Pages

Monday, September 30, 2019

ஆடையால் வென்ற ஆவுடையப்பன் −புதையல்

பழைய குமுதம் இதழில் படித்த சுவையான கட்டுரை தங்கள் பார்வைக்கு

Thursday, September 26, 2019

கால் வடிவில் "அது"" . காட்டைக்காக்கும் பூச்சி

கறுப்பு வண்ணஉடலுடன் மஞ்சள் புள்ளிகளுடன் ஊரந்து செல்லும் இப்பூச்சி சிறுவர்களுக்கு ஆர்வமூட்டும் உயிரியாகும். தொட்டால் சுருண்டு கொள்வது சிறுவர்களுக்கு வேடிக்கையாக  இருக்கும். ஆபத்தற்ற பூச்சி என்பதால் பெரும்பாலானோர் இதை கொல்வதில்லை.. ம
கீழே கிடக்கும் இலைதழைகளை தின்று அவற்றை இயற்கை உரமாக்குவதால் இவை நன்மை செய்யும் உயிரியாக கருதப்படுகிறது.. காட்டின் 50% தாவர குப்பைகளை காலி செய்பவை இவைதான். அவற்றை தின்று உரமாக்கி, மண்ணுக்களிக்கின்றன
காடுகளின் அழிவின்மைக்கு  இந்த பூச்சிகளும் காரணமாகும். இவை அழியின் வனங்கள் பாதிப்படையும். ஆனால் அவற்றுக்கு எதிரிகள் அதிகம் இல்லை என்பதால் இவை அழியும் வாய்ப்புகள் குறைவு..  ஏதேனும் சிறுபூச்சிகள் இவற்றை தாக்க முயன்றால் ஹைட்ரஜன் சயனைட் விஷத்தை வெளியேற்றி அவற்றை கொன்றுவிடும்.  பெரிய விலங்குகளுக்கோ மனிதனுக்கோ இந்த விஷத்தால் எந்த அபாயமும் இல்லை
பெண் பூச்சிக்கு 32 கால்கள்.. ஆண் பூச்சிக்கு 32கால்கள் போல தோன்றினாலும் 31 மட்டுமே கால்கள். ஒன்று கால் இல்லை. இனப்பெருக்க உறுப்பு
இந்த பூச்சி குறித்து நம் பழைய இலக்கியங்களில் எந்த குறிப்புகளும் இல்லை. காரணம் இவை நம் நாட்டு பூச்சி இல்லை

அதனால் நல்ல தமிழ்ப்பெயர் இதற்கு இல்லை. ரயில் பூச்சி. அட்டைப்பூச்சி என பேச்சுவழக்கில் அழைக்கிறார்கள்


Monday, September 9, 2019

ஆதரவின்றி கண் மூடிய கலைஞன்

கல்லூரி வைரமுத்துவின் முதல்பாடலான பொன்மாலைப்பொழுது பாடலில் நடித்த ராஜசேகர் அந்த கால லட்சியவாத இளைஞன் வேடத்தில் கச்சிதமாக பொருந்தினார்.
உண்மையிலேயே லட்சியவதாக இளைஞனாகத்தான் இருந்தார். தன் நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து பல நல்ன படங்கள் தந்தார்.   ஒரு தலை ராகம் படத்தில் இவர் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் அதற்கான அங்கீகாரம் கடைசி வரை கிடைக்கவே இல்லை.
பெரிய கனவுகளுடன் சினிமாவுக்கு வந்த அக்கலைஞன் மெகாசீரியல் நடிகன் ஆனார்.

மருத்துவமனை கட்டணம் செலுத்த இயலாமல் சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதெல்லாம் பெருங்கொடுமை

அவரது அறிவோ கலையார்வமோ நடிகன் எனும் புகழோ அவருக்கு உதவவில்லை...

தமிழகம் தலை குனிய வேண்டிய நிகழ்வு

Thursday, September 5, 2019

வெற்றிக்கு ஷார்ட்கட் மந்திரம்

சுப்ரமண்யரும் முருகனும் வெவ்வேறா..

விநாயகர் இறக்குமதி கடவுளா என்பவை எல்லாம் ஆய்வு மாணவர்களுக்கு அவசியம்..

தேடலுடன் இருப்போர்க்கு அந்த ஆய்வு முக்கியமன்று.. அனுபவமே முக்கியம்.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரைவிட கீழ்மண்டப விநாயகர் சக்தி வாயந்தவர் என எழுத்துச்சித்தர் சொன்னார். அது உண்மை என நேரடியாக உணர்ந்தேன். ஆர்வமிருப்பின் சென்று பாருங்கள். உணர்ந்தால் ஓகே. இல்லாவிட்டால் இது நம் கடவுள் இல்லை என விலகுங்கள். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பது உங்கள் முடிவை தீர்மானிக்கலாகாது. நீங்களே உங்களுக்கு விளக்கு.

வெற்றிக்கான எளிய சுருக்கமான ஸ்லோகம் இது
ஶ்ரீசங்கஷ்ட நாசன கணேச ஸ்தோத்திரம்
எனக்கு செட் ஆனது. ஆர்வமிருப்பின் முயலுங்கள்


ஶ்ரீ கணேசாய நமஹ
நாரத உவாச:

ப்ரணம்ய சிரஸா தேவம் கொளரி புத்ரம் விநாயகம்
பக்தா வாசம் ஸ்மரே நித்யம் ஆயுட்காமர்த்த சித்தயே

ப்ரதமம் வக்ரதுண்டம்ச ஏகதந்தம் த்விதீயகம்
த்ரூதீயம் க்ருஷ்ணபிங்காக்‌ஷ்ம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்.

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகட மேவ ச
ஸபதமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்

நவமம் பாலசந்த்ரம்ச தசமம் து விநாயகம்
ஏகாதசம் கண்பதிம் த்வாதசம்து கஜானனம்

த்வாதசைதானி நாமானி த்ரி ஸந்த்யம் ய:படேந் நர:
ந ச விக்ன பயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ

வித்யார்த்தி லபதே வித்யாம் தனார்த்தீ லபதே தனம்
புத்ரார்த்தீ லபதே புத்ரான் மோக்ஷார்த்தீ லபதே கதீம்

ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பீ மாஸை: பலம்லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம்ச லபதே நாத்ர ஸம்சய:

அஷ்ட்ப்யோ ப்ராஹ்மணேப்யச்ச லிகித்வாய: ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ராஸாததா:

இதி ஸ்ரீ நாரத புராணே சங்கஷ்ட நாசனம்
நாம ஸ்ரீ கணபதி ஸ்தோத்ரம் சம்பூர்ண