ஒரு வாரம் ஒரு வேலையாக லீவு எடுத்து இருந்தேன்... அந்த வேலை ஒரே நாளில் முடிந்து விட்டதால், வேறு என்ன செய்வது என தெரியவில்லை.. போர் அடித்தது..
ஆர்வமூட்டும் அளவுக்கு சினிமா எதுவும் ரிலிஸ் ஆக வில்லை.. ராவணன் இரு முறை பார்த்து தொலைத்தாகி விட்டது..
இந்த நிலையில் , திட்டக்குடி என்ற படத்தை பற்றி அண்ணன் கேபிள் சங்கர் எழுதிய விமர்சனம் ஆரவத்தை தூண்டியது.. நெகடிவாக எழுதி இருந்தாலும், பிட் பட ரேஞ்சுக்கு அவர் வர்ணித்து எழுதிய அழகு , மனதை கொள்ளை கொண்டது..
ஆனாலும், ஒரு பிட் படத்தை பார்க்க அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்ற சோம்பலும் இருந்தது...
அப்போதுதான், நண்பர் உண்மை தமிழன் , அவருக்கே உரிய அழகுடன், படம் இலக்கியத்தரம் வாய்ந்தது , சிறுகதை போல இருக்கிறது என்றெல்லாம் எழுதி இருப்பதை பார்த்தும், ஆர்வம் அதிகமானது...
இருவர் வெவ்வேறு விதமாக சொல்வதால், எதுதான் உண்மை என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதற்கு என்னை குறை சொல்ல முடியாது... எனக்கு இந்த வாரம் வேறு வேலை எதுவும் இல்லை...
எனவே கிளம்பினேன் , படத்துக்கு....
அட ஆண்டவா...
எல்லோரும் எதோ கத்தி கொண்டே இருப்பது போல தோன்றியதே தவிர, நான் எதிர்பார்த்த காட்சி எதுவும் வரவில்லை.... ஒன்றும் வித்தியாசமக இல்லை... எல்லா படங்களிலும் இருப்பதுதான்...
சுருக்கமாக சொன்னால், நம்ம டேஸ்டுக்கு இல்லை...
இலக்கியம் மாதிரியும் இல்லை... அட ஆண்டவா..
இந்த படத்தை பொறுமையாக பார்த்து , இதை இலக்கியம் என்று வேறு சொன்ன , நண்பர் உண்மை தமிழனுக்கு , கோயில் கட்டி கும்பிட உத்தேசித்து இருக்கிறேன்...
அனைவரும் நிதி உதவி செய்யுமாறு, பணிவுடன் கேட்டு கொள்கிறேன்...
இந்த கோயிலில் வழிபட்டால், சகிப்பு தன்மை, எதையும் தாங்கும் இதயம் போன்றவை கிடைக்கும்...
கோவில் கட்டுங்க. நான் வேண்டாம்னு சொல்லலை..!
ReplyDeleteஉண்டியல், நிதி வசூலிப்புன்னு மட்டும் இறங்கிராதீங்க..!
என் பேரு கெட்டுப் போயிரும்..!
:-) :-)
ReplyDeleteநிதி வசூல் இல்லாம கோயிலா !!!!
ReplyDelete