Pages

Sunday, June 29, 2014

ராமன் தேடிய சீதை ( இட்டாலோ கால்வினோ சிறுகதையின் சுருக்கப்பட்ட வடிவம்)


 அந்த அடுக்கு மாடி கட்டடத்தின் கீழே நின்று கொண்டிருந்தேன்..கைகளை குவித்து “ தெரசா “ என சத்தமான குரலில் அழைத்தேன்..  எந்த சலனமும் இல்லை..   மீண்டும் கத்தினேன்..ம்ஹூம்..
வழிப்போக்கர் ஒருவர் என்னை பார்த்து சொன்னார் “ சார்..இவ்வளவு மெதுவா கத்தினா மேல் மாடில கேட்காது.. இருவரும் சேர்ந்து அழைப்போம் “ என்றார்.. இருவரும் சேர்ந்து ஒருமித்த குரலில் கத்தினோம்.. “ தெரசா ஆஆஅ “...ம்ஹூம் .. அவள் வரவில்லை..

இன்னும் சிலர் கூடினர்.. உதவிக்கு வந்தனர்.. எல்லோரும் சேர்ந்து கத்தினோம் “ தெரசாஆஆஆஆஆஅ “ பயனில்லை.. சிறிது நேரத்தில் மேலும் சிலர் கூடி விட்டனர்..

ஒன் டு த்ரீ சொல்லி ஒன்றாக கத்தினோம்...

மீண்டும் மீண்டும் முயன்று பார்த்தோம்..பயனில்லை

“ தெர்சா மேலே தான் இருக்கிறாளா.. எங்காவது போய் விட்டாளா “ கேட்டான் ஒருவன்..

“ தெரியலையே “ என்றேன் நான்,,

” சாவி இல்லாமத்தான் மேலே போக முடியுமா கத்துறீங்களா “ கேட்டான் ஒருவன்..

“ சாவி இருக்கு .இந்த வீட்டு சாவி இல்லை.. என் வீட்டு சாவிதான் இருக்கு... “ என்றேன் நான்..

அப்ப இங்கே யாரு இருக்கா சற்று எரிச்சலாக கேட்டான் ஒருவன்,,

தெரியலையே என்றேன் நான்,,

தக்காளி..அப்ப ஏண்டா தெரசா தெரசானு கூப்பிடுற என்றான் ஒருவன்...

அந்த பேர் பிடிக்கலைனா வேறு பேரு சொல்லுங்க ..கூப்பிட்டு பார்ப்போம் என்றேன் நான்,,

தக்காளி,.,விளையாடுறியா என்றார் கூட்டத்தில் ஒருவர்..

 ச்சே ச்சே நான் ஏன் விளையாடபோறேன் என அமைதியாக சொன்னேன்.

சரி சரி..கடைசியாக ஒரு முறை கூப்பிட்டு பார்ப்போம்...வரலைனா சங்கத்தை கலைப்போம் என ஒருவர் சொன்ன யோசனையை கேட்டு கடைசியா கத்தினோம் “ தெரசாஆஆஆ “

பயனில்லை.. கூட்ட்டம் கலைந்தது...

நானும் அங்கிருந்து கிளம்பினேன்,,

ஏதோ குரல் கேட்டது போல இருந்தது “ தெரசாஆஆஆ ”

எவனோ ஒருவன் மனம் தளராம டிரை பண்றான் போல...

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]