Pages

Tuesday, July 31, 2012

கமல் ஹாசனும் சாருவும் - ரோலண்ட் பார்த்

சில சினிமாக்களை ரசித்து பார்த்து இருப்போம். கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் , இதையா ரசித்தோம் என நமக்கு தோன்றும். அதே போலத்தான் புத்தகங்களும்.

எழுத்தின் வகைகள் குறித்து ரோலண்ட் பார்த் நிறைய பேசி இருக்கிறார். படைப்பு என்பது இரு வகைகளில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.  ஒன்று வாசகனை / ரசிகனை சந்தோஷப்படுத்தும் பொருட்டு படைக்க்கப்படுவது. இன்னொன்று வாசகனை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லாமல், வாசகன் எதிர்பாராத ஒன்றை கொடுப்பது.   இந்த வகை படைப்புகளே வாசகனே உயர்த்தும். அவன் தன் பங்குக்கு கொஞ்சம் உழைத்தால் , இன்பத்தின் உச்ச நிலையை அடையலாம். தியானத்தின் போது கிடைக்கும் பரவச நிலை , ஆர்கசம் போன்ற ஒரு உன்னத நிலையை அடையலாம் என்கிறார் அவர்.

      என்ன சொல்கிறார் அவர்? சில உதாரணங்களை பார்க்கலாம்.

 கமல் ஹாசன் படங்களை பார்த்தால், அவர் எப்படி நடிப்பார் , கதை எப்படி இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.  நமக்கு தெரியும் என்பது அவருக்கும் தெரியும். ஆனால் அவர் அதே பாணியைத்தான் தொடர்வார். காரணம் , நாம் எதிர்பார்ப்பது போலவே அவர் படம் இருப்பதால் , நமக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. உலகத்தரத்திலான படம் ஒன்றை பார்த்து விட்டோம் போல என நினைத்து மகிழ்ந்து கொள்கிறோம்.

     சிரித்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பை அழுகையாக மாற்றுவார். பேசிக்கொண்டிருக்கும்போது சட் என பேச்சு வராமல் நிறுத்துவார். பார்க்கும் நமக்கு கண்டிப்பாக ஆஸ்கார் அவார்ட் இவருக்குதான் என தோன்றும். மேக் அப் போட்டுக்கொண்டு ஹீரோ , வில்லன் , காமெடியன் , சைட் ஆக்டர் என ஒரே படத்தில் எல்லா வேடங்களையும் செய்வார்.  நமக்கு பிரமிப்பாக இருக்கும்.

நமது இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொருட்டே அவர் படங்கள்.  இதே போல எழுத்திலும் உண்டு.

ஆனால் வாசகனை அல்லது ரசிகனை திருப்தி படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் , நமக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தும் படைப்புகளும் உண்டு. இவை முதல் பார்வையில் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதது போல இருக்கும். சில சமயங்களில் பிடிக்காமலும் போகக்கூடும். நமக்கு சவால் விடுவது போல இருக்கும். கொஞ்சம் முட்டி மோதி போராடினால், ஏதோ ஒரு கணத்தில் அந்த படைப்பின் ஆன்மா நம் கண் முன் பளிச்சிட்டு விடும். அந்த மந்திர கணத்தைத்தான் ரோலண்ட் பார்த் பேரின்ப நிலை என்கிறார்.

சாருவின் சீரோ டிகிரியை நான் முதன் முதலில் படிக்கையில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதுவரை நான் படித்த நாவல்கள் , எழுத்துகளில் இருந்து முற்றிலும் வேறு பட்டு இருந்தது. எந்த வகையிலும் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

அதன் பின் , சில காலம் இடைவெளியில் அவ்வப்போது வாசித்து இருக்கிறேன்.  ஒரு வாசிப்பின்போதுதான் , அந்த நாவலின் ஆன்மாவை என்னால் தரிசிக்க முடிந்தது. அந்த கணத்தை என்னால் மறக்க இயலாது.


படைப்பை பொருத்தவரை படைப்பாளியை விட வாசகனே முக்கியம் என்கிறார் ரோலண்ட் பார்த்.  ஒரு நல்ல படைப்பு எண்ணற்ற ஜன்னல்களை திறந்து விடக்கூடும். படைத்து முடித்தவுடன் , அந்த படைப்பாளி இறந்து விடுகிறான் என உருவகமாக கூறுகிறார் அவர். அதாவது அந்த படைப்பின் அர்த்தத்தை வாசகன் தான் தேடி அடைய வேண்டும்.

புதிய சிந்தனைகள் , புதிய பார்வைகளை ஒரு படைப்பு அளிக்க வேண்டும் . அதே சமயம் ஒரே வடிவத்தை மீண்டும் மீண்டும்  பயன்படுத்தியும் மாயஜாலம் நிகழ்த்த முடியும் என்கிறார்.

   நேரம் கிடைக்கையில் ரோலண்ட் பார்த் நூல்களை படித்து பாருங்கள்


1 comment:

  1. ஆமாம், அந்த நாவல், கோரமான கனவுகளின் மொழிப்பெயர்ப்பு.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]