tag:blogger.com,1999:blog-143588380504231288.post6322408030747384257..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: பாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்லpichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-87737349330074503872010-07-22T06:05:46.249-07:002010-07-22T06:05:46.249-07:00நான் அனானி 1 AM.
மேலும் ஒன்றைக்குறிப்பிடலாம்.
பா...நான் அனானி 1 AM.<br /><br />மேலும் ஒன்றைக்குறிப்பிடலாம்.<br /><br />பாரதியின் இந்துத்வா கொள்கைகளின் ஒன்று வருணாஷ்ரம். அதை அவர் கடுமையாக ஆதரித்து எழுதினார். அது இந்துமதக் கொள்கையின் தூண்களுள் ஒன்று என்றார். அது நாட்டுக்கு நன்மை. அதன்படி பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) மூன்று முறை தவறாமல் வேதமோதினால், மாதம் மும்மாரி பெய்யும் என்றார்.<br /><br />ஜாதிகள் வேறு; வருணங்கள் வேறு. என்றார். பூனைக்கதையில் வருணாசிரமக்கொள்கையை வெளிப்படுத்தி, மக்களும் வெவ்வேறாகத்தான் பிறக்கிறார்கள்; ஆனால் சண்டை போடாமல் வாழ்வோம் என்றார். அவர் சொல்வது யாதெனில், பிராமணன் பிராமணாகவிருந்து வேதமோதவேண்டும், செட்டி வியாபாரம்; சத்திரன் போர்க்குணம், சூத்திரன் மற்றவருக்கு ஏவல் செய்பவன் என்னும் வருணக்கொளகையை வைத்தே பூனைக்கவிதை எழுதினார்.<br /><br />இவ்வளவும் செய்து விட்டு:<br /><br />‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றார்.<br /><br />ஒரு தலித்துக்கு பூணுல் போடுகிறேன் என்று செய்து, பாப்பாவுக்கு சாதிகள் இல்லையென்று சொல்லிவிட்டு,<br /><br />தான் தன் மகளுக்கு சுத்தமான ஆச்சார பிராமணக்குடும்பத்திலிருந்து மாப்பிள்ளை பார்த்துக் கட்டிவைத்தார்.<br /><br />பெண்ணடிமைத்தனத்தை வெறுப்பது போல எழுதி, பெண்கள் ஆண்கள் சொற்கேட்டு நடக்கவேண்டும் என்னும் இந்து மரபைப் போற்றினார்.<br /><br />போலீஸ் தேடிவந்த போது புதுச்சேரிக்கு சென்று விட்டார் (ஓடிவிட்டார் என்று நான் எழுதவில்லை. நீங்கள் கோபப்ப்டுவீர்கள்). அப்பத்திரிக்கையின் பங்குதாரை பிடித்து அரசு தண்டனை வழங்கியது. தன் குற்றத்திற்காக ஒரு அப்பாவி தண்டனை வாங்குகிறானே என்று மனசாட்சி குத்தவில்லை. சவுகரியமாக புதுச்சேரி வாழ்க்கை. அங்கே குயில் பாட்டும், பாஞசாலி சபதமும் எழுத, இங்கே அவரிடத்தில் இன்னொருவன் சிறைத்தண்டனை அனுபவிக்கிறான். இவர் ‘அச்சமில்லை..அச்சமில்லை’ என்றும் பாட்டெழுதினார்.<br /><br />தன் மனைவியையும் மக்களையும் தவிக்கவிட்டுவிட்டு காசிக்கு யாரிடமும் சொல்லாமல் போய்விட்டார். கிடைத்த வேலைகளை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு, தான் தோன்றித்தனாமாக வாழ்ந்த கட்டிய மனைவியையும் பெற்ற மக்களையும் பட்டினி போட்டார்.<br /><br />பாரதி ஒரு நல்ல மனிதன் அல்ல. நல்ல கவிஞன் என்று சொன்னால் போதும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-45883724365341012152010-07-22T04:17:20.061-07:002010-07-22T04:17:20.061-07:00நன்று புரிபவர்களுக்கு புரியும் :)நன்று புரிபவர்களுக்கு புரியும் :)Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-71922227566521368012010-07-22T03:11:53.388-07:002010-07-22T03:11:53.388-07:00அய்யா... நான் எழுதிய மறுமொழியில் பகத் ஐயும் வறுமைய...அய்யா... நான் எழுதிய மறுமொழியில் பகத் ஐயும் வறுமையில் வாழ்ந்த ஒருவராகத்தான் சித்தரித்திருக்கிறேன். ஒருவர் வறுமையில் பிச்சை எடுத்தார் என்பதற்காக ஒருவர் மாற்று குறைந்து விடுவாரா அல்லது திருடினால் மாற்று குறைந்து விடுவாரா.<br />அப்படி திருடுவதற்கு ஒப்பான செயல்தான் பாரதி இழைத்த தவறு. மக்களை போராட தூண்டி விடும் எழுத்தை எழுதி விட்டு தான் மட்டும் எதிரிக்கு முதுகுசொறியும் வேலை செய்பவனை எப்படி எடை போட வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருப்பவர்களைத்தான் மக்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த சாதாரண மனித பண்பு கூட இல்லாத ஒருவரை எப்படி மகாகவி என்றெல்லாம் சொல்ல முடியும். <br /><br />சின்னமருது பற்றி ....""சின்னமருது எளியவர்; செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்; அனைவரிடமும் வேறுபாடின்றி பழகும் இயல்பினர்; அவரது தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர்; தனக்கென ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக் கொள்ளாத அவரை 1795 இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்குக் கடவுளின் அருள் கிட்டவேண்டும் என மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன்... மருதிருவர் நினைத்திருந்தால் வெள்ளையர்களுடன் சமரசமாகப் போயிருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை, எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை'' என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலில் குறிப்பிடுகின்றான். பாவம் அவனுக்கு மருதிருவரின் திருச்சி பிரகடனத்தின் ஆங்கில மொழியாக்கம் கிடைத்திருக்காது. அதில் வெல்ஷ் துரையின் கேள்விக்கு தனது அரசியலால் பதில் சொல்லியிருப்பான் சின்ன மருது. சரண்டையலாம் எனச் சொன்ன உதவியாளனின் முகத்தில் காறி உமிழ்வான் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த திப்பு. <br /><br />கொஞ்சம் பாரதி உடன் சின்ன மருதுவை திப்புவை ஒப்பிட்டு பாருங்களேன். அதோடு பாரதியின் படித்தவன் பாதகம் செய்தால் ஐயோ... என்ற வரிகளையும் ஒப்பிட்டு பாருங்களேன். அப்புறம் வழிமுறைதான் கொள்கையை தீர்மானிக்கிறதா... கொள்கை வழிமுறையை தீர்மானிக்கிறதா... <br /><br />வேறுபட்ட ஆயுதம் என்ற வழிமுறையை விட ஒன்றுபட வேண்டிய அரசியல் முதன்மையானது இல்லையா..<br /><br />தன் எழுத்தை படித்தவன் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற நோக்கமும், தான் மட்டும் தெரியாமல் எதிரி காலில் விழுந்து கிடக்கலாம் என்பதும் காரியவாதிகளின் செயல் அல்லவா.. அதாவுது நீங்கள் சொல்லும் அரசியல்வாதிகள் செயல் போல பாரதியின் செயல் உள்ளதே..<br /><br />கவிஞன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவனை வறுமையில் வாட விட்ட சமூகம் வெட்கப்பட வேண்டும் என்பதும், அவனது கவிதையால் புரட்சியாளனாக மாறியவன் மாத்திரம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதும் ஜனநாயகம் போல தெரியவில்லையே..<br /><br />பூணூல் பற்றி பெரியார் சொன்னது உங்களுக்கு புரியவில்லையா... அதாவது பூணூல் போடுவது எதற்கு சம்ம் என்றால், தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாத்திரம் கதவில் <>இது பத்தினிகள் வாழும் வீடு<>என எழுதி வைப்பதற்கு சம்ம் என்பார் பெரியார். பாரதி அந்தப் பையனுக்கு பூணூல் மாட்டியதன் மூலம் மற்ற சிறுவர்களின் தாயின் ஒழுக்கத்தை மனுவின் பெயரால் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்.<br /><br />அதெல்லாம் இருக்கட்டும். கட்ட பொம்மனை பாடாத பாரதி, மருதுவை பாடாத பாரதி எட்டப்பன் குல வம்ச வரலாறு எழுத முன்வந்த ரகசியம் என்ன•. அதற்காக அவர் எழுதிய கடிதம் படித்து விட்டு வந்து பேசவும்.<br /><br />அப்புறம் அவரு கவிஞரு மட்டும்தான் என சொல்வது தவறு. காங்கிரசு இயக்கத்தில் தீவிரவாதிகள் பிரிவின் சார்பாக மாநாட்டுக்கு போனவர்தான் அவர். தாம்ப்ராஸ் மாநாட்டுக்கும் போனவர் என்பது வேறு விசயம். ஒரு கவிஞருக்கு பூணூல் மாட்டுவதும், தாம்ப்ராஸ் மாநாட்டுக்கு போவதும் தனிமனித உரிமை என்றே எடுத்து கொள்வோம்.<br /><br />மென்ஷ்விக் புரட்சியை ஆதரித்து ரசிய சோசலிச புரட்சியை எதிர்த்தும் தனது கவிதையில் எழுதியவன் பாரதி என்பதை முற்போக்காளர்கள் தமது அணிகளுக்கு எடுத்து ஆதாரம் தருவது இல்லையா..<br /><br />?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-6352943364831988602010-07-22T01:04:38.386-07:002010-07-22T01:04:38.386-07:00”வறுமையில் வாடினார் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பத...”வறுமையில் வாடினார் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பது அவரை அசிங்க படுத்துவது ஆகாது... அவரை அந்த நிலையில் வைத்து இருந்த சமூகம்தான் வெட்கப்பட வேண்டும்...<br />”<br /><br />பாரதியாரின் வாழ்க்கைபற்றி தெரியாமல் எழுதும்போது இப்படித்தான் தப்பு போடுவீர்கள்.<br /><br />வறுமை பலவகைப்பட்டது. இளமையில் வறுமை. முதுமையில் வறுமை. கல்வி கல்லாமல் வேலை கிடைக்காமல் வறுமை. உடல் தாளாமல் வேலை செய்ய முடியாமல் வறுமை. அளவுக்கு அதிகமாக பிள்ளைகளப்பெற்று அவர்களை வளர்க்க போதிய வருமானம் இல்லாமல் வறுமை.<br /><br />இதில் எந்த வறுமை பாரதியாருக்கு? அதை நீங்கள் ஆராயின், சமூகத்தின் தவறா/ இல்லை, பாரதியாரின் கொழுப்பா எனத் தெரியவரும். <br /><br />கொஞ்சம் படிச்சுட்டு வாரேளா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-84503023879081100192010-07-22T01:00:51.936-07:002010-07-22T01:00:51.936-07:00"தாம் உயர்வாக நினைக்கும் விஷயம் அனைவருக்கும் ..."தாம் உயர்வாக நினைக்கும் விஷயம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அவரது என்னத்தைதான் இதில் பார்க்க வேண்டும்'<br /><br />ஏன் பாரதியார் பூணுலைப்போடுவதை உயர்வாக நினைத்தார்? <br /><br />”பாரதியை போன்ற கவி உள்ளம் கொண்டவர்களால் அல்ல...”<br /><br />பாரதியாருக்கு வெறும் கவி உள்ளம் மட்டுமே இருந்ததா? அவர் வெறும் கவிஞரா? அவர் கட்டுரைகளும் வரைந்தார். அவை இலக்கியக்கட்டுரைகள் அல்ல. அனல் பறக்கும் பிரச்சாரப்பீரங்கிகள். வெள்ளைக்க்காரனுக்கு எதிராக இருந்த போது அவன் அவரைத் தேடு தண்டிக்க ஆசைப்பட்டான். மற்ற கட்டுரைகள் இந்துத்வா கட்டுரைகள். படித்துப்பார்த்து விட்டு எழுதவும். அன்று முசுலிம்களும் கிருத்துவர்களும் எதிர்க்கவில்லை. இன்று பாரதி அப்படியெழுதினால், எதிர்ப்பு பலமாக இருந்திருக்கும்! <br /><br />“உயிருடன் இல்லாத ஒருவர், திட்டினாலும் ஆதரவு கரம் நீட்ட ஆள் இல்லாத ஒருவருடன் மோதுவது நமக்கு எந்த பெருமையும் அளிக்காது”<br /><br />நமக்கு பெருமை, சிறுமையென்றெல்லாம் இல்லை. பாரதியைப்பற்றி பலரும் பேசுகிறார்கள். உங்களை மாதிரி அவரைத் தூக்கி வைத்து. எனவே உங்களுக்கு பதில் சொல்லும்வண்ணமாக மற்றவர்கள் பேசுகிறார்கள்.<br /><br />பார்தியார் ஒரு சாதாரணமான் ஆள் அல்ல. அவர் ஒரு வி.ஐ.பி அன்றும் இன்றும். இல்லாவிட்டால் அவரைப்பற்றி இன்று நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?<br /><br />பொதுமனிதர்கள் இறந்தும் ஊரைக்கெடுப்பார்கள்; அல்லது வளர்ப்பார்கள். எனவே அவர்களைப்பற்றி பேசுவது ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று.<br /><br />“கவிதை , எழுத்து என்பதுதான் பாரதிக்கு தெரிந்த விஷயம்... அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் நடந்து கொண்டதை வைத்து அவரை தவறாக சித்தரிப்பது தவறு... ”<br /><br />தப்பான கணிப்பு. பாரதியார் அப்பாவிக்கவிஞர் என்று சொல்லி அவரை இழிவுபடுத்துகிறீர்கள். அவர் அக்கால பொதுவாழ்க்கையில் நடைபெற்ற அனைத்து விசயங்களையும் ஆழ்ந்து பார்த்தார்; பொது மேடைகளிலும், தன் இதழ்களிலும் பேசினார்; எழுதினார். <br /><br />கொஞ்சம் அவரைப்பற்றி நன்கு தெரிந்து விட்டு எழுதுங்கள்.<br /><br />”அவரை மகா கவி என போற்றுவது பிடிக்கவில்லை என்றால், அவர் கவிதையில், இன்னென்ன தவறு இருக்கிறது என்று சொல்வதுதான் நியாயமே தவிர...”<br /><br />மீண்டும் தப்பு. மகா கவி என்று சொல்வது வெறும் இலக்கியத்திற்காக அல்ல. மேலும் பலவிசயங்களுக்காக. பாரதியாரை அதற்காகத்தான் மகா கவியென்கிறார்கள் அவர் பக்தர்கள்.<br /><br />அந்த விசயங்கள் பிடிக்காத்வர்கள், அவரை ஏன் மகா கவி என்று சொல்ல்வேண்டும் எனக்கேட்கிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-68149465298190345812010-07-22T00:08:03.536-07:002010-07-22T00:08:03.536-07:00//ஒரு சிறுவனுக்கு பூணூல் போட்டு விட்டால் சாதி ஒழிந...//ஒரு சிறுவனுக்கு பூணூல் போட்டு விட்டால் சாதி ஒழிந்து விடுமா என்பது கேள்வி...<br /><br />தாம் உயர்வாக நினைக்கும் விஷயம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அவரது என்னத்தைதான் இதில் பார்க்க வேண்டும்..<br />// Well said!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-71493412371230154922010-07-21T23:21:31.853-07:002010-07-21T23:21:31.853-07:00nice articlenice articleஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-69082363864390220762010-07-21T23:10:29.314-07:002010-07-21T23:10:29.314-07:00mega mega nalla karuthu unarvil patheyavandeya ka...mega mega nalla karuthu unarvil patheyavandeya karuthum kuudanakkeeranhttps://www.blogger.com/profile/04848419043844086985noreply@blogger.com