்வு சொல்லுவீர்கள் என்று நினைத்தால் சுடுகாட்டிற்கு வழி சொல்லுகிறீர்கள்.

    ReplyDelete
  22. thx a lot br....... ur the example 4 best indian...nan arindha vahail kanda oru true 'manidhan'.....jazkkumullahu haira...cntnu ur good wrk for all........

    ReplyDelete
  23. கரெக்ட்தான்...சொன்னது எல்லாமே கரெக்ட்தான்..எழுதுனது கூட ரெம்ப பேஷாத்தான் எழுதிருக்கேள்....சரி அதுக்கு இப்ப என்ன செய்ய சொல்றேள்.
    கேட்கும்போது எல்லாமே நல்லாததான் இருக்கிறது ஆனா அது இருக்கிற இடம் குர்ஆனாச்சே அதானேவோய் இடிக்குது.

    சமூதாயத்திற்கு தேவையான தீருவுகளை தேடி அலையும்போது துரதிர்ஷ்டவசமாக தேடலின் முடிவு இஸ்லாத்தில் போய் முடிகிறது அதுதான் இந்த நாட்டிற்கே சிக்கலே.

    -ஃபஹ்ருத்தீன்

    ReplyDelete
  24. இஸ்லாமியச் சட்டங்கள் இந்தியாவுக்குப் பொருந்துமா என்று பார்ப்பதற்கு முன் இந்தியச் சமூகம் இஸ்லாமியச் சட்டங்களை ஏற்க தன்னளவில் சில மாறுதல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

    முதல்பக்கத் தலையங்கத்தில் வன்புணர்வுகளுக்கு எதிராக ஆவேசத் தலையங்கம் தீட்டும் ஊடகங்கள் நடுபக்கத்தில் ஆபாசத்தை படம் பிடித்துக் காட்டி காசு தேடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

    பெண்ணுரிமையை கேலி செய்யும் அழகிப் போட்டிகளை நடத்துவதை அரசுகள் அனுமதிக்காமல் இருக்க வேண்டும்.

    //பாலி​யல் கிளர்ச்​சி​யைத் தூண்​டும் திரைப்​பா​டல்​கள்,​​ திரைப்​ப​டங்​கள்,​​ பத்​தி​ரி​கைப் படங்​கள்,​​ செல்​போன்​க​ளி​லும் ஆபாச விடியோ காட்​சி​கள்,​​ இணை​ய​த​ளங்​க​ளில் போர்​னோ​கி​ராபி,​​ எது​வுமே தவ​றில்லை என்ற மன​நி​லை​யில் இந்​தி​யர்​கள் இருப்​ப​தாக செக்ஸ் சர்வே என எல்​லா​வற்​றை​யும் கிடைக்​கச் செய்​து​விட்டு,​​ பெண்​க​ளுக்​குப் பாது​காப்பை அதி​க​ரிப்​ப​தா​லும்,​​ கடு​மை​யான சட்​டங்​கள் மூல​மும் பாலி​யல் கொடு​மை​க​ளைத் தடுத்​து​விட முடி​யும் எனச் சொல்​வது சரி​யான வாதம் அல்ல.​ மேலை​நா​டு​க​ளில் இவை இல்​லையா?​ என்று கேட்​க​லாம்.​ அந்த வாழ்க்​கை​முறை இந்​தி​யா​வில் எல்லா வீடு​க​ளி​லும் இல்லை.​// என்கிற தினமணியின் வாதம் இதில் சரியானது.

    இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துமுன் தேசம் ஒரு மாறுதலுக்கு உட்பட வேண்டும். கொசுமருந்து அடிக்குமுன் சாக்கடைகளை மூட வேண்டும்.

    @ சார்வாகன்,
    மூமின்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை ஏற்கவும் ஆயத்தமாகவே இருப்பார்கள். அவர்கள் கோருவது போல, பாலுறவு சினிமாவை, அழகிப் போட்டிகளை தடை செய்து இஸ்லாமிய சமூகம் அமைத்துத் தர காபிர் அரசாங்கம் முன்வரும் பட்சத்தில். நன்றி

    ReplyDelete
  25. நல்ல சிந்தனை. பாராட்டுகள்.

    ReplyDelete


  26. சகோ நாகூர் மீரான்,
    நாம் 120 கோடி மக்கள் இந்தியாவை சொன்னால் 3 கோடி மக்கள் சவுதியை சொல்வதுதான் முஸ்லிம் மூளை

    சவுதியை எ.கா காட்டியதற்கு நன்றி!!.

    உடனே இக்காரியங்களை ச் செய்ய வேண்டுகிறேன்.
    1. சவுதி ஷரியாவின் படி கற்பழைப்புக்கு சாட்சி விசாரணை எப்படி?

    2. கற்பழைப்புக் குற்றங்கள் தண்டனை கடந்த 10 ஆண்டு விவரம்.

    3. வேலைக்கு சென்ற பிற நாட்டுப் பெண்களின் மீதான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை பெற்ற சவுதிகள் விவரம்.

    4. சென்ற வருடம் ஒரு சவுதி இரு இந்திய உடன்பிறந்த சகோக்களை சுட்டுக் கொன்று விட்டான். அதன் தண்டனை என்ன ஆனது?

    http://www.indianexpress.com/news/indian-brothers-shot-dead-by-saudi-national/856957
    Two Indian expatriate brothers have been shot dead by a Saudi Arabian national following an argument at a workshop in the kingdom's Taif region.
    Mohammed Zakhir Ahmad (41) and Ahmad Yasin (46), hailing from Jaunpur in Uttar Pradesh, died on the spot after being shot on Wednesday in Sail Al-Sagheer, a town about 200 kilometres from Jeddah, Indian Consulate General in Jeddah S D Moorthy said.
    A third brother escaped unhurt.
    The shooting took place at a small workshop where window grills and iron doors are made, Moorthy said.
    The Saudi national was running a motel in the same town where the killing took place.
    Moorthy said the attacker had given the workshop workers a job which they were unable to complete on time.
    “On the fateful day, the Saudi had confronted them for not finishing the work as agreed,” Moorthy said.
    The argument led to a brawl and the Saudi took out a gun from his car and shot both the brothers. He was overpowered by bystanders and handed over to the police.

    இவை அனைத்தையும் பின்னூட்டம் இட வேண்டுகிறென்.
    எனினும் பாகிஸ்தானில் அல்லாவின் சட்டமான ஷாரியா எடுபடவில்லை என்பதால் மேலே சொன்ன விவரம் சரி பார்த்தபின் ,இந்திய சிறைகளில் அதிகம் உள்ள மூமின் குற்றவாளிகளுக்கு அமல் படுத்துவோம்.
    டீலா நோ டீலா!!!
    சவுதியில் அதிகம் கடுந்தண்டனைகள் பிற நாட்டவருக்கே வழங்குவது தெரிந்தும் மூமின்கள் பரிந்து உரைப்பதால், மூமின்களுக்கு ஷாரியாவை பரிசோதிப்பது காலத்தின் கட்டாயம்.!!

    Thank you

    ReplyDelete

  27. @சார்வாகன்... முக்கியமான ஒரு பிரச்சினையில் விளையாட்டாக கருத்து சொல்லாதீர்கள். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவாகத்தான் அமல் படுத்தப்பட வேண்டும். தவறு செய்யும் ஒரு தரப்பினருக்கு மரண தண்டனை , இன்னொரு தரப்புக்கு கவுன்சலிங் என செயல்பட்டால் , உலகம் நம்மை பார்த்து சிரிக்கும்...

    ReplyDelete
  28. @ சார்வாகன்,, நீங்கள் என்ன நிரூபிக்க முயல்கிறீர்கள் என புரியவில்லை... சவுதியின் சட்டங்கள் தம் நாட்டினரை பாதுகாக்கின்றன, ,மற்ற நாட்டினரை தண்டிக்கின்றன என்கிறீர்கள்...

    ஆனால் நம் இந்திய திரு நாட்டின் கையாலாகத சட்டங்கள் நம் நாட்டினரை பாதுகாக்கவில்லை என்பதுதானே யதார்த்தம் , இதற்கு என்ன ஆதாரம் தேவை... ?

    ReplyDelete
  29. நண்பர் பிச்சைக் காரன்,
    நான் சொல்ல வருவதை முதலில் புரியுங்கள்!!

    இந்த மூமின் மத்வாதிகளுக்கு அப்படி சொன்னால் மட்டுமே புரியும். மூமின் குற்றவாளிகளுக்கு ஷரியா தண்டனை கொடுக்க ஒத்துக் கொள்ள மாட்ட்டார்கள்.

    நான் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்
    ***

    சவுதியில் ஷரியா பிற நாட்டவர் மீது அதிக்கம் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவில் ஏழைகள் மீது பயன்படுத்தப் படுகிறது. பணம் படைத்தவன் இருபுறமும் தப்புகிறான்.

    ஆக்வே நீதி விரைவில் பாரப்ட்சமின்றி கிடைக்க வேண்டும்.ஷரியாவும் த்வறாக பயன்படுத்தப்பட முடியும்!!

    உங்களுக்கு ஷரியா பற்றி எதுவுமே தெரியாது என்க் குற்றம் சாட்டுகிறேன்!!

    கற்பழிப்புக்கு ஷரியாவின் படி எப்படி சாட்சிகள் இருக்க் வேண்டும்???

    கொஞ்சம் இதைப் படியுங்கள்!!
    Rape: Fallacies of the four witness requirement
    http://blogs.tribune.com.pk/story/9484/rape-fallacies-of-the-four-witness-requirement/

    In Pakistan, the Hudood laws were implemented in 1979 by the then dictator Ziaul Haq and termed Islamic Shariah Laws. That is when the problem began. According to the Hudood Ordinance, rape victims have to produce four male eye-witnesses to the crime. If they can’t do so, they can be prosecuted for adultery – a crime that potentially has the punishment of death by stoning.

    இதுதான் அல்லாவின் சட்டம் இப்படி குருட்டுத் த்னமான சட்டத்தை பரிந்திரை செய்யும் நீங்கள்தான் வெட்கப் படவேண்டும்.

    நன்றி!!

    ReplyDelete
  30. தனது அழகான கூடரத்துக்குள் அரபு ஒட்டகத்திற்கு இடம் கொடுத்தவன் நிலை இந்தியர்களுடையது.

    ReplyDelete
  31. அன்பு சகோ ஆனந்த்..

    ஒருபுறம் வேண்டுமென்ற இஸ்லாத்தின் மீது அவதூற்றை பரப்பும் பதிவுகள் பதிவுலகில் வலம் வரும் சூழலில்...

    எதார்த்த நடையில் வித்தியாசமான கோணத்தில் இஸ்லாமிய சட்டத்தை இந்திய புரிதலில் அறிமுக படுத்தியதற்கு நன்றி,,,

    இஸ்லாத்தை எப்படியும் விமர்சித்தாக வேண்டுமென்று முன்முடிவுகளோடு இணையத்தில் கரம் பதித்தவர்கள் இந்த கட்டுரையை கொஞ்சம் பொறுமையாக உள்வாங்கினால் நலம்...

    சிறந்த பதிவுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  32. @ ஆனந்த்
    தங்களின் மாற்றியோசிக்கும் சிந்தனையை பார்த்து வியக்கிறேன் ...
    இந்துவாக இருந்துக்கொண்டு பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் இஸ்லாத்தில் இருக்கிறது அதுவே இப்போதைக்கு தேவை என்று துணிவுடன் சொல்லும் தைரியம் கண்டு மலைக்கிறேன் .....
    நல்லவைகள் எங்கிருந்தாலும் சுவிகரித்துக்கொள்ளலாம் என்கிற மனப்பான்மை தங்களிடம் நிறையவே இருப்பதை கண்டு வரவேற்கிறேன் ........
    தங்களின் எழுத்துப்பணி+மாற்றியோசிக்கும் நல்ல சிந்தனை மேன்மேலும் சிறக்க,வளர வாழ்த்துகிறேன் ........

    ReplyDelete
  33. சகோ.சார்வாகன்

    //நாம் 120 கோடி மக்கள் இந்தியாவை சொன்னால் 3 கோடி மக்கள் சவுதியை சொல்வதுதான் முஸ்லிம் மூளை //

    தெரிந்தோ தெரியாமலோ ஒரு செய்தியை சொல்லிவிட்டீர்கள்..சட்டம் என்பது மக்கள் தொகை அடிப்படையிலா அமையும்..இந்திய சட்டங்கள் இயற்றப்பட்ட போது மக்கள் தொகை என்ன? இப்போது உள்ள மக்கள் தொகை என்ன ? மக்கள் தொகையை கருத்தில் கொண்டுதான் சட்டங்கள் அமைகின்றனவா..? இருந்தாலும் இருக்கலாம் ஏனெனில் இங்கு பெரும்பான்மையான இந்து மக்களுக்கு ஒரு சட்டம் முஸ்லிம் மக்களுக்கு ஒரு சட்டம் என்று தானே இருக்கிறது(!!!)..இந்த அடிப்படையில் வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரி..ஆனால் இஸ்லாமிய சட்டத்தை பொறுத்த வரையில் நீதி செலுத்தபடுவதர்க்கு முக்கியத்துவத்தை பாருங்கள் !

    " 6:115. மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை //உண்மையாலும் நியாயத்தாலும்// முழுமையாகி விட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

    42:17. அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் //நீதியையும் உண்மையையும்// கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?

    57:25. நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் //நீதியுடன்// நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்;

    16:90. நிச்சயமாக அல்லாஹ் //நீதி// செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்;

    மேலும் 49:09, 5:08, 4:135, 42:15, 6:152, 4:58, வசனங்களில் நீதியை நிலை நாட்டுமாறு இஸ்லாம் கூறுகிறது...

    நீதியை நிலைநாட்டுவதில் மனிதர்களிடத்தில் தவறுகள் வரக்கூடும்..ஆனால் சட்டத்தில் வரக்கூடாது..இஸ்லாமிய சட்டத்தில் தவறுகள் இல்லை.ஆனால் இந்திய சட்டங்களில்தான் அடிப்படை தவறுகள் உள்ளது என்பதே இப்பதிவின் சாராம்சம்..

    நன்றி !!!

    ReplyDelete
  34. @ சார்வாகன்... இஸ்லாமிய வழிமுறைகளை முற்றிலும் இந்தியா ஏற்கும் பட்சத்தில், இஸ்லாமிய அடிப்படையிலான தண்டனைகளை ஏற்க சொல்வதுதான் நியாயமாக இருக்கும்... அதுவும் அனைவருக்கும் அந்த தண்டனைகள் பொதுவாக வைப்பதுதான் நியாயமாக இருக்கும், ...

    இந்தியாவைப்பொருத்தவரை, பாலியல் வன்முறைக்கு காரணம் யார் என ஊருக்கே தெரிந்தாலும் , அந்த மிருகத்தை தண்டிக்க முடியாது.... ஆனால் இஸ்லாமிய சட்டத்தில் , அந்த சம்பவம் ஊருக்கே தெரிய வேண்டாம், நாலு பேர் சாட்சி சொன்னால் போதும் , அந்த மிருகத்துக்கு தண்டனை உறுதி... நண்பரே .. நீங்கள் யதார்த்தம் தெரியாமல் பேசுகிறீர்கள்... நம் ஊரில் நாலு பேர் என்ன,, நாலாயிரம் பேர் சாட்சி சொன்னாலும் எந்த தண்டனையும் இல்லாமல் தப்ப முடியும் என்பதே உண்மை....

    ReplyDelete
  35. சகோதரர் ஆனந்த்,

    உங்களுக்கு நன்றி சொல்ல போவதில்லை, என்னுடைய பிரார்த்தனைகள் மட்டுமே.

    சார்வாகன் (வழக்கம் போல) செம காமெடி செய்து சூப்பர் லிங்க் ஒன்றை தந்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு மிக்க நன்றி. அந்த லிங்க் என்ன சொல்லுகிரதென்றால், சிலர், இஸ்லாத்தில், வன்புணர்ச்சி நடந்தால் அதற்கு நான்கு சாட்சி வேண்டும் என்று தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள் (அந்த காலத்திய பாகிஸ்தான் அரசாங்கத்தை உதாரணம் காட்டியுள்ளனர். அதை தான் சார்வர்கன் பேஸ்ட் செய்துள்ளார்). விபச்சாரத்தையும் வன்புனர்ச்சியையும் போட்டு குழப்பிக்கொள்கின்றார்கள் என்று கூறிவிட்டு இஸ்லாத்தில் அப்படியான சட்டம் எல்லாம் இல்லை என்று விளக்குகின்றது.

    எப்படி என்றால் //Nowhere in the entire Quran or the ahadith has it been mentioned that a rape victim requires four witnesses.// - இப்படியாக... :-)

    வழக்கம்போல தன் அற்புத(??) ஆங்கில அறிவால் தன் தலையிலேயே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுள்ளார் சார்வாகன். அவர் கொடுத்த லிங்க் இந்த பதிவை நியாயப்படுத்தி மகுடம் போல மின்னுகின்றது. சகோதரர் ஆனந்த் அவருக்கு நீங்கள் ஒரு பெரிய நன்றியை கூறிவிடுங்கள்.

    நன்றி...

    ReplyDelete
  36. குருடன் அல்லாஹ்வா ? சார்வகனா..?

    //கற்பழிப்புக்கு ஷரியாவின் படி எப்படி சாட்சிகள் இருக்க் வேண்டும்???
    கொஞ்சம் இதைப் படியுங்கள்!!//

    //இதுதான் அல்லாவின் சட்டம் இப்படி குருட்டுத் த்னமான சட்டத்தை பரிந்திரை செய்யும் நீங்கள்தான் வெட்கப் படவேண்டும்.
    //

    நாம் எவ்வளவு அடித்தாலும் தாங்க கூடிய மனிதராக சார்வாகன் இருப்பதால் அவருக்கு இன்னுமொரு அடி வசமாகவே விழ காத்திருக்கிறது..

    ஒரு பெண்ணைப் பற்றி யாரேனும் அவதூறு சொன்னால், தான் சொன்ன குற்றத்தை அவதூறு சொன்னவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். அப்படி அவரால் தனது குற்றச்சாட்டை நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க இயலாத பட்சத்தில் அவதூறு சொன்னவருக்கு பொது இடத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் வகையில் 80 கசையடிகளை கொடுக்க வேண்டும், மேலும் அந்த மனிதனது சாட்சிகளை இனி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடது என்று இஸ்லாம் சொல்கிறது. இது அவதூறு தொடர்பான ஷரீஅத் சொல்லும் குற்றவியல் சட்டம். இதனைத்தான் கற்பழிப்பு சட்டத்துடன் முடிச்சுப்போட்டு, கற்பழிக்கப்பட்ட பெண் நான்கு சாட்சியத்துடன் வரவேண்டும் என்று சொல்கிறார்.

    இதோ அதற்குரிய வசனம்

    ''எவரேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி, (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வராவிட்டால், அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தகைய)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்புமீறிய) தீயவர்கள். (அல்குர்ஆன் 24:4)

    இவர் சொன்ன “தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை” என்ற வாதத்திற்கு ஆதாரம் தரவேண்டும்.

    எந்த ஷரீஅத் சட்டம் அல்லது எந்த திருக் குர்ஆன் வசனம் அல்லது எந்த நபிமொழியில் இப்படி பதியப்பட்டுள்ளது என்ற ஆதாரமும் விளக்கமும் வேண்டும்.

    தருவீர்களா சார்வாகன்..??

    ReplyDelete
  37. நண்பர் பிச்சை,
    நான் அரபு நாடுகளில் வேலைக்கு சென்ற பெண்கலின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு தண்டிக்கப்பட்ட சவுதிகளீன் பட்டியல் கேட்டேன்.
    கொடுக்கவில்லை!!.

    பாலியல் குற்றம் அரபிகள் நிகழ்தி விட்டு தப்பி விடுவான். இதுதான் எதார்த்த சூழல்!!
    இஸ்லாமை எதற்குமே தீர்வாக நான் ஏற்க முடியாது!!

    ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு மட்டும் தனி சமூக ச்ட்டம் இருக்கும் போது ஏன் தனி குற்றவியல் கூடாது??!!

    மூமின்களுக்கு தெரியும் என்ன நடக்கும் என்று ஹி ஹி
    கொள்ளு என்றால் வாய் திறக்கும் குதிரை,கடிவாளம் என்றால் வாயை மூடும்!!
    **
    இஸ்லாமிய நாடுகளில் குற்றங்கள் குறைவு என்பது பொய்!!!
    பாகிஸ்தானில் பெரும்பாலும் கற்பழிப்புக்கு தண்டனை கிடைக்காது!!.
    கட்டை ப்ஞ்சாயத்தில் கேங்க் ரேப் தண்டனையாக் வழங்கப்ப்டும் நாடு பாகிஸ்தான்!!

    http://www.deccanherald.com/content/294299/five-girls-gang-raped-pakistan.html


    Five girls gang-raped in Pakistan
    Islamabad, Nov 25, 2012, (IANS) :
    Five teenaged girls, the daughter and nieces of a labourer, were allegedly gang-raped by eight men in Pakistan's Punjab province, a media report said Sunday.

    The incident took place in Narangmandi of Sheikhupura district, police told Geo News.
    Muhammad Boota, a labourer, worked on the land of two people, Mara Jat and Zaheer Jat. He made a deal with the landlords that he would harvest their crops against a mutually agreed payment.

    When the job was done, he demanded his remuneration, but the landlords tied him and his wife, and allegedly gang-raped his 13-year-old daughter, and four nieces aged 15, 18, 13 and 14.

    Mara Jat and Zaheer Jat have been arrested, while six other accused






    குற்றவாளிகளுக்கு மரண தண்டனை இந்திய சட்டத்தின் படி கோருங்கள். நான் மறுக்க மாட்டேன். ஏன் இஸ்லாம் மட்டுமே சரியாக‌ நீதி பரிபாலிக்கும் என்ற பொய் சொல்கிறீர்கள்??


    இந்தியாவில் மரண தண்டனை சட்டம் உண்டு. இக்குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. இஸ்லாம் அதன் ஆட்சி நாடுகளைத் திருத்தட்டும்.



    இதோ தனி நபர் கமிசன் அமைத்து விட்டார்கள், குற்றவாளிகள் உள்ளிட்டு கடமை தவறியயவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

    இதே விடயம் அனைத்து குற்றங்களுக்கும் விரைந்து செயலாற்றினால் நல்லது!!

    Thank you

    ReplyDelete
  38. @ சார்வாகன்.... தண்டனையை மட்டுமே வைத்து இஸ்லாமை மதிப்பிடுகிறீர்கள்.. ஒட்டுமொத்த இஸ்லாமிய மதிப்பீடுகள் அமலுக்கு வந்தால்தான் குற்றங்கள் குறையும் என்பதை பார்க்க ம்றுக்கிறீர்கள்.. இந்திய சட்டங்களின் அடிப்படையில் தூக்கு தண்ட்னை கொடுத்தால் மட்டும் ஒன்றும் மாறிவிடாது,,,,விகடன் டைம் பாஸ் போன்ற அச்சு விபச்சாரங்கள், பெண்களை போக பொருட்களாக சித்திரிக்கும் ஊடகங்கள் போன்றவை ஒரு புறம் தொடர செய்து விட்டு , ஒரு புறம் தண்டனை அளிப்பது தீர்வல்ல... ஒட்டு மொத்தமாகவே இஸ்லாமிய மதிப்பீடுகள் தேவை..

    ReplyDelete
  39. @ நாகூர் மீரான்,

    லூஸ்ல விடுங்க. இஸ்லாம் மற்றும் ஷரியத் பற்றிய சார்வாகன் அறிவு அவ்ளோதான். அதனால் தான் அவரை சட்டை செய்வதும் இல்லை, பொருட்டாக எடுத்து கொள்வதும் இல்லை.

    அவர் கொடுத்த இந்த லின்க்கில் http://blogs.tribune.com.pk/story/9484/rape-fallacies-of-the-four-witness-requirement/ உள்ளவற்றை முழுமையாக மொழிபெயர்க்க சொல்லுங்கள் பார்ப்போம். ஹி ஹி..விடுங்க சகோ லூஸ்ல. கொஞ்சம் நம்ம பக்கம் வந்து சார்வாகன் மறுபடியும் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியதை வந்து பாருங்க..http://www.ethirkkural.com/2012/12/blog-post.html.

    @ ஆனந்த்,

    நீங்க பதிவில் கொடுத்த ஹதீஸில் கூட நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு சாட்சிகள் கொண்டுவர சொன்னதாக கூறப்படவில்லை. சார்வாகன் கொடுத்த லிங்க் மிக அற்புதமாக இதனை விளக்குகின்றது. நீங்க கொடுத்த ஹதீஸின் ஆங்கில வடிவமுடன் வன்புணர்ச்சி குறித்த ஷரியத்தை பின்வருமாறு விளக்குகின்றனர்.

    Islamic legal scholars interpret rape as a crime in the category ofhiraba (highway robbery, terrorism or promoting terror). Hiraba does not require four witnesses to prove the offence; circumstantial evidence, medical data and expert testimony form the evidence used to prosecute such crimes. During the time of the Prophet (pbuh), punishment was inflicted on the rapist on the solitary evidence of the woman who was raped by the perpetrator. Wa’il ibn Hujr reports of an incident when a woman was raped. Later, when some people came by, she identified and accused the man of raping her. They seized him and brought him to Allah’s messenger, who said to the woman, “Go away, for Allâh has forgiven you,” but of the man who had raped her, he said, “stone him to death.” (Tirmidhi and Abu Dawud)

    நன்றி...

    ReplyDelete
  40. குவைத்தில் நடக்கும் பாலியல் குற்ரங்களுக்கு இஸ்லாமிய தீர்வு பாருங்கள். கிளுகிளுப்பூட்டம் முஸ்லிமாவின் செயல் திட்டம்
    http://kalvetu.balloonmama.net/2012/07/sex-slave-would-protect-decent-devout.html

    குவைத் என்ற ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டில் இஸ்லாம் என்ற மதம் கடைபிடிக்கப்படுகிறது.அந்த‌ நாட்டில் உள்ள கண்ணியமான ஆண்கள் அந்த நாட்டில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் அல்லது அந்த நட்டில் உள்ள பெண்களை மோகிக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டாலும் அடுத்த பெண்களை மோகிக்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன? அந்த கண்ணியமான ஆண்கள் இப்படி தவறு செய்யாமல இருக்க , அடுத்த நாடுகளில் சிறையில் இருக்கும் பெண்களை விலைக்கு வாங்கி , புணர்வதற்காக வைத்துக்கொள்ளலாம். இதில் தவறு ஏதும் இல்லை. இப்படி செய்வதால் காமம் தலைக்கு ஏறி கட்டுப்படுத்த இயலாமல் இருக்கும் இந்த நாட்டின் கண்ணியமான ஆண்கள் அவர்கள் புணர்வதற்கு என்று உடல்கள் கிடைக்கும். மேலும் இப்படிச்செய்வதால் , இவர்கள் வாழும் நாட்டில் உள்ள பெண்களால் இவர்கள் காமம் உந்துதல் ஆக மாட்டார்கள்.

    "sex-slave would protect decent, devout and 'virile' Kuwaiti men from adultery " இப்படிச் சொல்பவர், குவைத்தில் இருக்கும் ஒரு அரசியல்வாதி பெண். இவர் ஒருமுறை குவைத் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டவர். இவரது பெயர் "சல்வா அல் முட்ரி" (Salwa al Mutairi )

    Read and enjoy!!

    ReplyDelete
  41. சிவில், கிரிமினல் வழக்குகளில் ஷரியத் அடிப்படையில் சட்டமியற்றினால் இந்திய முஸ்லிம்களுக்கு ஆட்சேபனை கிடையாது. சார்வாகன், ஏதோ இந்திய முஸ்லிம்கள் கிரிமினல் வழக்குகளை தவிர்த்து சிவில் வழக்குகளில் மட்டும் ஷரியத் வேண்டும் என கேட்பது போல சித்தரிக்கிறார்.

    ReplyDelete
  42. கூட்டுமனசாட்சின்னு யாராவது கேள்விப்பட்டிருக்கீங்களா? குற்றஞ்சாட்டப்பட்டவர்/ன் (நிரூபிக்கப்பட்டவனல்லன்) ஒரு துலுக்கனாக இருந்தாலே போதும், சட்டுபுட்டுன்னு போட்டு தள்ளனும். சுதந்திர நாட்டில் கற்பழிக்கக்கூட சுதந்திரம் இல்லையா? என்று நினைத்தே கமல்கூட பரிவுகாட்டி இருக்கனும் என்று நினைக்கிறேன். சார்வாகன்சார். பொது சிவில் சட்டத்தையும் முஸ்லிம்களுக்கு வழங்கனும். கிரிமினல் சட்டத்தின் தண்டணைகளையும் 10 வருசத்துக்கு முஸ்லிம்களுக்கு வழங்கனுமா? எந்ந ஊர் நாயம் சார்? காதக்கொடுங்க" ஒரு 10 வருசத்துக்கு பொது கிரிமினல் சட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி. கிரிமினல் மக்கள் தொகையைக் குறைத்தால், குறைந்தா போகும்?"

    ReplyDelete
  43. பதிவும் பின்னூட்டங்களும் செம காமெடி :)

    http://abcnews.go.com/International/story?id=3899920&page=1#.UNtFaORtidM
    http://www.dailymail.co.uk/news/article-1244689/Saudi-girl-13--sentenced-90-lashes-took-mobile-phone-school.html

    இதையும் படித்து பார்த்துவிட்டு தீர்ப்பு சொல்லுங்க சகோதரர்களே

    ReplyDelete
  44. சார்வாகன்!

    என்ன....நாலா புறமும் இந்த இடி வாங்கறீங்க...நீங்க கொடுத்த சுட்டி உங்களுக்கே எதிராகவல்லவா இருக்கிறது. கொஞ்சம் முழுவதும் படித்து விட்டு காப்பி பேஸ்ட் பண்ணப் படாதா! :-)

    அடுத்து இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை ஏன் அமுல்படுத்துவதில்லை என்ற அருமையான கேள்வியையும் வைத்துள்ளீர்கள். தற்போதய சட்டத்தை வைத்தே முஸ்லிம்களை எந்த அளவு பாடாய் படுத்துகிறது காவல் துறை என்பதை அறிவோம். இந்துத்வா வாதிகள் குண்டு வைத்து மஸ்லிம்கள் இறக்கிறார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையே கைது செய்து கொண்டு போகும் பாசிச காவல் துறையை நாம் இத்தனை வருடங்களாக பார்த்து வருகிறோம்.

    இன்னும் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் அமுல்படுத்தப் பட்டால் உங்கள் ஆட்கள் இதை வைத்தே ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் ஒழித்து விடுவார்கள். எனவே விகிதாச்சார அடிப்படையில் அரசு உத்தியோகங்களில், காவல் துறையில், நீதி மன்றங்களில், பாராளுமன்றம், சட்ட மன்றங்களில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநித்துவம் கிடைத்தவுடன் தாராளமாக முஸ்லிம்களுக்கு குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்தலாம். அந்த சட்டங்கள் உங்களைப் பொன்றவர்களையும் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் குற்ற செயல் செய்த இந்து வெளியில் சுதந்திரமாக உலாவுவான், அதே குற்றத்தை செய்த முஸ்லிம் தண்டனையை அனுபவிப்பான். இந்த சிக்கல் தீர குற்றவியல் சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவாகவே இருந்தால்தான் நமது நாட்டுக்கு சரியாகும்.

    மற்றபடி அருமையான ஒரு தீர்வை நமது நாட்டுக்கு சொல்லியுள்ள சகோ ஆனந்தை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  45. to சார்வாகன்.... Are you trying to blame saudis or the sharia law? seems you are confused....

    Funny, will you blame the law if the people are not strictly implementing or following it?

    ReplyDelete
  46. சாறு ////சவுதியில் ஷரியா பிற நாட்டவர் மீது அதிக்கம் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவில் ஏழைகள் மீது பயன்படுத்தப் படுகிறது. பணம் படைத்தவன் இருபுறமும் தப்புகிறான்./////

    ஒரு செல்வந்தர் வீட்டு பெண்ணான பாத்திமா என்பவர் திருடிவிட்டார் .அந்த வழக்கு முஹம்மது நபி [ஸல] அவர்கள் ,முன் வருகிறது .அந்த பெண்ணின் அந்தஸ்த்தை கூறி அப்பெண்ணை மன்னித்து விடுமாறு ஒரு சிலர் கூறுகிறார்கள் .ஆனால் முஹம்மது நபி[ஸல்]அவர்களோ ,எனது மகள் பாத்திமாவே ஆனாலும் கையை வெட்டுவேன் என்று கூறுகிறார்கள்

    1975 இல் சவுதியின் மன்னராக இருந்தபெய்சல் ஆட்சி காலத்தில் மனனர் குடும்பத்தை சேர்ந்த இளவரசி விபச்சாரம் குற்றம் புரிந்ததற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது .

    சார்வாகன் சொல்லுவது போல 10 ஆண்டுகள் முஸ்லிம்களை சரியா படி வாழ்ந்து காட்டத் தயார்படுத்திக் கொள்வோம் ..ஷரியாவின் படி விசாரணை மற்றும் தீர்ப்பு சொல்லுபவர்கள் குரான் ஹதிதுகளை நன்கு அறிந்த முஸ்லிம்களே நியமிக்கப்பட வேண்டும்.


    //கற்பழிப்புக்கு ஷரியாவின் படி எப்படி சாட்சிகள் இருக்க் வேண்டும்???

    கொஞ்சம் இதைப் படியுங்கள்!!///

    பாகிஸ்தானியர்களுக்கு ஷரியத் சரியாக தெரியாது .அங்கு மலலா என்ற சிறுமியை சுட்டார்கள் என்றால் இஸ்லாம் அப்படி சொல்லுகிறது என்று அர்த்தம் இல்லை .நான்கு சாட்சிகளை வைத்துக் கொண்டு எவனும் கற்பழிக்க மாட்டான் .கற்பழிப்பு குற்றத்தை நிருபிக்கவோ ,அல்லது விபச்சாரம் பண்ணியதை நிருபிக்கவோ நான்கு சாட்சிகள் வேண்டும் என்பது பொதுவான விதிகள் .அந்த 4 சாட்சிகள் இல்லாவிட்டால் மருத்துவ ரீதியாக கற்பழிப்பை நிருபித்திடலாம் இல்லையா? அப்படி மருத்துவ ரீதியாக நிரூபித்தாலும் மரண தண்டனை கொடுக்கலாம் .கல்லால் தான் அடிக்க இயலவில்லைஎன்றால் வேறு வழியில் மரண தண்டனை கொடுத்துக் கொள்ளலாம் ..அது போல எங்களது ஷரியா சட்டப்படி வட்டி வாங்கவும் கொடுக்கவுக் கூடாது .அதனால் முஸ்லிம்களுக்கு வங்கியில் மற்றும் அவர்கள் பெரும் கடனுதவிகள் பெரும் நிறுவனங்களில் வட்டியை அரசுவே மானியமாக செலுத்திட வேண்டும்.அதையும் 10 ஆண்டுகளில் பின்பற்றி பார்க்கலாம்

    ReplyDelete
  47. சார்வாகன் ////இஸ்லாமிய நாடுகளில் குற்றங்கள் குறைவு என்பது பொய்!!!////

    மற்ற நாடுகளை ஒப்பு நோக்கின் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் குற்றங்கள் குறைவு என்பதே உண்மை .

    ///இந்தியாவில் மரண தண்டனை சட்டம் உண்டு. இக்குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. இஸ்லாம் அதன் ஆட்சி நாடுகளைத் திருத்தட்டும்.///

    கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கட்டும் .இந்தியா முழுவதும் டெல்லி பஸ் சம்பவம் நாரி கிடக்கிறது .பிறகென்ன ?விசாரணை மண்ணாங்கட்டி ,கோர்ட் எல்லாம் எதற்கு ?என்கவுட்டரில் 4 பேர்களையும் போட்டு தள்ளவேண்டியது தானே .யார் கேட்க போகிறார்கள்? தொடர்ந்து பகிரங்கமாக குற்றவாளிகள் தெரிந்த பிறகு அடையாளம் காட்டுவது ,கோர்ட் விசாரணை ,வக்கீல்கள் போன்ற சம்பிராதாயங்களை குப்பை தொட்டியில் போட்டு விட்டு சுட்ட்தழல் வேண்டியது தானே ,கோயாமுத்தூரில் சிறுமியை வன்புணர்வு செய்த இவர்களை சுட்டுத் தள்ளவில்லையா?
    கற்பழித்தவனுக்கு உடனே மரண தண்டனை கொடுக்கட்டும் .ஆனால் அது இஸ்லாமிய தண்டனை என்று சொல்லிவிடக் கூடாது என்பது தான் கள்ள பரிநாமவாதிகளின் கவலை போலும்

    ReplyDelete
  48. சஹோ. ஆனந்த் அவர்களுக்கு மிக்க நன்றி. எல்லோருக்கும் எல்லாமும் புரிவதில்லை. பலருக்கு இஸ்லாம் என்றாலே அல்லது அது தரும் தீர்வு என்றாலே அதற்கு மேல் அவர்களின் மூளை வேலை செய்யாது. அதை எதிர்க்க வேண்டும் என்ற கோணத்தில் தவிர.

    ReplyDelete
  49. சஹோ. ஆனந்த் அவர்களுக்கு மிக்க நன்றி. எல்லோருக்கும் எல்லாமும் புரிவதில்லை. பலருக்கு இஸ்லாம் என்றாலே அல்லது அது தரும் தீர்வு என்றாலே அதற்கு மேல் அவர்களின் மூளை வேலை செய்யாது. அதை எதிர்க்க வேண்டும் என்ற கோணத்தில் தவிர.

    ReplyDelete
  50. @அமீர்... உண்மைதான்.. எல்லோருக்கும் எல்லோமும் புரிவதில்லை... அடிபட்ட பின்புதான் திருந்துவோம் என பிடிவாதம் பிடிக்கிறார்களே என அப்படியே விட்டு விட முடியாது... காரணம் அவர்கள் அடிபட்டாலும் அதற்காக மகிழ முடியாது...

    ReplyDelete
  51. இஸ்லாமிய சட்டங்கள் உன்னதம் என்றால் இஸ்லாமிய உலகில் பாலியல் குற்றங்களே நடைப் பெறாமல் அல்லவா இருந்திருக்க வேண்டும் ... மொரோக்கோ முதல் பாகிஸ்தான் வரை இஸ்லாமிய சட்டங்கள் அமுலில் உள்ள போதும், உலகில் பாலியல் குற்றங்கள் மிகுந்து நடக்கும் பகுதியாக அது உள்ளது ... !

    இங்கே ஜிங்கியடிக்கும் ஜல்லரைகளுக்கு என்னால் தகுந்த ஆதாரத்துடன் பதில் கொடுக்க முடியும் ... இஸ்லாமில் பாலியல் குற்றங்களுக்கான இலக்கணம் என்ன, என்ன என்ன தண்டனை, அதில் யார் யார் எல்லாம் தப்பிக்கலாம் என்ற ஓட்டை ஒடிசல்கள், யதார்த்ததில் கடந்த 1400 ஆண்டுகால வரலாற்றில் அச் சட்டம் தோல்விக் கண்ட வரலாறு, இன்றையக் காலத்தின் மனித குல நாகரிகத்துக்கு அச்சட்டங்கள் முரண்பட்டு நிற்பது என அனைத்தையும் பிட்டு பிட்டு வைக்க முடியும் .. சவாலுக்கு தயார் என்றால் யாமும் தயார் ... !!!

    ReplyDelete
  52. இக்பால் செல்வன் அவர்களே ,///இன்றைய காலத்தின் மனிதகுல நாகரிகத்திற்கு இஸ்லாமிய சட்டங்கள் முரண்பட்டு நிற்பது என அனைத்தையும் பிட்டு பிட்டு வைக்க முடியும் சவாலுக்கு தயார் என்றால் யாமும் தயார் ////

    உங்கள் சவாலுக்கு நான் தயார் .எங்கே ஒவ்வொரு சட்டமாக இன்றைய மனித குல நாகரிகத்திற்கு முரண்படுவதை சொல்லுங்கள் .

    ReplyDelete
  53. பிச்சைகாரன், சாருவின் ரசிகனாக நீங்கள் இருந்து கொண்டு, அதற்கு எதிர்மாறான இசுலாத்தையும், எப்படி நீங்கள் உங்கள் துணைக்கு அழைக்க முடிகிறது?

    அரைவேக்காட்டுத்தனமான பதிவு இது.
    //""எதிலுமே மந்த தன்மைதான். மது வா ? அதில் தண்ணீரை கலந்து மந்தமாக்குவது. தே நீரா ? பாலை கலந்து மந்தமாக்குவது . இப்படியே செய்து செய்து , சித்தாதாங்களும் இங்கே வரும்போது , நீர்த்து விடுகின்றன.""//
    - மதுவையும் தேனீரையும் வேறு எப்படி குடிப்பீர்கள்? சாரு வை கேட்டுப்பாருங்கள்.

    //"" உலகையே கலக்கிய கம்யூனிசம் , நம் ஊரில் ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் அலையும் அரசியலாக மாறிவிட்டதா இல்லையா ?""//
    - கம்யூனிசம் இப்போது எந்த நாடுகளில் உள்ளது?.... சீனாவிலா?.... அங்கு இருப்பது ஒற்றை கட்சி முறை மட்டுமே, கம்யூனிசம் இல்லை என்பதை நான் சொல்ல வேண்டுமா? ஒரு வேளை வியட்னாமோ??

    கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று சொல்கிறீர், அப்படி பட்ட சட்டங்கள் உள்ள நாடுகளில், இந்த குற்றங்கள் இல்லையா??

    சட்டங்கள் தளர்த்தப்படுவதே மிக சிறந்த வழியாக இருக்க முடியும். கட்டுப்பாடுகள் இல்லாத பழங்குடி இனங்களில் கற்பழிப்பு இல்லை. இது உண்மை..

    சாருவின் சீடராக இருந்து கொண்டு இப்படி பிற்போக்காக இருக்கிறீர்களே!!!!

    ReplyDelete
  54. "முசல்மானாக பிறந்ததாலேயே தீவீரவாதியாக பார்கிறார்கள்" என்றும் சொல்லுகிறீர்கள். அதாவது எந்த விசாரணையும் இல்லாமல் முன்முடிவுடன் அணுகுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். இந்த இடத்தில் நீங்கள் இஸ்லாம் சட்டத்தை எதிர்த்துவிட்டு, மற்றவர்களுக்கு நடக்கும்போது மட்டும் இஸ்லாம் சட்டப்படி எந்தவித விசாரணையும் இன்றி தூக்கிலிட வேண்டும், கல்லிலடித்து கொல்ல வேண்டும் என்று அலறுவது எந்தவிதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

    என்போன்றவர்கள் உங்களுக்கு இழைக்கப்படும் முன்முடிவு அணுகுமுறைகளை விமரிசனம் செய்துகொண்டிருக்கும்போது நீங்கள் மற்றவர்களின் ஜனநாயக உரிமையை கொச்சைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயமாகும்?

    நண்பர் பிச்சைக்காரன்: உங்களுக்கு என்னுடைய பணிவான ஆலோசனை ஒன்று - தயவு செய்து தவறுகள் நிகழும் எந்தவொரு இடத்திலும் தவறிப்போயும் நின்றுவிடாதீர்கள். ஏனென்றால் பல இடங்களில் வேடிக்கை பார்க்க போனவர்கள்தான் பலியாகி இருக்கிறார்கள். அவ்வகையில் உங்களை தவறுதலாக கைது செய்துவிட்டார்கள் என்று வைத்துகொள்வோம், அச்சமயம் உங்கள் வாயே உங்களை பலிவாங்கிவிடும் அபாயம் உள்ளது..

    தவிர,

    உங்கள் கூற்றுப்படி நம் நாட்டிற்கு இறக்குமதியான சரக்கில் தண்ணீர் கலந்துவிட்டது; தேநீரில் பால் கலந்துவிட்டது. இந்த நாட்டின் தன்மை அது என்று நீங்கள் உங்கள் திருவாயாலேயே சொல்லிவிட்டீர்கள்.

    ரொம்பவும் பெருமை வாய்ந்ததாகவும் தவறுகளே இல்லாததாகவும் நீங்கள் குறிப்பிடும் இஸ்லாமிய சட்டம் இங்கே இந்தியாவிற்கு வந்தால் அதுவும் நீர்த்துப்போகும் அபாயம் உள்ளது. அதை பலம் வாய்ந்ததாகவே விட்டுவிடுவோமே...

    ReplyDelete
  55. @suresh இஸ்லாம் நீர்த்து போக வாய்ப்பே இல்லை... அதன் கடுமையான சட்ட திட்டங்கள் , இந்திய பண்பு என்னும் வைரசிடம் இருந்து அதை காப்பாற்றி விடும்

    ReplyDelete
  56. பிச்சைக்காரன்: எனக்கு புரியவில்லை.எந்தவொரு வீரியமுள்ள விஷயமும் இந்தியாவிற்கு வரும்போது நீர்துப்போகிறது என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். சில பல உதாரணங்களையும் சொன்னீர்கள். அதையும் நான் ஏற்றுக்கொள்ளவேண்டும்; இப்போது இஸ்லாம் மட்டும் நீர்த்துபோகாது. எந்த காலத்திலும் எந்த நாட்டிலும் அதன் தன்மை மாறாமல் இருக்கும் என்று சொல்கிறீர்கள், அதையும் நான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைகிறீர்கள்.

    நீங்கள் நம்புவதை எல்லாம் நானும் கேள்வி கேட்காமல் நம்பியாக வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள். இதுவே ஒரு "இந்திய பண்புதான்".

    என்னுடைய எந்த ஒரு கருத்துக்குமே எதிர்கருத்தோ மறுப்போ இல்லை. மாறாக " இஸ்லாம் நீர்த்து போக வாய்ப்பே இல்லை... அதன் கடுமையான சட்ட திட்டங்கள் , இந்திய பண்பு என்னும் வைரசிடம் இருந்து அதை காப்பாற்றி விடும்" என்று ஒரு பதில்.

    ஹ்ம்ம்... ok sir. u r the boss. i shall start believe whatever u say. u pls continue with your intelligence.

    ReplyDelete
  57. @சுரேஷ் கேள்வி கேட்காமல் நான் சொல்வதை ஏற்க வேன்டாம்.. நீங்களே யோசித்து பாருங்கள் தனிப்பதிவாக உங்களுக்கு பதில் அளிப்பேன் . தரவுகளுடன் வருகிறென்...

    ReplyDelete
  58. @சார்வாகன் அனைவருக்கும் ஒரே நீதி இதுவே இஸ்லாமிய ஷரீஅத் சவுதி அரேபியாவில் இந்தியரை கொன்ற 3 சவுதி இளைஞர்களின் தலைவெட்டப்பட்டது [im]https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/564467_478865018822921_1140045077_n.jpg[/im]

    ReplyDelete
  59. அருமையான பதிவு

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா