Pages

Tuesday, January 10, 2017

மறக்க முடியாத குமரகுருபரன் கவிதை


குமரகுருபரனின் ஞானம் நுரைக்கும் போத்தல் நூல் வெளியீட்டு விழாவில் பேசுவதற்காக நான் திட்டமிட்டிருந்த உரை , நேரமின்மை காரணமாக அங்கு பேச முடியவில்லை..இங்கே பதிவேற்றுகிறேன்

-----

அனைவர்க்கும் இனிய மாலை வணக்கம்..

குமரகுருபரன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.. நீங்களும் உங்களுக்குப் பிடித்த கவிதையை வாசித்து ஏன் பிடித்திருக்கிறது என சொல்லுங்கள் என ஆணையிட்டு விட்டு என் சம்மதத்துக்குக்கூட காத்திராமல் லைனை கட் செய்து விட்டார் கவிதா..

அங்கு வருபவர்கள் எல்லாம் இலக்கிய ஜாம்பவான்கள்... அப்படிப்பட்ட இரும்புக்கடையில் இந்த ஈக்கு என்ன வேலை என ஒரு கணம் நினைத்தேன்.. இன்னொன்று ..குமார் கவிதைகள் அனைத்துமே பிடிக்கும்.. இதில் எதை பேசுவது என்றும் குழப்பம்.. சரி. கவிதை எல்லாம் வாசிக்கவில்லை.. வறேன்.. பஃபே டின்னர் சாப்பிட்டு விட்டு கவிதைகளை கேட்டு விட்டு நண்பர்களைப் பார்த்து பேசி விட்டு கிளம்புகிறேன் என சொல்ல நினைத்தேன்.. ஆனால் அவர் போன் செய்தாலும் போனை எடுக்கவில்லை...அவள் அப்படித்தான் என நினைத்துக்கொண்டேன்.

 நண்பர்களே... அவர் கவிதைகள் எல்லாம் பிடித்தாலும் ஒரு குறிப்பிட்ட கவிதையை சொல்ல விரும்புகிறேன். அவரது சில கவிதைகளை அவ்வபோது ரிலாக்ஸ் செய்ய படிக்கலாம்..சில கவிதைகளை சற்று மன தளர்ச்சியின்போது படித்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.. சிலவற்றை மகிழ்ச்சியான தருணங்களில் அந்த சந்தோஷத்தை கவிதையுடன் கொண்டாடலாம். சில கவிதைகளை ப்ரிண்ட் எடுத்து கண்ணில் படும்படி ஒட்டி தினமும் படிக்கலாம்.. அப்படிப்பட்ட கவிதை இது.
----------------------------------------------------------
சிதைந்து போன கனவுகளில் ஒன்று 
எழுந்து போகாமல் அருகிலேயே 
அமர்ந்திருந்தது.

வெகு நேரமாய் அது பேசாமல் இருக்கவும் 
அந்த கனவு உருவான தருணம் குறித்த
ஓவியமொன்றை வரைந்து அளித்தேன்.

தன் முழுமை
தான் சிதைந்து பார்க்கும் கொடூரமொன்றை
அளிக்கிறாயே என்று முனகியது அக் கனவு.

இருக்கலாம்
அதற்குள் நானும் நீயும் நம்பிக்கையுடன்
இருந்தோம் என்பதை அது ஞாபகப் படுத்தும்
அல்லவா என்றேன்.

கனவற்று போன நொடியும்
அதற்குள்ளாகத் தானே இருக்கிறது
என்றது சிதைந்த கனவு.

உன் கனவுக்குள்
உன் கனவு உட்கார்ந்திருந்த சமயமும்
அதற்குள் தான் என்றேன்.

புதிதாக ஒன்றைக் கனவு காண் என்றது

சிதைந்த கனவொன்றை
ஞாபக மடிப்புகளுக்குள் மயிலிறகாக்கி
வைத்துக் கொள்வேன் என்றேன்.

மயில் ஆட மறப்பினும்
மயில் இறகு ஆடும்.

சிதைந்த கனவு எழுந்து
எனக்குள் மறுபடியும் வந்தது.

இந்த முறை
நான் அமைதியாக அதனை
அணைத்துக் கொண்டேன்.

கனவின் சிதைவும் கனவே
காணீர்


----------------------’’

இது ஆயிரம் வாசல் இதயம்..அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம். நம் கனவுகள் எத்தனை எத்தனை..

நண்பர்களே.. நானும் சில நண்பர்களும் முழுக்க முழுக்க இயற்கை வழியில் நடக்கும் விவசாயம் ஒன்றை கனவு கண்டோம்.. விவாதித்தோம்..உழைத்தோம்...எத்தனை இனிமையான நினைவுகள்.. ஆனால் சில காரணங்களால் அதை தொடர முடியவில்லை.. கெமிக்கல் உரங்களுக்கு மாறினோம்..இன்று நன்றாக நடக்கிறது.. ஆனால் அந்த கனவு சிதைந்து விட்டது...

இதனால் நான் வருந்திய இரவுகள் ஏராளம்..
ஆனால் இக்கவிதை என்னை மீட்டெடுத்தது

சிதைந்த கனவொன்றை 
ஞாபக மடிப்புகளுக்குள் மயிலிறகாக்கி
வைத்துக் கொள்வேன்
நானும் நீயும் நம்பிக்கையுடன் 
இருந்தோம் என்பதை அது ஞாபகப் படுத்தும் 
அல்லவா

இவ்வரிகள் என்னை ஏதோ செய்தன....   அந்த கனவு சிதைந்து இருக்கலாம்.. ஆனால் அந்த கனவின் ஆரம்பன கணங்களில் அது கொடுத்த நம்பிக்கை...அதன் இனிய நினைவுகள் அப்படியேதான் இருக்கின்றன...அந்த கணத்தை ஒரு பொக்கிஷம் போல , மயிலிறகாக்கி காப்பாற்ற வேண்டாமா என இக்கவிதை என்னிடம் வினவியது

அந்த கனவு உருவான தருணத்தை ஓவியமாக்கி என் முன் உலவ விட்டது கவிதை

இபப்டி உலவ விட்டால் நான் என்ன கேட்பேன் என்பதையும் எனக்காக குமார் யோசித்து என் சார்பில் எழுதுவார்

தான் சிதைந்து பார்க்கும் கொடூரமொன்றை 
அளிக்கிறாயே என்று முனகியது அக் கனவு

அந்த இனிய நினைவுகளை நினைக்கையில் அதன் அழிவும் நினைவுக்கு வருமே

-வரட்டுமே..அந்த நம்பிக்கையும் இனிய நினைவுகளும் அதற்குள்தானே இருக்கின்றன

-இதற்கு மேல் பேச முடியாமல் அந்த இனிய நினைவுகள் என்னுள் படர்தன

மயில் ஆட மறப்பினும் மயில் இறகு மறக்குமோ

என்னவொரு ஆழமான படிமம்

நம் மனம் இயங்க மறப்பினும் ஆழ் மனம் , ஆழ மனத்தை கடந்த நான்.. ஆன்மா... துரிய நிலை என எங்கேயோ அழைத்துச் செல்கிறது இந்த வரிகள்

கனவு சிதைவுமேகூட கனவுதான்..

பிக் பாங்க் மூலம் உலகம் உருவான அந்த முதல் கணத்திலேயே , அது எப்படி வளர வேண்டும் ..எப்படி சிதைய வேண்டும் போன்ற்வை தீர்மானிக்கப்பட்டு விட்டன

சிதைவு என்பது அஞ்ச வேண்டிய ஒன்றல்ல...அதுதான் வளர்ச்சி... நிலை மறுத்தல் , நிலை மறுத்தலை நிலை மறுத்தல் என க்ம்யூனிச நூல்களில் சொல்கிறார்களே.. எண்ட்ரோபி என அறிவியலில் சொல்கிறார்களே... விதையின் சிதைவுதான் கோதுமை.. கோதுமையின் சிதைவுதான் மீண்டும் விதை

விதை சிதைந்து மீண்டும் கோதுமை சிதைந்து விதை ஆகும்போது , முன்பு இருந்ததைவுட பல மடங்கு விதை உற்பத்தி ஆகி இருக்கும்..

கனவின் சிதைவும் கனவே கண்டீர்


அமைதியாக நம் கனவுகளை அணைக்கக் கற்றுக்கொண்டால் வாழ்வில் ஏது துயரம்.. ஏது வன்முறை.. ஏது ஆசிட் வீச்சுகள்.. வன்முறைகள் ..தற்கொலைகள்

லைஃப் இஸ் அ செலப்ரேஷன்.. செலப்ரேட் இட்..லைஃப் இஸ் அ கேம்..ப்லே இட்.. என கற்றுத்தரும் இக்கவிதை ப்ரிண்ட் செய்யபட்டு ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் லாமினேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதே இப்போதைய என் கனவு என சொல்லி விடைபெறுகிறேன்.    நன்றி... வணக்கம்



Sunday, January 8, 2017

கொண்டாட்டப்பட வேண்டிய குமரகுருபரன் - நூல் வெளியீட்டு விழா

இலக்கியம் என்றாலே தோல்வியாளர்களின் துக்கமாக வாழ்பவர்களின் புகலிடம் என்றொரு எண்ணம் சிலரால் உருவாக்கப்பட்டுள்ளது... தமிழை இலக்கியத்தை காதலை நட்பை கொண்டாட்டமாக நினைப்பவர்கள் சிலர்தான்.. அவர்களில் முக்கியமானவர் கவிஞர் குமரகுருபரன்...

அவரது புத்தக வெளியீட்டு விழா நடந்தபோது , இதை வெறும் புத்தக விழாவாக அல்லாமல் ஒரு நல்ல அனுபவத்தை அனைவருக்கும் வழங்குவதே முக்கியம் என நினைத்தார்.. நூலகங்கள் , அரங்குகள் என இதுபோன்ற விழாக்கள் நடக்கும்... அப்படி வேண்டாம் என நினைத்து , ரேஸ் கிளப்பில் கார்ப்பரேட் மீட் போல நடத்த ஏற்பாடு செய்தார்... வந்தவர்கள் அனைவருக்கும் விலை உயர்ந்த உயர் தரமான டின்னர் என இலக்கியத்துக்கு என இருந்த முகத்தை மாற்றி அமைத்தார்...

அது பொது நிகழ்ச்சி அல்ல... அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்... அன்று செம மழை.. பொது நிகழ்ச்சி என்றாலே இந்த மழையில் கூட்டம் வராது.... அழைக்கப்ப்பட்டவர்கள் சிலர்தான்..அவர்களில் எத்தனைபேர் வரப்போகிறார்களோ என சந்தேகமாக போய்ப்பார்த்தால் , அரங்கு நிறைந்த கூட்டம்.. குமார் மீதும் தமிழ் மீதும் ஆர்வம் கொண்ட அத்தனை பேரை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது... இலக்கியமும் கவிதையும் கொண்டாடப்பட்டது அந்த இரவில்...


நூல் வெளியாகி சில நாட்களிலேயே விற்றுத்தீர்ந்த நிலையில் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா ஏற்பாடு செய்ப்பட்டது...

முதல் நிகழ்ச்சியை விட சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது..

சென்னை எக்மோரில் இருக்கும் ஆடம்பரமான ஹோட்டல் ஒன்றில் வெகு சிறப்பாக நிகழ்ச்சி நடந்தது...

அனைவருமே குமாரை நேசிப்பவர்கள் என்பதால் ஈடுபாட்டுடன் அனைவரும் கலந்து கொண்டனர்


சாரு பேசுகையில் , குமரகுருபரன் மீதான தன் நட்பை பகிர்ந்து கொண்டார்..

குமரகுருபரன் இறந்த போது நான் அஞ்சலி செலுத்த அவர் இல்லம் செல்லவில்லை... சென்றிருந்தால் , நீங்கள் இரண்டு உடல்களை எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும் என்றார்


அனைத்து விளக்குகளுன் அணைக்கப்பட்டு , மேடை மீது சிறு ஒளி மட்டும் பாய, பீத்தோவன் இசை பின்னணியில் குமரகுருபரன் கவிதை ஒன்றை சாரு வாசித்தபோது அந்த இடமே இன்னொரு பிரபஞ்சத்தில் சஞ்சரித்த்து....குமார் ஒரு மிகப்பெரிய இசை ரசிகர்...

உரை , அறிவுரைகள் , இலக்கிய விளக்கங்கள் என்று இல்லாமல் குமாரின் கவிதை வாசிப்பு மட்டுமே முழுக்க முழுக்க நிகழ்ந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது

பலரும் அவருடனான தம் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்...

குமார் ஒரு கவிஞர் மட்டும் அல்ல... திரைப்படத்துறை மீது பெருங்காதலும் மேதமையும் கொண்டவரும்கூட... இந்த அம்சம் குறித்தும் விவாதிக்கப்பட்டது...


நட்பாகவும் அன்பாவாகவும் கொண்டாட்டமாகவும் காதலாகவும் தமிழாகவுமே அன்றி வேறு எப்படியும் குமாரை பார்க்க இயலாது....

அந்த வகையில் குமாருடன் கை குலுக்கி , உரையாடி , அவருடன் சேர்ந்து டின்னர் சாப்பிட்ட மகிழ்ச்சியை தந்த்து விழா

ஞானம் நுரைக்கும் போத்தல் - டிஸ்கவரி வெளியீடு

சாரு எனும் பல்கலைக்கழகம்

அன்புள்ள சாரு,,,,,,

charu school of thought என்கிறீர்களே ...அப்படி என்றால் என்ன என ஒருவர் அராத்து புத்தக விழாவில் என்னைக் கேட்டார்...

இலக்கியக் கூறுகள் , இசங்கள் என்பதையெல்லாம் பேச்சில் காட்டாமல் தன் வாழ்க்கையே தன் செய்தி என கொண்டாட்டமாக , யாருக்கும் தொந்தரவளிக்காத , அன்பை பரப்புகிற ஒரு வித வாழ்க்கை முறை...

விழாவில் சாருவை கவனியுங்கள்...உங்களுக்கே புரியும் என்றேன்..

இலக்கிய உச்ச கணம் என்றால் என்ன என உரை நிகழ்த்தாமல் , சிலிர்ப்பான குரலில் , மெல்லிய இசைப் பின்னண்யில் கவிதை வாசித்து - மன்னிக்கவும் கவிக்கணத்தில் வாழ்ந்து - அந்த பரவ்ச கணத்தில் அனைவரையும் சில நிமிடங்கள் வாழ வைத்தீர்களே... அப்போது புரிந்து கொண்டார்  அவர் சாரு என்றால் அனுபவம்... வெறும் பேச்சு அல்ல என்று..


உங்களைப் பேச அழைத்தபோது , வேண்டாம்... நண்பர் ஜெயமோகன் பேசட்டும் என விட்டுக்கொடுத்தீர்களே... அப்போது புரிந்து கொண்டார் , அக்ரெஸ்சிவ்னெஸ் இல்லாத தன்மையே ஆன்மீகம் என ஜேகே போன்றோர் சொல்வதை வாழ்ந்து காட்டும் ஆன்மிக வாழ்க்கை என்றால் என்ன என்பதை


பிரேக் அப் கதைகளைப்பற்றி விரிவாக பேச தயார் நிலையில் வந்து இருந்தீர்கள்...அதற்காக எவ்வளவு உழைப்பை - பல வேலைப்பளுகளுக்கிடையே - நல்கினீர்கள் என எங்களுக்கு தெரியும்.. ஆனால் விருந்தினரை எதிர்த்துப்பேசுவது போல ஆகி விடுமே என நினைத்து அந்த அற்புதமான உரையையே தவிர்த்தீர்களே... அங்கு புரிந்து கொண்டார் சென்சிப்லிட்டி என்றால் என்னவென்பதை////கன்சிடெரேஷன் எனும் உயரிய தன்மையை


அவ்வளவு பிசியிலும் ஆட்டோகிராப் கேட்போருக்கு பொறுமையாக , தேதி பெயர் உட்பட அனைத்தையும் விசாரித்து அக்கறையுடன் ஓர் ஓவியம் தீட்டுவது போல கை எழுத்துப்போடுவீர்களே..அங்கு புரிந்து கொண்டார் , அன்பும் அக்கறையும்தான் உண்மையான அறம் என்பதை வாழ்ந்து காட்டுகிறீர்கள் என்பதை


ஜெய்மோகனை உரிமை எடுத்துக்கொண்டு கலாய்த்தது ( நான் பெண்ணாக மாறினால் யோக்கியர்களை காதலித்து காலி செய்வேன்.. முதல் நபர் ஜெயமோகன் என்றபோது அவரே வாய் விட்டு சிரித்து விட்டார் ) ஜாலியான கேள்விகள் பதில்கள் , ஆடை நேர்த்தி என எனர்ஜெட்டிக்காக இருந்தீர்களே...அங்கு புரிந்து கொண்டார் .. Life is a celebration... Celebrate it என்பதை...


சிலரது வாசிப்புகள் அவர்கள் மூளையில் ஒரு மடிப்பாக மாறுவதோடு சரி... ஆனால் சாரு படித்து குவித்த புத்தகங்கள் அவரை அன்பு மயமாக்கி வருகிறது... வாழ்ககையை மென் மேலும் கொண்டாட செய்கிறது... இந்த ரசவாதமே சாரு எனும் பல்கலைக்கழகத்தின்  அடி நாதம் என புரிந்து கொண்டேன்....என்ன நான் சொல்வது சரியாக என கேட்டார் அந்த நண்பர்