Pages

Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் சிக்கலுக்கு சுமூக தீர்வு- கமல், தியேட்டர் அதிபர்கள் சந்திப்பில் உடன்பாடு



விஸ்வரூபம் பட சர்ச்சை சுமுகமாக முடியும் நிலை உருவாகியுள்ளது.
திரையரங்குகளில் வெளிவரும் முன்பே டி டி எச் மூலம் ஒளிபரப்பும் முயற்சி வட மாநிலங்களில் செய்து பார்க்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.
கமல் இதை தமிழ் நாட்டில் செய்து பார்க்க முயன்றார். ஆனால் எதிபார்த்த அளவு புக்கிங் ஆகவில்லை என கூறப்படுகிறது. திரையரங்களிலும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே டி டி எச் மூலம் ஒளிபரப்பு என்பதில் சமரசத்துக்கு இடமேயில்லை என்ற கமல் , சற்று இறங்கி வந்து பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டார். 

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய அலுவலகத்தில், தியேட்டர் அதிபர்கள் நேற்று இரவு சந்தித்து பேசினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் பட அதிபர் கேயார், தமிழ்நாடு திரையரங்க சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இரவு 7 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 10 மணி வரை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவடைந்து வெளியே வந்த கமல்ஹாசன், இரு தரப்பினரும் சந்தித்து பேசினோம். நாளை (இன்று) மீண்டும் சந்தித்துப்பேச இருக்கிறோம் என்றார்.அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூறும்போது, முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் முதலில் ரிலீஸ் செய்யப்படும். ரிலீஸ் தேதி பற்றி, நாளை (இன்று) மீண்டும் சந்தித்து பேசியபின் அறிவிக்கப்படும் என்றார்கள்.

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]