எந்திரன் படம் பார்க்கும்போது , சக்தி வாய்ந்த எந்திரன் தமிழ் பண்பாட்டை கட்டி காப்பது ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது .. ராவணனுக்கும் எந்திரனுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு ..அதே போல இந்த படத்துக்கும் ராமாயணத்துக்கும் சில ஒறுமைகள் உண்டு..
1 கதா நாயகன் ராமன், சினிமாவின் சைண்டிஸ்ட் - இருவரும் அறிவாளிகள் .. ஆனால் சண்டைக்கு தயங்குபவர்கள்.. வேறு வழி இல்லாவிட்டால்தான் சண்டை..
2 கதா நாயகன் ஏக பத்தினி விரதன்.. செகண்ட் ஹிரோயின் கிடையாது...
3 உரிய ராஜ்ஜியத்தை, உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் சிலர் செய்யும் சூழ்ச்சியால் பாதிக்கபடுகிறார்கள்..
4 கதாநாயகி , இன்னொருவனால் கடத்தபடுவதை நாயகனால் தடுக்க முடியவில்லை...
5 நாயகனைவிட, கடத்துபவனை நாயகிக்கு பிடிக்கிறது..அனால் அவனை முழுதும் ஏற்க சில விஷயங்கள் தடையாக உள்ளன...
6 அதுவரை நல்லவனாக இருந்த எதிரி, நாயகியால் மனம் மாறி கெட்டவன் ஆகிறான்..
7 சர்வ வல்லமை படைத்த அவன், நாயகியை எந்த கஷ்டமும் இல்லாமல் காக்கிறான்.. அவள் சம்மதம்தான் முக்கியம் என நினைத்து தமிழ் பண்பாட்டை காக்கிறான்..
8 அதில் பத்து தலை..இதில் பல நூறு தலை...
9 அதி மோதிரம் அடையாள சின்னம்... இதில் ரத்தம் அடையாள சின்னம்...
10 இந்த கதையை ராவணன் என்ற பெயரில் எடுத்த போது பிளாப்... எந்திரன் என்ற பெயரில் சூப்பர் ஹிட்
நானும் ராவணன் தான் ;)
ReplyDeleteநானும் ராவணன் தான் ;)
ReplyDeleteha ha .. dangerous
:)
ReplyDeleteஎப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா?
ReplyDelete