Pages

Friday, March 19, 2010

மெரினாவில் ஆராய்ச்சி நடத்திய நித்தியானந்தா

எல்லோரும் ஆன்மீகம் ஆன்மீகம் என பேசுவதால் , எனக்கு அதன் மேல் ஒரு வித ஆர்வம் ஏற்பட தொடங்கியது... குறிப்பாக, பகுத்தறிவு வலை பதிவுகள் தான் , சாமிகளை பற்றி அதிகம் பேசி , என் ஆன்மீக வெறியை தூண்டி விட்டன...

ஆன்மீக தத்துவம் பற்றி அறிய , ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் தான் சிறந்தவர் என ஒருவர் வழி காட்டினார் ....

அவர் சொன்ன எழுத்தாளரின் வலை பக்கத்துக்கு சென்றேன்... தத்துவ தரிசனம் , படிவங்கள், தொன்மங்கள் என படித்து கொண்டு இருந்தவன் , என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.... சரி... இதை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கில்லை என புரிந்து கொண்டு, ஒரு புத்தகம் படித்தேன்..அதில், குண்டலினி சக்தி, முக்தி , மந்திரம் என்றெல்லாம் விளக்கி, தியானம் செய்ய சொன்னார்கள்...
இதுதான் மேட்டரா , என சந்தோஷ பட்ட நான் , அடுத்த நாள் அதி காலை , மெரீனா கிளம்பினேன்...

புத்தகத்தில் சொன்ன படி, தியானம செய்ய தொடங்கிய, பத்து நிமிஷத்திலேயே, நெற்றியில் சிவப்பு ஒழி தோன்றியது...ஆச்சர்யத்துடன் கவனித்தேன், .. அது ஒரு சின்ன பையன், விளையாட்டாக அடித்த டார்ச் லைட் என தெரிந்ததும் சற்று வருத்தம்....
சிறிது நேரத்தில், முதுகு தண்டில், குண்டலினி சக்தி வேலை செய்ய ஆரம்பித்தது... ஏதோ ஒரு , சொல்லுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி, மூலாதாரத்தில் இருந்து புறப்பட்டு, மேல் நோக்கி நகர ஆரம்பித்தது....
யாரோ தலையை தொடுவது போல் இருந்தது....

" என்ன தம்பி... முதுகுல ஏதோ பூச்சி ஊருது.. கவனிக்காம தூங்குறீங்களே " ஒரு பெரியவர் விழிப்புணரவு ஏற்படுத்தினார் ...
வெறுப்புடன் எழுந்து, படகில் உட்கார சென்ற நான் , திடுக்கிட்டு நின்றேன்....
என் கண்ணை என்னாலேயே, நம்ப முடியவில்லை... சுவாமி நித்யானந்தர் , ஒரு துணை நடிகை யுடன் , ஏதோ சுவையாக பேசி கொண்டு இருந்தார்.... சற்று முன்பே வராமல் போய் விட்டோமே , என ஏமாற்றமாக இருந்தாலும், இவர் எப்படி, போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு இங்கே வந்தார், என குழப்பமாக இருந்தது...
என் நண்பன் ஜேம்சுக்கு போன் போட்டேன்.... அவனுக்கு இது போன்ற விஷயங்களில் அனுபவம் அதிகம்... அவன் எனக்கு ஒரு ஹிந்தி நடிகை போன் நம்பர் தந்தான்....

நடிகைக்கு போன் போட்டேன்.... "சாமி என் கூட , வட இந்தியாவில் பத்திரமா இருக்கார்... இப்ப பார்க்க முடியாது " என்றார் நடிகை.... :"அவரை , சென்னையில் பர்த்து கொண்டுதான் இருக்கிறேன் " என்றேன் நான்....

"அதுதான் சாமியின் மகிமை" என்று சொல்லி லைனை கட் செய்தார் நடிகை..பணிவிடை செய்யும் அவசரம்....

நித்தி வட இந்தியாவில் இருக்கும் போது, இங்கே எப்படி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார் ..ஒரு வேலை பிரமை யோ என நினைத்தேன்.... ஆனால், அங்கு வந்து விட்ட , ஜேம்சும் அவர் நித்தி தான் என உறுதி படுத்தினான்....

ஒரு வித பரவச நிலை யோடு , ஆட்டோவில் ஏறினோம்.... வழியில் ஒரு பெண் லிப்ட் கேட்டதால் , அவரையும் ஏற்றி கொண்டோம்....
வீடு வந்தது..... காசு எதுவும் வேண்டாம் என்றார் ஆட்டோ ட்ரைவர்... அப்போதுதான் , டிரைவர் முகத்தை பார்த்தேன்.... அட .... அவரும் நித்தி தான்...
ஆட்டோ வேகமாக புறப்பட்டு சென்றது..... அந்த இடத்தில இறங்க வேண்டிய பெண் , இறங்காமலே சென்று விட்டதை தாமத மாகத்தான் உணர்ந்தேன்..

3 comments:

  1. அவர் துடைத் தெறிந்து விட்டு; நடந்தது எதற்கும் நான் பொறுப்பல்ல என நல்ல பிள்ளை வேசம்
    போடுகிறார்.
    இதெல்லாம் அவருக்கு உறைக்காது.

    ReplyDelete
  2. Enna elau articalda. unmaiyaagave nee oru pichchaikkaran thaan. jokaam jokku mannaangatti joke.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]