Pages

Sunday, May 19, 2013

இரு வகை பார்வைகளை முன் வைக்கும் திரைப்படங்கள்

1.   இறையன்பு ஐ ஏ எஸ் தன் புத்தகம் ஒன்றில் முக்கியமான சம்பவம் ஒன்றை சொல்கிறார்.

பண்டைய கிரேக்க நாட்டில் ஒரு பிராமாண்டமான சிலை ஒன்று அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. உலகம் அழியும் வரை பெயர் சொல்லும் வகையில் அந்த சிலை இருக்க வேண்டும் என்பது திட்டம். பல்லாண்டுகள் பல பேர் உழைத்து , நினைத்து பார்க்க முடியாத பெருஞ்செல்வம் செலவிட்டு , சிலை அமைத்தார்கள். ஒரு வழியாக அமைத்து முடித்து விட்டு ,  அடுத்த நாள் திறப்பு நாளுக்கு தேதி குறித்து விட்டு நிம்மதியாக உறங்க சென்றார்கள்.

அடுத்த நாள் சிலை திறப்புக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி. அந்த சிலை சிதைக்கப்பட்டு இருந்தது, அவர்கள் கனவு , உழைப்பு நொறுக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க .....


சில நேரங்களில் சில பதிவர்கள்- ஓர் அறிமுகம்

இன்னும் ஒரு வார காலத்துக்கு வலைச்சரத்தில் எழுத இருக்கிறேன். பதிவர்களைப்பற்றிய என் பார்வையை பகிர இருக்கிறேன்.

படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.

2. எல்லா விஷ்யங்களுமே முழுமையை நோக்கி  அழைத்து செல்வதாக இருக்க வேண்டும் என்பது ஒரு பார்வை. எல்லா விஷயங்களுமே அதன் அளவில் முழுமையானதுதான் என்பது ஒரு பார்வை.

இரண்டு பார்வைகளுமே எனக்கு பிடித்தவைதான்.
sanshiro sugata என்ற அகிரா குரோசாவின் படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. தன் ஆரம்ப கால படத்திலேயே தன் ஆளுமையை காட்டி இருப்பார் அவர்.
தற்காப்பு கலையை கற்க ஆரம்பிக்கும் நாயகன் , அதன் மூலம் வாழ்க்கையையே அறிந்து கொள்கிறான் என்பது கான்சப்ட்.

தீவிரமாக ஒரு செயல் உயர்னிலை அடைந்து நம்மை வேறு ஓர் இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது ஒரு பார்வை.  உதாரணமாக பாலுணர்விலேயே சிக்கி கிடைக்காமல் , அதன் மூலம்கூட உயர்னிலை அடைய முடியும் என்பதற்காகத்தான் கலைகள் , சிற்பங்கள், சில தியான முறைகள்.

ஆனால் ஒரு வேலையை முழுமையாக செய்தால் ,ஓர் உணர்ச்சியை முழுமையாக துய்த்தால் அதுவே போதும். அதன் மூலம் வேறு எதையும் அடைய வேண்டியதில்லை என்பதும் ஏற்கத்தக்கதாகவே இருக்கிறது.

லாஸ்ட் டெம்ப்டேஷன் படத்தின் கான்சப்ட் இதுதான், அன்பு செலுத்து ..அன்பு செலுத்தினால் உனக்கு நல்லது நடக்கும் என்பதற்காக அல்ல.  எதையும் எதிர்பாராமல் ஒரு ரோஜா , தன் இயல்புப்படி மணம் வீசுகிறதே ..அது போல..


ஷார்ட் ஃபில்ம் அபவுட் லவ் என்ற படமும் இந்த பார்வையையே முன் வைக்கிறது. காதல் வெற்றி , காதல் தோல்வி என்றெல்லாம் சொல்கிறேமே..

காதலின் இலக்கு என்ன,,,  ஊர் சுற்றுவதா? கல்யாணமா? புலனின்பமா?  எதை அடைந்தால் காதல் வெற்றி என சொல்ல முடியும்?

காதலுக்கு இப்படி இலக்கு தேவை இல்லை. காதலிக்க , அன்பு செலுத்த தெரிந்து விட்டால், அந்த உணர்வை அனுபவித்து விட்டால் போதும், அதன் மூலம் எதையும் அடைய வேண்டியதில்லை என்ற பார்வையை முன் வைக்கிறது படம். காதல் அதன் அளவில் பரிபூரணமாக இருக்கிறது.


இன்னும் சில நல்ல படங்களை பார்த்து வருகிறேன். விரைவில் எழுதுவேன்.


3. அறிவியல் புனைவுகளை பலர் ரசித்து பாராட்டி இருந்தார்கள். மேலும் சில எழுத இருக்கிறேன்.

4. போரும் அமைதியும், எல்லை காந்தியின் சுய சரிதம் போன்ற சில புத்தகங்கள் படித்து முடித்தேன். அதைப் பற்றியும் எழுதுவேன்.

1 comment:

  1. வாழ்த்துக்கள்...நல்ல படைப்புகளை அறிமுகம் செய்ய...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]