Pages

Wednesday, October 14, 2020

அப்பரின் அரிய பாடல்

 

சில பாடல்களின் பொருள் நமது வாசிப்பால் புதிதாக ஒரு பொருளைத்தருவதுண்டு

கீழ்க்கண்ட பாடலைப்பாருங்கள்.  அப்பர் ( திருநாவுக்கரசர் ) தேவாரப்பதிகம்


வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்

தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்

திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்

இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே


ஐந்து கள்வர் ஒரு ஆமையைப்பிடித்து நீரில் போட்டு அடுப்பிலேற்றினர்.  சற்று நேரத்தில் சாகப்போகிறோம் என்பதறியாது, அவ்வாமை இதமான சூட்டின் வெதுவெதுப்பை முட்டாள்தனமாக ரசித்து மகிழ்ந்தது. அது"போன்ற முட்டாளாக நானும் இருக்கிறேனே..  ஐந்து புலன்கள் தரும் உலகின்பத்தை நிலையென ரசித்து மகிழ்ந்து வரப்போகும்  மரணம் குறித்த அறிவின்றி இருக்கிறேனே  என்பது மேலோட்டமாக நமக்குத் தெரியும் பொருள்

ஆனால் உள்ளார்ந்த பொருள் வேறு

ஆமை ஒன்று குளிரில் உறைந்து மரணத்தின் விளிம்பில் இருக்கிறது

அப்போது ஒருவன் அதைப்பாரத்து, சமைத்து தின்ன முடிவெடுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தில் அதைப் போட்டு அடுப்பிலேற்றினான்

அந்த வெப்பத்தால் ஆமைக்கு உணர்வுகள் திரும்பின. உயிர் வந்தது. மகிழ்ந்தது

சில நிமிடங்கள் முன் ஒரு ஜடம். அதில் விழிப்புணர்வில்லை

சில நிமிடங்களுக்குப்பிறகு மரணம் . அதிலும் விழிப்பில்லை

இதோ ..கிடைத்திருக்கும் இந்த கணங்கள்தான் வாழ்வின் உச்சம்.  அதை உணர்ந்து நீருக்கு அடுப்புக்கு தனக்கு வாழ்வு தந்தவனுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியில் திளைக்கும் தெளிவின்றி , மரணத்துக்கு வருந்தி கிடைத்த கணத்தை வீணாக்கும் மூடனாக அது இருந்தால் அது எப்படி இருக்கும்..  


நான் அப்படி இருந்துவிடலாகாது..  உலக வெற்றிகளுக்கு சராசரி இன்பங்களை துறந்து வறண்ட வாழ்க்கை வாழந்தால் ஆமை குளிரில் இறப்பது போல் ஆகிவிடும்


உலக இன்பங்களில் திளைத்து அதையே பெரிதென நினைப்பின் கொதிநீரில் வெந்து அவிந்த ஆமை நிலை வந்து விடும்

துறத்தல்  திளைத்தல் இரண்டுக்குமிடையே ஒரு நடுநிலையை பேணும் ஞானம் வேண்டும் என்ற பார்வையையும் இப்பாடல் அளிக்கிறது


Wednesday, October 7, 2020

என் ரத்தத்தில் இருப்பது டிஎன்ஏ அல்ல யுஎஸ்ஏ டிரம்ப் அதிரடி

 அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய கருத்துக் கணிப்புகளின்படி  டிரம்ப் பின்தங்கி இருக்கிறார்   பிடன் முந்துகிறார்

ஆனால் ஒட்டு மொத்தமாக யாருக்கு ஆதரவு அதிகம் என்பதைவிட  மகாணங்களில்  குறிப்பாக பெரிய மகாணங்களில் யாருக்கு அதிக ஆதரவு என்பதுதான் முக்கியம்

கொரானா கட்டுப்படுத்தலில் டிரம்ப் நிர்வாகம் தோற்றுவிட்டது என பிரச்சாரம் செய்து வந்த பிடனுக்கு ,  அதை நிரூபிப்பதுபோல டிரம்புக்கே கொரோனா வந்தது , நல்வாய்ப்பானது.  டிரம்ப் நிர்வாகம் தோற்றதை இனியாவது உணர்ந்தால் சரி என பிரச்சாரம் செய்தார்;


ஆனால் டிரம்ப் அசரவில்லை.   ஆண்டுதோறும் பல்வேறு நோய்களால் உயிரிழப்பு நடக்கிறது.   அதற்காக முடங்கிக்கிடக்க முடியுமா.  மோதிப்பார்த்து விடுவோம் நம் ரத்தத்தில் இருப்பது டி என் ஏ அன்று..  யு எஸ் ஏ.

கொரானாவை வெல்வோம் என மாஸ்க் இல்வாமல் முழங்குகிறார்


இது அங்குள்ள வெள்ளைக்கார இளைஞர்களை கவர்கிறது


தற்போதைய சூழலில் வெற்றி வாய்ப்பு டிரம்புக்கு,அதிகம்




Tuesday, October 6, 2020

மீண்டும் 50:50 பார்முலா! வொர்க் அவுட் ஆகுமா?

 பிஹார் தேர்தலில் பிஜேபி  ஐஜத   கூட்டணி உறுதியாகியுள்ளது.

இரு கட்சிகளும் சமமான இடங்களில் போட்டியிடுகின்றனர்.  எந்தக் கட்சி எவ்வளவு இடங்களில் வென்றாலும் அதைப்பொருட்படுத்தாமல் நிதிஷ் குமார்தான் முதல்வர் என அறிவித்துள்ளர்

ராம் விலாஸ் பஸ்வான் கட்சி இந்தக்கூட்டணியில் இல்லை.   தனித்துப்போட்டியிடுவதாகவும் பிஜேபி போட்டியிடும் இடங்களில் அவர்களுக்கு ஆதரவு என்றும் அறிவித்துள்ளனர்  இதற்கு பதிலுதவியாக தாங்கள் போட்டியிடும் இடங்களில் தமக்கு பிஜேபி ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்


பிஜேபி இதற்கு ஒப்பவில்லை.   ஐஜத பிஜேபி கூட்டணி நிதீஷ் தலைமையில் இயங்குகிறது.  இதற்கு புறம்பாக ரகசியகூட்டணிக்கு இடமில்லை என தெரிவித்துள்ளது


இப்படி ஒரு சூழலில் பஸ்வான் கட்சியுடன் ரகசிய கூட்டுவைத்து நிதீஷுக்குப்பபதில் தாங்களே முதல்வராக பிஜேபி ஆசைப்படும் என்ற அச்சம் இயல்பானதுதான்


ஆனால் நிதிஷ் எத்தனுக்கு எத்தன்.  பிஜேபி பஸ்வானுடன் உறவாடினால் அவர் காங்கிரசுடனோ லாலு கட்சியுடனோ உறவாடத் தயங்க மாட்டார்


பல மாநிலங்களில் ஆட்சியைக்கவிழ்த்த பிஜேபியின் விளையாட்டு பிஹாரில் பலிக்கவில்லை

பிகாரில் கட்சித்தாவல்கள் நடந்தன.  ஆனால் பிஜேபிக்கு சாதகமாக அல்ல  நிதிஷுக்கு சாதகமாக


எனவே நிதிஷின் 50:50 கூட்டணி அவருக்கு சாதகமாகும் வாய்ப்பு அதிகம்

Sunday, October 4, 2020

சூரியனை குளிர்விக்க ப்ரிசரால் முடியுமா ? சிறுகதைப்பார்வை

 ஃப்ரீசருக்குள் உறங்கும் வெய்யில் -(எழுதியவர் நறுமுகை தேவி) சமீபத்தில் நான் ரசித்துப்படித்த கதைகளில் ஒன்று

நம்மை நேசிப்பவர்களல்தான் நமது நுண் ரசனைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

  பனிபடர்ந்த புல் வெளியை ரசித்தல் , புத்தக வாசம் ,  மெல்லிய இசை என எதுவாக இருக்கலாம்

குளிர்காலத்திலும் ஏசியைப்போட்டுக்கொண்டு , அந்தக்குளிரில் போர்வைக்குள் சுருண்டு,கிடப்பது சிலருக்குப்பிடிக்கும்ஶ   குளிர்காலத்துல எதுக்கு ஏசி என குடும்பத்தினர் கத்துவார்கள்.

இப்படி  ஒரு நுண் ரசனையைப்பற்றிய கதை இது.  தனது அந்த ரசனையை மதிப்பவர்கள் மீதான,அன்பு என்றும் மாறாது. அவர்களுக்கு மரணமும் கிடையாது என்பதை , ப்ரீசரில் வைத்து சூரியனைக்குளிர்வித்த முடியாது என்ற கவித்துவமான தலைப்பு சுட்டுகிறது

கதையில் சூரியனும் வெயிலும் ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றன

தேவா என்ற குடும்பத்தலைவியின் பார்வையில் கதை விரிகிறது

அவள் அப்பா நல்ல,"தரமான  சிறப்பான கம்பளிப்போர்வையின் ரசிகர். பண்டிகைகளுக்கு புத்தாடை எடுப்பதைவிட புதுப்போர்வைகள் வாங்கக்கூடியவர்

நல்ல தூக்கம் என்பது நல்ல போர்வையில் இருக்கிறது என நம்புபவர்

இதை அவர் மனைவி எப்படி பார்க்கிறார் தேவா எப்படி பார்க்கிறாள் என்பது இதை அழகான சிறுகதை ஆக்குகிறது

அப்பாவின் வறுமைமிகு இளமைக்காலத்தில் குளிரில் கஷ்டப்பட்டு இருப்பார். நல்ல போர்வைக்கான,அன்றைய ஏக்கத்தை இப்படி தீர்த்துக் கொள்கிறார் என எளிமையாக அதை புரிந்து கொள்கிறார் அம்மா

ஆனால் தேவாவைப் பொறுத்தவரை போர்வை என்பது வெறும் உலகியல்"சார்ந்த விஷயம் அன்று.  அது ஒரு சிறிய சூரியன்.  சூரியனுக்கே தெரியாமல் சற்று வெயிலைத் திருடி வந்து தேவைப்படும்போது வழங்கும் உறுதுணை.  வெயிலை சேமித்து வைத்து அதைத் தேவைப்படும் சூடான தின்பண்டம்போல வழங்க அப்பா கண்டுபிடித்த ஒரு கருவிதான் போர்வை


உண்மையில் இந்த ரசனை , இந்த நுண்ணுவர்வு அவளது ஒட்டு மொத்த ரசனையை , வாழ்வியல் சமூகம் சாரந்த நுண்ணுணர்வை உயர்த்தியுள்ளது என கதையின் போக்கில் உணர்கிறோம்

போர்வை என்பது சூரியனின் படிமமாக மாறி . அது அப்பாவாக உருவெடுக்கிறது.

சூரியனை ப்ரீசரால் குளிர வைத்து விடாது அதுபோல அப்பா என்றும் மரணிக்க முடியாது என அவள் உணர்வது பூடகமாக சொல்லப்பட்டு கதை முடிகிறது

நறுமுகைதேவி கவிஞர் என்பதால் பல வரிகளில் அழகு மிளிர்கிறது


சிறப்பான கதை