tag:blogger.com,1999:blog-1435883805042312882024-03-13T03:34:03.138-07:00பிச்சைக்காரன்தேடலில் பிச்சைக்காரனாய் இரு..
உலகில் பார்வையாளனாய் இருpichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger1206125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-35189890343046646602024-03-07T23:28:00.000-08:002024-03-07T23:28:09.469-08:00எஸ் உதயமூர்த்தி பாலகுமாரனால் உருவாகிய நடிகர்<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcIKh8O6uHKR_HDrySXPVyI0wAu-KJmHdz1JayVH-MRCqmUUeqvvilA8xM7vQs2f0ulYyy0h-WTgffCzQd8HYPnZ2F3PVJiB6XvccPvE9X4pf0iaCsnvfub5kxPcDnNUhieT0nc8JKG4vkmOJMtluuzNt26G9YDPZQYM0uYdF4Y9Bi_jyvgL_foPe-iUBv/s910/Polish_20240308_124221423.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="910" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcIKh8O6uHKR_HDrySXPVyI0wAu-KJmHdz1JayVH-MRCqmUUeqvvilA8xM7vQs2f0ulYyy0h-WTgffCzQd8HYPnZ2F3PVJiB6XvccPvE9X4pf0iaCsnvfub5kxPcDnNUhieT0nc8JKG4vkmOJMtluuzNt26G9YDPZQYM0uYdF4Y9Bi_jyvgL_foPe-iUBv/s320/Polish_20240308_124221423.jpg" width="253" /></a></div><br /> <p></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>சாலையோர தேநீர் கடையின் ஸ்பீக்கரில், ஒளிமயமான எதிர்காலம்... பாடிக் கொண் மருந்தார் டி.எம்.எஸ்.; பாடல் ஓயும் வரை தியானத்திலிருந்த நடிகர் கடுகு ராம்மூர்த்தி. 'நன்றி' எனச் சொல்லிவிட்டு பேசத் துவங்கினார்.</p><p><br /></p><p>யாருக்கு. எதுக்காக இந்த நன்றி?</p><p><br /></p><p>விஜயகாந்தின் ஒரு இனிய உதயம் படத்துல அறிமுகமாகி, விஷாலின் ரத்னம் வரைக்கும் டிச்சிட்டேன். 35 வருஷத்துக்கும் மேல எனக்கு இஷ்டமான வேலையை செய்ய வாய்ப்பு தந்த கடவுளுக்குத் தான் இந்த ன்றி!</p><p><br /></p><p>சினிமாத்துறையில் சலுகைகள் வாங்கித் தருதா உங்க வயது?</p><p><br /></p><p>என்ன சலுகை... சில நேரங்கள்ல உட் ர்ந்து சாப்பிட கேரவன் கிடைக்கும்; அவ்வளவுதான். நிமிஷத்துல வசனங்களை மாற்றிக் கொடுத்தாலும், ஒரே ,டேக்'ல முடிக்கிற எனக்கு எந்த சலுகையும் அவசியப்படாது!</p><p><br /></p><p>ஒரேமாதிரியான கதாபாத்தி ரம் வெறுப்பா இல்லையா?</p><p><br /></p><p>'தாத்தா பாத்திரத்துக்கான உணர்ச்சிகள்'னு 100 இருக்கு; 'மாமனாரின் கருத்துக்கள்'னு' 100 இருக்கு; இதுல இருந்து புதுசு புதுசா எடுத்து என் பாத்திரத்தை மெருகேத்து றேனே தவிர, செஞ்ச தையே நான் திரும்ப செய்றதில்லை!</p><p><br /></p><p>உங்களுக்கான பாதை யார் போட்டது?</p><p><br /></p><p>எழுத்தாளர்கள் எம். எஸ்.உதய மூர்த்தி, பாலகுமாரன் எழுத்துக்களை ஆழமா வாசிச்சேன்; அதன் மூலமா, எனக்குள்ளே ஒரு வாழ்க்கைப் பாதையை ஏற்படுத்திட்டு அதுல பயணம் பண்றேன்.</p><p><br /></p><p>ராம்மூர்த்தி பிடிவாதக்காரரா?</p><p><br /></p><p>நடிப்புல என்னைக்காட்டிலும் திறமையானவங்க பலபேர் போராடி பார்த்துட்டு முயற்சியை கைவிட் டுட்டாங்க; ஆனா நான், எனக்கா னது கிடைக்கிறவரைக்கும் போராடுறதுன்னு சப தம் எடுத்திருக்கேன்!</p><p><br /></p><p>உங்க பார்வை யில எது வெற்றி?</p><p><br /></p><p>திரைக்கதை எழுதும்போதே. 'இந்த பாத்திரத் துக்கு கடுகு ராம் மூர்த்தி சரியா இருப் பார்'னு தோண ணும்; அப்படியான பாத்திரத்துல நிச்ச யம் ஒருநாள் நடிப் பேன். அந்த புகழ். காலம் சென்ற என் நண்பர் நடிகர் விவேக் கிற்கு சமர்ப்பணம்</p><p><br /></p><p>நன்றி தினமலர் நாளிதழ் 3 3 2024</p><p><br /></p><p>ராம்மூர்த்தி</p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-23852889724556420542024-03-07T01:56:00.000-08:002024-03-07T01:56:13.807-08:00சத்ய சாய்பாபா சந்திப்பு குறித்து துக்ளக் குருமூர்த்தி<p> </p><p><br /></p><p> 'எப்போதாவது புட்டபர்த்திக்குச் சென்றதுண்டா?'என்று சென்னை 40 - லிருந்து சுப்ர. அனந்தராமன் என்ற வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். சத்ய சாய் பாபாவைத் தரிசிக்க பா.ஜ.க. தலைவர் அத்வானியுடன் இரண்டு முறை புட்டபர்த்தி சென்றிருக்கிறேன். அதற்கு முன் ஒரு முறை, தொழிலதிபர் வேணு ஸ்ரீனிவாசனுடன் அவரை பெங்களூரு White Field ஆஸ்ரமத்தில் தரிசித்தேன். </p><p><br /></p><p>அவர் மறைவதற்கு முன் நானும், நரேந்திர மோடியும் அவரை சென்னையில் தரிசித்தோம்</p><p>அவர் சித்தி அடைந்த பிறகு, 2014-ல் அவரது ஆராதனை தினத் தன்று உரை நிகழ்த்த புட்டபர்த்திக்கு அழைக்கப் பட்டு, அங்கு பேசினேன் . </p><p><br /></p><p><br /></p><p>அந்த உரையை யூ டியூபில் கேட்கலாம். அதை எழுத்து வடிவத்திலும் படிக்கலாம் </p><p><br /></p><p>.2006 -ல் நான் அத்வானியுடன் சென்றபோது தனி அறையில் பாபாவை தரிசித்தோம். கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் உள்பட ஆயிரக்கணக்கானோர் காத்திருக்க, அவர் எங்களுடன் ஒரு மணி நேரம் பேசினார். எப்படி பாரத நாடு பெரும் எழுச்சி பெறும், உலகுக்கு வழி காட்டும் என்பது பற்றித்தான் பேசினார் அவர். வளர்ச்சியும், ஆன்மிகமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துப் போக வேண்டும் என்று கூறினார். அப்போது ஒரு மணி நேரம் என் கையைப் பிடித்தபடியே இருந்தார். தசையே இல்லாத பஞ்சு போல இருந்தது அவர் கை, விரல்கள். எனக்கு இனம்புரியாத ஒரு உணர்வு. அந்த முதல் அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>முதல் அனுபவம்</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>அவரைத் தரிசித்துப் பேசும் முதல் அனுபவம் வேணு ஸ்ரீனிவாசனால் கிடைத்தது. அந்தச் சமயத்தில் விமானப்படையின் மிக் போர் விமானம், மாதம் ஒன்று என்ற கணக்கில் விபத்தில் நொறுங்கி விழுந்து கொண்டிருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கா விலிருந்து வாரம் இருமுறை எனக்கு ஃபோன் செய்து, அது விபத்தல்ல, பாகிஸ்தான் ப்ளாக் மாஜிக் செய் கிறது. அதை பாபாதான் தடுக்க முடியும். நீங்கள் அவரிடம் அதுபற்றிப் பேச வேண்டும்' என்று என்னைப் படாதபாடுபடுத்தி வந்தார். நான் அதை வேணுவிடம் கூறினேன். ''குரு, அவரிடம் நேரம் கேட்டு யாரும் பார்க்க முடியாது. மூன்று நாட்களை ஒதுக்கி வை. ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்குச் சென்று அமர்ந்துவிட வேண்டும். என் நம்பிக்கை, ஏதாவது ஒரு நாள் அவர் நம்மைப் பேச அழைப்பார்" என்று கூறி னார் வேணு. 2-ஆம் நாளே அந்த வாய்ப்புக் கிடைத் தது. மற்றவர்களைச் சந்தித்த பிறகு எங்களை தனியே அழைக்க, விஷயத்தைக் கூறினேன். கண்ணை மூடி 2</p><p> நிமிடம் தியானம் செய்துவிட்டு, "என்னிடம் சொல்லி விட்டதால், அதுபற்றி மறந்து விடலாம் என்று கூறி விடு" என்று தெரிவித்த அவர், "அவருக்கு (அமெரிக் கக்காரருக்கு) ஆசி தருகிறேன், அவரிடம் கொடுத்து விடு" என்று கூறி கையை மூடித் திறந்தார். கையில் ஒரு வைர மோதிரம் சைஸில் பெரியது. அமெரிக்க மனிதர் யார், ஆள் என்ன சைஸ் என்பது எனக்கே தெரியாது. சென்னை வந்தவுடன் அவரிடமிருந்து ஃபோன் வந்தது. விஷயத்தைக் கூறினேன். சென்னை வந்து என்னைச் சந்தித்தார். பெரும் சரீரம். மோதிரம் பொருந்தும் என்று தெரிந்து விட்டது. நடந்ததைக் கூறி அதைக் கொடுத்தேன். அவருக்காகச் செய்தது போல் இருந்தது. ஒரு பக்கம் ஆச்சரியம். மறுபக்கம் அதிசயங்கள் பற்றிய கேள்விகள்.</p><p><br /></p><p>2002-ல் என் கேள்விக்கு 2014-ல் விடை</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>2014-ல் உரை நிகழ்த்த புட்டபர்த்திக்கு அழைத்த போதுதான், பாபாவின் கருத்துக்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர், "நான் அதிசயமாக வரவழைக்கும் விபூதி, மோதிரம் போன்றவை யெல்லாம், உங்களை அழைக்க நான் அளிக்கும் விஸிட்டிங் கார்டுகள். பிறகு நான் வேதம், கீதை, புராணங்களிலிருந்து உங்கள் ஆன்மிக வாழ்க்கை மேம்பாட்டுக்கு வேண்டிய அனைத்தையும் கூறுகிறேன். ஒரு சிலருக்கே அதில் ஈடுபாடு இருக்கிறது என்பது எனக்கு வருத்தம்" என்று தெரிவித்திருப்பதைப் படித்தேன். 2002-ல் எழுந்த என் கேள்விக்கு 2014-ல் பதில் கிடைத்தது.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>மகத்தான சேவைகள்</p><p><br /></p><p>2011-ல் பாபா மறைந்தபோது, புட்டபர்த்தியில் அவரது வளாகத்தில், போட்டது போட்டபடியே கிடந்த கிலோகணக்கான தங்கம், கோடிக்கணக்கான ரூபாய் நாட்டுக்களைப் பத்திரமாகச் சேர்த்து வங்கியில் டெபாஸிட் செய்தார்கள் அறங்காவலர்கள். அதில் பாபா சமாதி கட்ட 35 லட்ச ரூபாயை ரொக்கமாகக் கான்ட்ராக்டரிடம் கொடுக்க, அதை அவர் வெளியே கொண்டு போகும் போது போலீஸ் அவரைச் சோதித்தபோது அந்தப் பணம் காரில் இருந்தது தெரிந்தது. அது போதுமே நமது ஊடகங்களுக்கு. பாபா ஆசிரமத்திலிருந்து பணம் கொள்ளை போகிறது என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டி, ஆஸ்ரமத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளி வேண்டும் என்றெல்லாம் கூடப் பேசப்பட்டது. அந்த அநியாயம் பொறுக்காமல் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில், பாபாவின் சேவைகளைப் Sai Baba and the Neo-Mayos [11.7.2011] என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அவரது பல அரிய சேவைகளில் நான்கை மட்டும் குறிப்பிட்டேன்.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>ஒன்று - ஆந்திராவில் வறண்ட அனந்தபூர் ஜில்லாவில், குடிக்க நீரில்லாமல் ரசாயன விஷநீர் குடித்து தவித்த 750 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்தார் பாபா. 200 கி.மீ. நீள குழாய் பதித்து, வழியில் மலை உச்சியில் 1 லட்சம் முதல் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் தேங்கும் செயற்கை குளங்கள், 2 லட்சம் முதல் 10 லட்சம் லிட்டர் நீர் தங்க 18 நீர்தேக்கங்கள், 40,000 முதல் 3 லட்சம் லிட்டர் நீர்தேங்க உயர்நிலை நீர்நிலைகள் [overhead reservoir], இறுதியில் அவை எல்லாவற்றையும் 2,500 லிட்டர் நீர் கொள்ளும் 1,500 கான்கிரீட் தொட்டிகளில் இணைத்து, அதில் 4 குழாய் களை பொருத்தி மக்களுக்கு குடிநீர் அளிக்கப்பட்டது</p><p> இவை எல்லாம் 18 மாதங்களில் நடந்தது. இதை, திட்டக் கமிஷன் நிகரில்லாத சேவை என்று புகழ்ந்தது.</p><p><br /></p><p>இரண்டு - வறண்ட மேடக், மெஹபூப் நகர் ஆகிய ஆந்திர ஜில்லாக்களில் 250 கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்கச் செய்தார் அவர். </p><p><br /></p><p>அடுத்து 2002-, சென்னை மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்ததைக்கண்ட அவர், 150 கி.மீ. நீள தெலுங்கு கங்கை கால்வாயில் அரசியல் காரணங்களால் நின்றுபோன 69 கி.மீ. கால்வாயை வெட்டி, கரைகளைச் சீரமைத்தார். இன்று சென்னைக்கு கிருஷ்ணா நீர் கிடைக்கக் காரணம் அவர். நான்காவது அவரது பெங்களூர் தர்ம ஆஸ்பத்திரியில் 2011 வரை 10 லட்சம் பேருக்கு சிகிச்சை, 7 லட்சம் இதய பரிசோதனைகள், 35,000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை, 40,000 பேருக்கு கண் ஆபரேஷன் அனைத்தும் இலவசம். படித்து விட்டு வாயைப் பொத்தி நின்றன ஊடகங்கள்.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>காஞ்சி மஹான் அருளிய குணம்</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p> காஞ்சி மஹானின் வழிகாட்டுதலில் வளர்ந்து,உருவான நான், அவரையும் பாபாவையும், யாரையும் யாருடனும், ஒப்பிட்டதில்லை. ஆன்மிகப் பெரியோர் த யாராக இருந்தாலும், அவர்களை ஏற்று வணங்கும் குணம் எனக்கு ஏற்பட்டதே காஞ்சி மஹானின் ஆசியால்தான். சோ உள்பட பலர் எப்படி உங்களால் அனைவரையும் ஏற்க முடிகிறது என்று கேட்டபோது, ஆன்மிகப் பெரியோர் யாரானாலும் நம்மைவிட ம் உயர்ந்தவர் என்று நினைப்பதால், யார் யாரைவிட உயர்ந்தவர் என்ற கேள்வி என் மனதில் எழுந்ததே கிடையாது' என்று தெரிவித்தேன். மதமாற்றம் செய்யாமல் சேவை, பக்தியை பரப்பும் ஆன்மிகப் பெரியோர் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. பெரியவரின் உபந்நியாசங்களை 'தெய்வத்தின் குரல் என்ற பிரம்மாண்டமான 7 பகுதிகளாகத் தொகுத்த ரா.கணபதி, புட்டபர்த்தி சாய்பாபா பற்றி எழுதலாமா என்று பெரியவரைக் கேட்க, "தாராளமாக எழுது' என்று கூறினார். "தீராத விளையாட்டு சாயி" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதினார் அவர். என்னைப் பொறுத்தவரை சாய்பாபா ஒரு சித்தர். சித்தர்களைப் புரிந்து கொள்வது சுலபமல்ல.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-9968112613873891772023-03-04T00:13:00.003-08:002023-03-04T00:14:27.316-08:00ஜெயகாந்தன் கலைஞர் சந்திப்பு, பகுதி 4<p> மு.க: ஆமாம். இந்தத் தீவிரமான புதிய மதுவிலக்குச் சட்டம் குறித்து நான் முரசொலியில் எழுதியிருக்கிறேன். சென்னையில் எல்லாப் பகுதியிலும் ந்தாராளமாய் மது வியாபாரம் நடக்கிறது. முன்பு 10 ரூபாய் மாமூல் கிடைத்த போலீசுக்கு இப்போது 100 ரூபாய் கிடைக்கிறது.</p><p><br /></p><p>ஜெ.கா: இந்திராகாந்தியைக் கொல்ல முயன்றதாக உங்கள் மீது ஒரு குற்றச் சாட்டும், வழக்கும். இருக்கிறது. அல்லவா? அது குறித்து ஏதேனும் சொல்லலாமா?</p><p><br /></p><p>மு.க: என்ன சொல்வது? சிரிப்புதான் வருகிறது. என்மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்திராகாந்தியே ஒப்புக் கொள்ளமாட்டார் என்றுதான் நம்புகிறேன்.</p><p><br /></p><p>ஜெ.கா: இது மாதிரியான பொருத்தமற்ற, அபத்தமான, அநியாயமான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து சம்பந்தப்பட்டோருக்குப் புத்திமதி சொல்லுகிற நீதி மன்றங்கள் வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே நமது நீதி மன்றங்களின் சுதந்திரத்தை மக்கள் நம்புவர். (இது) விஷயம் வழக்கு சம்பந்தப்பட்டிருப்பதால் திரு. மு.க. மெளனமான புன்னகையோடு தமது கருத்து உடன்பாட்டைத் தெரிவிக்கிறார்.) </p><p><br /></p><p>ஜெ.கா: உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? இந்தக் கேள்விக்கு முதலில் என் தரப்பிலிருந்து பதில் சொல்லி விடுகிறேன். எனக்கு உண்டு.</p><p><br /></p><p>மு. க : நம்பிக்கைதானே உண்டு என்றீர்கள்? கடவுள் உண்டு சொல்லவில்லையே? 'உண்டென்பர் சிலர் இல்லை என்பார் சிலர் எனக்கில்லை கடவுள் கவலைஎன்னும் பாரதிதாசன் கருத்தே என்னுடையது. யாவற்றை யும் ஆட்டிப் படைக்கும் சக்தி உண்டுதான். அதை நினைக்கக்கூடிய, சிந்தனை செய்கிற ஒரு சக்தியாக என்னால் கொள்ள முடியாது. எனவே, கடவுளிடம் பிரார்த்தனை வழிபாடு என்பது எல்லாம் என் அளவில் அர்த்தமற்றது. கடவுள் நம்பிக்கை, நடைபாதைகளிலெல்லாம் கோயில் களைக் கட்டிவிடுகிற மூட நம்பிக்கை ஆகிவிடக் கூடாது என்பதே கடவுள் பற்றி என் கருத்து</p><p><br /></p><p>ஜெ.கே: கடவுள் நம்பிக்கையின் உதவியோடு ஒரு சமுதாயத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் உருவாக்கப்பட்டால் ஆட்சேபம் இல்லையே?</p><p><br /></p><p>'கல்பனா' முதல் இதழில் அர்த்தமுள்ள கேள்விகள் பகுதியில் பெரியார் சிலையின் அடியில் எழுதி வைக்கப்படுகிற 'கடவுளை நம்புகிறவன் முட்டாள்' என்பன போன்ற வாசகங்களுக்கு நான் கண்டனம் தெரிவித்தேன். நடைபாதைக் கோயில்களால் விளைகிற அநாகரிகத்தைக் கண்டிக்கிற தாங்கள் இதையும் கண்டிப்பீர்களா?</p><p><br /></p><p>மு.க: எனக்கும். அந்த வாசகங்களில் உடன்பாடு இல்லை. நான் திறந்து வைத்த பெரியார் சிலைகளில் ஏதோ ஒன்றில்தான் அது இருந்தது. அவற்றுக்குப் பதிலாக, பெரியாரின் வேறு பொன்மொழிகளை அவற்றில் குறிக் கலாம் என்பதுதான் என் கருத்து. ஆனால் ஒன்று, நடை பாதைக் கோயில்கள் என்ற பெயரால் அவமானப் படுத்துவதை விட, பெரியார் சிலையில் எழுதப்பட்ட கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுளை நம்புகிறவர்களை அவமானப்படுத்தி விடமாட்டா என்பது என் எண்ணம்.</p><p><br /></p><p>(இது எனக்குப் புரியவில்லை! அவமானமா அல்லவா என்று சம்பந்தப்பட்டவர்கள் அல்லவோ சொல்லுதல் வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன்.)</p><p><br /></p><p>ஜெ.கா: நாமெல்லாம் ராமாயண - மகாபாரதத்தை இழித்தும் பழித்தும் பேசினோம். ஆனால் சோவியத் யூனியனில் நமது ராமாயண மகாபாரத இதிகாசங்கள் மிக உயர்வாகப் போற்றி மதிக்கப்படுகின்றன. வளரும் குழந்தைகளின் மனப்பண்புகளை உருவாக்க அவை மிகவும் பயன்படும் என்பதற்கு இது உதாரணம்.</p><p><br /></p><p>மு.க: ராமாயணம்-மகாபாரதம் ஆகியவை இவக்கிய மாக எடுத்துக் கொள்ளப்படுமாயின் வரவேற்கத் தக்கதே. ஆனால் கல்வியறிவே இல்லாத மக்களின் மூட நம்பிக் கையை வளர்க்க அவை பயன்படுத்தப்பட்டதைத்தான் பெரியார் எதிர்த்தார்.</p><p><br /></p><p>ஜெ.கா: அண்மையில் ஆளும் சுட்சிக்காரர்களின் வன்முறையைக் கண்டித்துத் தாங்களும் மற்றும் பல தோழமைக் கட்சித் தலைவர்களும் ஒரு நாள் கண்டன உண்ணா விரதம் இருந்தீர்கள். அந்த அனுபவம் குறித்து ஏதேனும்...</p><p><br /></p><p>மு.க: தமிழ்நாட்டில் நான் முதல் அமைச்சராக இருந்த காலத்திலும் அதற்கு முன்பும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் வன்முறை நடந்தது உண்டு. ஆனால் அவை இந்த அளவுக்குத் திட்டமிடப்பட்டு, ஒரு பாராளு மன்ற அங்கத்தினரையே கொல்லும் அளவுக்கு இருந் தில்லை. அதிமுக ஆட்சிக்குப் பிறகு நடைபெறும் அரசியல் வன்முறைகள் எண்ணிக்கையில் எப்போதையும்விட அதிகமாயிருக்கின்றன. குற்றம் செய்கிறவர்கள் ஆளும்கட்சிக்காரர்களாய் இருந்தால் அவர்களை விட்டுவிடு கிறார்கள்; அல்லது காப்பாற்றி விடுகிறார்கள். அதனால்தான் எதிர்கட்சிக்காரர்களின் மீது தங்கு தடையற்ற வன்முறை செயல்களை அச்சமற்று அவர்களால் பிரயோகிக்க முடிகிறது. இவற்றை கண்டனம் செய்வதற்கான ஒரு அடையாளப் போராட்டத்தின் ஆரம்பமே அந்த ஒரு நாள் உண்ணாவிரதம். எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட இடையறாத போராட்டங்களின் மூலம்தான் இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும். எந்தக் கட்சி வன்முறையில் ஈடுபடுவதையும் நான் ஏற்கவில்லை.</p><p><br /></p><p>ஜெ.கா. தஞ்சை நாகைத் தேர்தல் அனுபவங்கள் பற்றி...</p><p><br /></p><p>மு.க: தோல்வியால் எனக்குச் சோர்வு ஏற்பட்டுவிடவில்லை. தி.மு.க.வின் ஓட்டுகள் இந்தத் தேர்தலில் குறையவில்லை. மும்முனைப் போட்டி இருந்திருந்தால் தி.மு.க.தான் ஜெயித்திருக்கும். தமிழகத்தில் இந்திராவுக்கு உள்ள செல்வாக்கைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. தஞ்சை வெற்றி அ.தி.மு.க.வின் பலத்தால் ஏற்பட்டது அல்ல. ஆனால் நாகை வெற்றி மிகப் பெரிது. பல கோடி ரூபாய்களை அங்கே வாரி இறைத்தும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச கட்டத்துக்குப் போயும் அ.தி.மு.க. அங்கு தோல்வி அடைந்ததற்குக் காரணம் கம்யூனிஸ்ட் - தி.மு.க. ஒற்றுமையே ஆகும். இந்த ஒற்றுமை எதிர் காலத்தில் மேலும் வலுவாக்கப்படும். வலுவாக்கப்பட வேண்டும்.</p><p><br /></p><p>ஜெ.கா: நீங்கள் எப்பொழுதேனும் உங்களை ஒரு கம்யூனிஸ்டு எதிரி என்று நினைத்துக் கொண்டதோ, பிரகடனம் செய்து கொண்டதோ உண்டா?</p><p><br /></p><p>மு.க: ஒருபோதும் இல்லை. குடியரசுப் பத்திரிகையில் பணியாற்றிய காலம் தொட்டுப் பொதுவுடைமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவன் நான். கம்யூனிஸ்டுத் தோழர்களோடு எவ்வளவோ மோதல்கள் ஏற்பட்டுள்ளன</p><p><br /></p><p>எனினும் என்னை நான் ஒரு சும்யூனிஸ்டு எதிரியாக எண்ணிக் கொண்டதில்லை. மாறாக, நானே ஒரு கம்யூனிஸ்டு என்ற நினைப்பில் வளர்ந்தவன்.</p><p><br /></p><p>ஜெ.கா: (சிரித்துக்கொண்டு) நினைப்பு எதற்கு ...நிஜமாகவே ஆகிவிடவேண்டியதுதானே? (தொடர்ந்து) கூட்டணி அரசியலைப் பற்றி ஒரு முக்கியமான கருத்தை உஙகளிடம் சொல்ல வேண்டும். கூட்டாக மக்கள் மத்தியில் ஓட்டுவாங்கியவர்கள் ஒரு குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டாகவே அரசு அமைப்பதுதான் மக்களுக்குக் கொடுத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது ஆகும் என்கிற மரபு எதிர் காலத்தில் கைக்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். உங்கள் கருத்து என்ன?</p><p><br /></p><p>மு.க: அரசியல் மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை முதலில் கூர்ந்து கவனிப்போம். அத்தகைய மாற்றங்கள் உருவாகும் போது உங்கள் கருத்தைப் புறக்கணித்து விடமுடியாது. உளமார்ந்த உணர்வுகளுடனும், நேச மனப்பான்மையுடனும், மக்களுக்குத் தொண்டாற்ற முன்வரும் அரசியல் கட்சிகளாலேயே அது சாத்தியமாகும்.</p><p><br /></p><p>(அத்தகைய சிறப்புக்குகந்த கட்சிகளாக தி.மு.க.வும்- உங்கள் தோழமைக் கட்சிகளும் உருவாக வேண்டியது தானே? என்று என்னுள் ஓர் எண்ணம் ஓடுகிறது)</p><p><br /></p><p>ஜெ.கா: உங்களுடைய சினிமாப் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். உங்கள் பழைய படங்களின் வசனவரிகளில் பல எனக்கு மனப்பாடம்... அந்த துறையில் ஏதேனும் புதிதாக, உயர்வாக, குறிக்கோளுடன் சாதனை புரியும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்களா?</p><p><br /></p><p>மு.க: ஆர்வம் இருக்கிறது, நேரம் இல்லையே.</p><p><br /></p><p>ஜெ.கா: உங்களின் ஒரு நாளைய நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.</p><p><br /></p><p>மு.க. நாட்களைப் பொறுத்தும் நிகழ்ச்சிகளைப் பொறுத்தும் மாறுபடுகின்றன. அதனால் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி ஒரு பொய்ப் பட்டியல் தர நான் விரும்பவில்லை.</p><p><br /></p><p>ஜெ.கா: நீங்கள் தேகப் பயிற்சி செய்வது உண்டா?</p><p><br /></p><p> மு.க: எப்போதாவது! முறையாக இல்லை!</p><p><br /></p><p>அடுத்து ஒரு சந்திப்பில் இன்னும் நிறையப் பேசுவோமே! இப்போது கட்சிப் பணிகள் என்னை அழைக்கின்றன.</p><p><br /></p><p>நன்றியும் வணக்கமும் கூறி நட்புடன் விடை பெறுகிறோம்.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-10187073397336049982023-03-03T05:41:00.005-08:002023-03-03T05:41:25.298-08:00கலைஞர் ஜெயகாந்தன் சந்திப்பு பகுதி 3<p> ஜெ.கா: அதாவது உங்கள் கட்சி கடந்த காலத்தில் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் இடம் தந்ததன் விளைவுதானே இன்று உள்ள பல எதிர்மறை நிலைமைகளுக்குக் காரணம்?</p><p><br /></p><p>மு.க:சந்தர்ப்பவாதிகள் சிலர் இருந்ததாலேயே அந்தக் கட்சியே சந்தர்ப்பவாதக் கட்சியாகிவிடாது! ஒரு அரசியல் கட்சி சூழ்நிலைக்கேற்ப சில முடிவுகளை ஜனநாயக ரீதியில் எடுப்பது சந்தர்ப்பவாதமாகாது.</p><p><br /></p><p>(இந்த இடத்தில் சந்தர்ப்பவாதம் என்றால் என்ன வென்று திரு. மு.க. நினைக்கிறார் என்று கேட்டிருக்கலாம்! இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்குமே!)</p><p><br /></p><p>ஜெ.கா: இதையெல்லாம் நடந்து முடிந்தவற்றின் சுயவிமர்சனமாகத்தான் கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது தி.மு. கழகத்தின் தலைவர் மட்டுமல்ல - உங்கள் தொண்டர்கள் சொல்லுவது போல - தமிழ் இனத் தலைவராய் உயர்ந்துள்ளீர்கள். எனவே உங்களுடைய ஜனநாயகப் பொறுப்புகள் இப்போது அதிகம். மக்கள் நம்மை நம்புவதால் நமது பொறுப்புகள் பெரிதாகி இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற நம்மிடம் சித்தாந்த பலம் போதிய அளவு இல்லை என்பதை உணர்கிறீர்களா... (கலைஞர் தீவிர சிந்தனை வயப்பட்டவராய் மேலே சொல்லுங்கள்' என்று சைகை செய்கிறார்.)</p><p><br /></p><p>ஜெ.கா: நீங்கள் மார்க்சிஸம் படித்து அதை நம மக்களின் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும். மார்க்ஸியம் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரியது என்று நீங்களும் கருதுகிறீர்களா? மார்க்ஸிசம் என்பது விஞ்ஞான பூர்வமா அரசியலே ஆகும். விஞ்ஞான பூர்வமான தீர்வுகளுக்கு உதவும். உடனடியாக நம் வாழ்க்கையில் தனியுடைமையை நாம் ஒழித்தாக வேண்டும். சுயமரியாதை இயக்கத்தினருக்கும் தேசிய இயக்கத்தினருக்கும் சோஷலிச லட்சியம் பொதுவானதாய் இருந்தது அல்லவா?</p><p><br /></p><p>மு.க: ஆம். நாங்கள் கம்யூனிசத்துக்கு என்றுமே பகைவர்களல்ல. தி.மு.க. தான் உண்மையான கம்யூனிஸ்டு கட்சியென்று ஒருமுறை அண்ணா அவர்கள் பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார்.</p><p><br /></p><p>ஜெ.கா: இப்போது எல்லாருக்கும் பொதுவானதாய் இருப்பது ஊழல் ஒன்றுதான். இந்த ஊழல் ஆபத்தை நாம் அனுபவ ரீதியாகவே அறிந்திருக்கிறோம். நமது வருங்கால சந்ததியினரையேனும் இதிலிருந்து காப்பாற்ற நாம் முயலுதல் வேண்டாமா? அதற்கு அடிப்படையாய் தனிச் சொத்துடைமையை மறுக்கும் தமிழ் நாட்டு இளைஞர்களை உருவாக்கி ஒன்று திரட்டி திராவிட சோஷலிச இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்த உங்கள் இயக்கம் யோசிக்க லாகாதா?</p><p><br /></p><p>மு.க: ஆம். அதுதான் சமுதாயத்தின் குறிக்கோளாக இருக்கவேண்டும். அதற்கோர் அணி அமைப்பது பற்றி பொதுப்படையாக யோசிக்க வேண்டும்.</p><p><br /></p><p>(சோஷலிஸத்திலும், எதிர்கால சமுதாயத்திாாலும் அக் கறையுடைய எல்லாக்கட்சிகளும் யோசிக்க வேண்டுவது அல்லவா இது? என்பதே இதன் பொருள் என்று புரிந்து கொள்கிறேன்.)</p><p><br /></p><p>ஜெ.கா: மறைமலையடிகள் திரு. வி.க. போன்றோரின் எழுத்துக்களால் இலக்கிய ஆர்வம் பெற்றதாகச் சொன்னீர்கள். அண்மையில் நீங்கள் எழுதிய ஒரு நாவலைநான் படித்தேன். நீங்கள் ஏன் இது மாதிரியெல்லாம் 'கதைக்காகக் கதை' எழுத வேண்டும்? இதை வைத்துக் கொண்டு நீங்கள் சமூக உணர்வோடு எழுதவில்லை என்று நான் சொல்லவில்லை...</p><p><br /></p><p>மு.க: சமூகக் கருத்துக்களை அதிகம் வலியுறுத்தி நான் எழுதிய நூல்களும் கதைகளும் ஏராளமிருக்கின்றன. நான் எழுதும் படங்களிலே கூட அதனை வலியுறுத்தியிருக் கிறேன். அண்மையில் வெளிவந்த ஆடு பாம்பே' படம் அதற்கு ஒரு சான்று. நீங்கள் அதைப் பாருங்கள்.</p><p><br /></p><p>ஜெ.கா:</p><p><br /></p><p>அவசியம் பார்க்கிறேன். உங்களைப் போன்றவர்கள் இடையறாது வலியுறுத்தியதன் காரணமாக நாங்கள் திருக்குறள் படிக்கிறோம். பழந்தமிழ் பண்பாடு களில் தீவிரமாக ஆராய்ச்சியும் ஈடுபாடும் கொண்டோராய் இருக்கிறோம். அதுபோல நீங்களும் புதிய சோஷலிசப் பண்பாடுகளில் ஈடுபாடுகாட்ட வேண்டும். சோவியத் யூனியனுக்குப் போய்வர வேண்டும். இந்திய-சோவியத் நட்புறவு இயக்கத்தில் நீங்களும் உங்கள் இயக்கமும் பேரார்வத்துடன் ஈடுபடவேண்டும். உலக அரசியல் அரங்கில் நம் போக்கு சரியான திசைவழியில் தெளிவாக இருந்தால்தான் இங்கே எல்லாம் சரியாக நடக்கும். இது மிகவும் அவசியம்.</p><p><br /></p><p>(இந்தப் பேட்டியின் பிரதான நோக்கமே இது போன்ற சில முக்கியமான கருத்துக்களை இவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான். இவற்றுக்கெல்லாம் நான கலைஞரிடமிருந்து 'வினா-விடை போல் உடனடியாக பதில் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரும் நான் சொன்ன இந்த மிக முக்கியமான கருத்துக்களில் அக்கறை காட்டிக் கேட்டுக் கொள்கிறார்.)</p><p><br /></p><p><br /></p><p>ஜெ.கா: நீங்கள் சோவியத் யூனியனுக்குப் போனதில் லையே? இது எனக்கு மிகவும் ஆச்சரியம் தருகிறது. சரியான தருணம் வாய்த்துப் போவது சிறப்பாகவே இருக்கும். அப்படி ஒரு தருணம் வாய்த்திருக்கிறது. என்றுஎண்ணுகிறீர்களா? </p><p><br /></p><p>(திரு. மு.க.அதற்கு மௌனமாகப் புன்னகை புரிகிறார்.)</p><p><br /></p><p>ஜெ.கா: நாம் ஆரம்பத்தில் பேசிய தமிழ் இன நலன்கள் ஒன்றுபட்ட இந்தியாவில் சிறப்படைவதற்கு சோவியத் யூனியனில் அமைந்துள்ள தேசிய இன சுயநிர்ணய உரிமை நமக்குச் சிறப்பாக வழிகாட்டும். இனப்பற்று எவ்வளவு ஆழமாகவும், ஆரோக்கியமாகவும் சோவியத் சமுதாயத்தில் ஒவ்வொரு தேசீய இனத்திலும் உருவாக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது என்பதை நாம் அறிந்து பயிலவேண்டும்.</p><p><br /></p><p>மு.க : ஒன்றுபட்ட இந்தியா மிகமிக அவசியம். ஆனால் இன்று உள்ள சூழ்நிலையில் இது தவறு செய்பவர்களுக்கு, தேசிய நலன்களின் பகைவர்களுக்கு அரணாகிவிடுகிறதே...!</p><p><br /></p><p>ஜெ.கா: இன்றுள்ள நிலை என்று நீங்கள் எதைக் குறிக்கிறீர்கள்? எனது கருத்தில் உலக மனித சமுதாயத்தில் ஒரு நூற்றாண்டுக் காலமாய் எழுந்துள்ள நிலைமையும் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு சமுதாய. நிலைமைகள் மாறியாக வேண்டிய வளர்ச்சியின் நிர்ப்பந்த மும், அதனை இயன்றவரை தடுப்பதற்கான அதன் எதிரி களின் முயற்சியும்தான். சமத்துவமில்லாத ஜனநாயகத்தில் ஒற்றுமை என்பது துர்பலம்தான். ஆகவே ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உடனடித் தேவை, ஜனநாயகம் போலவே சோசலிஷத்துக்கான மாற்றம்தான் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா?</p><p><br /></p><p>மு.க: இதைப் படிப்படியாகத்தான் செய்ய வேண்டும். இதுவே நம் குறிக்கோள். சொல் அளவில் உள்ள சோஷலிசம் செயல் வடிவம்பெற வேண்டும்.</p><p><br /></p><p>ஜெ.கா: இந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா அந்தத் திசை வழியில் எந்த அளவு முன்னேறி இருக்கிறது?</p><p><br /></p><p>மு.சு: கொள்கை அளவில்தான் - செயல் அளவில் கணிசமாகக் கணக்கிட்டுக் கூறமுடியாது.</p><p><br /></p><p>ஜெ.கா: ஒன்றுபட்ட இந்தியாவில் சமத்துவம்...</p><p><br /></p><p>மு.க: (குறுக்கிட்டு) ஒன்றுபட்ட இந்தியா, சமத்துவம் என்றெல்லாம் நீங்கள் சொல்லும்போது, உதாரணத்துக்கு நமது இந்திய அரசாங்கத்தின் மதுவிலக்குக் கொள்கை எடுத்துக் கொள்வோம். மதுவிலக்கு தேவையா இல்லை என்ற விவாதத்தில் நாம் இறங்க வேண்டாம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியானதாய் அமை வேண்டும். சமத்துவமான நெறி முறைகள் வேண்டும். விஷயத்தில்கூட இங்கே மாநிலங்களுக்கிடையே பேதங்கள் நிலவுகின்றன. இது சரியல்ல என்று கருதுகிறேன்.</p><p><br /></p><p>ஜெ.கா: உண்மையில் இவ்வளவு கடுமையான மதுவிலக்குச் சட்டங்களை யாருடைய நிர்ப்பந்தத்தில் நம் மீது திணிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?</p><p><br /></p><p>மு.க: சந்தேகமே வேண்டாம். கள்ளச் சாராயக் காரர்களின் நிர்ப்பந்தம்தான். மதுவிலக்கு இல்லாதிருந்தால் அரசாங்கத்துக்குப் பணம் கிடைக்கும். மது விலக்கை அமலபடுத்தினால் ஆளுங்கட்சிக்காரர்களின் புரவலர்கள் சாராய வியாபாரிகளுக்கு லாபமாகவும், போலீஸ் களுக்கு மாமூலாகவும் நிறைய சம்பாதிக்க முடியும் அல்லவா?</p><p>ஜெ.கா: தீங்களும்தானே மது விலக்கை அமுல் படுத்தினீர்கள்?</p><p><br /></p><p>மு.க: காமராஜரைப் போன்ற பெரிய தலைவர்கள் வற்புறுத்தியதனால், அதற்காக தி.மு.க.வின் மீது அபவாதங்களைக் கூறி மக்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்ப்பை உருவாக்கியதால், நான் மதுவிலக்கை மறுபடியும் கொணர நேர்ந்தது. இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தாமல் ஓரிரு மாநிலங்களில் மட்டும் அமல் படுத்துவது வெற்றி தராது என்பது என் கருத்து.</p><p><br /></p><p>ஜெ.கா: நான் அது விஷயத்தில் காமராஜரின் விமர்சனங் களை அப்போதே ஏற்கவில்லை. ஆனால் மதுவிலக்கு இல்லாதபோது விற்பனையிலும் வினியோகத்திலும் சில வரைமுறைகளையும் கட்டு திட்டங்களையும் ஏற்படுத்துவது அவசியம். நீங்கள் சட்டம் போட்டு விட்டீர்கள் என்பதற் காக, தண்டித்து விடுவீர்கள் என்பதற்காக பயந்து கொண்டு ஒரு கோழைபோல் நான் குடிக்காமல் இருக்க வேண்டு மென்று விரும்புவீர்களா? என்னைப் போன்றவர்களைக் குற்றவாளியாக்குவதும், கோழையாக்குவதும்தான்.</p><p>சட்டத்தின் நோக்கமா?</p><p><br /></p><p>மு.க: (வாய்விட்டுச் சிரிக்கிறார்) ஜெயகாந்தனின் வாதங்கள் சுவையானவை. சிந்திக்கத் தூண்டுபவை. ஆனாலும் அவற்றோடு என் கருத்துக்களை இணைத்துவிட வேண்டாம்.</p><p><br /></p><p>ஜெ.கா: இந்த விஷயத்தில் நாட்டுப் பிரஜை வேறு: நாடாள்வோர் வேறு என்று பாகுபாடு செய்வது தவறு என்பது என் கருத்து.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-5147668418605378372023-03-02T02:26:00.001-08:002023-03-02T02:26:46.589-08:00கலைஞர் ஜெயகாந்தன் சந்திப்பு −2<p> சீர்திருத்த இயக்கத்தில் ஏற்பட்ட ஆர்வத்தால் படிப்பில் கவனம் குறைந்து எஸ்.எஸ்.எல்.சி பபுரீட்சையில்தோல்வியுற்றேன்.</p><p><br /></p><p>ஜெ.கா: ஆனால் அப்போதே நீங்கள் 'முரசொலி கையெழுத்துப் பத்திரிகை தொடங்கியிருந்தீர்கள் அல்லவா</p><p><br /></p><p>மு.க. ஆமாம்.</p><p><br /></p><p>ஜெ.கா: இதற்காக உங்களைத் தனிப்பட நான் பாராட்ட வேண்டும். எவ்வளவோ பேர் கையெழுத்துப் பத்திரிகைகள் ஆரம்பித்திருக்கிறார்கள். வாழ்க்கையில் வேறு பொறுப்புகள்ஏற்பட்டதும் அவற்றைக் கை விட்டு விடுவார்கள். ஆனா நீங்கள் எல்லாக் காலங்களிலும் இதைக் கைவிடாம இருந்தது மட்டுமல்ல; இன்று மிகப் பெரிய அரசிய இயக்கத்தின் ஆயுதமாகவே அதை ஆக்கியிருக்கிறீர்கள் அடிப்படையில் நீங்கள் ஒரு பத்திரிக்கைக்காரர் என்று நான் கணித்தால் சரிதானே?</p><p><br /></p><p>மு.க. சரியே.</p><p><br /></p><p>ஜெ.கா: சமூக சீர்திருத்த இயக்கங்களில் மிக இளய வயதிலேயே ஈடுபட்டதாகக் கூறினீர்கள். அப்படி உங்களிள் ஈர்த்தவர்களில் முதலாக திரு அண்ணாத்துரை இல்ல யென்றே நினைக்கிறேன்.</p><p><br /></p><p> 'மு.க: ஆம், அது உண்மைதான். பெரியார், அழகிரி ஆகியோர்தான் முதலில் என்னை இயக்கப் பணிகளில் ஈர்த்தவர்கள். அதற்கு முன்னாலேயே அண்ணா அவர்கள் இயக்கத்தில் இருந்த போதிலும் பின்னால்தான் என்னை ஈர்த்தவர் என்று அண்ணாை சொல்ல வேண்டும்.</p><p><br /></p><p><br /></p><p>ஜெ.கா: எந்த ஆண்டில் உங்களது மாணவப் பருவமும் சமூக இயக்கப் பணிகளும் சேர்ந்து இருந்தன?</p><p><br /></p><p>மு.க: 1938 லிருந்து 1942 என்று சொல்லலாம். அப்போதே இலக்கியத்திலும் எழுத்திலும் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. இந்தி - எதிர்ப்பு இக்காலங்களில் தமிழகத்தில் உச்சமாய் இருந்தது. மறைமலையடிகள், கி.ஆ.பெ. விசுவநாதன், பெரியார். அண்ணா ஆகியோரின் எழுத்துக்களால் நான் பெரிதும் கவரப்பட்டேன். </p><p><br /></p><p>ஜெ.கா:அக்காலத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருந்த தேசிய இயக்கமல்ல காந்திஜி, நேருஜி, பாரதியார் போன்றவர்களின் எழுத்துக்கள் அல்ல - சுயமரியாதை இயக்கத்திலிருந்த சமூக சீர்திருத்த உணர்ச்சிதான் உங்களைப் பொது வாழ்க்கைக்குக் கொணர்ந்தது என்று சொல்லலாமா?</p><p><br /></p><p>மு.க: தமிழ்மொழிப்பற்றின் காரணமாக இந்தி எதிர்ப்பும் சமூக சீர்திருத்தப் பணியும் என்னைப் பொது வாழ்வுக்கு இழுத்தன. எனினும் ஒரு விஷயத்தை விளக்க வேண்டும். சுயமரியாதை இயக்கம் தேசிய இயக்கத்துக்கு எதிரானது என்று பலர் நினைக்கிறார்கள். அது அப்படி அல்ல.</p><p><br /></p><p>ஜெ.கா(குறுக்கிட்டு) ஆரம்பத்தில்</p><p>எல்லா இயக்கங்களும் சரியான இடத்தில்தான் தொடங்குகின்றன. சொல்லளவில் கூட சுயமரியாதை என்பதும் சுயராஜ்யம் என்பதும் மிகவும் நெருக்கமுடையவைதான். நாம் இப்படிக் குறித்துக் கொள்வோமே. ஒன்று சமூக சீர்திருத்த இயக்கம், இன்னொன்று, தேசிய அரசியல் இயக்கம். உங்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்தது சமூக சீர்திருத்த இயக்கம் தானே?</p><p><br /></p><p>மு.க: ஆம், சமூக சீர்திருத்த உணர்ச்சிதான். பெரியார் இயக்கம் அப்போது அரசியல் இயக்கமாக ஆரம்பமாக வில்லை. சாதிக் கொடுமையும் மூட நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கும் தமிழ்நாட்டில் சமுதாய விழிப்பு உணர்ச்சி இயக்கமாகப் பெரியாரின் இயக்கம் திகழ்ந்தது.</p><p><br /></p><p>ஜெ.கா: எனவே இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தோரை சுயமரியாதை இயக்கத்தின் வாரிசுகள் என்று கொள்வது தகும் அல்லவா?</p><p><br /></p><p>மு.க:ஆம், நிச்சயமாக. பெரும்பாலோர் அப்படித்தான்</p><p><br /></p><p>ஜெ.கா: பின்னர் ஒரு பெரும் பகுதி இளைஞர் கூட்டம் | தி.க.விலிருந்து பிரிந்ததற்கான சரியான காரணம், சமூக அரசியல் ரீதியான காரணம் எது என்று எண்ணுகிறீர்கள்?</p><p><br /></p><p>(கலைஞர் சற்று யோசிக்கிறார்)</p><p><br /></p><p>ஜெ.கா (இடையூறில்லாம் குறுக்கிட்டு): பெரியாரின் இயக்கம் ஒரு தனித் தலைமையின்கீழ் நிரந்தரம் பெற்று விட்டதால் அதில் ஜனநாயக வாதிகள் மிகவும் குறைவாய் இருந்தனர். ஒரு கட்சி என்ற முறையில் அதில் உள்கட்சி ஜனநாயகம் சற்றும் இல்லாதிருந்தது வெளிப்படையாக தெரிந்தது. அப்போது புதிதாக சுதந்திரம் பெற்ற நம் நாடு சமுதாய அளவிலேயே ஜனநாயக அரசியல் நாகரிகத்தை அங்குரார்ப்பணம் செய்யவிருந்தது. நாடெங்கும் எழுந் இந்த ஜனநாயக உணர்ச்சியின் உந்துதல் தமிழர் இனத்தின் தனிப்பெரும் இயக்கமாய் விளங்கிய திராவிட கழகத்தின் உள்ளும் எழுந்தது. அதன் விளைவே தி.மு.க. என்ற சொல்லலாமா?</p><p><br /></p><p>மு.க: இது மாதிரி இதுவரை யாரும் தி.மு.கழகத்தி தோற்றுவாயை எடுத்துச் சொன்னதில்லை. ஜனநாயகஉணர்வின் உந்துதலும் தி.மு.கழகத்தின் பிறப்புக்கு காரணம் என்று கூறலாம். இரு கழகங்களும் முறையே சமுதாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றன.</p><p><br /></p><p>ஜெ.கா: பார்த்தீர்களா? எந்த ஒரு விஷயத்திலும் விருப்பு வெறுப்பற்று, விஞ்ஞான பூர்வமாய் ஆராய்ந்தால் விடைகள் சரியாகவே கிடைக்கின்றன. ஒரு காலத்தில் தி.மு. கழகத்தின் பிறப்பு குறித்து நானே என்னென்னமோ சொல்லியிருக்கிறேன், நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். அப்போது இருந்த சூழ்நிலையில் நீங்களே இதைச் சொல்லி யிருந்தால் நான் ஒப்புக்கொண்டுதான் இருக்கமாட்டேன்.</p><p><br /></p><p>மு.க: தி.மு.கழகம் எப்போதும் ஜனநாயகத்தில் உறு தியான நம்பிக்கை உடையது... எமர்ஜென்சியின்போது கூட ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்காக தி.மு.கழகம் போராடியதை அறிவீர்கள்.</p><p><br /></p><p>ஜெ.கா: ஜனநாயக உணர்சியின் உந்துதலினால் பிறந்த தி.மு.கழகம் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை யுடைய தி.மு.க. கட்சிக்குள் அதனைப் பழுதுபடாமல் காப்பாற்றியது என்று சொல்ல முடியுமா?</p><p><br /></p><p>மு.க: பின்னர்ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள் மத்தியிலும்கூட ஜனநாயகத்துக்கு எதிரான போக்கு, தனிநபர் மோகம், தலையெடுத்து வளர்ந்து வந்தது. நாங்கள் அதைக் கவனிக்கத் தவறிவிட்டோம். கழகத்துக்குள்ளே சம்பத், கண்ணதாசன் போன்றவர்கள் அப்போதே இந்த "சினிமாமோக' ஆபத்து குறித்து எச்சரித்து எதிர்த்துப் போராடினார்கள். வெளியிலும் உங்களைப் போன்றவர்கள் பலர் அதனைச் சுட்டிக்காட்டினார்கள்.</p><p>( தொடரும்)</p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-12837875613090285042023-03-01T22:47:00.003-08:002023-03-01T22:56:44.780-08:00கலைஞர் ஜெயகாந்தன் சந்திப்பு பாகம் 1<p><br /></p><p><br /></p><p>ஜூலை 10 செவ்வாய் காலை 10 மணி 1979,</p><p><br /></p><p>திரு. மு.கருணாநிதி அவர்களை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்திப்பதென்று முதல் yநாள் மாலைதான் உறுதியாயிற்று. இந்தச் சந்திப்பு ஏற்கனவே சுல்பனாவில் அறிவிக்கப்பட்டதுதான். எனினும் இது குறித்து வியப்பு அடங்காத எனது வாசகர்களும் திராவிட இயக்கத் தொண்டர்களும் ஏராளம் இருப்பர்.</p><p><br /></p><p>இவரைச் சந்திக்க வருவது இரண்டாவது அனுபவம். முதல் அனுபவத்தைப் பற்றிய நினைவுகள், இப்போது எண்ணினாலும் சோர்வு ஏற்படுத்துகின்றது.</p><p><br /></p><p>அப்போது திமுகழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். வெளி யேற்றப் பட்டிருந்தார். தமிழகத்து வீதிகளில் எம்.ஜி.ஆரின் படத்தை ஒட்டிக் கொள்ளாத கார்களோ வாகனங்களோ திரிய முடியாத நிலை. அப்படிப் பட்ட கார்களில் இழிவான மொழிகளில் கருணாநிதியை எதிர்த்து எழுதப்பட்ட வாசகங்கள். ஊரெங்கும் பகைமையும் வெறுப்பும் பரவி வன்முறைகளும் கலவரங்களும் நிகழ்ந்து ஒரு கட்சியின்திமுகழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். வெளி யேற்றப் பட்டிருந்தார். தமிழகத்து வீதிகளில் எம்.ஜி.ஆரின் படத்தை ஒட்டிக் கொள்ளாத கார்களோ வாகனங்களோ திரிய முடியாத நிலை. அப்படிப் பட்ட கார்களில் இழிவான மொழிகளில் கருணாநிதியை எதிர்த்து எழுதப்பட்ட வாசகங்கள். ஊரெங்கும் பகைமையும் வெறுப்பும் பரவி வன்முறைகளும் கலவரங்களும் நிகழ்ந்து ஒரு கட்சியின்</p><p><br /></p><p>உள்விவகாரம் தெருப் பிரச்சினையானபோது, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த இவரை ஒரு பிரஜை என்கிற முறையில் உரிமையோடு சந்திக்கப் போனேன். அவரோடு நான் பேசியது அவரது குறித்துத்தாள். எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கை சுட்சியின் உள்விவகாரம் குறித்து என் யோசனைகளை அவர் குறித்துக் கொண்டார். எனினும் அவற்றை இவர் நிறைவேற்றப் போவதில்லை என்ற அவநம்பிக்கைதான் அன்றைய முக்கால் மணி நேரச் சந்திப்பில் எனக்கு உருவாயிற்று.</p><p><br /></p><p>அந்தச் சந்திப்புக்கு முன்னாலும் பின்னாலும் திரு. கருணாநிதி அவர்களை அரசியல் ரீதியிலும், ஏன் தனிப்பட்ட முறையிலும் கூட நான் மிகமிகக் கடுமையான சொற்களின் மூலம் விமர்சித்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். அந்தச் சொற்களும் தோரணைகளும் எவ்வளவு தவறானவையாக இருந்த போதிலும் அவற்றின் உள்ளடக்கத்துக்காகவும் எனது நேர்மை உணர்ச்சிக்காகவும் நான் இப்போது வருந்தத் தேவையில்லைதான். ஆயினும் அது குறித்து ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த மனிதரின் மனம் புண்பட்டிருக்கலாமே என்கிற உறுத்தலும் என்னுள் ஏற்படுகிறது. அவர் ஒரு முறை சொன்னார்: 'சிலரின் பேச்சுக்களால் என் மனம் புண்படுகிறபோது அவர்களது எழுத்துக்களைப் படித்து அப்புண்களை கொள்கிறேன்'' என்று. அப்படிப்பட்ட பேச்சுக்களைப் பேசியுமிருக்கிறேன். அத்தகு எழுத்துக்களையும் எழுதி யுமிருக்கிறேன். </p><p><br /></p><p>வழக்கம்போல் பத்து நிமிஷம் தாமதித்தே செல்கிறேன். மேலே குறிப்பிட்ட எண்ணங்களினாலும் இப்போது ஏற்பட்ட தாமதத்தினாலும் அவரை ஏதிர்ப்பட்ட்ட மாத்திரத்தில் இரு கரங்களையும் கூப்பி "மன்னிக்க வேண்டும்" என்ற வார்த்தைகளோடு எங்கள் இரண்டாவது</p><p>சந்திப்பைத் தொடங்குகிறேன்.</p><p><br /></p><p>சந்திப்பின்போது என்னுடன் வந்திருந்த 'சுல்பனா' பதிப்பாசிரியர் திரு. கிருஷ்ணையாவைக் கலைஞருக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.</p><p><br /></p><p>அவரை மொட்டையாகத் திரு. 'கருணாநிதி' என்று அழைப் பதா, திரு. மு.க என்று சொந்தத்தோடு குறிப்பிடுவதா என்கிற தடுமாற்றம் என்னுள் ஏற்படுகிறது. பொதுவாக இவரை மக்கள் 'கலைஞர்' என்றே குறிப்பிடுகின்றனர். ஒருவர் பெயரோ பட்டமோ ஒருவருக்குப் பொருந்திவர இதைவிடத் தகுந்த காரணம் தேவையில்லை. மேலும் கலைப்பணியில் இடையறாது இவரும் இவரது குடும்பத்தி னரும் ஈடுபட்டிருக்கின்றனர். இவரது தந்தையார்கூட ஒரு கலைஞரே.</p><p><br /></p><p>ஏதோ ஒப்புக்காகப் பேசியதாக இல்லாமல் நான் அவரிடம் உளமார்ந்த மன்னிப்புக் கேட்டதற்கான காரணத்தையும் விளக்குகிறேன். திரு.மு.க. மனம் திறந்த சிரிப்போடு. இதையெல்லாம் பொருட்படுத்தினால் பொதுவாழ்வில் உயிர் தரித்து உலவ முடியுமா என்று சொல்லாமற் சொல்லி வரவேற்கிறார்.எனது கடுமையான விமர்சனங்கருக்காக மனம் புண்பட்ட தி.க. தோழர்களிடம் ஒரு முறை பெரியார் அவ்விதம் சொன்னதை நான் இப்போது எண்ணிக் கொள்கிறேன்.</p><p><br /></p><p>திரு.முக சொல்கிறார்: 'அப்படியெல்லாம் நான் யார் மனமும் புண்படும்படி தனிப்பட்ட முறையில் பேசியதில்லை. கவிஞர் கண்ணதாசன்கூட என்னைப்பற்றி எவ்வளவோ எழுதியிருக்கிறார். அரசியல் ரீதியானவற்றைத் தவிர பிறவற்றுக்கு நான் ஏதும் சொன்னதில்லை. </p><p>இப்போதுகூட நமது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது இரண்டாவது மனைவியைப்பற்றி, தனிப்பட்ட முறையில் என்னைப் இழிவாக பேசியிருப்பதை அவரது பத்திரி கையிலேயே படித்திருப்பீர்கள்.''</p><p>ஜெ.கா: அவற்றையெல்லாம் நான் படிப்பதில்லை. மனம் புண்படுவதென்றால், தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனைப் பழிப்பதாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் தமிழ் நாட்டு பிராமணர்களை மனம் புண்படப் பேசியிருக்கிறீர்கள். இது குறித்த உறுத்தலினால் அந்த விஷயத்தில் உங்கள் போக்கு மாறியும் இருக்கிறதே.</p><p><br /></p><p>மு.க: பிராமணியத்தைத் தான் தாக்கியிருக்கிறோம். தனிப்பட்டவர்களை நான் தரக்குறைவாகப் பேசியதில்லை. தனிப்பட்ட முறையில் தாக்குவதால் ஏற்படுகிற தீம்பு என்னவென்றால், மாற்று அரசியல் கட்சிகளைச் சார்ந்திருக்கும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடுகிற மோதல்களும் கலகங்களும்தான்.</p><p><br /></p><p>ஜெ.கா: அது மிகவும் வருந்தத்தக்கதே. நாமாவது தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட கி முறையில் நமக்குள்ளே எந்தவித வெறுப்போ பகைமையோ இல்லை என்று சந்திக்கிற சந்தர்ப்பங்கள் கிடைக்கிறபோது அவர்களிடம் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதை நான் ஒரு மரபாகக் கைக் கொள்கிறேன். சரி உங்களைப் பற்றி சொல்லுங்கள்.</p><p><br /></p><p>மு.க.: நான் 1924 ல் அதாவது இப்போது அதிகமா அடிபடுகிறதே தமிழ்நாடு - கர்னாடக காவிரி நீர் ஒப்பந்தம்</p><p>அது கையெழுத்தான ஆண்டில் தஞ்சை மாவட்டம் திருக்குவளையில் பிறந்தேன். என் தகப்பனார் பெயர் முத்துவேல்.</p><p><br /></p><p>ஜெ.கா: (குறுக்கிட்டு) முத்துவேல் பிள்ளை என்று சொல்லுங்கள். அதிலெல்லாம் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அவர்கள் அதில் நம்பிக்கையையும் மரியாதை மரபையும் ஏற்படுத்தியவர்கள் இல்லையா? உதாரணமாக சாதிப் பேர்களை ஒழிப்பது என்ற பெயரால் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை என்னும் பெயரை மனோன்மணியம் சுந்தரம் என்று சொல்வது எவ்வளவு மரியாதைக் குறைவாகத் தொனிக்கும்? மரபு கெட்ட காரியமாக இருக்கும்?</p><p><br /></p><p>மு.க.(சிரித்து): (எம்.ஜி.ஆரை நினைத்தார் போலும்): தமிழர் மரபுகளை அறியாதோரே இப்படிப்பட்ட தவறுகளைச் செய்வார்கள். என் தந்தை முத்துவேல் பிள்ளை மிகச் சிறந்த நாதசுரக் கலைஞர். அது மட்டுமல்லாமல் வேறு பல இசைக்கருவிகளையும் திறமையுடன் வாசிப்பார். தமிழிலும் சிறந்த புலமை உடையவர். என்னை இசைத் துறையில் இழுத்து விடவே அவர் பெரிதும் விரும்பினார்.</p><p><br /></p><p>எங்களுக்குத் திருக்குவளையில் கோயில் மான்யமாகக் கிடைத்த நிலத்தில் உழவும், என் உறவினரிடம் இசையும் நான் இளம் பருவத்தில் பயின்றேன்.</p><p><br /></p><p>ஜெ.கா: பள்ளிக்கூடத்தில் நீங்கள் கெட்டிக்கார மாணவராக இருந்தீர்கள் என்று நினைக்கிறீர்களா?</p><p><br /></p><p>மு.க: ஆரம்பத்தில் நாள் நிறைய மார்க் வாங்கி மாவட்டத்திலேயே முதல் மாணவனாய் பெயர் எடுத்திருந்தேன். ஆனால் மிக இளம் வயதிலேயே சமூக</p><p>( தொடரும்)</p><p><br /></p><p><br /></p><p>.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>.</p><p><br /></p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-1825023013474902702022-09-17T09:54:00.005-07:002022-09-19T18:35:03.192-07:00ஜெயமோகனும் சாருவும் கனிந்து விட்டார்களா?<p> சாரு கனிந்து விட்டார் ஜெயமோகன் கனிந்து விட்டார் என ஒரு வித எதிர்மறைத் தொனியில் சிலர் விஷ்ணுபுரம் விருதை முன்வைத்து பேசுவதைக் காண முடிகிறது</p><p> மனம் கனிந்து அதில் அன்பு நிறைந்திருந்தால்தான் ஒருவன் எழுதவே முடியும். எனவே ஆரம்பத்திலேயே இருவரும் பக்குவப்பட்ட கனிந்த நிலையில்தான் இருந்திருக்கிறார்கள்</p><p> ஜெயமோகனுக்கும் சாருவுக்கும் ஆகாது , பரம்பரை வைரிகள் என்பவையெல்லாம் பாமரத்தனமானவை</p><p>சில ஆண்டுகள் முன் </p><p>சாருவின் நண்பரும் எழுத்தாளருமான அராத்து நூல் வெளியீட்டில் எடந்த, தயக்கங்களும் இன்றி கலந்து கொண்டார்</p><p>அந்த நிகழ்வில்,,ஜெ ஆற்றிய, உரையின் யூட்யூப் வீடியோ இன்றளவும் வெகுவாக பார்வையிடப்படுகிறது. அது தனியாகவே நூல் வடிவம் பெறத்தக்கது</p><p>அதில் ஜெயமோகனும் சாருவும் ஒருவர்மீது ஒருவர் காட்டிய அன்பும் நெருக்கமும் ஆச்சர்யம் அளித்தது</p><p><br /></p><p> ஜெயமோகனை தாழ்த்திப் பேசினால் சாருவிடம் நெருக்கமாகிவிடலாம் என நினைத்த ஒருவர் ஜெயமோகனைப்பற்றி கேலியாக சாருவிடம் கேள்வி கேட்டார்</p><p> தன்னைக் கேலி செய்தால்கூட லேசாக எடுத்துக் கொள்ளும் சாரு , ஜெயை கேலி செய்தவரை படு ஆவேசமாக வறுத்தெடுத்து விட்டார்</p><p> ரத்தம் சிந்தி கையொடிய அவர் எழுதிய விஷ்ணுபுரத்தைப் படித்து விட்டு அதைப் பற்றி ஏதாவது பேசு . நான் இலக்கியரீதியாக விமர்சிப்பது வேறு. அதற்காக வருபவன் போவனெல்லாம் அவரை தாழ்த்திப் பேசினால் நடப்பதே வேறு என வெகு கடுமையாகப் பேசி அவரை நட்பு வட்டத்தில் இருந்து வெளியேற்றினார்</p><p> பத்து ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம் இது. மனம் கனிந்த ( !?) தற்போதைய சாரு அல்ல</p><p> ஒரு முறை ஞாநி சாருவை மேடையில் வைத்துக் கொண்டே , அவரது சில எழுத்துகள் பிறரால் எழுதப்பட்டவை என்கிறார்களே என இலக்கிய வரம்புக்கு அப்பாற்பட்ட கேள்வி எழுப்பினார</p><p>" ஜெயமோகன் இதுபோன்ற தாக்குதல்களை ஒரு போதும் நிகழ்த்தியல்ல</p><p><br /></p><p><br /></p><p> ( அந்தக் குற்றச்சாட்டை ஒரு காலத்தில் வைத்தவர் , தான் அப்படி சொல்லவே இல்லை என சமீபத்தில் பேசி, அதை முடித்து வைத்தது வேறு விஷயம் )</p><p> நான் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு</p><p>சாரு வாசகர் வட்ட நிகழ்வில் ஒரு தனிப்பட்ட உரையாடலில் சாரு இசை குறித்தும் லத்தீன் அமெரிக்க சினிமா குறித்தும் சில விஷயங்கள் சொன்னார். அப்போது ஸ்மார்ட் போன்கள் கிடையாது. எனவே யாராவது இதை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு பிறகு நினைவு படுத்துங்கள் எனறார் என்னிடம் பேப்பர் பேனா எப்போதும் இருக்கும் என்பதால் நான் அனைத்தையும் குறிப்பெடுத்தேன்</p><p>இரண்டு நாட்கள் கழித்து அதை டைப் செய்து அவருக்கு அனுப்பினேன்.</p><p>Dear charu , with reference to our discussion ,என்றெல்லாம் விளக்காமல் அவர் பேசியதை மட்டும் அனுப்பினேன்</p><p> அவர் எனக்கு பதில் அனுப்பினார்;</p><p>அன்புள்ள பிச்சை </p><p> உங்களது கட்டுரை அபாரம். உங்கள் பெயரை குறிப்பிட்டு , இதை எனது கட்டுரையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பீர்களா</p><p> அன்புடன் சாரு</p><p><br /></p><p>இதைப் படித்து அதிர்ந்து போய் அவரிடம் சொன்னேன் இது எனது படைப்பு அல்ல. முழுக்க முழுக்க உங்கள் சிந்தனை அது நான் சும்மா குறிப்பு எடுத்தேன் என்றேன்</p><p> இப்படி சின்ன சின்ன செயலில்கூட நுட்பமாக பெருந்தன்மையாக நடந்து கொள்பவர் அவர்</p><p> அவரது எழுத்துகள் அனைத்துமே இந்த சென்சிப்ளிட்டியைத்தான் பேசுகின்றன</p><p> அவர் எழுத்துக்கும் பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை</p><p> எழுத்து எனும் வேள்வியில் தன்னையே அர்ப்பணித்துக்கொள்பவர் அவர் கற்பனையான ஒரு ஃபேண்டசி உலகை அவர் சமைப்பதில்லை</p><p> ரத்தமும் சதையும் கண்ணீரும் காதலும் காமமும் உண்மை வாழ்வில் உள்ளபடியேதான் நுரைத்துப் பொங்கும்;</p><p> வெண்முரசு போன்ற ஒரு நாவலை படைக்க வேண்டியதில்லை</p><p>, ஒளரங்ஸேப் நாவலைத்தான் அவர் படைக்க முடியும் அதுதான் இலக்கியத்துக்குதேவை அதற்காகத்தான் இயற்கை அவரை உலகுக்கு அனுப்பியுள்ளது</p><p> அவர் எழுத்து வேறு வகையானது என்பதைத்தான் ஜெயமோகன் அன்றும் சொன்னார் இன்றும் சொல்கிறார் நாளையும் சொல்வார்</p><p> திடீரென கனிந்து போய் தன் மதிப்பீடுகளை ஜெ மாற்றிக் கொள்ளவில்லை</p><p>ஜீரோ டிகிரி வெளிவந்தபோது அதை மலம் என சுஜாதா போன்றோர் திட்டியபோது அதற்கு ஆதரவாக இருந்து அங்கீகாரம் அளித்த ஜெ ( பாராட்டிப் பேசிய இன்னொருவர் இ பா ) அந்த அங்கீகாரத்தை தற்போது வேறு வடிவில் காட்டுகிறார் அவ்வளவுதான்</p><p><br /></p><p>பெர்ப்யூம்களை எப்படி தேர்வு செய்கிறேன் என சாரு பல சந்தர்ப்பங்களில் எழுதி இருப்பார்.</p><p>ஒரு முறை மலம் நிறைந்த வாளி தன் மீது அப்படியே கொட்டி விட்டதையும் எழுதியிருப்பார்</p><p> நிகழ்வுகளை புனைவு போன்ற சுவாரஸ்யத்துடன் புனைவை உண்மை நிகழ்வு போன்ற பாவனையுடன் எழுதி புனைவு அபுனைவு எல்லைகளை தொடர்ந்து அழித்து வரும் எழுத்து அவரது</p><p> மீன்கார பாட்டி , துப்புரவுத தொழிலாளர்கள் , பிழைப்புக்காக திருடக்கூடிய சிறு திருடர்கள் , பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட அபலைகள் போன்ற விளிம்பு நிலை மக்களை அவர் எழுத்து தொடர்ந்து பேசி வருகிறது</p><p>உயர்தர உணவுகள் கேளிக்கை விடுதிகள் என கொண்டாட்டங்களையும் பேசுகிறது</p><p> சாரு எழுத்தை படிக்கும் ஒருவன் யாரிடமும் போய் , சட்டை என்ன விலை கால் பிறக்கும்பாதே இப்படியா அல்லது விபத்தா .. என்றெல்லாம் கேட்க மாட்டான் பூக்கார கிழவியிடம் பேரம் பேச மாட்டான் தெரியாமல் இடித்துவிட்ட பெண்ணிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டு அவளை சங்கடப்படுத்த மாட்டான்</p><p> முதல் நாவலான ஜீரோ டிகிரியில் அப்பா மகள் பந்தத்தை சொல்லி , தொடரந்து அன்பை தன் எழுத்துகளில் வரும் சாருவுக்கு சமரசமற்ற மதிப்பீடுகள் கொண்ட ஜெயமோகன் விருது வழங்குவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது</p><p> </p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-143588380504231288.post-82514453247870398612022-09-16T02:18:00.005-07:002022-09-16T02:18:48.006-07:00பஞ்சாங்கம் இன்றி சிறுகதை எழுதாதீர்கள் − மாலன் சுவாரஸ்ய உரை<p> </p><p style="text-align: left;"><a href="http://www.pichaikaaran.com/2022/08/blog-post.html?m=1" target="_blank">சிறுகதைப் பட்டறை முதல் பகுதி</a><br /></p><p> அதன் பிறகு மாலன் அதிரடியாகத் தன் பேச்சை ஆரம்பித்தார் </p><p><br /></p><p>பாரதியார் போன்ற ஆளுமைகளால் வளர்ந்த சிறுகதை இலக்கியம் இன்று மிகவும் அவசியமான ஒன்றாக உருவாகியுள்ளது.</p><p><br /></p><p>எனவே இந்த சிறுகதைப்பட்டறை வரவேற்புக்குரியது. ஆனால் பட்டறை என்ற சொல் சரியாகத் தோன்றவில்லை சிறுகதைப் பயிலரங்கு என்பது சரியாக இருக்கும்</p><p><br /></p><p>ஒருமுறை கதை என்றால் என்ன என்பதற்கு எழுத்தாளர் கல்கி நகைச்சுவையாக ஒரு உதாரணம் சொன்னார்</p><p><br /></p><p>ஒருவன் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டானாம் கொட்டப்பாக்கு காசுக்கு எட்டு என்றானாம் பதில் சொன்னவன்</p><p><br /></p><p>இது சிறுகதையா?</p><p><br /></p><p>பஞ்சாங்கம் இல்லாமல் சிறுகதை எழுதமுடியாது</p><p>எனன பஞ்சாங்கம்</p><p><br /></p><p>ஐந்து அம்சங்கள்;</p><p>1 முதன்மைப் பாத்திரம். ( நல்லவன் என்பது இல்லை)</p><p><br /></p><p>2 எதிர் பாத்திரம் ( கெட்டவனாக இருக்க வேண்டியதில்லை) </p><p><br /></p><p>3 கதை நிகழும் களம் . சூழல்;</p><p>4 மையப்புள்ளி plot</p><p>5 ஒரு திருப்பம் </p><p><br /></p><p>கல்கி சொன்ன உதாரணத்தில் இவை இருப்பதை கவனியுங்கள்</p><p>ஊருக்கு செல்ல விரும்பும் முதன்மை பாத்திரம். சம்பவம் நிகழும் களம் , ஒரு நகைச்சுவையான திருப்பம் என வந்து விட்டது அல்லவா</p><p><br /></p><p> ஹிப்பி ஒருவன் ஒற்றைச்செருப்பு அணிந்து நடந்து கொண்டிருந்தான்</p><p><br /></p><p>என்னாச்சுப்பா ? இன்னொரு செருப்பு தொலைஞ்சுருச்சா என கேட்டார் வழிப்போக்கர்</p><p><br /></p><p> ஒண்ணுதாங்க கிடைச்சது என்றான் அவன்</p><p><br /></p><p>இந்த எதிர்பாராத பதில் , முதன்மை பாத்திரமான ஹிப்பி குறித்த பார்வை , களம் , மையப்புள்ளி என அனைத்தும் இதை ஒரு கதை ஆக்குகிறது</p><p><br /></p><p> கதைக்கு ஆரம்பம் வெகு முக்கியம்;</p><p>உதாரணமாக எம் எஸ் கல்யாணசுந்தரம் எழுதிய தபால்கார அப்துல்காதர் சிறுகதையின் ஆரம்ப வரிகளைக் கவனியுங்கள்</p><p><br /></p><p>சென்ற வருஷம் பெர்னார்ட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது ‘இவ்வூரில் பார்க்கத் தகுதியானவை என்னென்ன ? ‘ என்று விசாரித்தார்.</p><p><br /></p><p>‘நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடிநாதர் கோவில், பாண்டவர் சுனை என்னும் கொதி ஊற்று, தபால்கார அப்துல்காதர் ‘ என்றேன்.</p><p><br /></p><p>தபால்கார அப்துல் காதர் என்ற கேரக்டர் மீது எப்படி ஆர்வத்தை ஏற்படுத்தி மேற்கொண்டு படிக்க வைக்கிறார் என்பது கவனிக்க வேண்டியது</p><p><br /></p><p>தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் முத்திரை பதித்த இன்னொரு அற்புதமான ஆரம்பம்</p><p><br /></p><p>அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க..( காஞ்சனை − புதுமைப் பித்தன்)</p><p>( பிச்சையின் பின்குறிப்பு. இந்த ஆரம்ப வரி்களுக்கு ஏற்ப சிறுகதை ஒன்றை எழுதச்செய்து , சுஜாதா ராஜேஷ்குமார் போன்ற பிரபலங்களிடம் கதை எழுதி வாங்கி பிரசுரித்தது அன்றைய குமுதம் வார இதழ்)</p><p><br /></p><p>மறக்க முடியாத இன்னொரு துவக்கம்</p><p><br /></p><p>அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம்</p><p>இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.</p><p><br /></p><p>”ஹோல்டான்! ஹோல்டான்!” என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். </p><p>( காலமும் ஐந்து குழந்தைகளும் அசோகமித்திரன் )</p><p><br /></p><p>அதேமாதிரி முடிவும் பளீர் என இருக்க வேண்டும்</p><p><br /></p><p>உதாரணம் பாருங்கள் மறக்கவே முடியாத இறுதி வரிகள்</p><p>என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்! ( புதுமைப்பித்தன்)</p><p><br /></p><p>இப்படி ஆரம்பமும் முடிவும் அமைந்துவிட்டால் கதைக்கான,,நடை அதுவாகவே இயல்பாக அமைந்து விடும்;</p><p>எழுதுபவன் வாசகனுடன் நேரடியாகப் பேசுவது கவிதை</p><p>எழுதுபவன் தனது பாத்திரங்களுடன் உரையாடுவது சிறுகதை</p><p>பாத்திரங்கள் பார்வையாளனுடன் பேசுவது நாடகம்</p><p>இந்தத் தெளிவு முக்கியம்;</p><p>கதையை சொல்லாதீர்கள் கதையை வாசகன் முன் நிகழ்த்திக்காட்டுங்கள்</p><p>ஏன் என கேட்டன மரபான கதைகள்</p><p>(ஏன் இத்தனை துயர்கள் என்பது போன்ற ஒரு விக்டிம் கோணத்தில்)</p><p><br /></p><p>ஏன் கூடாது என திமிறுகின்றன நவீன கதைகள் ( இந்த விதிகயை மரபுகளை ஏன் உடைக்க்ககூடாது என்பது போல)</p><p>இந்தப்போக்குகளை உள்வாங்க வேண்டும்</p><p><br /></p><p>ஒரு உண்மை சம்பவம் கூறி முடிக்கிறேன் இதை யாரேனும் சிறுகதை ஆக்குங்கள் ( பிச்சையின் பிகு . நான் எழுத நினைத்தேன் சூழல் அனுமதிக்கவில்லை)</p><p><br /></p><p>ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் என் சொந்த கிராமத்துக்கு சென்றிருந்தேன். ஊரே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது</p><p><br /></p><p>பதட்டமாக இருந்த அம்மாவிடம் விசாரித்தேன்</p><p>நம்ம ஊருல வெள்ளம் வந்துருச்சுப்பா பக்கத்து ஊருல பாதிப்பு அதுதான் ஹெல்ப் பண்ண போறோம் என்றார்</p><p><br /></p><p>வறட்சிக்குப் புகழ் பெற்ற நம்ம ஊர்ல வெள்ளமா என நம்ப முடியாமல் கேட்டேன்</p><p><br /></p><p>மழை வெள்ளமல்ல அணையில் உடைப்பு ஏற்பட்டதால் வெள்ளம் என்றார்</p><p><br /></p><p>சம்பவ இடத்துக்கு விரைந்தோம்</p><p><br /></p><p>அந்த கிராமம் வெள்ளத்தால் முழுமையாக துண்டிக்கப்பட்டு தீவு போல இருந்தது . உதவிப்பொருட்கள் அவர்களை அடைய வழியே இல்லை</p><p> அப்போது ராமகிருஷ்ண மடத்தின் இரு துறவிகள் துணிச்சலாக ஒரு முடிவுக்கு வந்தனர் மரத்தில் ஒரு கயிறைக்கட்டிவிட்டு எதிர் கரைக்கு நீச்சலடித்து சென்று அங்கே எதிர்முனையைக்கட்டினர் அந்த கயிற்றின் வழியாக இருவரும் மாறி மாறி பயணித்து உதவிப் பொருட்களை கொண்டுபோய் சேர்த்தனர்</p><p>சற்றும் ஓய்வற்ற பணி இதைக்கண்டு பிறரும் தைரியம் பெற்று உதவிக்கு வந்தனர்</p><p>மாலை வரை பணி நடந்தது. நீங்கள் இல்லாவிட்டால் நாங்களும் குழந்தைகளும் பசியால் துவண்டிருப்போம் என துறவிகள் கையைப்பிடித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள் கிராமத்தினர்</p><p>வெள்ளம் வடிந்து விட்டது இனி பயமில்லை என புன்னகையுடன் ஆறுதலாக சொல்லிவிட்டுக் கிளம்பினர் துறவியர்</p><p> சற்று தொலைவு சென்றதும் ஒரு துறவி மற்றவரிடம் பலவீனமாக சொல்வது எனக்கு மட்டும் கேட்டது</p><p>" ஒரே பசி மயக்கம். போயி , கொஞ்சமாவது சாப்பிடணும்"</p><p> ஓர் ஊரின் பசியையே ஆற்றிய இருவரும் அதுவரை ஒரு, வாய் உணவுகூட எடுத்துக் கொள்ளவில்லை என்ற உண்மை உறைத்து , அதிர்ந்து போய் நின்றேன்</p><p>−−−</p><p>அதன்பின் கேள்விகளுக்கு எழுத்தாளர்கள் பதிலளித்தனர். உணவு வழங்கலுடன் நிகழ்வு நிறைவுற்றது. பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது</p><p>............</p><p><br /></p><p>வித்யா சுப்ரமணியம் குறிப்பிட்ட உணர்வுப்பூர்வ நிகழ்வு</p><p><br /></p><p>என் சிறுகதை ஒன்று பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றது அது கற்பனைக்கதை அல்ல உண்மை நிகழ்வு</p><p><br /></p><p>என் கணவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இதை தொடர்ந்தால் உயிருக்கே ஆபத்து என்ற மருத்துவர் எச்சரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை</p><p> ஒரு நாள் என் வீட்டிலிருந்து போன் வந்தது , என் கணவர் இறந்து விட்டதாக . இல்லத்திலேயே மரணமாம்</p><p><br /></p><p> இதைக்கேட்டு கலங்கிப்போய் இருக்க வேண்டிய நான் ஒரு, வகை மகிழ்ச்சி அடைந்தேன்</p><p>அவர் மரணம் எதிர்பார்த்த ஒன்று சாலையிலோ பொது இடங்களிலோ அது நடந்து விடுமோ என்பதுதான் என் பயமாக இருந்தது. இல்லத்திலேயே இறப்பு என்பது நல்லதுதான் என தோன்றியது இந்த உணர்வை இதில் இருக்கும் அவலத்தை கதை ஆக்கினேன்</p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-64285710962003853932022-09-13T11:59:00.002-07:002022-09-13T11:59:36.831-07:00தியாகராஜ பாகவதர் − திரிக்கப்பட்ட வரலாறு<p> தியாகராஜ பாகவதர் – திரிக்கப்பட்ட வரலாறு</p><p>ஜனமேஜயன்</p><p><br /></p><p>தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் சாப்பிட்டவர்.. கடைசி காலத்தில் வறுமையில் வாழ்ந்து இறந்தார். பொருட்செல்வஆர்வமூட்டியதும் நிலையற்றது.. அருட்செல்வத்தை தேடுங்கள் என தொலைக்காட்சியில் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அவர் சொன்னது எனக்கு . அவர் எப்படி தங்கத்தட்டில் சாப்பிடும் அளவுக்கு வாழ்ந்தார். பிறகு ஏன் வறுமையில் வீழ்ந்தார். அவர் அருட்செல்வம் தேடவில்லையா என தகவல்களை திரட்டலானேன். அந்த கால பெரியவர்களை விசாரித்தேன். சில புத்தகங்கள் படித்தேன். கிடைத்த பதில்கள் ஆச்சர்யமூட்டின. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடுவதன் அபத்தம் புரிந்தது. </p><p><br /></p><p>பாகவதரைப்பற்றிய பெரும்பாலான நூல்கள் எங்காவது கேள்விப்பட்டதை வைத்து எழுதப்பட்டு இருப்பதால் , அவற்றில் உண்மையை அறிய முடியவில்லை. விந்தன் எழுதிய , தியாகராஜ பாகவதர் கதை எனும் நூல் நன்கு ஆய்வு செய்யப்பட்ட நூலாகும் . ஆனால் அதை முழுமையான நூலாக கருத இயலாது.. சிறிய புத்தகம்.</p><p><br /></p><p>இந்த நிலையில்தான் bhagavathar his life and times என்ற புத்தகம் படித்தேன். எழுதியவர் சுரேஷ் பாலகிருஷ்ணன். இவர் ஒரு வழக்கறிஞராவார்.</p><p><br /></p><p>குண்டூசி , நாரதர் , விகடன் , மெயில் , சினிமா உலகம் , டாக் அ டோன் என அந்த கால பத்திரிக்கை செய்திகள் , பலரது சந்திப்பு , சுரேஷ் பாலகிருஷ்ணனின் தந்தையார் ஒரு ரசிகனான சேகரித்து வைத்திருந்த பேப்பர் கட்டிங் போன்ற பல ஆதாரங்களை வைத்து முழுமையான ஒரு வரலாற்றை கொடுத்து இருக்கிறார் நூலாசிரியர்.</p><p><br /></p><p>தொட்டதெல்லாம் பொன்னாகி தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர் பாகவதர். இதில் பெரும்பாலும் எல்லோரும் ஒத்துப்போகிறார்கள் . ஆனால் பொய்குற்றச்சாட்டு ஒன்றில் அவர் சிறை சென்றதுடன் அவரது சாதனைகள் முடிந்து விட்டதாகவும் மக்கள் அவரை புறக்கணித்து விட்டதாகவும் , அவர் யாருமற்ற அனாதையாக வறுமையில் வாழ்ந்து மறைந்ததாகவும்தான் பெரும்பாலும் எழுதி இருக்கின்றனர். அதை உண்மை என நினைத்துதான் , அந்த டீவி பேச்சாளர் பேசி இருக்கிறார்.</p><p><br /></p><p>ஆனால் உண்மை நிலை வேறு என்கிறது புத்தகம். </p><p>அவர் மீதான குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலை ஆனதும் நடந்தவை குறித்து புத்தகம் விரிவாக பேசுகிறது , தகுந்த ஆதாரங்களுடன்.</p><p><br /></p><p>அவர் நடிகர் மட்டும் அல்லர். கர்னாடக இசை வித்வானும்கூட. குறிப்பாக தமிழ் இசையில் ஆர்வம் கொண்ட கலைஞர். அந்த இசைப்பயணம் முன்பை விட மிகுந்த வரவேற்புடன் தொடர்ந்தது</p><p>வானொலியில் அவர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்போது , அதை கேட்க கூடும் மக்கள் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது</p><p>சினிமாவில் நடிக்கக்கூட நேரம் இன்றி பொது நல சேவையிலும் , அருட்செல்வம் தேடுவதிலும் ஈடுபட்டார்</p><p>சிறைக்குப்பின் வெளியான ராஜமுக்தி அவரது பழைய படங்கள் போல மாபெரும் வெற்றி பெறாவிட்டாலும் பெரிய தோல்வியும் அல்ல. சுமாராக ஓடியது</p><p>அடுத்து வெளியான அமரகவி வெற்றி பெற்றது. ( ராஜமுக்திக்கு பதிலாக இந்த படம் வெளியாகி இருந்தால் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கும் என பத்திரிக்கைகள் எழுதியதாக , வரலாற்று சுவடுகள் தொடரில் தினத்தந்தி சமீபத்தில் குறிப்பிட்டது )</p><p>பாகவதரை விட தெலுங்கு நடிகர்களுக்கான பகுதி அதிகம் இருந்ததால் , ஷியாமளா படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் பாடல்கள் வரவேற்பு பெற தவறவில்லை</p><p>தயாரிப்பு , இயக்கம் , நடிப்பு என பல வேலைகளை இழுத்துபோட்டு செய்ததாலும் , பல பொதுப்பணிகளில் ஈடுபட்டதாலும் , பாகவதரால் முழு கவனம் செலுத்த முடியாத புது வாழ்வு திரைப்படம் தோல்வி அடைந்தது.</p><p>இந்த இரண்டு படங்களும் நல்ல படங்கள் அல்ல என்பதால் தோல்வி அடைந்தனவே தவிர பாகவதரை மக்கள் புறக்கணிக்கவில்லை. </p><p>இறக்கும்போதுகூட பங்களா , கார் என வசதியாகவே இருந்தார். வறுமையில் வாடவில்லை. மற்றவர்களுக்கு உதவும் இடத்தில்தான் இருந்தார்.</p><p><br /></p><p>இப்படி பல தகவல்களை தருகிறது புத்தகம். அம்பிகாபதி என்ற படம் சிவாஜி கணேசனை கதா நாயகனாகக்கொண்டு தயாரிக்கப்பட்டது. அதில் சிவாஜியின் அதாவது அம்பிகாபதியின் தந்தை கம்பராக நடிக்க பாகவதரை அணுகினார்கள் . சிவாஜியை விட கூடுதல் சம்பளம் தருவதாக சொன்னார்கள். அதற்கு பதில் சொன்ன பாகவதர் “ சிவாஜியின் தந்தையாக நடிப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் இந்த படத்தில் வேண்டாம். நான் ஒரு படத்தில் அம்பிகாபதியாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் அப்பாவாக நடித்தால் ரசிகர்கள் மனம் புண்படும் , எனவே இந்த வாய்ப்பு வேண்டாம் ‘ என தேடி வந்த வாய்ப்பை கொள்கை ரீதியாக மறுத்தார் பாகவதர். </p><p><br /></p><p>இப்படி வாழ்ந்ததால்தான் , அவரும் கலைவாணர் என் எஸ் கேயும் சிறை சென்றபோது , திராவிட இயக்கம் அவர்கள் விடுதலைக்கு தீவிரமாக குரல் கொடுத்தது.</p><p><br /></p><p>புரட்சி தலைவர் , இவரைப்பற்றி கூறும்போது..</p><p><br /></p><p>ஒரு நிகழ்ச்சிக்கு பாகவதர் வந்தார். நான் கவனித்துக்கொண்டு இருந்தேன். அவர் வரும்போதே அவரைச்சுற்றி ஒளிவட்டம் சூழ்ந்து இருப்பது போல இருந்தது. அவருடன் பேச , கையெழுத்து வாங்க மக்கள் போட்டியிட்டனர். கொஞ்ச நேரத்தில் அவர் கிளம்பிவிட்டார். எத்தனையோ விளக்குகள் அங்கு ஒளிவிட்டாலும் , அவர் போனதும் அங்கு இருள்கப்பியது போல ஆகி விட்டது.</p><p>இப்படி சொல்கிறார் எம் ஜி ஆர்.</p><p><br /></p><p>விகே ராமசாமி சொல்லும் ஒரு சுவையான சம்பவத்தை இங்கே பகிர விரும்புகிறேன்.</p><p><br /></p><p> அந்த காலத்தில் உச்ச நடிகர்களாக இருந்தவர்கள் , பாகவதரும் பியு சின்னப்பாவும்தான். இருவருக்குக்குமே தீவிர ரசிகர்கள் பலர் உண்டு. இருவரையும் சேர்த்து நடிக்க வைத்தால் அந்த படம் பெரும் வெற்றி பெறும் என நினைத்து பலர் முயன்றனர். ஆனால் அது உருப்பெறவில்லை.</p><p><br /></p><p>ஆனால் ஒரு பொது நண்பர் இருவரையும் சேர்த்து ஒரு நாடகம் நடத்த ஒப்புதல் பெற்று விட்டார். பவளக்கொடி என்பது நாடகத்தின் பெயர். பாகவதர் அர்ஜுனனாகவும் சின்னப்பா கிருஷ்ணராகவும் நடித்தனர்.</p><p><br /></p><p>நாடகம் பார்க்க பயங்கர கூட்டம். இரு சிகரங்கள் இணைவதால் ஒரே பரபரப்பு. பலருக்கு இருக்கை கிடைக்காமல் அரங்குக்கு வெளியேயும் பயங்கர கூட்டம். அந்த இரு கலைஞர்களுக்குமே ஒருவரை ஒருவர் வெல்ல வேண்டும் என மனதுக்குள் ஓர் ஆரோக்கியமான போட்டி.</p><p><br /></p><p> நாடகம் ஆரம்பித்தது. பாகவதர் தனக்கே உரித்தான இனிய குரலில் பாடியபடி அறிமுகம் ஆகும் காட்சி. அரங்கில் பயங்கர கரகோஷம் . உற்சாகம் , ஒன்ஸ்மோர் கோரிக்கைகள். மகிழ்ச்சியுடன் அடுத்தடுத்த காட்சிகளில் நடித்தார் அவர்.</p><p><br /></p><p>சற்று நேரத்தில் சின்னப்பா அறிமுகம் ஆகும் காட்சி. தன் பாணியில் கணீர் என பாடியபடி மேடையில் தோன்றினார் சின்னப்பா. சுமாரான கரகோஷம்தான். அந்த அளவுக்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆனாலும் ஏமாற்றத்தைக்காட்டிக்கொள்ளாமல் நடித்தார் சின்னப்பா. எப்படியாவது தன் முத்திரையை பதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.</p><p><br /></p><p>ஒரு காட்சியில் அர்ஜுனன் இறந்து விடுவதாக நடிக்கிறான். கிருஷ்ணன் மோகினி வடிவெடுத்து , அவனை மடியில் போட்டு அழுவது போன்ற காட்சி.</p><p><br /></p><p>சின்னப்பா , பாகவதரை மடியில் போட்டுக்கொண்டு , ஒரு ஒப்பாரி பாடலை இட்டுக்கட்டி , இசை நயத்துடன் பாட ஆரம்பித்தார். இப்படி க்ரியேட்டிவாக , அவ்வப்போது தோன்றுவதை பாடுவது அந்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.</p><p><br /></p><p>இவரது ஒப்பாரியை எதிர்பாராத பாகவதர் சற்று திகைத்துபோய் , யோவ் சின்னப்பா.. என்ன இது என முணுமுணுத்தார். ‘ கொஞ்சம் பேசாம இரும் ‘ என அவரை அடக்கிவிட்டி , ஒப்பாரியை தொடர்ந்தார் சின்னப்பா.</p><p><br /></p><p>அந்த ஒப்பாரிக்கு மக்களிடம் பயங்கர வரவேற்பு. கைதட்டல் விண்ணைப்பிளந்தது. ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என கேட்டு மீண்டும் மீண்டும் அவரை பாட வைத்தனர். சின்னப்பா என்றால் சின்னப்பாதான் என அனைவரையும் சொல்ல வைத்த மகிழ்ச்சி சின்னப்பாவுக்கு என்றால் சக கலைஞனுக்கு கிடைக்கும் பாராட்டில் பாகவதர்க்கும் மகிழ்ச்சிதான். இந்த சம்பவம் இருவர்க்கும் இடையே நட்பு ஏற்படுத்தியது.</p><p><br /></p><p>இப்படி சக கலைஞனுக்கு மட்டும் அல்ல. பழைய நினைவுகளுக்கும் மதிப்பு கொடுப்பவர் பாகவதர்.</p><p><br /></p><p>ராண்டார் கை ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்.</p><p><br /></p><p>ஆல் இந்தியா ரேடியோவில் ஓர் இசை நிகழ்ச்சி. பாகவதர் பாடுவதற்காக செல்கிறார். ஓர் பக்க வாத்திய கலைஞரை பார்த்து அதிர்ச்சி. உடனே இவரை மாற்றுங்கள் . அப்போதுதான் பாடுவேன் என நிபந்தனை விதிக்கிறார். அனைவர்க்கும் குழப்பம். அந்த கலைஞர்க்கும் வருத்தம். ஒரு நிகழ்ச்சியும் வருமானமும் பறிபோகிறதே என வருத்ததுடன் கிளம்பிவிட்டார். பாகவதர் பாடி முடித்தவுடன் காரணம் சொன்னார். அந்த கலைஞரிடம அந்த காலத்தில் இசை கற்றேன். ஆகவே அவர் எனக்கு குரு போன்றவர். அவர் எனக்கு பக்கவாத்தியமாக இருப்பது மரியாதையாக இருக்காது என்பதாலேயே அவரை அனுப்ப சொன்னேன் என காரணம் சொன்ன பாகவதர் , அந்த குருவை சந்தித்து காரணம் சொல்லி விட்டு , தேவையான பணமும் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.</p><p><br /></p><p>இசை மேதை ராம நாதன் ஒரு சம்பவத்தை சொல்கிறார்.</p><p><br /></p><p>ஒரு நாள் இரவு இரண்டு மணி. என் கதவை தட்டினார் பாகவதர். காலை வானொலியில் ஓர் இசை நிகழ்ச்சி. உடனே இசை அமைத்து தாருங்கள் என்றார். நான் அப்போது ஆரம்ப நிலை கலைஞன். என்னைத்தேடி அவ்வளவு பெரிய திரை நட்சத்திரம் அந்த நேரத்தில் வந்தது ஆச்சர்யமாக இருந்தது . நான் இசை அமைத்து கொடுத்தேன். சில மணி நேரங்களில் அதை கற்றுக்கொண்டு , சிறப்பாக பாடி முடித்தார் பாகவதர்.</p><p><br /></p><p>இப்படி சொல்கிறார் அவர்.</p><p><br /></p><p><br /></p><p>இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.</p><p><br /></p><p>ஆனால் நாம் காணும் வரலாற்றில் திரித்தல்கள்தான் அதிகம்.</p><p><br /></p><p>ஆக்ஸ்ஃபோர்ட் கம்பேனியன் ஆஃப் இந்தியன் தியேட்டர் (2004 ) என்ற புத்தகத்தில் , பாகவதர் முறைப்படியான படிப்போ , இசைப்பயிற்சியோ இல்லாமல் , முயற்சியால் முன்னேறியவர் என டெம்ப்ளேட்டாக எல்லோரையும் பாராட்டுவது போல பாராட்டி எழுதியுள்ளனர். ஆனால் பாகவதர் முறைப்படியான பயிற்சி பெற்ற கர்னாடக இசை வித்வான் ஆவார். அதுபோல அவர் நாடக நடிகருமாவார். இவற்றை பலர் குறிப்பிடுவதில்லை. ஒரு சினிமா நடிகர் என மட்டுமே நினைக்கிறார்கள்.</p><p><br /></p><p>உதவும் பண்பு , கற்கும் ஆர்வம் , காண்போரை கவரும் அழகு , தோல்வியில் கலங்காத திடச்சிந்தை என வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தவர் பாகவதர். நல்லோரை காணலும் நல்லது , நல்லோரைப்பற்றி பேசலும் நன்று.</p><p><br /></p><p>இவரைபோன்ற நல்லோரின் உண்மை வரலாற்றை தேடிப்படிப்பது நமக்கு , நம் மனதுக்கு , நம் வாழ்க்கைக்கு நல்லது. பொய் சுலபமாக கிடைக்கும், உண்மை தேடினால்தான் கிடைக்கும். தேடல் இருக்கும்வரை வாழ்வில் பசி இருக்கும். பசித்து வாழ்ந்தால்தான் அந்த வாழ்வில் சுவை இருக்கும்.</p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-143588380504231288.post-33626408473868691232022-08-01T03:11:00.002-07:002022-09-16T02:33:07.548-07:00கலைமகள் − ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதை பயிலரங்கு அனுபவம்<p> கலைமகள் மாத இதழும் ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழும் இணைந்து சிறுகதைப் பட்டறை எனும் பயிலரங்கை நடத்துகின்றன என்ற செய்தி எனக்கு சற்றே வியப்பளித்தது.</p><p> ஆன்மிகம் , ஞானத்தேடல் , சமூகத்தேடல் என பயணிக்கும் ராமகிருஷ்ண மடம் , இலக்கியத்தில் ஆர்வம் காட்டுவது சந்தோஷம் கலந்த ஆச்சர்யம் அளித்தது</p><p> இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் வேறு எங்கோ போய்க்கொண்டிருப்பவர்கள் தற்செயலாக நிகழ்ச்சி குறிந்து அறிந்து , சரி போய்த்தான் பார்ப்போமே என கேஷுவலாக வர முடியாது.</p><p> ஒரு மாதம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும் அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிக்கான அழைப்பு அனுப்பப்படும்</p><p> ராமகிருஷ்ண மடத்தில் ஏசி ஹாலில் மிகச்சிறப்பான ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நடந்தது</p><p> இனிமையான ஆன்மிக சூழலில் இலக்கிய நிகழ்வு . பெயரை பரிசோதித்தபின்னே அனுமதித்தனர் அழகான விவேகானந்தர் படம், அவரது நூல் , பயிற்சிக் குறிப்பேடு , பேனா அடங்கிய பொதி அனைவர்க்கும் வழஙககப்பட்டது</p><p><br /></p><p>ஶ்ரீராமகிருஷ்ணருக்கு ஆரத்தி காட்டி மந்திரங்கள் சொன்ன பிறகு நிகழ்ச்சி தொடங்கியது</p><p> எழுத்தாளர்கள் வித்யா சுப்ரமணியம் மாலன் , தேவிபாலா ஆகியோர் சிறுகதை எழுதும் நுட்பம் குறித்து வகுப்பெடுத்தனர்.</p><p><br /></p><p> கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரமணியன் அவர்கள் பேசியதை தொகுத்துக்கூறி மனதில் பதிய வைத்தார்</p><p> ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி தர்மிஷ்டானந்தர் ஆகிய ஆன்மிகவாதி்களுடம்கூட சிறுகதைகள் குறித்து சில நிமிடங்கள் பேசியது சிறப்பாக இருந்தது</p><p dir="rtl" style="text-align: right;"> அனைத்துக்கும் சிகரமாக , உலகளாவிய ராமகிருஷ்ண மடங்களின் துணைத்தலைவரான ஶ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மகராஜ் அவர்களும் அழகாக ஆனால் சுருக்கமாக சிறுகதை குறித்த தனது நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்</p><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnpjoitHImuhFjRbSysTx76_i8Ry16X_Faac2ICfOKG4XRu9axPd1ZUmsGiMBS8ahdnQyav2mqZ0UP2GUm0vovaV2GSw4VgjuURWJAbFXZSW4hsQvKvPRTuS0VQTxix2W3a8wXwIb3kf_lZsUOmoyKcvua6QtBL7VdbPGGh5aPliKJPa26hxlRQXd0_Q/s233/rsudamani5.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="233" data-original-width="129" height="233" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnpjoitHImuhFjRbSysTx76_i8Ry16X_Faac2ICfOKG4XRu9axPd1ZUmsGiMBS8ahdnQyav2mqZ0UP2GUm0vovaV2GSw4VgjuURWJAbFXZSW4hsQvKvPRTuS0VQTxix2W3a8wXwIb3kf_lZsUOmoyKcvua6QtBL7VdbPGGh5aPliKJPa26hxlRQXd0_Q/s1600/rsudamani5.jpg" width="129" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTIOgXwpBE1-cYuCKVYJpR0nAjARJ0dary5hdnj_2aUI_yX2aGQ6rFYY8mAMYjwUonpDgqMv75lH-6dxKSaCcKm_U8Wk2JccrDUiLZme5vifZdKukJJKckG_DBUj3Pt8L--SjLTgQJFXnc24Bc_6lmo0B4LdDeauAC6aM289INGSPyJSDOeCyUAxGgqA/s659/images%20(8).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="659" data-original-width="465" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTIOgXwpBE1-cYuCKVYJpR0nAjARJ0dary5hdnj_2aUI_yX2aGQ6rFYY8mAMYjwUonpDgqMv75lH-6dxKSaCcKm_U8Wk2JccrDUiLZme5vifZdKukJJKckG_DBUj3Pt8L--SjLTgQJFXnc24Bc_6lmo0B4LdDeauAC6aM289INGSPyJSDOeCyUAxGgqA/s320/images%20(8).jpeg" width="226" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /><p></p><p> தனது சிறுவயதில் சிறுகதைப்போட்டி ஒன்றில் கலந்து கொண்டு பரிசு பெற்றதை அவர் சொன்னது சுவாரஸ்யம். ஒரு விஷயத்தை சிறுகதை போல சொல்லும் தன் பாணி பலரை ஈர்த்து வருகிறது எனக்குறிப்பிட்டார். </p><p> பேச்சுவாக்கில் ஒரு சிறுவனுடனான ஒரு அனுபவத்தை ஆன்மிக கருத்தை வலியுறுத்துவதற்காக சொன்னார். அது பிறகு மாலன் தன் பேச்சில் குறிப்பிட்ட சிறுகதை பஞ்சாங்கத்துக்கு முற்றிலும் ஒத்துப் போனது..</p><p> வரவேற்புரையாற்றிய சுவாமி அபவர்கானந்தர் ( ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் ) தமிழ்ச் சிறுகதை வரலாற்றை சுருக்கமாக பேசினார்</p><p> செய்திகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டு இருந்த அன்றைய சூழலில் பாரதியார் தனது சுதேசமித்ரன் இதழில் சிறுகதைகளுக்கு இடமளித்து தமிழில் சிறுகதை கலையை ஆரம்பித்து வைத்ததை சொன்னார் மாதவையா வவேசு ஐயர் டிஎஸ் சொக்கலிங்கம் சிசுசெல்லப்பா ராமையா கநாசு மெளனி என சிறுகதையை வளர்த்த முன்னோடிகளைப்பற்றியும் சுஜாதா சுரா போன்றோர் பார்வை மணிக்கொடி காலகட்டம் என விரிவாக பேசினார்;</p><p>சுருக்கம் , சுவை , உணர்ச்சி/ நெகிழ்ச்சி வாசகனின் சிந்தனையை தூண்டல் போன்ற சிறுகதைக்கு தேவையான அம்சங்கள் குறித்துப் பேசினார்.</p><p> சிறுகதை ஆசிரியனிடம் ஆரம்பிக்கும் சிந்தனை வாசகனிடம் தொடரும்படி எழுதப்படுவதே நல்ல சிறுகதை என்றார்</p><p><br /></p><p>அதன்பிறகு பேசிய கீழாம்பூர் சங்கரமணியன் சிறுகதைப்பட்டறையின் தேவை குறித்தும் அதை கலைமகள் தொடர்ந்து நடத்த நினைத்திருப்பதையும் சொன்னார். தரமணியல் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து முதல்,நிகழ்வு நடந்ததையும் இது,இரண்டாவது நிகழ்வு என்பதையும் குறிப்பிட்டார்.</p><p> உவேசா , கிவாஜ ஆகியோர் வழியில் கலைமகள் இதழ் தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றும் என்றார்</p><p><br /></p><p>பிறகு பேச வந்தவர் எழுத்தாளர் பாரதி சந்துரு</p><p><br /></p><p>சிறுகதைகளின் அவசியம் குறித்துப்பேசினார்.. சிறுகதை சமகாலப்பிரச்சளைப் பேசுகிறது அதிலிருந்து ,மீளும் ஊன்று கோலாகவும் சிறுகதைகள் உள்ளன என்றார்;</p><p>உதாரணமாக சூடாமணி எழுதிய அக்கா என்ற சிறுகதை.</p><p><br /></p><p>அக்கா எனும் கதையில், குழந்தை பெறாத ஒரு விதவை அக்கா தங்கையுடன் வசிக்கிறாள்</p><p>தனக்கு குழந்தை இல்லாத சோகத்தை காட்டிக் கொள்ளாமல் தங்கையின் குழந்தையை அன்பாக கவனித்துக்கொள்கிறாள். அந்தக்குழந்தையும் பெரியம்மா மீது பாசமாக இருக்கிறது ,தங்கையும் அன்பானவள்தான்</p><p>ஒரு நாள்அவள் தங்கை வாய்தவறி ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறாள். அவள் வேண்டுமென்றே அதைச் சொல்லவில்லை. தங்கை குழந்தைக்குப் பால் புகட்டும் போது அது அழுகிறது. ‘உனக்கு இதெல்லாம் தெரியாதுக்கா. இப்படி எங்கிட்ட குடு’ என்று கூறி, குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக்கொள்ளுகிறாள். வாய்தவறி வந்து விழுந்த சொல் அது. அக்காவை அது புண்படுத்திவிடுகிறது. ஆனால் தங்கை அதை உணரவே இல்லை.</p><p>அக்கா மன உளைச்சலில் வெளியே போய்ச் சுற்றிவிட்டு வருகிறாள். ‘எங்கே அக்கா போயிட்டே? இவ்வளவு நேரமாச்சேன்னு எனக்கு ஒரே கவலையாயிடுத்து..’ என்று தங்கை அங்கலாய்க்கும்போது அவளது அன்பு அக்காவுக்குப் புரிகிறது. தங்கையின் பெரிய குழந்தை, ‘பெரியம்மா! பசிக்கிறது!’ என்கிறாள்</p><p>பர்வதம் சிறிது தயங்கி. “குழந்தைகளுக்கு நீ வேணுமானால் சாதம் போட்றியா?” என்கிறாள். ‘</p><p>“ஏனாம்? நீயே போடுக்கா. உன் ஆசைக்கையால நீ போட்டு குழந்தைகள் எத்தனை தேறி இருக்கு, பாரு!” என்று தங்கை சொன்னதும் அக்காவின் இதயம் லேசாகி முகத்தில் சிரிப்புத் தோன்றுகிறது. குழந்தைகளூக்கு உணவு போடச் செல்லுகிறாள் என்று கதை முடிகிறது.</p><p> ஒரு வார்த்தை உலகத்தையே நரகமென எண்ணவைக்கிறது இன்னொரு வார்த்தை வாழ்வை சொர்க்கமெனக் காட்டுகிறது சூழல்கள் மனிதர்கள் என அனைத்தும் கணம்தோறும் மாறும் மாயத்தைச் சொல்கிறது கதை</p><p><br /></p><p>சீசர் என்ற ஜெயகாந்தனின் கதையை அடுத்தபடியாக பேசினார்</p><p> ஜெயகாந்தனுக்கே உரிய டிராமாட்டிக் உச்சம் கொண்ட கதை இது</p><p> வாடகைக்கு குடியிருக்கும் குடும்பத்தினர் நிறைந்த ஒரு குடியிருப்பு ஹவுஸ் ஓனர் மகனின் பார்வையில் நகரும் கதை</p><p> ஏன் ஹவுஸ் ஓனர் பையனின் பார்வை என்றால் அதுதான் கதையை இன்னும் நெருக்கமாக்குகிறது. பெரிய அளவு தீமையோ பெரியஹீரோயிசமோ செய்ய முடியாத ஒரு சாட்சி மட்டும்தான் அவன்</p><p> தமது வீட்டில் குடியிருக்கும் ஒரு பெண்ணின் ஒழுக்கம்மீது அபாண்டமாக பழி சுமத்தி , அவளது கணவனை அழைத்து வரச்சொல்கிறார் − ஆணையிடுகிறார் − ஹவுஸ் ஓனர். மற்ற குடித்தனக்காரர்கள் எல்லாம் சுவையான மெகாசீரியலை ரசிப்பது போல அந்தப்பெண்ணின் கதறலை ரசித்தபடி கள்ள மெளனம் சாதிக்கின்றர்.</p><p> </p><p><br /></p><p> மகன் ஓடிப்போய் கணவனை அழைத்து வருகிறான். கணவர் அமைதியாக வந்து என்ன பிரச்சனை என விசாரிக்கிறார். என் மனைவி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது அனைவரும் அவரவர் வாழ்க்கைத்துணையை நம்புங்கள். பிறர் வாழ்வை எட்டிப்பார்க்காதீர்கள் என கம்பீரமாக கூறுகிறார்.</p><p> வேறு வீட்டுக்குப்போய்விடலாம் இது மோசமான மனிதர்கள் வாழும் இடம் என்கிறாள் மனைவி</p><p> உலகம் இப்படித்தான் இருக்கும் பயந்தால் வாழ முடியாது என ஆதரவாகப்பேசுகிறார் கணவர்;</p><p> சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு வாழ வேண்டும் என பெண்களுக்கு அட்வைஸ் சொல்லாமல் ஒரு, மன்னனுக்கு உரிய வீரம் அமைதி கண்ணியத்துடன் பிரச்சனையை சந்தித்த அக்கணவன் அந்த இளைஞன் பார்வையில் பேரரசர் சீசராக தோன்றுவதாக கதை முடிகிறது</p><p> வாழ்க்கை குறித்து இப்படி மேன்மையான பார்வைகள் உருவாக சிறுகதைகள் அவசியம் என்று பேசினார் பாரதி சந்துரு</p><p><br /></p><p>சிறுகதைகளை எப்படி வடிவமைப்பது </p><p>சிறுகதைகளின் வடிவங்கள் குறித்து வித்யா சுப்ரமணியம் பேசினார்</p><p> ராமகிருஷ்ண மட நுாலகம்தான் தன்னை நல்ல தொரு வாசகியாக்கியது நல்ல வாசகன்தான் நல்ல எழுத்தாளன் ஆக முடியும் என பேச்சை ஆரம்பித்தார்</p><p> திஜா எழுதிய அம்மா வந்தாள் நாவல்தான் எழுதத்துாண்டும் உத்வேகம் அளித்தது என்றார்</p><p> தானே சொல்வது போல எழுதுதல் , பல்வேறு கதாபாத்திரங்கள் சொல்வது போல எழுதுதல் , குளம் மரம் ஆகியவை சொல்வதுபோல எழுதுதல் என எப்படியும் எழுதலாம்</p><p> உருவகக்கதைகளும் எழுதலாம்</p><p>ஆற்றங்கரை பிள்ளையாரை பாரததேசமாக உருவகித்து புதுமைப்பித்தன் ஒரு கதை எழுதியிருக்கிறார் அந்த பாதிப்பில் நான் எழுதிய கதைதான் "என்று தணியும்" என்ற கதை</p><p> எளிய விஷயங்களைக்கூட சிறுகதையாக்கலாம் ஒரு சிறுவன் ரிக்ஷா என்பதை மழலை மொழியில் ரிஸ்கா என்பதை சுவைபடக்கதை ஆக்கியிருக்கிறார் அசோகமித்திரன்</p><p><br /></p><p>அதேபோல மிகப்பெரிய துயரங்களை இழப்புகளை கதையாக்கலாம் நான் அப்படி எழுதிய கதை ஒன்று மிகப்பெரிய புகழை எனக்கு ஈட்டித்தந்தது </p><p>சிறுகதை அதன் முதல் வரிக்கு முன்பே ஆரம்பித்து விட வேண்டும் கடைசி வரிக்கு பின்பும் தொடர வேண்டும் என்றார்</p><p>அந்தக்கதைக்கு அடிப்படையாக அமைந்த தனது சோகத்தை அவர் சொன்னபோது பலர் கண்கள் கலங்கின அவர் அதை சொன்ன விதமும் ஒரு சிறுகதை போல இருந்தது</p><p><br /></p><p>சிறுகதை எழுதும்போது கவனிக்க வேண்டியவை குறித்து தேவிபாலா பேசினார்</p><p><br /></p><p>தலைப்பிலேயே பதில் இருக்கிறது. சிறுகதை எழுதவேண்டுமானால் கவனிக்கப்பழகுங்கள். சகமனிதர்களை , சம்பவங்களை கவனியுங்கள. சும்மா பார்ப்பது அல்ல கூர்மையான கவனிப்பு தேவை</p><p> எனது முதல் சிறுகதை கலைமகள் இதழில் வெளியானது அந்தவகையில் கலைமகள்தான் என் தாய்வீடு</p><p> சுமங்கலி பிரார்த்தனை என்பது அக்கதையின் பெயர்.</p><p> விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் அடிக்கடி சொல்வார் கண்ணையும் காதையும் திறந்து வைத்தால் ஆயிரம் கதைகள் கிடைக்கும்;</p><p> பேருந்துப்பயணத்தின் போது ஜன்னல் வழியே நான் கண்ட ஒரு காட்சி − மடிசார் அணிந்து ஒரு, பெண் அதிவேகமாக ஸ்கூட்டரில் பறந்த ஒரு காட்சி − என் மனதில் விதையாக விழுந்து மடிசார் மாமி என்ற புகழ்பெற்ற நாவல் ஆனது</p><p> எனவேதான் வாகன வசதிகள் வந்துவிட்ட பின்பும்கூட பேருந்துகளில் பயணிக்கிறேன்</p><p> ஜவுளிக்கடை உணவகங்கள் என எங்கும் கதைகள் கிடைக்கும்</p><p> சின்னச்சின்ன உணர்வுகளை சின்னசின்ன வாக்கியங்களில் எழுதிப்பழகுங்கள்</p><p> ஒரு இளம்பெண் நடந்து கொண்டு இருந்தாள் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. நனைந்துவிடாமல் குடைபிடித்தபடி போய்க்கொண்டிருந்தாள்</p><p> இப்படி எழுதாதீர்கள்</p><p> குடைபிடித்தபடி சென்று கொண்டிருந்த அவளுக்கு... என ஆரம்பித்து அடுத்தடுத்து செல்லுங்கள்</p><p> குடை அவள் ஆகிய இரு சொற்கள்மூலம் மழையையும் ஒரு பெண் என்பதையும் உணர்த்திவிட முடியும்</p><p> ஊசி போல நறுக் என மனதில் பதிய வேண்டும்</p><p> ஆரம்பம் முக்கியம்</p><p> கோலம் போட வாசலுக்கு வந்தபோது , படமெடுத்து ஆ டிக்கொண்டு இருந்தது பாம்பு என அதிரடியாய் ஆரம்பியுங்கள்</p><p>அதேமாதிரி முடிவிலும் ஒரு பஞ்ச் தேவை</p><p><br /></p><p>வட்டார பாஷை வேண்டாம் பொதுவான தமிழில் எழுதுங்கள்</p><p>வட்டார பாஷை தேவைதான் ஆனால் ஆரம்பகட்டத்தில் வேண்டாம்</p><p> தற்போது பெண்கள்தான் அதிகம்,,வாசிக்கின்றனர் எனவே அவர்கள் பிரச்சனைகளை எழுதுங்கள்</p><p> பெண்களால் ஆனதுதான் குடும்பம் குடும்பங்கள் சேர்ந்து வீதி வீதிகள் சேர்ந்தது ஊர் ஊர்கள் சேர்ந்ததுதான் தேசம் மற்றும் உலகம்</p><p> என்னைப்பொருத்தவரை திருவள்ளுவரை மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பேன். எத்தனை எத்தனை கருத்துகள் உவமைகள்</p><p> அவசரமாக கதை வேண்டும் என பத்திரிக்கைகள் கேட்டால் உடனே திருக்குறளைப் புரட்டுவேன்</p><p>எந்தக்குறள் கண்களில் படுகிறதோ அதை வைத்து கதை எழுதிவிடுவேன்</p><p>கனவுகளை குறித்து வைப்பது நல்லது சில கனவுகள் மறந்ததுபோல இருக்கும். யோசித்தால் நினைவுக்கு வந்து விடும். குறித்து வைத்தால் கதை எழுத வித்தியாசமான கருக்கள் கிடைக்கும்</p><p> சின்னசின்னக்காட்சிகள்கூட சிறுகதைகளுக்கான பொறிகளாக அமையலாம் </p><p><br /></p><p>ஒரு வீட்டின் முன் ஒரு, ஜோடி செருப்புகள் கிடந்ததைக்கண்டேன்.</p><p><br /></p><p>அவ்வளவுதான் பத்திரிக்கையுலக பிதாமகன் சாவி அவர்கள் பாராட்டி தலைப்பிட்டு ( தலைப்பு வாசலில் செருப்புகள்) பிரசுரிக்கத்தக்க ஒரு கதை தயாராகி விட்டது</p><p> அந்த கதை இதுதான்</p><p>ஒரு கணவன் மனைவி.. கணவன் மீது அளப்பரிய அன்பும் நம்பிக்கையும் கொண்ட மனைவி. </p><p>ஒரு நாள் கணவன் அலுவலகம் சென்ற பிறகு இவள் ஒரு வேலையாக வெளியே செல்கிறாள். அங்கே ஒரு பாலியல் தொழில் நடக்கும் வீட்டைக்கடக்கும்போது செம அதிர்ச்சி</p><p>கணவனின் செருப்புகள் அவ்வீட்டு வாசலில் கிடக்கின்றன</p><p> அவன் மீதான நம்பிக்கை சுக்குநூறாக சிதறுகிறது கண்ணீருடன் வீடு திரும்புகிறாள்</p><p> இது எதுவும் அறியாத கணவன் வழக்கம்போல மாலையில் வீட்டுக்கு வருகிறான். வந்தவன் அதிர்ச்சியில் உறைகிறான்</p><p> தாழிடப்பட்ட அவன்வீட்டு வாசலில் யாரோ ஒரு ஆடவனின் ஒரு ஜோடி செருப்புகள்</p><p>இந்தக்கதை நல்ல வரவேற்பைப்பெற்றது</p><p>என்ன ட்விஸ்ட் என்றால் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவத்தை கதையாக எழுதிவிட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டைக்கு வந்து விட்டார்கள் ( அரங்கில் பலத்த சிரிப்பு ) கற்பனைக்கதை என சொன்னாலும் நீண்ட நாட்கள் என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள்</p><p><br /></p><p> வர்ணனைகள் அதிகம் வேண்டாம். போதனைகளும் வேண்டாம்</p><p> ஒரு பாத்திரத்தின் குணாதிசயங்களை தெளிவுற வரையறுத்து விட்டால் , பல்வேறு குணாதிசங்கள் கொண்ட பாத்திரங்களே கதையை எழுதி விடும்</p><p>நறுக் என சுருக்கமாக சொல்லும்கலை முக்கியம் . ஏழே வரிகளில் ராமாயணம் , மகாபாரதத்தை சொல்லி வியப்பிவ் ஆழ்த்தியவர் கண்ணதாசன்</p><p><br /></p><p>வரவு எட்டணா , செலவு பத்தணா , அதிகம் ரெண்டணா கடைசியில் துண்டனா என ,படத்தின் கதையை பாடலின் சில வரிகளில் சொன்னதுபோல கதையின் முதல் வாக்கியத்திலேயே கதையை சொல்லலாம்</p><p><br /></p><p>ஒரு முறை ஒரே வார்த்தையில் "கதை எழுதச்சொன்னார்கள்</p><p>எழுதினேன்</p><p><br /></p><p>கதை : ஐயோ</p><p><br /></p><p>அவ்வளவுதான் கதை.. பிறகு விளக்கினேன்</p><p><br /></p><p>( அவரது விளக்கம் , கதை எழுத தேவையான பஞ்சாங்கம் குறித்து மாலன் பேச்சு , கல்கி குறித்த சுவாரஸ்யம் , கெளதமானந்தர் சொன்ன கதை , வித்யா சுப்ரமண்யம் பகிர்ந்த "அவரது கணவரின் மறைவுச் செய்தி அடுத்த பதிவில்)</p><p><br /></p><p><a href="http://www.pichaikaaran.com/2022/09/blog-post_16.html?m=1" target="_blank">இதன் தொடர்ச்சி</a><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p> </p><p><br /></p><p><br /></p><p><br /></p><p> </p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-77560708317816898322022-04-26T21:39:00.001-07:002022-04-26T21:39:56.347-07:00தனிமனித சுதந்திரமும் அரசுகளும்− ஜோகாவிச்<p> ஆஸ்திரேலிய ஓப்ப</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghH05oQ2dwm2m5oaWsy3wZxJvS-55HFPAWgSCed4YxOD40FylaDccrPj8akDlQKLgQIysSwW4d4KM4KJyUn3Lj_OgEmCp5UlMzGWjWAMggggag1ZMglppHtKm5cxCaGkHxdoT3PoWR4IIWepeRiZim5eCaQQNUkhr8fljffeew-TdWd_sfrdrH7FBbPA/s700/1014768-novakvaccinejab.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="700" height="183" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghH05oQ2dwm2m5oaWsy3wZxJvS-55HFPAWgSCed4YxOD40FylaDccrPj8akDlQKLgQIysSwW4d4KM4KJyUn3Lj_OgEmCp5UlMzGWjWAMggggag1ZMglppHtKm5cxCaGkHxdoT3PoWR4IIWepeRiZim5eCaQQNUkhr8fljffeew-TdWd_sfrdrH7FBbPA/s320/1014768-novakvaccinejab.jpg" width="320" /></a></div><br />ன் டென்னிஸ் போட்டியில் உலக நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது உலகமே அதிர்ந்தது<p></p><p> கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் விளையாட முடியாது என்ற விதியில் இருந்து யாருக்கும் விலக்கு தர முடியாது என்பது அரசின் முடிவு</p><p><br /></p><p> விதிகளை கண்மூடித்தனமான பின்பற்றாதீர்கள் ஒரு வரலாற்று வீரனை இழந்தால் அந்தப் போட்டிக்குதான் இழப்பு என்ற குரலை அரசு கேட்கவில்லை. பிடிவாதமாக அவர் விசாவை ரத்து செய்து அவமானப்படுத்தினர்</p><p> கடைசியில் அப்போட்டியில் நடால் வென்று உலக சாதனை புரிந்தார்</p><p><br /></p><p>மெத்வதேவ் நடால் இறுதிப்போட்டி அனல் பறந்த ஆட்டம் , வரலாற்றில் இடம் பெறும் போட்டி என்பது வேறு விஷயம் . ஆனால் அதில் ஜோகோவிச் இல்லாதது நடால் வெற்றியின் ஒளியை சற்றே மங்கச் செய்துவிட்டது</p><p> எனக்கு தடுப்பூசி மீது வெறுப்பு இல்லை. தடுப்பூசி கூடாது என்ற இயக்கத்தை நான் ஆதரிக்கவும் இல்லை ஆனால் மிரட்டலுக்கு அடி பணிந்து தடுப்பூசி நான் விரும்பவில்லை தனி மனித சுதந்திரமா பரிசுத்தொகையா எனறால் தனி மனித சுதந்திரமே முக்கியம். சாதனைகள் போனால் போகட்டும் என்று சொல்லிவிட்டார் ஜோகோவிச்</p><p><br /></p><p>இந்த சூழலில் , விம்பிள்டன் போட்டியில் விளையாட தடுப்பூசி கட்டாயம் கிடையாது என அப்போட்டியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்</p><p> தலைமை நிர்வாகி சால்லி போல்ட்டன் கூறுகையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது ஆனால் அது நிபந்நனை அல்ல என்றார்</p><p><br /></p><p> இதே போல இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டியாளர்களும் அறிவித்துள்ளனர்;</p><p> </p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-87194873822793881102022-04-22T05:08:00.003-07:002022-04-22T05:08:16.061-07:00இமையம் எழுதிய எங் கதெ ( நெடுங்கதை ) என் பார்வை <p> </p><p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZbVFj1v7kgqW4o-a8jRq-QdY8CYRF30CV7U6kCeWU6yqZLkcloHoVdIESCV1bjhgoMJ2X1gyBFfVWV6mn5IeOTZd-_2kQp4KcEyxsC2TrK9ZRU8nJNbNYM1Xj4afU2P0MjH3_o0TTnuQobbiZbPUUFHQPMII-1kWYGiXC6nu5HrxapLfZXtOJUJY1CQ/s225/eng.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="225" data-original-width="225" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZbVFj1v7kgqW4o-a8jRq-QdY8CYRF30CV7U6kCeWU6yqZLkcloHoVdIESCV1bjhgoMJ2X1gyBFfVWV6mn5IeOTZd-_2kQp4KcEyxsC2TrK9ZRU8nJNbNYM1Xj4afU2P0MjH3_o0TTnuQobbiZbPUUFHQPMII-1kWYGiXC6nu5HrxapLfZXtOJUJY1CQ/s1600/eng.jpg" width="225" /></a> எழுத்தாளர் இமையம் அவர்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பின்னணி கொண்டவை.</p><p>விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுப்பவர் , சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்பவர் என்பது உண்மை என்றாலும் இந்த அடையாளங்கள் இல்லாமல் பொதுவான மானுடம் , மனித உறவுகள் , அன்றாட வாழ்க்கை போன்றவற்றையும் இவர் எழுத்து பேசும்.</p><p>விளிம்பு நிலை மக்களைக்குறித்த இவர் அக்கறை காரணமாக , இவர் எப்போதும் அவ்ர்களைப்பற்றியே எழுதுபவர் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது.</p><p><br /></p><p>அப்படி இல்லாமல் தஸ்தயேவ்ஸ்க்கியின் வெண்ணிற இரவுகள் போல அழகான , பித்தேறிய காதல் கதைகளும் படைப்பவர்தான் இமையம்.</p><p> நம் ஊருக்கு சூழலுக்கு தேவையான இவரது பெத்தவன் கதை ஒரு ஐரோப்பியனுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் இவரது என் கதெ என்ற நெடுங்கதையை எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அவர்களால் அதில் விரவியிருக்கும் காதலை , ஆண் பெண் உறவின் மாய கணங்களை புரிந்து கொள்ள இயலும் . </p><p><br /></p><p><b>இது எங் கதெ.பத்து வருசத்துக் கதெ.என் ரத்தம்.என் கண்ணீர்.கதெ ஆரம்பிக்கறப்போ எனக்கு வயசு முப்பத்திமூணு.கதெ முடியறப்போ நாப்பத்திமூணு. இது என்னோடது மட்டுமில்ல. கமலாவோட கதெயும்தான்.</b></p><p><b><br /></b></p><p> இதுதான் கதை ,, இதுதான் கதையின் முடிவு என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டு கதை ஆரம்பிக்கிறது.</p><p><br /></p><p>கதை முழுக்க முழுக்க வினாயகம் என்பவரின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது.</p><p>ஒருவர் பார்வையில் அதுவும் வட்டார பேச்சு வழக்கில் முழுக்கதையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதே முதலில் ஒரு பேராச்சர்யம்.</p><p><br /></p><p> உலகியல் பார்வையில் போதிய சாமர்த்தியம் இல்லாத , வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைஞந்தான் விநாயகம். அவ்வ்வூர் பள்ளியில் எழுத்தர் வேலையில் சேரும் கமலா மீது காதல் வயப்படுகிறான். அவள் கணவனை இழந்தவள் , இரு பெண் குழந்தைகள் . இது தவறு உனக்கு என ஒரு வாழ்க்கை தேவை திரும்ணம் செய்து கொள் என பெற்றோர் சொல்வதை இவன் கேட்பதில்லை.</p><p><br /></p><p> அவள் பேரழகி என்பதால் ஊரே அவள் கடைக்கண்ணுக்கு காத்திருக்கிறது. ஆனால் அவளோ இவனை ஏற்கிறாள். </p><p>அதற்கு காரணம் காதலா , காமமா , ஒரு பாதுகாப்பா , அல்லது சம்பளமற்ற வேலையாள் தேடுகிறாளோ என்பதெல்லாம் நமக்குத்தெரிவதில்லை . காரணம் கதையில் அவளது எண்ண ஓட்ட்டங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்பது கதையின் மிகப்பெரிய அழகு. அவளை நியாயப்படுத்தியோ அவளை தரக்குறைவாகவோ சித்ர்கரிக்க வாய்ப்புகளை உருவாக்காமல் , கதை முழுக்க வினாயகம் பார்வையில் அவன் சொல்வதாகவே நகர்கிறது. </p><p> கமலா கிடைத்தது தன் பாக்க்கியம் , அவள் தன்னை ஏமாற்றுகிறாள் , தன்னை பயன்படுத்துகிறாள் , என அவனுக்கு அந்தந்த சூழலில் தோன்றும் எண்ணங்கள்தான் நமக்கு தெரிகின்றன. அவள் எதிர்வினைகள் , செயல்கள் நமக்கு அவன் மூலம் தெரிந்தாலும் , அவள் என்ன நினைத்து செய்கிறாள் என்பது வினாயகம் போலவே நமக்கும் புலப்படுவதில்லை. </p><p><br /></p><p> மேலதிகாரி மிகவும் தொந்தரவு செய்கிறார் , எனவே சும்மா சில கொஞ்சல் குறுஞ்செய்திகள் அனுப்பினாலாவது அமைதியாக விலகி விடுவார் என நினைத்தேன் என மேலதிகாரி விவகாரம் வெடித்ததும் சொல்கிறாள். </p><p><br /></p><p>இது உண்மை போலவும் இருக்கிறது , உண்மை என்றால் விநாயகத்திடம் ஏன் மறைத்தாள் என்றும் அவனைப்போலவே நமக்கும் தோன்றுகிறது , அவளுக்கு காசும் காமமும்தான் முக்கியம் என்றால் வினாயகத்தை விட ஆயிரம் பேர் கிடைப்பார்களே , ஏதோ ஒரு காதல் இருக்கிறதோ என்றும் தோன்றுகிற்து ( அவள் ஒரு போதும் காதல் போன்ற எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில்லை ) தன்னை காதலனின் சகோதரிகள் தேடி வந்து அவமானப்படுத்தியதைக்கூட கேலி கலந்த கிண்டலுடந்தான் சொல்கிறாள் “ இப்படி அப்படி இல்லை செம திட்டு ஒரே கல்ல்யாண வீட்ல மூணு மைக் செட் கட்டுன மாதிரி இருந்துச்சு “ </p><p> அவனை சற்றும் பொருட்படுத்தாதவள் , எத்தனை நாள் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தாலும் சட்டை செய்யாதவள் . அப்படிப்பட்டவள் எத்தனை நாள் கழித்து வந்தாலும் அவனை ஏற்கிறாள் . யாரிடமும் ஏமாறாமல் கச்சிதமாக கணக்குப்போட்டு காரியம் சாதித்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி அப்படிப்படவள் , அவனை முழுமையாக நம்புவதும் , தன்னை கொல்ல வந்து இருக்கிறான் என்பது தெரியாமல் , ரத்தம் வருவதற்கு அவன் சொல்லும் லாஜிக் இல்லாத பொய்யை ( அவன் சொன்ன ஒரே பொய் ) நம்புவதும் அவளது வேறு ஒரு முகம் . ஆனால் ஒரு போதும் அவள் தன் கணவனை மறக்கவில்லை. கணவன் இடத்தை இவனுக்கு தரவும் மாட்டாள் </p><p> எப்படி பலரால் நாஸ்தென்கா கதாபாத்திரத்தை மறக்க முடியாதோ அது போல இந்த கதையை படித்து முடித்தால் , கமலாவையும் மறக்க முடியாது.</p><p><br /></p><p> கவிதைகள் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட நுண்ணுண்ர்வு கொண்ட வினாயகம் கதை சொல்லும்போது நம்மிடம் நீதி கேட்கும் தொனியில் பேசுவதில்லை .. தன் மீதும் தவறு இருக்கலாம் என்பதை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறான். </p><p> </p><p><br /></p><p><i><b>பணம் சம்பாதிக்கிறத்துக்காக எத வேணுமின்னாலும் செய்யுற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. பொட்டசிவுளுக்கு விதவிதமா நக வேணும். சீல வேணும்.. ...</b></i></p><p><i><b><br /></b></i></p><p><i><b>நான்தான் நாட்ட திருத்தப்பொறன்னு ரயிலுக்கு குண்டு வைக்கிறவன் இருக்கான்... சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லன்னு தீச்சட்டிய ஏந்திகாட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஓலகத்திலெ இருக்கிற ஓவ்வொருத்தனுக்கும் ஓரு பைத்தியம். இந்த மாரி பைத்தியம் புடிக்காதவன் பொணந்தான். ஓலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்கு கமலா பைத்தியம்</b></i>.</p><p>என்று தன்னிலை விளக்கம் அளிப்பவன் அவன்</p><p>கதை முழுக்க வட்டார வழக்குப் பேச்சு ரசிக்க வைக்கிறது </p><p><br /></p><p><span style="color: red;"><b>இந்த விளையாட்டுக்கு நானாத்தான் போனேன் ., அவ வேண்டாம்னுதான் சொன்னா இது சாவுற விளையாட்டு .. இது செகண்ட் சான்ஸ் கிடையாது</b></span></p><p><span style="color: red;"><b><br /></b></span></p><p><span style="color: red;"><b>மொட்டைப்பாறையில் எம்மாம் மழை பேஞ்சி என்ன அவ காத்து நான் பஞ்சு</b></span></p><p><span style="color: red;"><b><br /></b></span></p><p><span style="color: red;"><b>வாங்க போங்க வா போ ஆகி வாடி போடி ஆச்சு.. குருத்து எல பழுத்த எலயா ஆய்டுச்சு</b></span></p><p><span style="color: red;"><b><br /></b></span></p><p><span style="color: red;"><b>வெறி பிடிச்ச நாயா இருந்தாலும் உனக்குனு ஒரு நாய் இருக்கணும்</b></span></p><p><span style="color: red;"><b><br /></b></span></p><p><span style="color: red;"><b>தம்பிக்கு தாழ்வாரத்துலதான் படுக்கணும்னு தலையில் எழுதி இருக்குனு அவளுக்குத் தெரியல</b></span></p><p><span style="color: red;"><b><br /></b></span></p><p><span style="color: red;"><b>நான் கமலாகூட பானையும் மூடியும் போல ஆனதைப்பார்த்து ஊரே சொன்னுச்சு</b></span></p><p><span style="color: red;"><b><br /></b></span></p><p><span style="color: red;"><b>அவனும் அவளும் கோழியும் கோழிக்கூண்டுமா இருந்தாங்க </b></span></p><p><span style="color: red;"><b><br /></b></span></p><p><span style="color: red;"><b> நான் சொல்ற எதையும் ஏத்துக்காத மாதிரி இதையும் ஏத்துக்கல விரியன் பாம்புக்கு இருக்கும் விஷத்துக்கு அதுவா பொறுப்பு</b></span></p><p><span style="color: red;"><b><br /></b></span></p><p><span style="color: red;"><b>இப்ப ரெண்டு பேருக்கும் இடையே பேச்சு வார்த்தை இல்லை... வார்த்தையாலதான் மனுஷங்க வாழறாங்க . வாழ முடியும்</b></span></p><p><br /></p><p> ஒரு பெண்ணின் அன்பு கிடைக்காதா , ஒரே ஒரு முத்தம் கிடைக்காதா என ஏங்கும் ஆண் , அவள் கிடைத்து விட்டால் அந்த சந்தோஷத்துக்கு நன்றியுடன் இருப்பதில்லை .</p><p><br /></p><p> அவள்: வேறு யாருடனும் பேசக்கூடாது பேசினால் சிரித்தால் ஆசிட் வீச்சு , கத்திக்குத்து என வேறு ஒரு ஆளாக மாறி விடுகிறான்</p><p><br /></p><p>ஆனால் வினாயகத்தின் மனதில் இருக்கும் காதலும் , அவன் படித்த நூல்களும் அவனை ஒரு காதலன் என்பதை தக்க வைக்கிறன்றன</p><p><br /></p><p> எனக்குக் காதல் எனும் அனுபவம் தந்தாய் . ஆண் என உணர வைத்தாய் இதற்கு மேல் என்ன... நீ யார் கூட வேணும்னாலும் இரு... எப்படி வேணும்னாலும் இரு . என நிறைவுடன் வாழ்த்து விட்டு விலகும்போது அமர் காதலர்களில் ஒருவனாக நின்று விடுகிறான்</p><p> இமையம் எழுத்துகளில் மட்டுமல்ல.... தமிழ் நாவல்களில் ஒரு வித்தியாசமான நாவக்ல் எங் கதெ </p><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /><p></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-30331572128838126212022-04-16T09:52:00.000-07:002022-04-16T09:52:11.990-07:00இடக்கை (எஸ்ரா ) ஒரு பார்வை<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo9mt8ET8roW2ClmBKWAk6DVqx664Wywrjxz0Y7fMuFA-JvfZGeWsrRIVEvfAniKXSGxrSrGmajexHWA877YeA7Fj2MoBPrteIP7QlViyWSjXCSt1Z4BnVsA1QWWWBmRTGFJ3MzYPBE0XEV6wDKJ1EI1uOdT-8pZfj7UyekTexUmlE4G5X2WB1beIOMA/s4160/IMG_20220416_214219.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="4160" data-original-width="3120" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo9mt8ET8roW2ClmBKWAk6DVqx664Wywrjxz0Y7fMuFA-JvfZGeWsrRIVEvfAniKXSGxrSrGmajexHWA877YeA7Fj2MoBPrteIP7QlViyWSjXCSt1Z4BnVsA1QWWWBmRTGFJ3MzYPBE0XEV6wDKJ1EI1uOdT-8pZfj7UyekTexUmlE4G5X2WB1beIOMA/s320/IMG_20220416_214219.jpg" width="240" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRYIhkyVkKZQJjpDRyV7WWeUsSPRxoTYKzx7ETta08HQlWhURelA7QIVWyGkuFg-SW8YREt2jbkGoNQTqVg2CDvRBLlNHkY4LfbUAx9cZVhkk3jWlPUNjLaDdjUmrr4B6vz0qrsfvmRtSeD8IT9_gWYmzfQueNIx5btD67F9m_mwOjTBmJEWcI52QLBw/s4160/IMG_20220416_214230.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="4160" data-original-width="3120" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRYIhkyVkKZQJjpDRyV7WWeUsSPRxoTYKzx7ETta08HQlWhURelA7QIVWyGkuFg-SW8YREt2jbkGoNQTqVg2CDvRBLlNHkY4LfbUAx9cZVhkk3jWlPUNjLaDdjUmrr4B6vz0qrsfvmRtSeD8IT9_gWYmzfQueNIx5btD67F9m_mwOjTBmJEWcI52QLBw/s320/IMG_20220416_214230.jpg" width="240" /></a></div><br /> உலகில் அறவுணர்வு என ஒன்று இருக்கிறதா என்பது புதிரான ஒன்று;<p></p><p>ரயிலில் பயணிக்கிறோம். ஒரு,நிமிஷம் சூட்கேசை பார்த்துக்கோங்க என யாரோ ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு டீ,அருந்த செல்கிறோம். </p><p>99% வாய்ப்புகளில் நமது நம்பிக்கை காப்பாற்றப்படுகிறது. நமது சூட்கேஸ் பத்திரமாக இருக்கிறது;</p><p>இதற்கு நேர்மாறானவையும் உண்டு. நாம் மதிக்கக்கூடிய உயிரைத்தர சித்தமாக இருக்கக்கூடிய ஒரு தண்பரிடம் திருமணம் , வீடு இடம் பாரத்தல் போன்ற பொறுப்புகளை ஒப்படைக்கிறோம். அவர் தனக்கு எது நல்லது என யோசித்து நமக்குப்பொருத்தமில்லா ஒரு முடிவை நம் மேல் சுமத்தி விடுகிறார். </p><p><br /></p><p>இந்த இரண்டையும் நம்மில் பெரும்பான்மையினோர் அனுபவித்து,இருப்போம்</p><p><br /></p><p>அறவுணர்வு , நீதி என்பது உலகில் இருக்கிறதா என்ற கேள்வியை வரலாற்றுப்பின்புலத்தில் அலசுகிறது இடக்கை நாவல்</p><p>அது என்ன இடக்கை ?</p><p><br /></p><p>வலது கை இடது கை என இரண்டுமே நமக்குத் தேவையானவை. இரண்டும் சரியாக செயல்பட்டால்தான் நமது வேலைகளை சரிவரச் செய்ய முடியும்</p><p><br /></p><p>ஆனால் இடதுகை விருதுகள் , அவனை எல்லாம் லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணனும் , அல்லக்கை , நொட்டாங்கை , இடது கால் முதலில் வச்சுறாதே என ஏன் இடதுகைப்பழக்கத்தினர் இழிவு செய்யப்படுகின்றனர் ?</p><p> பூட்டு சாவி , சவரக்கருவிகள் , கதவு , வாகனங்கள் , டைப்ரைட்டர்கள் என ஏன் எவையுமே இடதுகையினரைப் பொருட்டாக நினைக்காமல் வடிவமைக்கப்பட்டுள்ளன ?</p><p><br /></p><p>எல்லா தகுதிகளும் கொண்ட இடக்கை எப்படி தேவையின்றி சமூகத்தால் புறக்கணிப்புக்கு உள்ளாகிறதோ அதுபோல பால்ரீதியாக , மதரீதியாக , சாதிரீதியாக , வர்க்க ரீதியாக சமூகம் தொடர்ந்து இப்புறக்கணிப்புகளை செய்து கொண்டேதான் வருகிறது.</p><p><br /></p><p>நீதியுணர்வு, இடக்கை புறக்கணிப்பு</p><p>என்ற இரண்டையும் ஒருவித மாயாஜால கவிதை நடையில் பேசும் நாவல்தான் எஸ் ராமகிருஷ்ணனின் இடக்கை</p><p><br /></p><p> நீதி கிடைப்பது யாருக்குமே கடினமாகத்தான் இருக்கிறது</p><p> ஒரு தந்தைக்கு இரு மகன்கள். ஒரு,பையன் தந்தை மீது எல்லையற்ற மரியாதையும் அன்பும் கொண்டவன்</p><p><br /></p><p>இன்னொருவன் தந்தையை,மதிப்பதில்லை எல்லாவித அயோக்கித்தனங்களும் செய்கிறான் கடைசியில் மனம் திருந்தி தந்தையிடம் வருகிறான்</p><p><br /></p><p>தந்தை அந்த வருகையை பிரமாண்டமாக கொண்டாடுகிறார். அறுசுவை விருந்துகள் கலைநிகழ்ச்சிகள் மகனுக்குப் புத்தாடைகள் என அம்ர்க்களம்</p><p><br /></p><p>நல்ல மகன் வருத்தமாய் கேட்கிறான் "எனக்கு நீங்கள் இப்படி சிறப்புகளை செய்ததே இல்லையே ?</p><p><br /></p><p>தந்தை சொன்னார் </p><p><br /></p><p>நீ எப்பவும் என்னுடன் இருக்கிறாய் அதில் எனக்கு பெரிய கிக் இல்லை . வழிதவறிப்போய் திரும்பி வந்தானே அதில்தான் கிக் அதிகம்</p><p><br /></p><p>தந்தை சொல்வது தர்க்கப்பூர்வ யதார்த்தம்தான் ஆனால் தனக்கு அநீதி நிகழ்ந்ததாக ஒரு மகன் நினைக்கக்கூடும் அல்லவா</p><p>ஒரு கற்பனை உதாரணம்.. </p><p>தனது தலைவரின் செல்வாக்கை உணராமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்காக தொண்டன் தீக்குளிக்கிறான் அவன் குடும்பம் திணறுகிறது</p><p><br /></p><p>இதற்கிடையில் தலைமை தவறை உணர்ந்து தலைவருடன் இணக்கமாகி அவருக்குப் பதவிகள் தருகிறது. தலைமைக்கு விசுவாசமாக இருப்பதுதான் தன் கடைமை என்பதை தலைவர் உணர்கிறார்;;</p><p>அத்தலைவருக்கு நீதி கிடைத்தது.. </p><p> தீக்குளித்த தொண்டனுக்கு?</p><p>நீதி , அறம் போன்றவை இன்றி மனித குலம் தழைக்க முடியாது,, ஆனால் அறம் நீதி போன்றவற்றை வரையறுத்தல் சிரமம்</p><p><br /></p><p> தனது ,கணவன்,தூமகேது சிறைக்கு சென்று விட்டதால் தன் புதல்வர்களுடன்,கஷ்டப்படுகிறாள் அவனது மனைவி நளா.</p><p><br /></p><p> நாயைப்பிடித்துக் கொடுத்தால் காசு கிடைக்கும் என்ற வாய்ப்பு கிடைக்கும்போது அந்த காசுக்கு ஆசைப்படாமல் நாய்க்கு அடைக்கலம் தரும் மனநிலை கொண்டவள் அவள்</p><p><br /></p><p>அப்படிப்பட்ட அவள் , கணவனின் தந்தையை அநாதரவாக வீட்டில் விட்டுவிட்டு குழந்தைகளுடன் ஊரை விட்டு ஓடி விடுகிறாள்.</p><p> காரணம் அங்கு இருந்தால் , அவள் கைதாகி குழந்தைகள் அனாதைகளாகி விடும். முதிய மாமனாரை அழைத்துக்கொண்டு ஓடுவதும் சாத்தியமில்ல</p><p> அந்த சூழலில் அந்த முதியவரை நிர்க்கதியாக விட்டுச் செல்வதுதான் அவளது,அறமாக இருக்க முடியும்.</p><p> அந்த முதியவருக்கு அநீதி இழைக்கப்படுகிறதே என யாரிடம் கேட்க முடியும் ?</p><p> வாரிசுரிமைப்,போட்டியில் மக்கள்,ஆதரவு,மிக்க தனது சகோதரன் தாராவை கொன்று ஆட்சிக்கு வருகிறார்,ஒளரங்கசீப். இதுபோல அரசகுடும்ப, அநீதிகளுக்கு அதிக,முக்கியந்துவம் தராமல் வரலாற்றில் பதிவாக எளியவர்களுக்கு இழைக்கப்படும் கண்ணீரை , அவர்களுக்கு கிடைக்காத நீதியைப் பற்றி பேசுவதுதான் இடக்கை நாவலின் சிறப்பு</p><p> இன்னொரு சுவாரஸ்யம்.. அரச குடும்பம் சாமான்யர்களுக்கு இழைக்கும் அநீதி வழக்கமாக நடப்பது. ஏதாவது ஒரு அபூர்வ கணத்தில் வரலாற்றைத்திசை திருப்பும் ஒரு சிறிய கருவியாக ஒரு சாமான்யனை காலம் தேர்ந்தெடுக்கக்கூடும் அப்படி ஒரு தருணத்தில் ஒரு சாமான்யன் இழைக்கும் அநீதியும் அழகாக பதிவாகியுள்ளது.</p><p> குதிரைகள் , யானைகள் , படைகள் என பிரமாண்டங்கள் பேசப்படும் அளவுக்கு ஒரு புழு , தன்னைக் கடந்து செல்லும் படகைப் பாரக்கும் நீர்ப்பூச்சி போன்றவையும் மனதில் நிற்கும்படி நாவலில் வருகின்றன</p><p><br /></p><p>பேரரசர் ஒளரங்கசீப் இறந்ததும் அவருக்கு மகளாக , தாயாக , அடிமையாக , உயிலில் இடம்பெறும் அளவு அவர் மனதில் இடம்பெற்றிருந்த அஜ்யா என்ற திருநங்கை கைது செய்யப்படுகிறாள். அரசருக்கு எவ்வித தொடர்பும் இல்லாத தூமகேது எனும் தாழ்த்தப்பட்ட வஞ்சிக்கப்பட பிரிவைச் சேர்ந்த ஒருவன் கைதாகிறான்</p><p> தவறே செய்யாத இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிதான் கதையா என்றால் இல்லை</p><p> சாதீய ரீதியாக பால் ரீதியாக இடது கையாக நினைக்கப்படும் இவர்களது கதை மட்டுமல்ல</p><p> பொதுவாக ஆணை வலது கையாகவும் பெண்ணை இடது கையாகவும் நினைககும் சமூகத்தில் பேரரசரரின் மகள் ஜெப்புன்னிஷா என்ற கவிஞர் மக்பி , தூமகேதுவின் மனைவி , சற்று நேரமே வந்தாலும் ஒளரங்கசீப்பிடம் விளையாட்டாகப்பேசி அவருக்கு மறக்கமுடியாத ஞானத்தை வழங்கி , தனது அழகிய முகம் யானையால் சிதறிக்கப்பட்டு , பேரரசரின் கடைசித் தருணங்களில் அவரால் நன்றியுடன் நினைக்கப்படும் தாசிப்பெண் அனார் என பெண்களின் ஆளுமையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும்கூட</p><p><br /></p><p> தனித்தனி சிறுகதைகளாக விரிவாக்கம் செய்யக்கூடிய அளவுக்கு செறிவும் அழகும்கூட பல்வேறு பாத்திரங்கள்</p><p> தனது வலது கையை வெறுக்கும் மனிதன் , இரட்டைத் தலை அரசன் , குள்ளமான தாசிப்பெண் , வசீகர ஓவிய ஆற்றல் கொண்டவன் , கண் தெரியாத இசைஞன் , வெறும் விளையாட்டுக்காக கொள்ளை அடிக்கும்,அபூர்வ இன மக்கள் , திருட்டை ஒரு அறம்மிக்க தொழிலாக கருதி அதற்குரிய அறத்துடன் அத்தொழிலை நடத்தும் ஆடு திருடன் , யார் ஆட்சியிலும் தமது நலனைப்,பேணிக் கொள்ளும் பண்டிதர்கள் , ஒளரங்கசீப்பின் கடைசி ஆசையை நிறைவேற்ற முயன்று உயிர்த்தியாகம் செய்யும் திருநங்கை , நான் முதலை மாதிரி தண்ணீர்தான் என பலம் என மதுக்கடையில் ரகளை செய்பவன் , தனது பூனைக்கு எலி என பெயரிடம் ஒரு கலைஞன் , அந்தப் பூனை,</p><p>சமாதிப் பிளந்து வெளிவரும் மனிதக்கை எலும்பு, விஷமேற்றும் இசை என பக்கத்துக்குப் பக்கம் வண்ணமயமான பாத்திரங்கள்</p><p><br /></p><p> நீதியை அழிப்பதே தமது வாழ்க்கை எனக் கொண்டவர்கள் பிஷாடனன் , ரெமியஸ் , பண்டிதர்கள் , விஸ்வாம்பரன் என்ற சாதி வெறியன் </p><p> நீதிக்கும் அநீதிக்கும் இடையே சிக்கி அல்லாடுபவர்கள் நளா , ஒளரங்கசீப் , சம்பு போன்றோர்</p><p> தமக்கான அறத்துடன் உறுதியாக,வாழ்ந்து மறைவோர் அஜ்வா , அனார் , பகுத்தறிவு பேசும் ஸச்சல் , சாகும் தருணத்திலும் இளவரசனுக்கான பெட்டியை சம்புவிடம் ஒப்படைக்கும் மர்ம நபர் . அஜ்யாவின் </p><p>விருப்பத்திற்கிணங்க பேரரசரின் தொப்பியை உரியவரிடம் அளிக்கும் முயற்சியில் உயிர் துறக்கும் அனுராதா, ஒடுக்கப்பட்டோருக்கு குரல் தரும் சக்ரதார் போன்றோர்</p><p><br /></p><p>இந்த அறக்குழப்பங்கள் ஏதுமின்றி வாழ்ந்து மறையும் எளிமையாக உடற்பசி , வயிற்றுப்பசி என வாழ்ந்து மறையும் மஞ்சா , காயத்ரி போன்றோர்</p><p><br /></p><p>நம்மில் பெரும்பாலானோர் இவ்வகையில் ஒன்றாகத்தான் இருப்போம்</p><p><br /></p><p>இவற்றைக் கடந்த ஒரு பாத்திரமாக இருப்பவன்தான் தூமகேது</p><p> இவனும் அறக்குழப்பங்கள் அற்ற அன்றாட தேவைக்கேற்ப வாழும் மனிதனாக இருந்தவன்தான். </p><p>கதைகள் அல்லது எழுத்து இவனுக்கு புதிதாக ஒரு வாழ்க்கை கொடுத்து மீட்சி அளிக்கிறது என்பது இந்நாவலில் என்னை மிகவும் பாதித்த ஒன்று</p><p> பேரரசரின் தொப்பி கடைசியில் இவனைத்தான் வந்தடைகிறது left hand has the last laugh</p><p><br /></p><p> தூமகேது , வசீகர ஓவியன் நியோகி, அபூர்வ சக்தி கொண்ட சிகிரி இன மக்கள் ஆகியோர் இடது கையாளர்கள் என்பது நல்லதொரு குறியீடு.</p><p>வற்புறுத்தலுக்காக இடது வகை , வலிமைக்காக இடது கை , தந்திரமான இடது கை என இடக்கைகளுக்குள் சுவையான சில பிரிவுகள்</p><p><br /></p><p><br /></p><p>பல இடங்கள் ஹைக்கூ படிப்பதுபோல இருக்கிறது</p><p>ஹைக்கூ கவிதைகளின் கடைசி வரி ட்விஸ்ட்டை கீழக்கண்ட பத்தியில் பாருங்கள். </p><p> </p><p> </p><p> 1 இன்னும்,சில நாட்கள் உயிர் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கோம். </p><p><br /></p><p> 2 எல்லாம் அல்லாவின் கருணை என மனதுக்குள் நன்றி கூறிக்கொண்டாள். </p><p> கடைசி வரி </p><p> 3 உடலில் இருந்து ரத்தம் கொண்டிருந்தது</p><p><br /></p><p>அதாவது , ஒரு பணக்கார கிழவர் உலக இன்பங்களை துய்க்க மேலும் ஆயுள் கிடைத்திருக்கிறது என நன்றி செலுத்துவது வேறு</p><p> சித்திரவதைக்கு உள்ளாகி ரத்தம் சிந்தும்போதும் , கடவுளுக்கு வாழ்க்கைக்கு நன்றி செலுத்துகிறாள் என்பதுதான் அவள் கேரக்டரை உயர்த்துகிறது</p><p> நன்றி சகோதரர்களே என நிறைவுடன் தூக்குத்தண்டனை பணியாளர்களிடம் சொல்லி விட்டு விடைபெறும் அவளது மனநிறைவு பெரிய மன்னர்களுக்கும் கிடைப்பதில்லை</p><p> தூக்கில் தொங்கப்போகும் கடைசி தருணத்தில் அவளுக்கு எதிர்பாரா அதிர்ஷ்டம்</p><p> சாவதற்கு முன் ஒரு நட்சத்திரம்தானே பார்க்க விரும்பினோம் மூன்று பார்க்க கிடைத்திருக்கிறதே என்பதில் அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி</p><p> இம்ரானாக இருந்த அவனை அஜ்வா என மாற்றிய தர்ஷன் பாத்திரத்தின் கேரக்டர் curve ம் குறிப்பிடத்தக்க ஒன்று</p><p> பெண்ணடிமைத்தனம் என்பதில் முக்கியப்பங்கு வகிப்பது குழந்தை பிறப்பு. குழந்தைகளுக்காக பிடிக்காத கணவனுடன் அனுசரித்துச் செல்லும் பெண்கள் , திருமணததுக்கு முன் கர்ப்பம் அவமானம் என்ற சூழலில் தற்கொலைகள் , கருக்கலைப்பு சார்ந்த மரணங்கள் . வேறு வழியின்றி பிடிக்காதவனை மணப்பது என இது சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் .குழந்தைகளுக்காக வாழ்வதை புனிதமாக்கி ,தாய்மை என்ற பிம்பச்சிறையில் மறைந்துபோன எத்தனையோ மேரி க்யூரிக்கள் , அயன் ராண்டுகள் , இந்திரா காந்திகள் உண்டு</p><p><br /></p><p>கர்ப்ப பை தான் உன்னை அடிமையாக்குகிறது என்றால்,அதை அகற்றி எறி என பெரியார்முழங்கியது இதனால்தான்</p><p>குழந்தைகள் தனி உடைமைகள் அல்லர் . அவர்களை ஊர்தான் வளர்க்க வேண்டும் தனி குடும்பம் என்ற கர்ப்பிதமே அர்த்தமற்றது என்ற சூழல் வந்தால் உலகமே இனிய உலகமாகி விடும். சொத்துச்சண்டைகள் , சாதி மத,பேதங்கள் என எதுவும் இராது. விவாகரத்துகள் , கள்ளக்காதல்கள் , ஆணவக்கொலைகள் போன்ற சொல்லாடல்களே அர்த்தமிழக்கும் என்றொரு பார்வை உண்டு </p><p>இது சார்ந்து ஒரு அற்புதமான அத்தியாயம் நாவலில் வருகிறது</p><p><br /></p><p>ஆணாதிக்கம் குறித்த ஒரு சிறிய கதை வருகிறது</p><p>மண்ணால் ஆன ஒரு பெண்ணை ஒருவன் தவறுதலாக மணந்து விடுகிறான். ஆனாலும் பெருந்தன்மையாக அவளை ஏற்கிறான். அவன் மனம் எப்படி திரிபடைகிறது. அதனால்,அவள் எப்படி அழிகிறாள்" அவளை அழித்து ரசிப்பதில் கிடைக்கும் போதை , முழுதும் அழித்தபின் அடையும் சோகம் என ஒருகதை இப்படி ஆழமான குறியீட்டு ரீதியான ஏராளமான சிறுசிறு பகுதிகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன</p><p>மனிதனின் அறவுணர்வு குறித்து எஸ்ராவின் சிறுகதை ஒன்றில் படித்திருப்போம்</p><p><br /></p><p>பசிக்கொடுமை வேறு வழியில்லாமல் கிழவி தபால் செலவுக்கு கொடுத்த காசை வைத்து இருவர் சாப்பிடுகிறார்கள். அவளது பார்சலை கிழித்தெறிகிறார்கள்</p><p>அப்போது அவளது கடிதம் கண்ணில் படுகிறது. தன்னைப்போல கஷ்டப்படும்,ஒரு,சிநேகிதிக்கு கிழவி கஷ்டப்பட்டு அனுப்பும் சில பரிசுகளும் ஐநூறு ரூபாய் நோட்டும் இருக்கிறது. அவளது சூழல் புரிந்ததும்தான் அவளுக்கு தாங்கள் செய்த துரோகம் புரிகிறது அந்த 500ரூபாயை அவர்களால் எடுத்துச்செல்ல முடியவில்லை</p><p> இந்த இயல்பான அறவுணர்வு சில நேரங்களில் மறைந்து விடுவதுதான் விநோதம் அதீதமான வறுமை , அதீதமான அதீகாரம் என அதுவும் இந்த அறப்பிழைக்கு காரணமாக இருக்கலாம்;</p><p> தன்னிடம் அன்பு காட்டிய ஒருவருக்கு செலுத்த வேண்டிய நன்றி மன்னருக்கு தனது ஆட்சிக்காலங்களில் நினைவில் இல்லை மரணமடையும்போது நினைவு வந்து ஒரு பரிசை அளிக்கச்சொல்லி உயில் எழுதி தன் உதவியாளரான அஜ்வாவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் கடும் சித்திரவதைகளுக்கு மத்தியிலும் இப்பொறுப்பில் இருந்து அவள் விலகவில்லை. அவளிடம் இருந்து இப்பொறுப்பை, ஏற்ற அனுராதா என்ற திருநங்கையும் இந்த பணியில் உயிரத்தியாகம் செய்கிறாள்</p><p><br /></p><p>இன்னொரு புறம்</p><p>தன் கழுத்தில் கத்தி பாய்ந்து உயிர்பிரியவிருக்கும் கடைசி தருணத்திலும், இளவரசருக்கு சொல்ல வேண்டிய செய்தியை சொல்லிவிட வேண்டும் என்ற பொறுப்பில் வழுவாதிருக்கிறரர் ஒருவர்</p><p><br /></p><p>இவரிடம் இருந்து அப்பொறுப்பை ஏற்கும் சம்பு அப்பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பதுதான் வாழ்வியல் வினோதம் சம்பு பொதுவாக அறப்பிழைகள் செய்பவனல்லன். தனது"கைகளில் இருப்பது இந்தியாவின் வரலாற்றையே மாற்றக்கூடியது அடுத்த மன்னனை நிர்ணயம் செய்யக்கூடியது என தெரிந்தாலும் தற்காலிக பலனுக்காக தன்னை நம்பியவருக்கு துரோகம் செய்கிறான்.</p><p> தனது பொறுப்புக்கு உண்மையாக இரு்ந்த அஜ்யா மனநிறைவுடன் உயிர் துறக்கிறாள். துரோகம் செய்த சம்புவை மரணம்வரை அந்த துரோகம் துரத்துகிறது.</p><p><br /></p><p>இது போல நாவலில் கவனித்து ரசிக்க வேண்டிய பகுதிகள் ஏராளம்</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்</p><p><br /></p><p>தேசாந்திரி பதிப்பகம்</p><p> </p><p> ரசித்த சில வரிகள்</p><p><br /></p><p> பகல் மனிதர்களை பிரித்து வைக்கிறது. இரவு ஒன்று சேர்க்கிறது. உறக்கம் என்பது இரவு புகட்டும் பால்.தாய் பால்புகட்டுவதுபோல இரவு உறக்கத்தை மனிதர்களுக்குப் புகட்டுகிறது</p><p> </p><p><br /></p><p>நல்லதை எடுத்துக்காட்ட ஒரு மனிதனை ஞானியாக்கும் கடவுள் , தீமையை அடையாளம் காட்ட தன்னை பாவையாக்கி கொண்டாரா</p><p><br /></p><p><br /></p><p> </p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-19811568316027580292022-04-04T03:44:00.004-07:002022-04-04T21:05:50.147-07:00திருவள்ளூர்புத்தக கண்காட்சி. சீறிய ஆட்சியர் நேரடி ரிப்போர்ட்<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"> கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சிறிய மாவட்டம். ஆனாலும் சுரா , ஜெமோ என ஏராளமான இலக்கியவாதிகள் , அரசியல்வாதிகள் என அங்கிருந்து வந்து ஊர்ப்பெருமையைப் பேசுவதால் , கிஅனைவருக்குமே அம்மாவட்டம் குறித்த ஓர் அறிமுகம் உண்டு.</div><div class="separator" style="clear: both; text-align: center;">இப்படி எல்லா மாவட்டங்களையுமே சொல்லலாம் . பாரதிராஜா , இளையராஜா , வைரமுத்து , கவுண்டமணி , சத்யராஜ் , சாரு நிவேதிதா , எஸ் ரா , கோணங்கி என அனைவருமே அவரவர் மாவட்டங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">ஆனால் திருவள்ளூர் மாவட்டம் போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் தமது அடையாளத்தை இப்போதுதான் உருவாக்கி வருகின்றன</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">அந்த வகையில் முதல் புத்தக கண்காட்சி அங்கு இவ்வாண்டு முதல் நடக்கவிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"> நான் சென்றிருந்தபோது நல்ல கூட்டம்</div><div class="separator" style="clear: both; text-align: center;">பொதுமக்கள் மட்டுமன்றி ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">இத்தனை நூல்களை ஒருசேர பார்ப்பது அவர்கள் மனதில் நல்விளைவுகளை உருவாக்கி இருக்கும்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"> ஆட்சியர் அலுவலகம் , RTO , தலைமை காவல் அலுவலகம் என முக்கியமான இடங்கள் அமைந்திருக்கும் பிசி ஏரியா என்றாலும் சென்னை நெரிசலைப் பார்த்த நமக்கு இந்த இடம் அமைதியான சூழலில் இருப்பதுபோல தோன்றுகிறது </div><div class="separator" style="clear: both; text-align: center;">வரும் ஆண்டுகளில் சென்னைவாசிகளும் இதை தேடி வருவர், சென்னை புத்தக கண்காட்சியின் இரண்டாவது பாகம்போல அமையக்கூடும்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">திருவள்ளூர் சுற்றுப்புறவாசிகளுக்கும் இது அரிய நிகழ்வு.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">புத்தகக்கண்காட்சிக்கேற்ற சிறந்த இடம் திருவள்ளூர்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">நான் சென்றிருந்தபோது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அங்கு வந்திருந்தார்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்குப்பின் முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் புத்தக கண்காட்சி நடத்துவதன் பரவசம் அவர் முகத்தில் தெரிந்தது.</div><div class="separator" style="clear: both; text-align: center;">பொறுமையாக ஒவ்வொரு ஸ்டாலையும் நின்று நிதானமாக பார்வையிட்டார்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">என்ன நூல்கள் உங்களது தனிச்சிறப்பு ?</div><div class="separator" style="clear: both; text-align: center;">எதை வாசகர்கள் விரும்பி வாங்குகிறார்கள் .. எந்த எழுத்தாளர் விரும்பப்படுகிறார் உங்களது அதிக பட்ச விலை புத்தகம் எது ? எங்கே அதை எடுங்க பார்ப்போம் ? என வெகு தீவிரமாக ஒரு ( அந்தக்கால) பத்திரிக்கையாளரின் முனைப்போடு பேட்டி எடுத்தார்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">வண்ண புகைப்படங்கள் கெட்டி அட்டை ஆழ்ந்த கட்டுரைகள் என்பதால் இவ்விலையா? என்றார்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">சார் இதன் அசல் விலை 4000 . நமது கண்காட்சிக்காக சிறப்பு விலையாக 1000 என விளக்கியதும் திருப்தியுடன் தலை அசைத்தார்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">இலக்கியம் சார்ந்து இயங்குவதால் காலச்சுவடு ஸ்டாலில் சற்று அதிக நேரம் உரையாடினார். </div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">இலக்கிய நூல்களை எல்லாம் மக்கள் வாங்குகிறார்களா என நம்பாமல் கேட்டார் . சார் , இப்போதெல்லாம் இலக்கிய நூல்கள்தான் அதிகம் விற்கின்றன என பதில் கிடைத்ததும் அவருக்கு மகிழ்ச்சி.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">இது போன்ற தரமான ஸ்டால்களை அடுத்தமுறை அதிகரிக்க வேண்டும் என உதவியாளர்களிடம் பேசினார்</div><div class="separator" style="clear: both; text-align: center;"> </div><div class="separator" style="clear: both; text-align: center;">ஒரு காமெடி. ஒரு முக்கியமான பதிப்பகம் எந்த பரபரப்பையும் காட்டாமல் , அறிவிப்பு பதாகைகள்கூட இல்லாமல் சொற்ப புத்தகங்களுடன் தூங்கி வழிந்து கொண்டிருந்தது</div><div class="separator" style="clear: both; text-align: center;">என்ன இது என சற்று கோபமாக கேட்டார். புக்ஸ் , போஸ்டர்லாம் ரெடி சார். அரேஞ்ச் செய்ய நேரம் கூடி வரல என்பதுபோல சமாளித்தார் ஸ்டால்காரர்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">இடம் கிடைக்காமல் பலர் முறையிடுகிறார்கள் நீங்கள் கிடைத்த இடத்தை வீணடிக்கிறீர்களே என டோஸ் விட்டார்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">ஆனால் மற்ற ஸ்டால்காரர்கள் தமது புத்தகங்களைக்காட்டி , அவற்றை விளக்கி அவரை கூல் செய்தனர்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">பலருடன் போட்டோ எடுத்துக்கொள்ள முகம் சுளிக்காமல் சம்மதித்தார்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">பாதுகாவலர்கள் இருந்தாலும் பொதுமக்கள் வாசகர்கள் அவரை அணுக எவ்வித</div><div class="separator" style="clear: both; text-align: center;">கெடுபிடிகளும் இல்லை</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகளக உரையாடினார். பல மாணவர்கள் அவரிடம் ஆசையாக ஆட்டோகிராப் வாங்கினர்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">ஆட்சியாளர்களும் நிர்வாகமும் நினைத்தால் நல்ல மாற்றங்களை கொணர முடியும் என்பதற்கு திருவள்ளூர் புத்தக கண்காட்சி உதாரணம்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">அதன்பின் மாவட்ட தலைமை நூலகம் சென்று விட்டு பிறகு நூல்களுடன் கிளம்பினேன்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"> </div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGQ2F1P6i3PX8zXxay9pjlPSYans7V1eHPeBib8nh5yCfupuC_9NoCUATe-o3K5npoqfI0fL6oKUAQyYm3UEYmHXXRjdvLy2cQOYU4WAzr-Nvq9oFf-H75aKDDy62bTRv7bfoblKwaluQMtyRP7YulLFX9GdTpGnZxXsrSxNaOH9JP3kn22b11zXfX-g/s4160/IMG_20220404_120646.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="4160" data-original-width="3120" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGQ2F1P6i3PX8zXxay9pjlPSYans7V1eHPeBib8nh5yCfupuC_9NoCUATe-o3K5npoqfI0fL6oKUAQyYm3UEYmHXXRjdvLy2cQOYU4WAzr-Nvq9oFf-H75aKDDy62bTRv7bfoblKwaluQMtyRP7YulLFX9GdTpGnZxXsrSxNaOH9JP3kn22b11zXfX-g/s320/IMG_20220404_120646.jpg" width="240" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkh3nFso-bhEYHO9ldznlSk3iRrRfzkecsvs0--MLd0Oy2lP8YPgLaFHj4DSqnVMzc3pSL04_5Ng9Vpc2wJKZY0zBuGWk86X25Rvs7oyj-KuFj49PNtxu-gce8pFIYk9Nf6UBfWsCVAr2Ax-YEgRWYy91Sd9mQvm1PHnsn-SMwQ43aDrww4HR9jB2gjw/s4160/IMG_20220404_123813.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="3120" data-original-width="4160" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkh3nFso-bhEYHO9ldznlSk3iRrRfzkecsvs0--MLd0Oy2lP8YPgLaFHj4DSqnVMzc3pSL04_5Ng9Vpc2wJKZY0zBuGWk86X25Rvs7oyj-KuFj49PNtxu-gce8pFIYk9Nf6UBfWsCVAr2Ax-YEgRWYy91Sd9mQvm1PHnsn-SMwQ43aDrww4HR9jB2gjw/s320/IMG_20220404_123813.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihK9rOc0jbwC-5I36yuUF2ahtqJ946QpznLZxwPvDPNVlTfBkXZLnN_xA3KhpcGq209v8_GZZkM8lDj-rAINHeZnng6aQcXveFIqXqX8golpin8RkpN9HS3yr-as9JXO0FwgVVeq3u6Cfm8pF1P-Qivp6J_lupBId2ttmBz8f9ljCA87t3zDbixdSOXw/s4160/IMG_20220404_111201.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="3120" data-original-width="4160" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihK9rOc0jbwC-5I36yuUF2ahtqJ946QpznLZxwPvDPNVlTfBkXZLnN_xA3KhpcGq209v8_GZZkM8lDj-rAINHeZnng6aQcXveFIqXqX8golpin8RkpN9HS3yr-as9JXO0FwgVVeq3u6Cfm8pF1P-Qivp6J_lupBId2ttmBz8f9ljCA87t3zDbixdSOXw/s320/IMG_20220404_111201.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz8lAx7HH_k3QgQfXOX9yWb_WEUDIp2CzslBsGjai0-q50l6PR4CmWX2d9oil9cBKBC1C2BSmIiuAibhKyN-uWCWPuvyH5Y9MJM9gbKNfAQe2EZKn3gsWJ8q4VwEjB2IC8pmbWItCkJavSUQFJY4EtKmx0fE_O5T2okFU2PQV9YSAT3e4K9UC7l1SzVw/s4160/IMG_20220404_112455.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="4160" data-original-width="3120" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz8lAx7HH_k3QgQfXOX9yWb_WEUDIp2CzslBsGjai0-q50l6PR4CmWX2d9oil9cBKBC1C2BSmIiuAibhKyN-uWCWPuvyH5Y9MJM9gbKNfAQe2EZKn3gsWJ8q4VwEjB2IC8pmbWItCkJavSUQFJY4EtKmx0fE_O5T2okFU2PQV9YSAT3e4K9UC7l1SzVw/s320/IMG_20220404_112455.jpg" width="240" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-unzEBssxYumBSdKgk9IZ-tFz7FWfllaxluAn89rtklrJMI74MLJbfQfOZFuPIeZcE08O1Ln_XonsW5clmSgrSG0Ygr8CnLZINOswXC0CH3OH6Ul4Ohn9wHCYJK90u59dg-Ns0fN00R_zP9kv3v4KXXzu8CSI7KstUW-U8uxgkvnElZjh_4f8A78cIg/s4160/IMG_20220404_113246.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="4160" data-original-width="3120" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-unzEBssxYumBSdKgk9IZ-tFz7FWfllaxluAn89rtklrJMI74MLJbfQfOZFuPIeZcE08O1Ln_XonsW5clmSgrSG0Ygr8CnLZINOswXC0CH3OH6Ul4Ohn9wHCYJK90u59dg-Ns0fN00R_zP9kv3v4KXXzu8CSI7KstUW-U8uxgkvnElZjh_4f8A78cIg/s320/IMG_20220404_113246.jpg" width="240" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXRPObdcax-qVZXkKoJHB-SRwW6pKkimLu8NuihHjsPDD-iqsRRPAd0UTuCJq-AX-YORsf7ikXLUHekPK4GcqIewrdgSJQfeNV7Or1xBCZ-py7EAUZjGoRC-00zf9cNzuPHDsLkHimRriB2N5SYcZ5BTm6l6bhHpsDIawBnZLBlBIjIioB6Z4q73ROww/s4160/IMG_20220404_113529.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="4160" data-original-width="3120" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXRPObdcax-qVZXkKoJHB-SRwW6pKkimLu8NuihHjsPDD-iqsRRPAd0UTuCJq-AX-YORsf7ikXLUHekPK4GcqIewrdgSJQfeNV7Or1xBCZ-py7EAUZjGoRC-00zf9cNzuPHDsLkHimRriB2N5SYcZ5BTm6l6bhHpsDIawBnZLBlBIjIioB6Z4q73ROww/s320/IMG_20220404_113529.jpg" width="240" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitfpaf7PJrYS6QwRUFVuY-2xiAJJX1SkXgK5nWf8NVow73jCHz5Xx8lwDFK5nCiMAWKdXUFRKwKvlUKcYx0lBYj2pub_NNXheYh5Uy0LvT9yZypl97tRFp3yHTVYQa9MSuanTLZOMrbv6l08-5-Kpxw3ZPbd5ptWBMRzluVTWsycAk6Ae8xfiVy5Ly1w/s4160/IMG_20220404_120317.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="3120" data-original-width="4160" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitfpaf7PJrYS6QwRUFVuY-2xiAJJX1SkXgK5nWf8NVow73jCHz5Xx8lwDFK5nCiMAWKdXUFRKwKvlUKcYx0lBYj2pub_NNXheYh5Uy0LvT9yZypl97tRFp3yHTVYQa9MSuanTLZOMrbv6l08-5-Kpxw3ZPbd5ptWBMRzluVTWsycAk6Ae8xfiVy5Ly1w/s320/IMG_20220404_120317.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuhHBPeey3aAKYzMqn7Q7M51rJc7svKBuUgCTn33r9QjgbdP3KlhhQuccOZfTQpL1dPNuyDnrT24iRj0AyMpW8C7hj6rWMhvro8fHP9uUUw8zAPTxzphmyZoNXBuZFztqb15MpeCKyrWzLZd9mr2KwVSX23ByCPTIl9AhaTezoygJ5QwLMM1cHaYqTGQ/s4160/IMG_20220404_120424.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="4160" data-original-width="3120" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuhHBPeey3aAKYzMqn7Q7M51rJc7svKBuUgCTn33r9QjgbdP3KlhhQuccOZfTQpL1dPNuyDnrT24iRj0AyMpW8C7hj6rWMhvro8fHP9uUUw8zAPTxzphmyZoNXBuZFztqb15MpeCKyrWzLZd9mr2KwVSX23ByCPTIl9AhaTezoygJ5QwLMM1cHaYqTGQ/s320/IMG_20220404_120424.jpg" width="240" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /> <p></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-56717277855581282932022-03-27T03:08:00.002-07:002022-03-27T03:08:31.563-07:00படிக்க வேண்டிய எட்டு ஷார்ட் & ஸ்வீட் நூல்கள்<p> மழைமான் நூல் குறித்த உங்கள் பார்வை ஓரளவுக்கு ஓகே , மேலும் நன்றாக எழுதும் அறிவை தங்களுக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை அல்லது பிரபஞ்ச பேரியக்கத்தை வேண்டுகிறேன்</p><p>நிற்க , இதே போல இன்னும் ஒரு நாலு நூல்கள் சொல்லுங்களேன் நாங்களும் படிக்கிறோம் என சில நண்பர்கள் கேட்கிறார்கள்</p><p>தமிழிலேயே ஆகச்சிறந்த நாலு நூல்கள் நான் படித்ததிலேயே பெஸ்ட் ஃபோர் என்று இல்லாமல் மழை மான் போல ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக அதே சமயம் ஆழமாக யோசிக்க வைக்கும் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்</p><p>இந்த எட்டில் நான்கை ஷார்ட் லிஸ்ட் செய்து கொள்ளுங்கள்.</p><p>இது தர வரிசை அல்ல . ஒரு வசதிக்காக முதலில் ஆங்கில நூல்,, அடுத்து வரும் தமிழ் நூல்களை அவற்றின் தலைப்பின் அடிப்படையில் அகர வரிசையில்...</p><p><br /></p><p>1 Tuesdays with morris - Mitch Albom</p><p> நோய் வாய்ப்பட்டு , கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தனது பழைய பேராசிரியரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசும் ஒரு ஆவணம் போன்ற நூல் அது. மரணத்தையும் வாழ்வையும் ஒரே நேரத்தில் பார்க்கும் என் அனுபவம் உனக்கு உதவக்கூடும் என உற்சாகமாக தனது பார்வையைப் பகிர்நது கொள்கிறார் பேராசிரியர். பல்வேறு விவகாரங்கள் குறித்த ஆழமான பார்வைகள்</p><p><br /></p><p>2 அஞ்சுவண்ணம் தெரு − தோப்பில் முகமது மீரான்</p><p><br /></p><p> இஸ்லாம் குறித்து எதிர்மறையான நூல்கள் உண்டு இஸ்லாமுக்கு ஆதரவான பிரச்சார நூல்களும் உண்டு</p><p><br /></p><p> இஸ்லாமிய கலாச்சாரத்தை , அழகியலை , தொன்மங்களை , பொது சமூகத்துக்கு அது வழங்கும் அறிவுசார் கொடையை , கலைச்சொற்களை பதிவு செய்யும் புனைவுகள் குறைவுதான். அஞ்சுவண்ணம் தெரு வெகு அற்புதமாக"இப்பணியை இலக்கியரீதியாக செய்கிறது. இஸ்லாமிய,பின்னணி என்றால் பொது,மானுடனின் இதயத்தை நோக்கிப்,பேசும் நாவல்</p><p><br /></p><p>3,இரவு −ஜெயமோகன்</p><p> பகலில் உறங்கி இரவில் மட்டுமே விழித்திருக்கும் ஒரு குழுவினர் அவர்களது உலகம் என வித்தியாசமான ஒரு களத்தில் அமைந்த நாவல். நமது மனதின் இருளான பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது</p><p>4,ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு…</p><p>ஜீவ கரிகாலன்</p><p>இதை வெளிநாட்டு கதைகளின் மொழி பெயர்ப்பு என சொன்னால் நம்பி விடுவோம் அந்த அளவுக்கு புத்தம்புதிய கதைசொல்லல் யுக்திகள் , கச்சாப்பொருட்கள் என அசத்தும் தொகுப்பு. நூலின் எடை , கட்டமைப்பு,"வடிவம் போன்றவையும் உலகத்தரம்</p><p><br /></p><p>5 கர்னலின் நாற்காலி - எஸ் ரா</p><p><br /></p><p> கொரோனா பொதுமுடக்க காலத்தை அர்த்தபூர்வமாக மாற்றியதில் எஸ்ராமகிருஷ்ணனின் குறுங்கதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மரணம் வந்தால் வரட்டுமே இந்த,குறுங்கதைகளை படிக்கும்வரை வாழ்ந்தோமே அதுவே போதும் என நிறைவளிக்கும் வகையில் அவர் நூறு குறுங்கதைகள் எழுதினார். பல்வேறு கருப்பொருட்கள் பல்வேறு நடை என,மாயாஜாலம் காட்டினார் அக்கதைகளின் தொகுப்பு</p><p><br /></p><p>6 கன்னி, பிரான்சிஸ் கிருபா</p><p>காதல் என்பதன் பித்து நிலையை , ஒரு பெண் என்பவள் ஆணுக்கு எப்படி பொருள் படுகிறாள் என்பதை ஒரு வித பித்தேறிய கவிதை நடையில்,சொல்லும் நாவல்</p><p><br /></p><p>7 நாடோடியின் நாட்குறிப்புகள் − சாரு நிவேதிதா</p><p>மின்னம்பலம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. புனைவுக்கும் நிஜத்துக்கும் இடையேயான இடைவெளியை அழிக்கக்கூடிய பின் நவீனத்துவ எழுத்தாளர் சாரு. எனவே இவரது பல கட்டுரைகளில் புனைவுத்தன்மை இருக்கும். அந்தந்த கால கட்டத்தை ஆவணப்படுத்தினாலும் என்றென்றும் relevant ஆக இருக்க்கூடிய கட்டுரைகளின் தொகுப்பு</p><p><br /></p><p>8 பெத்தவன் இமையம்</p><p> ஆணவக் கொலை என பேப்பரில் படிக்கிறோம் அது போன்ற ஒரு தருணத்தை இரு தரப்பினரின் பார்வையிலும் சொல்லக்கூடிய நாவல்.</p><p>இதை இமையம் தவிர வேறு யாரும் எழுதிவிட்டு உயிருடன் நடமாடி இருக்க,முடியாது</p><p>அந்தவகையில் பார்த்தால் இது போன்ற நாவல் வந்ததும் இல்லை இனியும் வர முடியாது</p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-143588380504231288.post-2375332184836693512022-03-25T05:01:00.003-07:002022-03-25T05:01:30.960-07:00வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான் − எஸ்ரா நூல் வாசிப்பனுபவம்<p><br /></p><p><br /></p><p>எஸ் ராமகிருஷ்ணனின் மழைமான் சிறுகதை தொகுதி சமீபத்தில் மனநிறைவளித்த ஒரு கதை தொகுப்பு</p><p><br /></p><p> எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது.</p><p>அறம் அழிவது அன்றாட செயல்பாடாகி வருகிறது;</p><p>என்ற பின்னட்டைக்குறிப்புகள் இந்த சிறுகதைத் தொகுதியை முடித்தபின்பு வேறோரு பொருளைத்தருகின்றன</p><p><br /></p><p>எளிய மனிதர்கள் என்பதே ஒரு ரிலேட்டிவ் பதம்தான்;</p><p>உதாரணமாக 80களில் எம்ஜிஆர் அசைக்க முடியாத சக்தியாக இருந்தபோது, கலைஞர் இனி வெல்ல வாய்ப்பில்லை என்றொரு சூழல் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்வை ( கலைஞர் மீது அபிமானம் கொண்ட) நடிகர் ராஜேஷ் விவரித்திருப்பார்</p><p>ரயில் நிலையத்தில் தனது பெட்டியை தானே சுமந்து கொண்டு , தன் மனைவியாரோடு தன்னந்தனியாக கலைஞர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். என் மனம் கலங்கி விட்டது. எப்பேற்பட்ட அறிவாளி , தலைவர் வரவேற்க்கக்கூட ஆள் இல்லாமல் யாரோ ஒருவர் போல வருகிறாரே காலம் இவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குமா என உருக்கமாக எழுதியிருப்பார்</p><p><br /></p><p>அதே கலைஞர் எம்ஜிஆர் மறைவுக்குப்பின் விஸ்வரூபம் எடுத்தது வேறு விஷயம். </p><p><br /></p><p>ஒரு பார்வையில் மனிதர்கள் அத்தனைபேருமே எளியவர்கள்தான். காலம்தான் சிலரை அவ்வப்போது ஒவ்வொரு இடத்தில் வைக்கிறது.ஒரு நிமிடத்தில் மாறி விடக்கூடியதுதான்</p><p><br /></p><p>போலீஸ் அராஜகங்களை தம் ஆட்சியின்போது எகத்தாளமாக நியாயப்படுத்துவதும், , ஆட்சி மாறியதும் எளிய மனிதனாக கதறுவதும் சர்வ சாதாரணமான காட்சி</p><p><br /></p><p>இந்த தொகுப்பில் நடுத்தர வாழ்வு என்ற ஓர் உலகுக்குள் நடக்கும் இந்த ஒரு பரமபத விளையாட்டை அழகாக பதிவு செய்துள்ளார் எஸ்ரா</p><p><br /></p><p>உயர் ரசனையுடன் , கம்பீரமாக வாழும் ஒரு குடும்பத்தலைவி ஒரு கல்லூரி மாணவனின் அத்துமீறல் என்றொரு செயலால்மனம்நிலைகுலைவதும் அந்த சம்பவம் நிகழ காரணமாக அமைந்த மற்ற நிகழ்வுகளும் ஒரு முழு வாழக்கையையே பிரதிபலித்து விடுகின்றன; ( அவன் பெயர் முக்கியமில்லை சிறுகதை)</p><p>வாழ்க்கை என்பது எண்ணற்ற தற்செயல்களின் விளைவுகள். நம்மை மீறிய செயல்களே நம்மை எளியவனாகவும் வலியவனாகவும் மாற்றிக்காட்டுகின்றன</p><p><br /></p><p>ஒரு கணம் முன்பு உண்டியல் விற்கும் தாத்தா முன்பு வலியவளாக இருந்தவள் அதே நாளில் ஓர் விக்டிம் அல்லது அபலை ஆகிப்போகிறாள்</p><p>அந்த நிகழ்வு வேறோரு,பெண்ணுக்கு கிளுகிளுப்பானதாக அவளது ஈகோவை வலுவாக்கும் சம்பவமாக அமைந்திருக்கக்கூடும்</p><p>இதன் பின்னணியில் நிகழும் ஒரு கொலை சம்பவமும் இந்த எளியவன் வலியவன் இருமையை அடிக்கோடு இடுகிறது. </p><p>இதில் தன்னை வலியவனாக உணரும் மாணவன் ஒரே ஒரு நிமிடத்தில் எளியவனாகும் வாய்ப்பும் இருக்கிறது </p><p><br /></p><p>ஒழுங்கின்மைக்குள் ஏதோ ஒரு ஒழுங்கு இருக்கிறது என்கிறது அறிவியல்</p><p>அதுபோல அறமின்மைக்குள் வாழும் அறம்தான் உலகை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது</p><p><br /></p><p>இன்னொரு ஞாயிற்றுக்கிழமை கதையில் வேலையில்லாமல் நண்பன் அறையில் தங்கி இருக்கும் தாமோதாரன் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளாவது வயிறார சாப்பிட விரும்புகிறான். அதற்கு அவன் ஒரு யுக்தி வைத்திருக்கிறான்.</p><p><br /></p><p>யாராவது ஒரு வசதியான பழைய நண்பனை நட்புரீதியாக சந்திக்கசெல்வதுபோல மதிய வேளை சந்தித்து சுவாரஸ்யமாக புகழ்ந்து பேசி அப்படியே சாப்பிட்டு விட்டு வந்து விடுவான்</p><p><br /></p><p>பாஸ்கர் என்ற நண்பனிடம் இந்த யுக்தி பலிக்கவில்லை துச்சமாக நடத்துகிறான் பசி தாங்க முடியவில்லை பாஸ்கரின் பாட்டி கொரியர் செய்ய கொடுத்த 50 ரூபாயில் தனது நண்பனுடன் சாப்பிட்டு விடுகிறான்</p><p>கதையின் வெடிப்பு நிகழ்வது அதற்குப்பிறகுதான். 50 ரூபாய்க்கு பாட்டியை ஏமாற்றிவனால் அந்த கவரில் இருக்கும் 500 ரூபாயை அபகரிக்க முடியவில்லை</p><p>வலியவன் எளியவனை வாட்டினால் எளியவன் தான் துன்புறுத்த தன்னை விட எளியவன் ஒருவனை கண்டுபிடிப்பான் என்ற அறவீழ்ச்சியால் சூழப்பட்ட ஒரு யுகத்தின் மத்தியில் அவனது அறம் விழிக்கிறது</p><p>தனக்கு நிகரானவரை தன்னை விட உயர்நிலையில் இருப்பவரை ஏமாற்றுவதை ஏற்கும் அவன் உள்ளம்,தன்னை விட கையறு நிலையில் இருக்கும் ஒரு கிழவியை − அதுவும் அவள் தன்னிலும் எளிய ஓர் அபலைக்கு உதவ முனையும்போது −, ஏமாற்றுவதை ஏற்கவே முடியவில்லை</p><p>Games people play என்பதுபோல, மனிதர்கள்,விளையாடும் இந்தக்கருணையற்ற விளையாட்டின் விளைவை அவன் கண் முன் பார்ப்பது அவனுக்கு ஒரு தரிசனமாக ( vision)அமைகிறது</p><p><br /></p><p><br /></p><p> அறம் என்பதையே கேள்விக்குள்ளாக்குகிறது ஓலைக்கிளி கதை</p><p>ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தவன்</p><p> தற்போது திருந்தி விடுகிறான் தன்</p><p>மகள் திருமணத்துக்கு கிட்டத்தட்ட பிச்சை எடுக்கிறான். </p><p><br /></p><p>கடைசியில் மகள் திருமணம் என்பதே பொய் என தெரி்கிறது. வேண்டுமென்றேதான் செய்தேன் எனக்கூறி அதற்கொரு லாஜிக்கலாக காரணமும் கூறி கடிதம் அனுப்புகிறான் குடும்பத்தினருக்கு அரிய பரிசு ஒன்றையும் அனுப்புகிறான்.அவன் செயலில் எவ்வித அறப்பிழையையும் நம்மால் காண முடிவதில்லை. நமக்கே அவனைப்பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது</p><p> நம்மில் பலருக்கு உரிய சம்பளத்தை கேட்டுப்பெற பயம் , சாலை உடைசல் , குப்பை குவியல் இவற்றையெல்லாம் யாரிடம் முறையிடுவது என்று தெரிவதில்லை தெரிந்தாலும் உரியவர்களிடம் முறையிட,தயக்கம் , பயம் , சோம்பல்</p><p>இந்தக்கோழைத்தனத்தை மறைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள , முகநூல் அவதாரம் எடுக்கிறோம் . விளாடிமின் புடின் , டிரம்ப் , மோடி , ஸ்டாலின் , எடப்பாடி என அனைவரையும் வீரமாக எதிர்க்கிறோம். வீரன் சமூகப்போராளி என நம்மை நம்ப வைத்துக் கொள்கிறோம்.</p><p>இதை மழைமான் என படிமம் மூலம் அழகாக சொல்கிறது மழை மான் கதை. </p><p>சக பெண் ஊழியர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி அளித்து ஹீரோ ஆகும் முயற்சி அசட்டுத்தனமாய் முடிகிறது. இப்படி அலுப்பூட்டும் வாழ்வில் சுவையாக ஏதேனும் செய்யும் பொருட்டு மான் ஒன்றை பார்க்க ஆசைப்படுகிறார் ஒருவர் அந்த தேடல் அனுபவத்தை சாகசமாக ஆக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்களை கோட்டை விடுகிறார். நிஜ மானை தவற விட்டுவிட்டு மழைமான் ஒன்றை கற்பனையில் உருவாக்கி மழை நீர் மட்டுமே அருந்தும் கற்பனை மானை தான் பார்த்ததாக பிறரிடம் அளந்து விடுகிறார். அதை தானும் நம்புவது மட்டுமல்ல அதை உண்மையில் பார்க்கவும் செய்கிறார்</p><p>ஆனால் மழைமான் கதையை தன் மனைவியிடம் சொல்லும்போது அவள் சிரித்து விடுகிறாள். அவருக்கு வலிக்கிறது.</p><p>முகநூலில் சமூக ஊடகங்களில் நாம் உருவாக்கி அலைய விட்டிருக்கும் மழைமான்கள் எத்தனை எத்தனை</p><p><br /></p><p>இந்த சிறுகதைத் தொகுப்பை ஒரு நான்லீனியர் நாவலாகவும் வாசிக்க இயலும். </p><p>எளியவன் வலியவன் எனும் இருமையை இன்னொரு கோணத்தில் காட்டும் கதை , எதிர்கோணம். சிறந்த கேமிரா கலைஞனாக உருவாகி இருக்க வேண்டிய ஒருவரை வாழ்க்கை பேருந்து நடத்துனராக ஆக்கி வைத்துள்ளது அவரது வாழ்வின் ஒரு துளிதான் கதை. எங்கோ பெற்ற அடியை வேறு எங்கோ செலுத்தும் முடிவில்லா அர்த்தமற்ற விளையாட்டு</p><p>இந்த விளையாட்டின் அபத்தம் நாம் முன்பு பார்த்த கதையில் ஒரு கணத்தில் முகத்தில் அறைகிறது இக்கதையில் அந்த செயல்பாடு நிகழ்கிறது</p><p><br /></p><p>பாடல்களுக்கும் நமக்குமான ( குறிப்பாக பெண்களுக்குமான ) உணர்வுப்பூர்வமான பந்தத்தைப்,பேசும் கதை , அபூர்வமான பறவையை தேடும் அனுபவம் முழுக்க முழுக்க கவிதை நடையில் அமைந்த மழைக்கதை என அனைத்தும் அழியாத ஏதோ ஒன்றை சொல்வதாகவே தோன்றுகிறது</p><p> வெறும் பிரார்த்தனை கதையில் பொறுப்பற்ற குடிகாரன ஒருவனால் குடும்பம் அடையும் மன உளைச்சல் காட்டப்படுகிறது பொறுப்பற்ற தந்தை இரக்கமற்ற வேலை சூழல் கடுமையாக வேலை வாங்கும் முதலாளி என முழுக்க முழுக்க இருண்மையான வாழ்க்கை ஆனால் அந்த,முதலாளி ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு கிளம்பும்போதும் பத்திரமா போய்ட்டு வாம்மா என அன்பாக பேசி ஒரு சாக்லேட் வழங்குவதில் அத்தனை வலியும் மறந்து போயவிடுகிறது</p><p>மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது</p><p>இந்த தொகுதியின் செய்தி என எஸ்ரா எதுவும் உத்தேசித்து இருக்க மாட்டார் ஆனால் எனக்கு இத்தொகுதி வழங்கிய"செய்தி இதுதான்</p><p>மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது</p><p><br /></p><p>தூய வெளிச்சம் என்ற கடைசிக்கதை எனக்கு அவ்வளவு நிறைவளித்தது.</p><p><br /></p><p>எத்தனையோ கனவுகளுடன் கலை உணர்வுடன் ஒரு மாளிகையை எழுப்புகிறார் குமாரசாமிப்பிள்ளை . வீட்டின் முகப்பில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் விளக்கு அந்த தெருவுக்கே இரவு முழுக்க நிலவு போல வெளிச்சமளிக்கும்</p><p><br /></p><p>ஆனால் குமாரசாமிப்பிள்ளையின் வாரிசுகளைப் பொருத்தவரை அந்த வீட்டின் கலையுணர்வோ தூய வெளிச்சம் வழங்கும் அவரது நல்லெண்ணமோ பொருட்டில்லை..</p><p>பணம் மட்டுமே பொருட்டு. எதற்கு தெண்டமாக மின்விளக்கு என அந்த விளக்கை நிறுத்தி விடுகின்றனர். பிள்ளையின் மறைவுக்குப்பிறகு அந்த வீடு இடிக்கப்படுகிறது</p><p>அப்படி என்றால் அவரது ரசனை நல்லெண்ணம் எல்லாம் காரிருளில் மறைந்து விட்டதா ? அந்த வெளிச்சம் யார் மனதிலும் இல்லாமல் இணைப்புச்சங்கிலி அறுந்து விட்டதா என்பதற்கு அற்புதமான பதிலைத்தருகிறது கதை</p><p> ரசனை , நல்லெண்ணம் எனும் வெளிச்சம் என்றும் மறைவதில்லை தனக்கான கடத்தியை தேர்வு செய்து கொண்டு அவை காலம் காலமாக தொடர்கின்றன</p><p> ஒரு திருடன்தான் இந்த வெளிச்சத்தை அடுத்த தலைமுறைக்கு ஏந்திச் செல்கிறான் என்பது சுவையான முரண்</p><p>அந்த கட்டடத்தை , அந்த வெளிச்சத்தை அணு அணுவாக ரசிப்பவன் அந்த திருடன். அந்த வீட்டிற்குள் ஒரு முறையாவது நுழைந்து பார்க்க வேண்டும் என திட்டமிட்டு உள்ளே திருடச் செல்கிறான்</p><p> வீட்டின் இருண்மை அவ்வீட்டில் உள்ளோரின் மனநிலையை அவனுக்கு தெரிவிக்கிறது</p><p> பிள்ளை மரணத்துக்கு இதயப்பூர்வமாக வருந்துபவன் அவன் மட்டுமே</p><p> அந்த வீடு இடிபட்டு தரைமட்டமாகும்போது அவ்வீட்டின் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு அவன் செல்வதுடன் கதை கவித்துவமாக முடிகிறது</p><p> அந்த தூய வெளிச்சம் நம்முள்ளும் பரவுகிறது</p><p> வித்தியசமான துள்ளும் நடையில் அனைத்து கதைகளையும் படைத்துள்ளார் எஸ்ரா . சும்மா புரட்டிப்பார்க்கத்தான் எடுத்தேன் முடித்து விட்டுதான் வைத்தேன்</p><p> இப்படி சுவையான நடையில் ஆழமான இலக்கிய நூல்கள் வருவது அரிது</p><p><br /></p><p>தேசாந்திரி பதிப்பகம் சிறப்பாக நூலை உருவாக்கியுள்ளது . அட்டை ஓவியம் அருமை</p><p> தொகுப்பின் பெயர் மழைமான்</p><p> பக்கங்கள் 176</p><p> விலை 160</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-56688200546803546862022-01-01T07:39:00.001-08:002022-01-01T07:39:01.552-08:00கனமழை அனுபவம்<p> ஒரு வேளையாக பாரிமுனை சென்றிருந்தேன்.</p><p>வழக்கத்துக்கு மாறாக ஆறரை மணி இருள் நான்கு மணிக்கே நிலவியது.</p><p>அடிக்கடி மழையைப் பாரத்த அனுபவம் இருப்பவர்கள் இது கனமழையின் அறிகுறி என அறிந்திருப்பர்</p><p><br /></p><p>நம்மைப் பொருத்தவரை எந்த மழையென்றாலும் அரை மணி நேரத்தில் நின்று விடும் என நினைப்பவர்கள் எனவே மழை சிந்தனை சற்றும் இன்றி சுற்றிக் கொண்டிருந்தேன்</p><p><br /></p><p>அவ்வப்போது மழை வருவதும்நிற்பதுமாக இருந்தது. </p><p>முன்பெல்லாம் மழை ஒரு பிரச்சனையாகவே இருக்காது. நனைவது பிடிக்கும் ஆனால் எப்போது செல்போன் வந்ததோ எப்போது பைக் வந்ததோ அப்போதுதான் மழை யோசிக்க வைக்க ஆரம்பித்தது. மழையால் பழுதடைந்த போன் , பைக் நின்று போய் அரை கிமீநடை என பல அனுபவங்கள்</p><p><br /></p><p>நல்லவேளையாக பைக்கில் வரவில்லை செல்போனை சேஃப் செய்து விட்டேன் வாட்ச் வேறு அதையும் சேஃப் செய்தேன் </p><p><br /></p><p>அப்போதுதான் கனமழை ஆரம்பித்தது. சாதா மழை போல் இல்லாமல் மேகத்திலிருந்து தண்ணீர் அருவி போல கொட்டியது</p><p><br /></p><p>சரி நின்று விடும் என ஒரு கடையோரம் ஒதுங்கினேன். உள்ளே வந்து நில்லுங்க என உபசதித்தார் கடைக்காரர் பரவாயில்லை என வாசலோரம் நின்றேன்</p><p><br /></p><p>ஒரு குடிப்ரியர் மழையை உற்சாகமாக ரசித்தபடி சாலையிலேயே நீந்தி படுத்து குதித்து விளையாடினார்</p><p><br /></p><p>மழை மேலும்,மேலும் அதிகரித்தது. சாலையில் தண்ணீர் மட்டம் உயர்வதை காணுவது ஒரு வித திகிலை அளித்தது.</p><p><br /></p><p>ஆங்காங்கு நின்ற டூவீலர்கள் முக்கால்வாசி அளவு மூழ்கின. சில சரிந்து விழுந்து முழுதும் மூழ்கின.</p><p>டூவீலர்கள்என்னென்ன பிரச்சனைகளை சந்திக்ப்போகின்றனவோ எவ்வளவு செலவு வைக்கப்போகின்றனவோ என கவலையாக இருந்தது.</p><p>கார்கள் நிலையும் மோசம்தான்</p><p>மழை நிற்காது எனப் புரிந்து விட்டது. கடையோரத்தில் உருவாகத்தொடங்கிய நட்பு வட்டத்திடம் விடை பெறறு மழையில் நடக்கலானேன்</p><p>தொடை வரை ஓடும் தண்ணீரில் நடப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் "அலை" நடப்பவர்களை தடுமாற வைத்தது</p><p>ஒருவர் அந்த மழையிலும் மலை போல நின்று , அப்படிப்போகாதீங்க, பள்ளம் இருக்கு,என பலரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்</p><p>இதுபோன்ற நேரங்களில் வெகு எளிதாக குற்றச் செயல்களை நிறைவேற்ற முடியும் ஆனால் யாருமே அப்படி செய்யவில்லை என்பதுமட்டுமல்ல பிறருக்கு உதவவும் முன்வந்தனர்</p><p>ஒரு வழியாக பேருந்தில் ஏறினேன். </p><p>கண்டக்டர் , டீ சாப்பிட்டியா என விசாரித்தார் டிரைவர் . இல்லைணே போயிட்டு சாப்பிடலாம் என்றார் கண்டக்டர்</p><p>எப்போ போயி சேரப்போறோம்னு கடவுளுக்குத்தான் தெரியும் முடிஞ்சா டிபன் சாப்பிட்டுட்டு வந்துரு என உரிமையுடன் சொன்னார் ஓட்டுநர்</p><p>அவரது தீர்க்கதரிசனமும் , சகஊழியர் மீதான அன்பும் பிறகுதான் புரிந்தது</p><p>கிட்டத்தட்ட ஏழு மணி நேர பயணம் !!!</p><p>மழையில் நனைந்து கொண்டு இவ்வளவு நேரம் பயணிக்க வேண்டிய டூவிலர்ஸ்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டியவன் , பஸ்ஸில் நிம்மதியாக அமர்ந்திருப்பதே பெரும் பேறாக தோன்றியது</p><p>இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கினேன் மழை நிற்கவில்லை</p><p>ஆட்டோக்கள் கிடைக்கவில்லை</p><p><br /></p><p>அப்படியே நனைந்து கொண்டு சென்றிருந்தால் ஆயிரம் இரூந்தால் சாமான்யர்களிடம்தான் உதவும்தன்மை அதிகம் என மேசேஜ் சொல்லியிருப்பேன்</p><p><br /></p><p>ஆனால் அறிமுகமற்ற ஒருவர்"அவராகவே என்னை அழைத்து</p><p>தன் குடையில் அழைத்து வந்து வீட்டருகே விட்டார். சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மேலாளர் என பேச்சுவாக்கில் அறிந்தேன்</p><p><br /></p><p>மனிதர்களின் நல்ல அம்சங்களை வெளிக்கொணர அவ்வப்போது இப்படி இயற்கை சீறுவது ஒரு வினோதம்தான்</p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-45010497588861447402021-11-22T22:55:00.008-08:002021-11-22T23:13:15.081-08:00தமிழ்ஸ்டுடியோ எனும் சினிமா பல்கலைக்கழகம்<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-G9KuXKAytEg/YZyRXomc4GI/AAAAAAAAFaQ/qDDtZiwfArMle6DyWGSUBuj6ucLV_gNGQCLcBGAsYHQ/s2048/IMG_20211122_125725.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1536" height="320" src="https://1.bp.blogspot.com/-G9KuXKAytEg/YZyRXomc4GI/AAAAAAAAFaQ/qDDtZiwfArMle6DyWGSUBuj6ucLV_gNGQCLcBGAsYHQ/s320/IMG_20211122_125725.jpg" width="240" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-FPBmbMeRE0w/YZyRWQ1YkbI/AAAAAAAAFaM/GsSBjMBds6QlQ1VYhNakx3xodvRAR-BsgCLcBGAsYHQ/s2048/IMG_20211122_125744.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1536" height="320" src="https://1.bp.blogspot.com/-FPBmbMeRE0w/YZyRWQ1YkbI/AAAAAAAAFaM/GsSBjMBds6QlQ1VYhNakx3xodvRAR-BsgCLcBGAsYHQ/s320/IMG_20211122_125744.jpg" width="240" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-Ywvc_NQ-USg/YZyRYGq_IWI/AAAAAAAAFaU/9QJ1YtY1lfU8NzkEdLrjxluYnWU6ksXRgCLcBGAsYHQ/s2048/IMG_20211122_125751.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1536" height="320" src="https://1.bp.blogspot.com/-Ywvc_NQ-USg/YZyRYGq_IWI/AAAAAAAAFaU/9QJ1YtY1lfU8NzkEdLrjxluYnWU6ksXRgCLcBGAsYHQ/s320/IMG_20211122_125751.jpg" width="240" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-HMY_YH-LYyQ/YZyRhZ8it1I/AAAAAAAAFaY/s_EfYWBYq60hNlD_5stWDaWrkCNj3B3wQCLcBGAsYHQ/s2048/IMG_20211122_125813.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1536" height="320" src="https://1.bp.blogspot.com/-HMY_YH-LYyQ/YZyRhZ8it1I/AAAAAAAAFaY/s_EfYWBYq60hNlD_5stWDaWrkCNj3B3wQCLcBGAsYHQ/s320/IMG_20211122_125813.jpg" width="240" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-1vfk4MM_UKA/YZyRho7ng8I/AAAAAAAAFac/HXA5sc_TnsgMeakK-awuN52IatgLEI6aQCLcBGAsYHQ/s2048/IMG_20211122_125821.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1536" data-original-width="2048" height="240" src="https://1.bp.blogspot.com/-1vfk4MM_UKA/YZyRho7ng8I/AAAAAAAAFac/HXA5sc_TnsgMeakK-awuN52IatgLEI6aQCLcBGAsYHQ/s320/IMG_20211122_125821.jpg" width="320" /></a></div><br /> திரைப்படம் என்பதை மலிவான ரசனைக்கு வடிகாலாக பலர் பயன்படுத்தும் நிலையில் அது கலை வடிவின் ஓர் உச்சம் என்ற புரிதல் சிலருக்கே உண்டு.<p></p><p> இசை , கவிதை , சிறுகதை , நாவல் , ஓவியம் , புகைப்படக்கலை என அனைத்து வகை கலைகளும் சங்கமமாகும் அரும்பெரும் கலை வடிவம் திரைப்படம். </p><p><br /></p><p>அந்த வகையில் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு செய்து வரும் பணிகள் மகத்தானவை</p><p>ஏராளமான குறும்படங்கள் , ஆவணப்படங்கள் , உலகத்திரைப்படங்கள் , அரிய இந்திய திரைப்படங்கள் , தமிழ் சாதனைப்படங்கள் என ஏராளமான திரையிடல்கள் மூலம் ரசனையை உயர்த்தியதில் தமிழ் ஸ்டுடியோவுக்கு முக்கியப் பங்கு உண்டு</p><p> ஜெய்பீம் போன்ற படங்கள் தமிழில் உருவாக முடியும் என்ற லட்சியக்கனவு விதையை பல ஆண்டுகள்,முன்பே விதைத்த இயக்கம் தமிழ் ஸ்டுடியோதான்</p><p><br /></p><p>வடபழனி, பேருந்து நிலையம்,அருகே,இயங்கி,வந்த ப்யூர் சினிமா அலுவலகம் சினிமா ஆர்வலர்களின் வேடந்தாங்கலாக திகழ்ந்தது.. அங்கு வந்து தம்மை மெருகேற்றிக் கொண்ட பலர் இன்று திரைவானில் ஜொலிக்கின்றன</p><p><br /></p><p>அலுவலகம் நுழைந்தால் திரைப்டக்கல்வி பயிலும் படிமை மாணவர்களால், பாலின சாதி மத அடையாளங்களற்ற இளைஞர்களால் அந்த இடமே</p><p>அறிவிப்பிழம்பால் ஒளிர்ந்து கொண்டிருக்கும்</p><p><br /></p><p>பெளர்ணமி இரவு திரையிடல்களை இரவு விவாதங்களை யாரால் மறக்க முடியும்</p><p><br /></p><p>ப்யூர் சினிமா புத்தக அங்காடி தற்போது வளசரவாக்கத்தில் இயங்கி வருகிறது. கீழ்த்தளம் , நெரிசல் இல்லாத இடம் போன்ற அனுகூலகங்களுடன் அற்புதமாக தன் பயணத்தை தொடர்கிறது ப்யூர் சினிமா புத்தக அங்காடி.</p><p><br /></p><p>தமிழ் ஸ்டுடியோவில் இருந்து வெளிவரும் படச்சுருள் மாத இதழ் தமிழ் இதழியல் வரலாறில் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>இன்று 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த,அமைப்பு பல்லாண்டுகள் பயணித்து சாதனைகள் புரிய வாழ்த்துகள்</p><p><br /></p><p>வாழ்த்துகளை விட நமது சார்பில் வருங்கால தலைமுறைகள் சார்பில் நன்றி என்பதே பொருத்தம்</p><p><br /></p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-28295438321292197012021-11-07T01:51:00.002-08:002021-11-07T01:52:51.532-08:00வாலி−லட்சுமணன் , பரதன் − லட்சுமணன்.. சுவையான ஒப்பீடு<p> ராமாயணத்தில் ராமன் கதாபாத்திரம் வெகு உயர்வாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.</p><p>நல்ல மகன், நல்ல நண்பன் , நல்ல கணவன் , நல்ல அரசன் என ஜொலிக்கும் அவனது புகழுக்கு சற்றே மாசு ஏற்படுத்துவது வாலியை அவன் கொன்ற விதம்தான்.</p><p>ராமன் − வாலி பகுதி ராமாயணத்தில் − குறிப்பாக கம்ப ராமாயணத்தில் − வெகு அற்புதமாக ஒரு சிறப்பான திரைகதையாக மிளிர்கிற்து</p><p>வாலி என்பவன் ராமன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன். ராமன் உன்னைக் கொல்லக்கூடும் என யாரேனும் சொன்னால் , அவர்கள்,மீது சீறுபவன். ராமன் எப்பேற்பட்ட குணசீலன் தெரியுமா என வியந்தோதுபவன். சீதையை தேடும் ராமனின் பணிக்கு திறமையாக உதவியிருக்கக்கூடியவன்</p><p><br /></p><p>ஆனால் சுக்ரீவனோ ராமன் மீது பெரிய மரியாதை அற்றவன். அண்ணனையே கொல்லத்துணியும் துரோகியை நம்ப வேண்டாம் என்று லட்சுமணன் இவனை இழிவாகவே நினைக்கிறான்.</p><p><br /></p><p>இப்படி எல்லா விதங்களிலும் உயர்வான வாலியை விட்டுவிட்டு சுக்ரீவனோடு ராமன் கூட்டணி அமைப்பதுதான் பிரபஞ்சத்தின் புரிந்து கொள்ள முடியாத விதி. எத்தனையோ நல்லவர்கள் திறமைசாலிகள் வாடுவதும் பொய்யர்கள் திறமையற்றவர்கள் செழிப்பதும் அன்றாடக்காட்சிதானே</p><p><br /></p><p>வாலிக்கு எதிராக விதி எப்படி செயல்படுகிறது, ராமனின் புகழை கெடுக்க விதி எப்படி செயல்படுகிறது என்பதை ராமாயணம் வெகு துல்லியமாக விளக்குகிறது.</p><p><br /></p><p>ராமனுக்கு வாலி , சுக்ரீவன் என யாரையும் தெரியாது. அப்போது கபந்தன் என்ற அரக்கனுடன் மோத வேண்டியது வருகிறது. கபந்தன் வீழ்த்தப்பட்டு , சாபவிமோசன் பெற்று கந்தர்வன் ஆகிறான்</p><p>இந்த நன்றிக்கடனுக்காக ராமனுக்கு ஒரு டிப்ஸ் தருகிறான். சீதையை மீட்க படைபலம் தேவை , எனவே சுக்ரீவனுடன் கூட்டணி அமையுங்கள் என்கிறான் அவன்</p><p>வாலியை அறிமுகம் செய்யாமல் ஏன் சுக்ரீவனை சொல்கிறான் ? ஒரு,வேளை பலமும் , வளமும் பெற்ற வாலி மீது அவனுக்கு ஏதும் பொறாமையா என நினைக்கிறோம்;</p><p>அடுத்தபடியாக ராமன் சந்திப்பது சபரி எனும் ஞானியை. அவளிடம் சுக்ரீவனை சந்திக்க வழி கேட்கிறான் ராமன். சுக்ரீவன் வேண்டாம் , வாலியைப் பாருங்கள் என அவளும் சொல்லவில்லை. சுக்ரீவனைப் பார்க்க வழி காட்டுகிறாள்.</p><p>கபந்தனுக்கு உள்நோக்கம் இருக்கலாம். தவத்தில் கனிந்த சபரிக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை. ராமன் சுக்ரீவனை சந்திக்க வழி கேட்டான் , அதை சொல்லி விட்டோம் என்பதைத்தாண்டி அவளால் யோசிக்க முடியவில்லை</p><p>அடுத்தபடியாக அனுமனை சந்திக்கிறான் ராமன். பார்த்ததுமே ராமனை நேசிக்க ஆரம்பித்துவிட்ட அனுமனும் சுக்ரீவனுக்கு ஆதரவாகவே பேசுகிறான்</p><p><br /></p><p>கபந்தன் , சபரி மற்றும் அனுமன் என யாரேனும் ஒருவர் வாலியை ஆதரித்து இருந்தால் , வாலியின் உயிரும் ராமனின் புகழும் காப்பாற்றப்பட்டு இருக்கும்</p><p><br /></p><p>அது நிகழாமல் போனது பிரபஞ்ச பெரு நியதி</p><p>இதில் ஒரு சுவாரஸ்யம்</p><p><br /></p><p>தன் அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவன் நமக்கு மட்டும் எப்படி உண்மையாக இருப்பான் என்ற நியாயமான சந்தேகம் எழுப்புகிறான் ( பிற்பாடு நன்றி இல்லாமல் நடந்து கொண்டு இந்த சந்தேகத்தை உண்மையாக்குகிறான் சுக்ரீவன்)</p><p>லட்சுமணன் கேள்விக்கு ராமன் சரியாக பதிலளிக்கவில்லை. சரி விடு , அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என மழுப்பிவிடுகிறான்</p><p>ஆக தனக்குப் பிடிக்காத ஒருவனுக்காக தன்னை மதிக்கககூடிய ஒருவனை கொன்று பழி சுமக்கும் சூழல் உருவாகி விடுகிறது</p><p><br /></p><p>கடவுள் அவதாரம் என்றாலும் விதியை வெல்ல முடியாது என்ற இந்த பகுதி அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று</p><p>பின்குறிப்பு</p><p>இதில் ஒரு சுவாரஸ்யம். அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவனை நம்ப வேண்டாம் என்கிறான் லட்சுமணன்</p><p>ஃப்ரீயா விடு.. அவனுக்குத் தெரிஞ்சது</p><p>அவ்வளவுதான். சகோதர பாசம் அரிது. எல்லோரும் உன்னைப் போல இருப்பார்களா என்றுதானே சொல்லி இருக்க வேண்டும் ?</p><p>ஆனால் ராமன் இப்படி சொல்கிறான்</p><p>சகோதர பாசம் அரிது. எல்லோரும் பரதனைப்போல இருப்பார்களா? பரதனின் பாசத்தை அனைவரிடமும் எதிர்பார்க்க முடியுமா என பரதனை லட்சுமணைவிட ஒருபடி மேலாக வைத்து பேசுகிறான் ராமன்</p><p>சுவையான இடம்</p><p><br /></p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-57202564975196618952021-11-05T10:31:00.001-07:002021-11-05T10:33:09.309-07:00அண்ணாத்தே − திரைப்பார்வை<p> ரஜினியுடன் நெருக்கமான இயக்குனர்கள் ராஜசேகர் , மகேந்திரன் , எஸ்பிஎம் , கேஸ்ரவி , பி.வாசு போன்றோருடன் இணைவதை பல நடிகர்கள் விரும்புவார்கள்.</p><p>ரஜினி வரலாற்றில் முதன்முறையாக இன்னோரு நடிகரின் இயக்குனருடன் ஆசைப்பட்டு இணைந்திருக்கிறார். அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிவாவுடனான இணைவு எப்படி இருக்கிறது?</p><p>அண்ணன் தங்கை என்ற பிரதான கதைக்குள் சில ஹைக்கூக்கள் , சில சிறுகதைகள் என பல படங்களில் காண முடியாத ( ரஜினி படங்களிலும் இதுவரை இல்லாத ) சில வித்தியாசமான அனுபவங்களை படம் தருகிறது.</p><p>பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை மிகவும் அலட்சியமாக அவமரியாதையாக நடத்துகிறான் காளையன். பிற்பாடு பிரகாஷ்ராஜ் பாத்திரம் வெகு உயரத்துக்கு சென்று காளையனே அவர் பாதம் பணியும் அளவு செல்கிறது. தன்னளவில் ஒரு தனி சிறுகதை</p><p>பிரகாஷ்ராஜிடம் வேண்டுமென்றே அடிவாங்கும் காட்சி அமைப்பு அழகான கவிதை</p><p><br /></p><p>அதுபோல இரு வில்லன்களுக்கிடையே ( அகனிநட்சத்திரம்) போன்ற வாரிசுரிமைப்போர். ஒரு கட்டத்தில் தம்பி வாழ்க்கையில் தோற்று தற்கொலை செய்து கொள்ள , தம்பி என்ற அங்கீகாரம் பெற்று திருப்தியுடன் கண் மூடுகிறான்</p><p>அதுவரை தம்பி என ஏற்காத அண்ணன் , தனது தம்பிக்காக தன் உயிரேயே பணயம் வைக்க தயாராகிறான்.</p><p>இப்படி ஒரு உருக்கமான கிளைக்கதையை − அதுவும் வில்லனுக்கு− படங்களில் பார்ப்பது அரிது</p><p><br /></p><p>புதிய தலைமுறை நகைச்சுவை நடிகர்களுடனான ரஜினியின் கெமிஸ்ட்ரிரசிக்க வைக்கிறது</p><p>அண்ணாத்த பட படப்பிடிப்பு அனுபவங்களை கவிஞர் பிறைசூடன் பெருமையுடன் சொன்னது நினைவிருக்க்கூடும். அவர் நடித்த காட்சிகளைப் பார்க்க அவர் இன்று இல்லை. மரியாதைக்குரிய − ரஜினிக்கே அறிவுரை சொல்லத்தக்க − பெரியப்பா பாத்திரம். பிறைசூடன் ரசிகனாக மகிழ்ச்சி</p><p>பாண்டியராஜன் , லிவிங்க்ஸ்டன் , குஷ்பூ , மீனா , சதீஷ் , சத்யன் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் ஃபீல் குட் சூழலை உருவாக்குகின்றனர்</p><p>இடைவேளைக்குப் பிறகு வேறொரு படமாக மாறி விடுகிறது அண்ணாத்த</p><p>டூயட்டுகளுக்காக கவர்ச்சிக்காக நாயகிகள் அல்லது அடக்கி வைக்கப்படுவதற்காக நாயகிகள் என்பது மாறி , ரஜினிக்கு இணையான அந்தஸ்துடன் ,அவருக்கு உதவி செய்யக்கூடிய திறனுடன் அவர் பட நாயகிகள் சமீபத்திய படங்களில் வருகின்றனர். இதில் நயன்தாரா அப்படிப்பட்ட ஓர் ஆளுமையாக வருகிறார்</p><p>முள்ளும் மலரும் படத்தில் அண்ணனுக்காக காதலை மறுக்கத் தயராகும் தங்கை</p><p>இந்தப்படத்தில் தங்கையின் மனமகிழ்ச்சிதான் முக்கியம் என நினைக்கும் அண்ணன்</p><p>காலம் ஏற்படுத்தியுள்ள இந்த மாற்றம் குறிப்பிடத்தக்க ஒன்று</p><p><br /></p><p>ரஜினியின் மேக்அப் , சிகை அலங்காரம் என புதிய தலைமுறை கலைஞர்கள் சிறப்பு. ரஜினியின் பிரமாண்டமான நிழல் தங்கைக்கு எப்படிப் பொருள்படுகிறது வில்லனுக்கு எப்படி பொருள்படுகிறது என்ற ஒப்பீடு இயக்குனரின் பெயர் சொல்லும். ஒளிப்பதிவு தரம்</p><p>இசை பொருத்தமாக இருக்கிறது. பாடல்களில் தியேட்டர் குலுங்குகிறது</p><p>கீர்த்தி சுரேஷ் கண்களில் நிற்கிறார்</p><p>நல்லது செய்ய பொய் சொல்லலாம் என நினைத்து பாட்டி சொல்லும் பொய் தீமையாக முடிகிறது என்பது யதார்த்தமான ட்விஸ்ட்</p><p><br /></p><p>அனைத்து கேரக்டர்களும் அந்தந்த கேரக்டர்களின் தன்மைக்கேற்ப உயர்வுடன் பேசுவது ரசிக்க வைக்கிறது. நாயகனுக்கு மட்டுமே அனைத்தும் தெரியதும் , நாயகி உட்பட அனைவரும் கோமாளிகள் என்ற தேய்வழக்கு தவிர்க்கப்பட்டுள்ளது</p><p><br /></p><p>மொத்தத்தில் அண்ணாத்தே , அருமை</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-44896036270880443792021-10-18T01:54:00.001-07:002021-10-18T01:54:27.382-07:00மக்கள் நாயகன் ராமராஜனுக்கு என்ன ஆச்சு?<p> </p><p>மக்கள் நாயகன் ராமராஜன் குறித்தும் அவர் உடல் நலம் குறித்தும் சில வதந்திகள் பரவின</p><p>இவை தவறு என அவர் விளக்கமளித்துள்ளார்;</p><p>அவர் சார்பில் வெளியான அறிக்கை ;</p><p>ராமராஜனை பற்றி தற்சமயம் தவறான வதந்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் அதை நம்ப வேண்டாம். அவர் பூரண நலத்துடன் இருக்கிறார். இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். ராமராஜன் உடல் நலத்துடனும், மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் பட துவக்க விழாவில் கலந்து கொள்வார்'' </p><p>என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது</p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-89087385241505265872021-07-30T11:23:00.002-07:002021-07-30T11:23:48.652-07:00கோவிஷீல்ட்<p> சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்ததுபோல , சாதாரண கொரானா வைரைசை தடுப்பூசிகள் மூலம் mutation ஆக வைத்து பேரழிவு வைரசாக மாற்றியதில் எனக்கு வருத்தம்தான்</p><p>அதனால் தடுப்பூசி போடவில்லை.</p><p>ஜலதோஷம் போல கொரானா ஒருவாட்டி வந்து சென்றது</p><p><br /></p><p>ஆனாலும் நடைமுறை தேவைக்காக,தடுப்பூசி போட முடிவு செய்தேன்</p><p><br /></p><p>முடிவு செய்த நேரம் பார்த்து தடுப்பூசி தட்டுப்பாடு வந்து விட்டது. எனவே போட முடியவில்லை</p><p><br /></p><p>ஒரு நண்பர் வெளிநாடு செல்ல தடுப்பூசி கட்டாயம் என்ற சூழலில் இருந்தார். அவருக்கு உதவ முடிந்தது. ஆனால் நான் போட்டுக் கொள்ளவில்லை</p><p><br /></p><p>ஒரு வழியாக இன்று போட்டுக் கொண்டேன் ( 30,07 2021 ) </p><p><br /></p><p>அரசு இயந்திரம் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது</p><p><br /></p><p>ஹார்ட அட்டாக வருகிறது , காய்ச்சல் என்றெல்லாம் சிலர் சொன்னார்கள். துரதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த அனுபவங்கள் கிடைக்கவில்லை</p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-143588380504231288.post-40497122137010026462021-06-18T01:33:00.002-07:002021-06-18T01:33:59.278-07:00சிவ சங்கர் பாபா சர்ச்சை− என் பார்வை<p> விருப்பு வெறுப்பின்றி அனைத்து மத அனைத்து வகை ஆன்மிக அமைப்புகளுக்கு செல்பவன் என்ற முறையில் சிவசங்கர் பாபா குறித்து உங்கள் அனுபவம் என்ன என கேட்பவர்களுக்காக இந்த பதிவு</p><p>சில மாணவிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு சரி அல்லது தவறு என சிபிசிஐடி விசாரணைதான் ஒரு தெளிவைத்தரும். அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை</p><p><br /></p><p>இருபது ஆண்டுகள் செயல்படும் பள்ளியில் திடீரென ஏன் இப்போது ஏன் குற்றச்சாட்டு என்பது தெரியவில்லை. ஆனாலும் உண்மை எப்போது வெளிவந்தாலும் நல்லதுதான்</p><p><br /></p><p>சுஜாதா இந்தப்பள்ளிக்கு சென்று , விகடனில் உயர்வாக எழுதியது பலருக்கு நினைவிருக்கலாம்</p><p>வலம்புரிஜான் , மாலன் , சுதாங்கன் என பலரும் உயர்வாகவே தமது பதிவு செய்துள்ளனர்.</p><p>அப்படி ஒரு கருத்துதான் எனக்கும். நானும் அந்த ஆஸ்ரமத்தை சென்று பார்த்துள்ளேன். </p><p><br /></p><p>ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மோசமான அனுபவங்கள் கிடைத்திருக்க்கூடும். அதை என் போன்ற வழிப்போக்கர்கள் ஊர்ஜிதப்படுத்தவோ மறுக்கவோ முடியாது;</p><p> சிவசங்கர் பாபா தப்பி ஓட முயற்சிக்கவில்லை. இதய நோயாளியான அவரால் தப்பி ஓடி ஒளிய முடியாது. விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம் என பள்ளி நிர்வாகம் கூறுகிறது.</p><p>விசாரணையில் உண்மை வெளி வரும்வரை காத்திருப்போம்</p><p>யார் வேண்டுமானாலும் எப்போதும் செல்லலாம் , காணிக்கைகள் இல்லை , அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள் என பிரகாசித்த சம்ரட்சணா அமைப்பும் சுஷில் ஹரி பள்ளியும் வீழுமா அல்லது இந்த திடீர் வெளிச்சத்தால் மேலும் புகழடையுமா என்பதெல்லாம் விசாரணை முடிவில்தான் தெரியும். </p><p>உண்மை வெல்லட்டும்</p><p><br /></p><p>இதில் ஒரு சுவாரஸ்யம்</p><p>மஞ்சள் பத்திரிக்கைகளும் , இணைய ஊடகங்களும் அவர் மீது எந்த ஆதாரமும் இன்றி சேற்றை வாரி இறைத்தன</p><p>சன் டிவி விவாதத்தில் யாகவா முனிவர் , சிவசங்கர் பாபாவை செருப்பால் அடித்தார் என்றெல்லாம் அடித்து விட்டனர்</p><p>சம்ரட்சணா மீது எதிர்கருத்து கொண்டிருக்கும் சன் டிவி , அந்த விவாதத்தை தன் கரூவூலத்தில் இருந்து ஒளி பரப்பியது.</p><p>சன் டிவி நினைத்திருந்தால் , பாபா பேச்சை எடிட் செய்து விட்டு , யாகவா முனிவர் பேச்சைமட்டும் வெளியிட்டு , சிவசங்கர் பாபா இமேஜை காலி செய்திருக்கலாம்.</p><p>ஆனால் அவர்கள் நடுநிலையாக விவாதத்தை முழுமையாக − சிவசங்கர் பாபாவின் பண்பான விளக்கம் உட்பட − ஒளிபரப்பினர்</p><p>அந்த கால,கட்டத்திலக , யாகவா vs சிவசஙகர் பாபா. வென்றவர்,யார் என்ற கேள்விக்கு , தனது பண்பால் வென்றவர் பாபா என பதிலளித்து இருந்தார் லேனா தமிழ்வாணன் ( கல்கண்டு )</p><p>எந்த பொறுப்பும் ஏற்காமல் வெறும் ஹிட்ஸ்களுக்கான பொய்களைப்பரப்பும் இணைய ஊடகங்களை நம்பி அச்சு இதழ்களையும் , தொலைக்காட்சி சானல்களையும் அழிய விட்டுவிடக்கூடாது</p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-143588380504231288.post-30604765658149086512021-06-16T21:50:00.000-07:002021-06-16T21:50:01.855-07:00எழுத்தாளனைத் தாண்டுதல்<p> சாருவின் எழுத்தை ஏன் இன்னும் யாரும் தாண்டிச் செல்லவில்லை என்றொரு விவாதம் சாருவுடனான உரையாடலில் எழுந்தது</p><p>சமீபத்தில் ஜெயமோகன் வாசகர்களால் நடத்தப்பட்ட ஒரு சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் அனைத்தும் ஜெயமோகன் எழுத்தை போலி செய்ய முயல்பவை என்ற விமர்சனம் எழுந்தது</p><p> ஜெயமோகனைத் தாண்ட வேண்டும் என்ற சிலரது விழைவு இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தியுள்ளது</p><p> ஆனால் சாரு இந்த போக்கை ஊக்குவிப்பதில்லை</p><p>சமீபத்தில் சாருவின் நல்லதொரு வாசகரான காயத்ரி எழுதிய கதை ஒன்றை சாரு பகிர்ந்திருந்தார்.</p><p>பெரிதும் வரவேற்பைப் பெற்ற அந்த கதை , வித்தியாசமான கதைக்களம் கொண்டது. வாழ்க்கை பற்றிய கேள்விகள் , மரணம் குறித்த பார்வை என ஆழமான கதை . வித்தியாசமான சடங்குகள் , கலைச்சொற்கள் என புதிய அனுபவம் தந்த கதை.</p><p>சாருவைத் தாண்ட வேண்டும் , அவரை போலி செய்ய வேண்டும் என்ற எத்தனம் சிறிதும் இல்லாததால் வித்தியாசமான வாசிப்பனுபவம் தந்தது</p><p>அதேபோல ராம்ஜி நரசிம்மனின் சிறுகதை . கதையின் கடைசி வரியில் நிகழும் திறப்பு என்ற சிறுகதையின் செவ்வியல் வடிவத்தில் கச்சிதமாக பொருந்தும் கதை. </p><p>இதுவுமே சாரு பாணியில் இருந்து மாறுபட்ட கதை</p><p><br /></p><p>அராத்து எழுதுவதில் சமகால பார்வை , சமகால உறவுச்சிக்கல்கள் என இருக்கும்,கதை சொல்லாடலில் சாருவுக்கே பிடிக்காத அளவுக்கு ஆங்கில கலப்பு இருக்கும் . அந்த பிழைகள் (?!) கதைக்கு ஒரு வித்தியாசமான பரிமாணம் கொடுப்பது வேறு விஷயம்.</p><p>இவருமே சாருவை போலி செய்ய முயல்வதில்லை</p><p>நிர்மலின் அறிவுப்பூர்வமான தர்க்கவியலான எழுத்து வேறுவிதம்</p><p>செல்வகுமார் கணேசன் , கருந்தேள் ராஜேஷ் , யாரையோ குளிர்விக்க சாருவிடம் கோபித்துக்கொண்டு பிரிந்து சென்ற சில எழுத்தாளர்கள் என யாருமே சாருவை தாண்டவோ அவரை நகல் செய்யவோ முயல்வதில்லை</p><p>திருக்குறளை தாண்ட முயலாமல் , தமிழுக்கு தத்தமது பாணியில் வளம் சேர்த்த புலவர்கள் போல ஜீரோ டிகிரியை , ராசலீலாவை , எக்சைல் நாவலை படித்து ஒரு உத்வேகம் பெற்று தமது பாணியில் எழுதுவதே நல்லது. ஜீரோ டிகிரியை தாண்ட வேண்டும் என்பது வேண்டாம் என இவர்கள் நினைக்கிறார்கள்</p><p>அதற்காக எல்லோருமே இப்படி இருக்க வேண்டும் என்பதில்லை</p><p>சிலர் பாலகுமாரனை மாதிரி , சுஜாதா மாதிரி எழுதி பிரபலமாக இருக்கிறார்கள். ஜெயமோகனைத் தாண்ட விரும்புவோரும் உள்ளனர்</p><p><br /></p><p>இரண்டு சிந்தனைகளுமே இருகககட்டுமே ? நல்லதுதானே</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p> </p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-143588380504231288.post-83941010395674790992021-06-12T01:47:00.002-07:002021-06-12T01:47:54.613-07:00நித்யானந்தா அளித்த வைரம்<p> நித்யானந்தா ஒரு காலத்தில் மீடியாவின் டார்லிங் ஆக இருந்தார். அனைத்து பத்திரிக்கைகளிலும் அவரது கட்டுரைகள் அல்லது செய்திகள் வரும். </p><p>விஜய் டிவியில் காலை எட்டுமணிக்கு அவரது சொற்பொழிவு ஒளிபரப்பாகும். அலுவலகத்துக்கு லேட்டாய்ப் போய்த் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என அந்த சொற்பொழிவை கேட்டு விட்டுதான் கிளம்புவேன்</p><p>பிறகு சர்ச்சை கிளம்பியதும் ஊடகங்கள் அவரை கைவிட்டன. நாம் பாரக்கப்போவது இதுவல்ல.</p><p><br /></p><p>மீடியாவில் அவர் பரபரப்பாக இருந்தபோது அவர் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன்.;</p><p>அது எனக்கு மிகவும் உதவியது</p><p>ஒருவன் கடற்கரையில் அமர்ந்தபடி பொழுதுபோக்கிக் கொண்டு இருந்தான். விளையாட்டாக , பக்கத்தில் இருந்த கூழாங்கற்களை கடலில் வீசியபடி இருந்தான்.</p><p>அரைமணி நேரம் ஆனது. பக்கத்தில் இருந்த கூழாங்கற்கள் காலியாகும் நிலையில் கடைசி கற்களை கவனித்து அதிர்ச்சி அடைந்தான். காரணம் , அவை சாதாரண கற்கள் அல்ல . விலை உயர்ந்த வைரக்கற்கள். அதை அவன் மூளை உணர்ந்தாலும் , அரைமணி நேர பழக்கம் காரணமாக கை அனிச்சையாக மேலும் இரண்டை கடலுக்குள் எறிந்தது.</p><p> எஞ்சி இருந்த கடைசிக்கல்லை விரக்தியாகப் பார்த்தான். பெரிய பொக்கிஷத்தையே அல்லவா தொலைத்து விட்டோம் என நினைத்தபடி அதையும் கடலுக்குள் எறிந்து விட்டு கிளம்பினான்.</p><p><br /></p><p>இதுதான் நித்யானந்தர் சொன்ன கதை</p><p>இதன்பிறகு அவர் சொல்லும் விளக்கம் சுவாரஸ்யம்</p><p><br /></p><p>விழிப்புணர்வு இல்லாமையால் அவன் வைரங்களை வீசினான். ஆனால் விழிப்புணர்வு வந்தபிறகாவது நிதானித்து இருந்தால் கடைசி ஒரு கல் அவனுக்கு கிடைத்திருக்கும். அந்த ஒரு கல் அவன் வாழ்க்கைக்கு போதுமானது.</p><p>போனதைப்பற்றி கவலைப்படாமல் , கடைசியாக கிடைத்த ஒரு கல்லை வைத்து அவன் ராஜாவாக வாழ்ந்திருக்க முடியும் என்பது அவரது விளக்கம்;</p><p> காலம் கடந்து விட்டது என்ற எண்ணமே பல பொக்கிஷங்களை நம்மிடம் இருந்து பறித்து விடுகிறது</p><p> நடைப்பயிற்சி நல்லதுதான் சார் , இதெல்லாம் சின்ன வயசுலயே தெரிஞ்சு இருந்தா நல்லா இருந்திருக்கும் , பள்ளிப்பருவத்திலேயே பேச்சுக்கலை ஆர்வம் வந்து இருந்தா கலக்கி இருக்கலாம் , நாலு கழுத வயசாய்ருச்சு இப்ப ஆர்வம் வந்து என்ன பண்றது என நினைத்து பல நல்லவற்றை நாம் பின்பற்றுவதே இல்லை</p><p><br /></p><p>நல்லவற்றை தொடங்க இப்படி நினைக்க வேண்டியதே இல்லை. தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் தனது வயதான காலத்திலும் புதிய மொழிகளை கற்றுக்கொள்ள முயன்றார். இதெல்லாம் சின்ன,வயசில் செஞ்சிருக்க வேண்டியதுஎன நினைக்கவில்லை</p><p><br /></p><p>கல்லூரி முதலாண்டு படிக்கும்போது , கை எழுத்துப் பயிற்சி செய்து எழுத்தை அழகாக்க சோம்பலாக இருக்கும். இதெல்லாம் ஸ்கூல் டேய்ஸ்ல செஞ்சிருக்க வேண்டியது என நினைப்போம்</p><p><br /></p><p>அந்த நினைப்பு கூடாது. எப்போதும் எதையும் கற்கலாம். புதிதாக ஆரம்பிக்கலாம்</p><p>ஒரே மாதிரி வாழாமல் புதிதுபுதிதாக கற்பது வாழ்க்கையை உற்சாகமாக ஆக்கும்</p><p><br /></p><p>எப்போது கேட்டாலும் ஏதாவது ஒன்றை ஆரம்பித்து சில நாட்கள் ஆகி இருப்பது நல்லது</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com1