Pages

Friday, October 20, 2017

பெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்

ஊடகவியலாளர் , எழுத்தாளர் ,கவிஞர், தலித் செயல்பாட்டார் என பன்முக ஆளுமை கொண்டவர் திருமிகு கவிதா சொர்ணவல்லி.. அவருடன் ஓர் உரையாடல்

--------

குமரகுருபரன் அறக்கட்டளையின் விருது விழா மிகச் சிறப்பாக அமைந்தது.. அறக்கட்டளையின் அடுத்த கட்ட திட்டங்கள் என்ன ?

நன்றி  அறக்கட்டளையின் பெயர் JKB Foundation. குமாரின் கல்லூரி பெயர் JKB. இளம் இலக்கியவாதிகளுக்கான குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வழங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் செலுத்துவது , பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கைகொடுப்பது என்பது குமார் தொடர்ந்து மேற்கொண்டிருந்த விஷயம். அதை JKB அறக்கட்டளையும் முன்னெடுக்கும். தற்போதைக்கு மருத்துவத்திற்கு, கல்விக்கு நிதியுதவி அளித்துக்கொண்டிருக்கிறோம். என்னுடைய சொந்தப் பணத்திளிருந்தே இதையெல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட சாதிக் குழந்தைகளுக்கு தரமான ஆங்கிலக் கல்வி கற்பிக்க வேண்டுமென்பது என்னுடைய, JKB Foundation உறுப்பினரானவழக்கறிஞர் கிருபா முனுசாமியின் விருப்பம். அதை வெகு விரைவில் மெய்ப்படுத்துவோம்.

குமார் நடத்திக்கட்டியது போன்ற இலக்கிய கூட்டங்களை நடத்தவும், சிறந்த புத்தகங்களை JKB Foundation மூலம் பதிப்பிக்கவும் திட்டம் இருக்கிறது. கை கூடவேண்டும். பார்க்கலாம்.

பெரியாரிஸ்ட்டுகள் பலர் உண்மையான பெரியாரை பிரதிநிதித்துவம் செய்வதில்லை..இது சார்ந்த நிகழ்வுகளை நடத்துவீர்களா ?

இது போன்ற நிகழ்வுகள் நடத்துவதில் நிஜமாகவே குழப்பங்கள் இருக்கிறது. இலக்கியமோ, அரசியலோ, அறிவுத்தளத்தில் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படும்போது மீண்டும் மீண்டும் அதே பத்து பேர்தான் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

பெண்ணியம் பேசும் கூட்டங்களுக்கு மறுபடி மறுபடி பெண்கள் வருவதில் (அதுவும் பெமினிஸ்ட் பெண்கள் வருவதில்) என்னதான் மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது. ஆண்களிடம்தானே அதைப் பேச வேண்டும். அவர்களை அழைக்காத பெண்ணியக் கூட்டங்களைப் போல்தான் இங்கு இலக்கிய கூட்டங்களும், அரசியல் கூட்டங்களும் அறிவுத் தளத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன என்பது என்னுடைய எண்ணம்.

இருப்பினும், இன்றைய கால கட்டத்திற்கு அதிகமும் தேவையாய் இருக்கிற சமூக நீதி, சாதி ஒழிப்பு பற்றிய கூட்டங்களை நடத்த ஆர்வத்துடனே இருக்கிறோம். குறிப்பாக சாதி ஒழிப்பு பற்றி திருமாவை பேச (ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் என்றாலே அது திருமாதானே) அழைக்கும் கூட்டமாக இல்லாமல், சாதி ஒழிப்பு பற்றி அன்புமணி ராமதாசின் கருத்துக்களை, சாதி ஒழிப்பிற்கான அக்கட்சியின் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையிலான கூட்டங்கள் நடத்துவதே JKB Foundation-ன் எண்ணம்.

ஆனந்தக்ரிஷ்ணன் பக்ஷிராஜனையும் கருப்பு நீலகண்டனையும் வைத்து பெரியார் பற்றிய கூட்டங்களை நடத்துவதும் எங்களுடைய விருப்பம். அதை சாத்தியப்படுத்த்வோம்.


*புத்த மத தீபாவளி என சிலர் அறிமுகம் செய்வது குறித்து உங்க பார்வை ?
ஒரு தேசமோ தேசிய இனமோ வளருவதற்கு வேறு பல காரணிகளுக்கு அப்பாற்பட்டு பண்பாடு, வரலாறு இன்ன பிற தொடர்பான பொது உளவியலும் அத்தியாவசியமான ஒன்றாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, அது ஒரு தேசமே அல்ல. சொல்லப் போனால் வெவ்வேறு தேசிய இனங்களின் தொகுப்பே ஆகும்.
மக்கள் திரள்கள் சாதியடுக்குகளாக இருந்து வருவதால் பொது உளவியலோ பிரக்ஞையோ இருப்பதற்கு மாறாக சாதியப் பிரக்ஞையே இருந்து வருகிறது. இங்கு கொண்டாடப்படும் எந்த ஒரு பண்டிகையும், சாதி மதப் பின்புலமின்றி கொண்டாடப்படுவதில்லை.
மததுக்கென்று பல பண்டிகைகளும், சாதிக்கென்று ஏராளமான விழாக்களுமாக, கொண்டாட்டம் என்பதே மத சாதி வண்ணங்களின் தொகுப்புதான்.
“உனக்கு நீயே ஒளியாய் இரு” என்ற புத்தரின் வாசகத்தோடு தீபாவளி என்பது புத்த ஒளி திருவிழா என்று அந்த மார்க்கத்தை முன்னெடுப்பவர்கள் ஒரு கதை வடிக்கிறார்கள். மகாவீரர் வீடு பேறு அடைந்த தினம்தான் தீப ஆவலியாக கொண்டாடப்படுகிறது என்று ஒரு கதையும் சொல்லப்படுகிறது. பின், வழக்கமான நரகாசுர வதக் கதைகள். லக்ஷ்மி வீட்டிற்கு வரும் தினமாக ஒரு கதை. இப்படி எந்த வடிவாக இருந்தாலும் அதன் பின்னணியில் மார்க்கமும் மதமுமே இருக்கிறது. மதமும் மார்க்கமும் முன்னெடுக்கும் எதுவொன்றையும் நாம் நம்பத் தொடங்கினோம் என்றாலே அங்கு பகுத்தறிவு என்பது கேள்விக்குறிதானே.
தீபாவளியை ஒரு இந்து மதப் பண்டிகையாக என்னால் ஏற்க முடியாத சூழலில், அதை புத்த மார்க்க பண்டிகையாகவோ, சமண பண்டிகையாகவோ, மார்வாடிகளின் பண்டிகையாகவோ, சேட்டுகளின் பண்டிகையாகவோ எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.   இதில் எல்லாம் எனக்கு எந்தவொரு பெரிய பிடிப்போ, அல்லது நம்பிக்கையோ இல்லை.
(பிற மதப் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், ரம்சானை மட்டும் வாழ்த்து சொல்லி கொண்டாடுகிறீர்களே என்றால்,,, ஆம். பிறப்பால் நான் ஒரு பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவளாக இருக்கிறேன். அந்த அடிப்படையில் அந்த மதத்தில் நிகழும் சாதிக் கொடுமைகளை என்னால் உரத்துக் கேள்வி கேள்வி கேட்க முடிகிறது. நான் பிறந்த பெரும்பான்மை மதம், தன் பாசிச கைகள் கொண்டு ஒடுக்க நினைக்கும் சிறும்பான்மை மதங்களுக்காக குரல் கொடுக்கவும், அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்படாமல் இருக்கவும் பிற மதப் பண்டிகைகளை வரவேற்கிறேன்
*பிறப்பு சார்ந்த பெருமிதம்தான் பார்ப்பனியம் என்பது ஒரு பார்வை.. ஆனால் பெரியாரியம் பேசும் சிலர் தமது குடும்ப பெருமையை பேசுவதை அவ்வப்போது காண்கிறோம்.. உங்க கருத்து ?
கொள்கை சார்ந்த பெருமிதங்கள் இருப்பதில் தவறில்லையே  ஆனால் எந்தக் கொள்கையின் அடிப்படையின் நின்று நாம் பேசுகிறோம் என்கிற விழிப்புணர்வு இல்லாமல் வெறும் “கொள்கை பெருமிதங்களை”” மட்டும் சுமப்பது பார்ப்பனியம்தான்.
“நான் பெரியாரிய குடும்பத்தை சேர்ந்தவள்/வன்”
“நான் அம்பேத்கரிஸ்ட்”
“நான் born DMK”
இப்படி வெறுமனே இந்த கொள்கைகளின் பெருமிதங்களில் நின்று பேசுவதில் என்ன ஆகப போகிறது. இந்தக் கொள்கைகளின் அடிப்படையாவது தெரிந்திருக்க வேண்டுமல்லவா ?
மணியம்மையை திருமணம் செய்தது பற்றிய இன்றளவுமாண  விமர்சனத்திற்கு, இன்றைய காலகட்டத்தில் வளர்ந்த இளம் பெண்ணின் பதில்  “30 வயதுடைய மணியம்மை, (பெரியார் தன்னுடைய திருமணம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே மணியம்மைக்கு 30 வயது என்று குறிப்பிடுகிறார்) தான் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தேர்வு செய்வது அவருடைய அடிப்படை உரிமை. 70 வயதான ஆணை அவர் திருமணம் செய்தாலும், 20 வயதுடைய ஆணை அவர் விரும்பி இருந்தாலும், அதை அறிவுத் தளத்தில், அரசியல் தளத்தில் முதிர்ச்சியான, 30 வயதுடைய பெண்ணின் தெளிவான தீர்க்கமான முடிவாகத்தான் அதைப் பார்க்க வேண்டும்” என்பதாகத்தான் இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். அதை விடுத்து, “பெரியாரை எந்தப் பெண்தான் திருமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டாள்” என்பதாக மேம்போக்காக விளக்கமளித்து கடக்க கூடாது என்பது என் புரிதல்.

அண்ணலும் பெரியாரும் சமூக நீதிப் போராளிகள் என்றாலும் வழிமுறைகள் வெவ்வேறு.. ன்றைய சூழலில் யார் வழி பொருத்தமாக இருக்கும் ?

அண்ணலையும்-பெரியாரையும் எதிர் எதிர் வைப்பதை நான் எப்போதுமே ஏற்றுக்கொள்வதில்லை. என்னளவில் அதனை கடுமையாக எதிர்க்கவே செய்கிறேன். அண்ணலின் caste annihilation + பெரியாரின் social justice இரண்டும் இணைந்து முன்பெப்போதும் இல்லாத தீவிரத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

Saturday, August 26, 2017

விளிம புக்கு அப்பால் என்றொரு சிறுகதை தொகுதி

விளிம புக்கு அப்பால் என்றொரு சிறுகதை தொகுதியை அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது... அத்தனையும் புதிய தலைமுறைகள் படைத்தவை..
புத்தகத்தின் வடிவமைப்பு ஸ்டைலிஷாக உள்ளது.. கதைகளை வரிசைப் படுததியிருப்பதும் சிறப்பு..
இந்த தொகுதியின் அனைத்து கதைகளும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு.. அவற்றில் நியூஜென் கதையாக நான் கருதுவது கவிதா சொர்ணவல்லிி யின் சிறுகதையை
அழகான ஷார்ட் பில்ம்போல கதை அமைந்துள்ளது. என்ன வகை கதை ..பிரதான பாத்திரங்கள்.. பாத்திரங்களின் தன்மை ஆகியவற்றை வெகு அழகாக ஆசிரியர் கூற்றாக சொல்லாமல் காட்சிப்பூர்மாக சின்ன சின்ன உரையாடல்களில் நினைவோடைகளில் சொல்கிறார்..
பின் நவீனத்துக்கு என ஃபார்முலா கிடையாது... இன்றைய கால கட்டமே பின் நவீனத்துவ கால கட்டம்தான்.. ஆக இன்றைய வாழ்வை ரெப்ரசன்ட் செய்தாலே அது பின் நவீனத்துவமாகி விடும்... கதாபாத்திரத்துக்கு தன் பெயரை வைப்பது , புரியாமல் எழுதுவது ஆகியவை பின் நவீனத்துவ சூத்திரங்கள் அல்ல... அப்படிப்பட்ட அமெச்சூர் வேலைகளை செய்யாமல் வெகு இயல்பான நடையில் எழுதியிருக்கிறார்

ஒரு நல்ல காதலை சொல்லும் படத்தைப்பார்த்துவிட்டு தன் உணர்வுகளை தன் மகிழ்ச்சியை பகிர்வதற்கு தகுந்த நபரை தேடிப்பிடித்து கால் செய்கிறாள் ஒரு பெண்... இதுதான் ஆரம்பம்... இந்த துவக்கத்திலேயே அவளது ரசனை அவள் பகிர்வுக்கு தகுதியான நபர் அவர்களது உறவு என்பது அழகாக எஸடாப்ளிஷ் ஆகிறது... அவன் அவள் சொல்வதற்கு கொடுக்கும் எதிர்வினை அவளுக்கு தன் உறவினன் ஒருவனது நினைவைத்தூண்டுகிறது.
அவன் அவனது காதல் என பயணிக்கும் கதை காதல் எவ்வளவு அழகானது... அழிக்கவே முடியாதது என்ற உணர்வை கொண்டுகிறது... நாம் அழியலாம்... காதல் நம் தந்தையர் வழியாக வெளிப்பட்டிருக்கும்... நம் மூலம் ...நம் சந்ததியினர் மூலம்... என வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.... நாம் என்பது பொருட்டே இல்லை... இன்னும் ஒரு படி மேலே போய் மனிதர் என்பதே கூட பொருட்டில்லை.. ஒரு பாலம்.. ஒரு ஆறு கூட போதும்... காதல் அவற்றின் மூலம் வெளிப்படும் என்ற விஷயம் அழகாக உள்ளுறைந்துள்ளது..
இந்த அழகான காதல் கதையில் உட்கதையாக சாதிக் கொடுமை கதாநாயகியின் நிமிர்வு ஆகியவைவெகு சிறப்பு. சில பக்கங்களில் இத்தனை விஷயங்கள் சாத்தியமாகக்காரணம் காட்சி ரீதியாக கதை சொல்லும் யுக்திதான்....
சாதிக்கொடுமை என்பது இயல்பாக கதையோட்டத்தில் அமையும் கதைகள் மூலம்தான் இவ்விஷயம் மக்களை அடையும்..இல்லையேல் நாமே எழுதி நாமே படிக்கும் புரட்சிக்கதைகளில் சேர்ந்து விடும்..
நல்ல கதை... வாழ்த்துகள் கவிதா...

Tuesday, August 1, 2017

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

Friday, July 14, 2017

கோழிப் பீ சித்தர் -யார்

 கோழிபி சித்தர்.. பெயர்க்காரணம் கூறுக
------
அந்த சித்தர் ஆலந்தூரில் வாழ்ந்து வந்தார்..ஒரு செல்வந்தரின் குழந்தைக்கு கடும் நோய்.. தீர்த்து வைத்தார்...செல்வந்தர் தங்க காசு  ஒன்றை பரிசளித்தார்.. அடச்சீ.. மலத்தை ஏன் கொணர்ந்தாய் என சீறினார் சித்தர் ... செல்வந்தர் புரியாமல் பார்த்தார்... அங்கே தங்க காசு இல்லை... கோழியின் கழிவு இருந்தது....சிரித்த சித்தர  கோழி கழிவை மீண்டும் தங்கமாக்கினார்...
இதைக் கேள்விப்பட்ட சிலர் கோழி கழிவை கொண்டு வந்து தங்கமாக்குமாறு கேட்டனர்... அவருக்கு பிரமாண்ட ஆலயம் அமைப்பதாக சொன்னார்கள்...
இதை விட மனித மலத்தை தங்கமாக்கவது எளிது என்றார் அவர்... அப்படியா என வியந்தவர்கள் அதை கொண்டு வரட்டுமா என்றனர்.. அதுதான் கொண்டு வந்து இருக்கிறீர்களே... பார்ப்தற்கு அழகாக ஆடை அணிந்து வாசனைகள் பூசி இருந்தாலும் உங்களுக்குள் இருப்பது மலம்தான்....மலமாய் பிறந்து மலமாய் மரிக்காதீர்கள்... தங்கமாக விரும்பினால் வாருங்கள் என்றார்.. பலரை தங்க நிலைக்கு உயர்த்தினார்...பல செல்வந்தர்கள்  தங்களது தங்க சேமிப்புகளை கோழி கழிவாக நினைத்தனர்... அவர்களே தங்கமானார்கள்...
கோழிப் பீ சித்தர் வரலாறு இது..
அவர் சமாதி முன் அமர்ந்து பாருங்கள்.. ஏதாவது மாற்றம் தெரிந்தால் தொடர்ந்து செல்லுங்கள்... இல்லையேல் விட்டு விடுங்கள்

எங்கே இருக்கு ?

கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் திசையில் மோடி சாலையில் -மன்னிக்கவும். ஜி எஸ். டி சாலையில் - நடந்தால் சில அடித் தொலைவில் ஒரு மெட்ரோல் பங்கக் வரும். அதன் இடது பக்கம் ஒரு  சாலை செல்லும்...அதில் சாய்பாபா கோயில் உள்ளது... அருகே இக்கோயில்

Wednesday, June 7, 2017

விஜயகாந்த் அழைப்பை மறுத்த குமரகுருபரன்....குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விழா சிறப்புப் பேட்டி …

   

தமது நண்பர்களை ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் பொருட்டு ,  தமக்கு சம்பந்தம் இல்லாத பெரிய எழுத்தாளர்  பெயரில்
சிலர்விருது கொடுப்பது தமிழ்ச்சூழலில் ஒரு தலைவலியாக உருவெடுத்துள்ளது.. இந்த விருதுகள் சிலர் பெறும் டாக்டர் பட்டம் போன்றது… எங்கும் அதை பெருமையாகச் சொல்லிக் கொள்ள இயலாது..
ஆனால் விஷ்ணுபுரம் விருது கறாரான மதிப்பீடுகளின் அடிப்படையில் வழங்கப்படுவது… அந்த விருதைப் பெறுவது முக்கிய அங்கீகாரமாக உருவாகி உள்ளது…
கவிஞர் குமரகுருபரன் தமிழகத்தின் முக்கியமான அடையாளங்களில் – டிரெண்ட் செட்டர்களில்- ஒருவர்.. கவிஞராக அல்லர்… கவிதையாகவே வாழ்ந்தவர்,,, கொண்டாட்டமான ஒரு கவிஞர்,,, வாழ்வின் உன்னத கணங்களை உள்ளத்தால் தொட்டு உணர்ந்து எழுத்தால் வடிவம் கொடுத்தவர்..
இந்த இருவரின் பெயரால் குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது" வழங்கப்பட இருக்கிறது என அறிவிக்கப்பட்டபோது சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல இருந்தது,…
 நிறைவானது  வரும்போது குறைவானது ஒழிந்து போம் என்கிறது பைபிள்…  அதுபோல இது போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கையில் கீழ்மையான சில முயற்சிகள் அவைகளாகவே காணாமல் போய் விடும் என்பதால் இந்த அறிவிப்பு அனைவருக்குமே உற்சாகம் அளிப்பதாக இருந்தது..
இந்த விழா குறித்து குமரகுருபரனின் முதன்மை ரசிகரும் அவரை அனுதினமும் ஆராதனை செய்பவருமான கவிதா சொர்ணவல்லியுடன் பேசினால் இன்னும் சில விபரங்கள் கிடைக்குமே என எண்ணினோம்.. அவருடன் பேசியதில் இருந்து…
 

( முன் குறிப்பு… அன்பின் மிகுதியால் குமரகுருபரனை குமார் என்றும் அவன் இவன் என்றும் பேசுவது கவிதாவின் இயல்பு… எனவே அவர் சொன்னது அப்படியே பிரசுரிக்கப்பட்டுள்ளது.. குமரகுருபரன் நண்பர்களும் வாசகர்களும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் )


  



விருது அளிக்கும் எண்ணம் எப்படி உருவானது?


- விருதுகள் என்றில்லாமல், பொதுவாகவே திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது குமாரின் எண்ணம். அதை வெற்று எண்ணமாக மட்டுமே வைத்திருக்காமல், செயல்படுத்தியதிலும் குமார் அதீதன். அவனுடைய கல்லூரி காலங்களில் இருந்தே அதை முன்னெடுத்திருக்கிறான் ஊடகங்களில் பெரிய பொறுப்புகள் வகித்தபோது, அவன் தேர்வு செய்து பணி வழங்கிய ஏராளமானோர் இன்று பெரிய பொறுப்புகள் வகித்து வருவதே குமாரின் "அங்கீகார மனதிற்கு" சான்று.


இந்த எண்ணத்துக்கான விதை குமார் போட்டதுதான்..

குமரகுருபரன் பெயரில் விருது வழங்கும் இந்த சூழலில் அவர் பெற்ற விருதுகள் குறித்து சொல்லுங்களேன்  


"ஞானம் நுரைக்கும் போத்தல்" கவிதை நூலுக்கு "ராஜ மார்த்தாண்டன்" விருது கிடைத்தது. அது முதல் விருது. ஆனால், அப்போது இந்தியா முழுவதும் கருத்துரிமைக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட "விருது திருப்பியளிப்பு போராட்டத்திற்கு" ஆதரவளிக்கும் வகையில் "ராஜ மார்த்தாண்டன்" விருதை ஏற்க குமார் மறுத்துவிட்டான்.

அடுத்ததாக "மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது" கவிதை நூலுக்காக "கனடா இலக்கியத் தோட்டம்" விருது கிடைத்தது.

அவரும் நீங்களும் இதை.செய்ய வேண்டும் என ஏதாவது விவாதித்து இருக்கிறீர்களா...


நிறைய ஆன்லைன்தான் ஊடகத்துறையின் எதிர்காலம் என்று பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே விகடனில் எழுதியவன் குமார். ஆன்லைன் பத்திரிக்கைகள், ஆன்லைன் செய்திதளங்கள் என்பதில் குமாருக்கு ஆர்வம் இருந்தது. பத்திரிகையாளன் என்பதால் அரசியல் என்பது குமாருடைய எதிர்கால திட்டமாக இருந்தது. ஒரு முறை விஜயகாந்துடனான நேரடி பேட்டி முடிந்த தருணத்தில், கட்சியில் சேருமாறு அவர் அழைக்க அதை தன்மையாக மறுத்து திரும்பி இருக்கிறான். குமார் திமுகவின் அனுதாபி என்பதால், அரசியலில் ஈடுபடுவது பற்றி பேசி இருக்கிறோம். சினிமாதான் உலகம் என்பதால் அதிகம் சினிமா பற்றிதான் பேச்சுக்களே. நல்ல சினிமா ஒன்று என்பது குமாரின் லட்சியம். வாசிப்பு என்பது சுவாசம். அயராது வாசிப்பான். ஆங்கிலம், தமிழ் என்று புத்தகங்களால் நிறைந்திருக்கும் வீடு. நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்வான். அது பற்றி விவாதிப்போம். இப்படி நிறைய.

தோழியுடன் இணைந்து இணையதள கனவை நனவாக்கி இருக்கிறோம். இலக்கியத்திற்கு செய்வதற்கான நேரம் இப்போது கூடி இருக்கிறது. மற்றவைகள் எப்படி என்று இப்போதைக்கு தெரியவில்லை



விருது குறித்து ஜெயமோகன் அறிவித்தார்,, நீங்கள் தீவிர ஜெயமோகன் வாசகர் என்பதை அறிவோம்…  இந்த அறிவிப்புக்கு இதுதான் காரணமா ?

வாழ்க்கையில் சில தடுமாற்றங்கள் நேர்ந்த தருணங்களில் எல்லாம், ஜெமோவின் எழுத்துக்களை கைப்பற்றியே, அதனை கடந்திருக்கிறான் குமார். அதனாலேயே ஜெமோ மீது அதீத வாஞ்சையும், பிரியமும் குமாருக்கு உண்டு. அதனால்தான் அவன்
பெயரிலான விருதை ஜெமோவே அறிவிக்க வேண்டும். அவர்தான் அதற்கு முழுவடிவம் கொடுக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.

இருந்தாலும், முதலில் ஜெமோவிடன் இதை கொண்டுபோகவில்லை. அரங்காவிடம்தான் பேசினேன். அரங்கா - ஜெமோவிடம் பேசினார்.



இது குறித்து எங்கு எப்போது பேசப்பட்டது




 ஜெமோவை நேரில் பார்த்து பேசியது சாரு மகன் திருமண வரவேற்பின்போதுதான். விருது பற்றிய எண்ணம் மட்டுமே நான். அதனை முழுமையாக உருவாக்கியதில் முழுப்பங்கு ஜெமோவிற்கே.

"குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது" முதலில் யாருக்கு வழங்கப்பட இருக்கிறது ?

கவிஞர் சபரிநாதன் இந்த ஆண்டுக்கான "குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது (அதாவது முதல் விருதை) பெறுகிறார்.

விழா எங்கு நடைபெறுகிறது ? இடம் நேரம் நாள் ?


விழா சென்னையில் வைத்து நடைபெறுகிறது. வடபழையின் உள்ள பீமாஸ் ஹோட்டலில். வரும் சனிக்கிழமை ஐந்து மணிக்கு.


 குமரகுருபரனின் நூல் வெளியீட்டு விழாக்கள் அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமான பிரத்யேக விழாவாக நடந்தன.. இந்த விழா ?


இல்லஇல்ல. இது எல்லாருக்குமான விழாதான் எல்லோரும் வரலாம்.
அனைவரையும் வரவேற்கிறோம்

------------------


சபரி நாதன் கவிதைகளில் சில
------------------------------------------


ஒரு மழைப்பூச்சியை அறிதல்

பழைய அலமாரியிலிருந்தெடுத்த
ஒரு கனத்த தத்துவப் புஸ்தகத்தினடியில்
நசுங்கிக் காய்ந்திருந்தது மழைப்பூச்சியொன்று
அருகே சென்று பார்த்தபோது தான்
அதற்கு ஒரு மண்டை இருப்பது தெரிந்தது
அதில் இரண்டு உணர்கொம்புகள் நீண்டிருந்தன
அதன்கீழே  இரு பொடி கன்னங்கருவிழிகள்
வரிவரியாயிருந்த அதன் இரைப்பை புடைத்த பொற்பொதியென மினுங்கியது
சற்றும் எதிர்பார்த்திராதது
அதற்கு தன் உடலைப் போல் இருமடங்கு நீளமான சிறகுகள் இருக்குமென்பது
ஒளிகொள் சிறகுகள்
நின்று பார்வை அகலும்
கணத்தில் காண்கிறேன்
அதற்கு உயிர் இருக்கிறது


முள்
கனிந்த குலைத்திராட்சையைக் கொய்யும் கரமென
தரையிறங்குகிறது இரவு கருவேலங்காட்டிற்குள்
பகல்முழுதும் எச்சமிட்ட குயில்கள் செட்டையடித்துப் போனபின்
ஓணான்முட்டைகளுக்கென நிழலற்றிய முட்செடி அசைவை நிறுத்துகிறது
முன் ஜென்மத்தில் அது மூன்றுபத்தி வீடு ஒன்றில் வாழ்ந்துவந்தது
பவளமல்லிக்கும் கொடிவீசும் பிச்சிக்கும் மஞ்சள்ரோஜாவிற்குமிடையே
அதிகாலையில் அவற்றோடு உசாவிச்செல்லுமது
களைத்து வீடுதிரும்பி சாய்வுநாற்காலியில் விழுந்து
தன்னுடல்பூத்த முட்கள் ஒவ்வொன்றாய் ஒடித்துப்போடும் ஒவ்வொரு ராவிலும்
இப்போது அதன் வேர்முடி ஒளியைக்கண்டு அஞ்சியோடுகிறது
எந்தச் சாளரமும் எட்டாத தொலைவில் அது தூக்கத்தை விளிக்கிறது


விழிப்படைந்த கத்தி
நாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி
தவறி விழுந்த போது சுயநினைவிற்குத் திரும்பியது
இப்போது அது ஒரு பசித்த புலி,யாராலும் தொடமுடியாது.
இனி அதற்கு எதுவும் தேவை இல்லை
தனக்கு வேண்டிய பழங்களை தானே நறுக்கிக்கொள்ளும்
குளிர்பருவத்தில் உறையுள் குனிந்து சென்று உறங்கும்
சட்டென உற்ற விழிப்பு,திடுமென நுரைத்த கருணை;
பளிச்சிடலைக் கைவிளக்காக ஏந்தியபடி
சுற்றுச்சுவரற்ற தன் இருண்ட கிணற்றை பாதுகாக்க வேண்டும் ராமுழுதும்.
நெருப்பிலும் கல்லிலும் உரசி நலம் பேணும் அது
மழை ஓய்ந்த கருஞ்சாம்பல் மாலைகளில் நடந்துசெல்லக் காணலாம்
காவி உடுத்திய சாதுவென கடுந்தேனீருக்காக.


தானியங்கி நகவெட்டி
முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி நகவெட்டி விரலைக் கடித்தது
சீர் செய்யப்பட்ட இரண்டாவது ரகத்திற்கு சதை என்பது என்னவெனத் தெரியும்
ஆக அது மொத்த நகத்தையும் தின்றது.படிப்படியாக நகவெட்டிகள் மேம்படுத்தப்பட்டன
சமீபத்தில் வெளியான அதிநகவெட்டி முழுமுற்றான தானியங்கிகள்
விலை அதிகம் தான் எனில் அவற்றுக்கு நகம் தவிர வேறெதன் உதவியும் தேவையிராது
என்பதால் நகம் வளர்க்க வேண்டும் நாம் எல்லோரும்
அதன் உலோகப்பற்களின் மினுமினுப்பைச் சிலாகிக்க வேண்டும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்ட இரவுகளில் அது
அலறும்:நான் ஏ..ன் பிறந்தேன்?
நகம் வெட்டத்தான் என்றால் நம்பாது.
***