Pages

Saturday, December 10, 2011

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா? கவிஞர் செய்த காமெடி

அவர் ஓர் இலக்கியவியாதி .. மன்னிக்கவும் ..இலக்கியவாதி..

தானே சில கவிதைகள் எழுதி தானே படித்து மகிழ்ந்து வந்தார்.
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக ,  புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவர் இவர் கவிதைகளை பற்றி எழுதவே பரவலான அறிமுகம் பெற்றார்.

இந்த நிலையில் தானே ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தால் நிறைய கவிதைகள் எழுதலாமே என தோன்றியது, ஆனால் அதற்கு காசு வேண்டுமே?

எனவே குறுக்கு புத்தியுடன் ஒரு திட்டம் வகுத்தார்.

தான் வேலை செய்து வந்த பத்திரிக்கையின் ரகசியங்களை , அரசியல்வாதி ஒருவருக்கு தெரிவிக்கும் ஒற்றராக மாறினார். கை நிறைய காசு பார்த்தார்.

அந்த பத்திரிகையில் இருந்து கொண்டே , புது பத்திரிக்கையை வளர்க்கும் துரோகத்தில் ஈடுபடலானார்.

காலப்போக்கில் , அந்த பத்திரிக்கையினர் சுதாரித்து கொண்டு இவரை வெளியே அனுப்பினர்.

அதன் பின் சொந்த பத்திரிக்கையில் முழு கவனம் செலுத்தினார். ஆனாலும் பத்திரிகை விற்கவில்லை..

இவரது நண்பர் ஒருவர், அபாரமான எழுத்தாற்றல் மிக்கவர்.
இவர் நிலையை கண்டு பரிதாபபட்டு, காசு  வாங்காமல் பல்வேறு கட்டுரைகள் எழுதி கொடுத்தார்.

இந்த உத்வியால் பத்திரிகை வளர தொடங்கியது.

ஆனால் இன்னொருவரால் தான் வளர்ந்தது ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கவே , அந்த எழுத்தாளரை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த துரோகத்தை எதிர்பார்க்காத எழுத்தாளர் அந்த நட்பை முறித்து கொண்டார்.

இதெல்லாம் பழைய கதை.

சமீபத்தில் இன்னொரு காமெடி அரங்கேறியது.

ஒரு  நிகழ்ச்சிக்கு அந்த கவிஞர் அழைக்கப்பட்டார்.

அவர் தானும் போகாமல், அந்த நிகழ்ச்சிக்கு செல்ல இருந்த இன்னொரு எழுத்தாளரையும் தடுத்து விட்டார்.

ஆனாலும் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என கணக்கு போட்ட அந்த கவிஞரின் இந்த செயல்தான், இலக்கிய வட்டராங்ககளில் இப்போதைய காமெடி .


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]