Pages

Tuesday, July 22, 2014

வேலை இல்லா பட்டதாரி - சதுரங்க வேட்டை . ஓர் ஒப்பீடு


தமிழ் சினிமாவை அழித்து வருவது மசாலா படங்கள் அல்ல.. மாற்று சினிமா என்ற போர்வையில் வெளிவரும் ஏமாற்று சினிமாக்கள்தான் தமிழ் சினிமாவை உருப்பட விடாமல் செய்கின்றன.

சமீபத்தில் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் இரண்டு படங்களில் ஒன்று விமர்சகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது ..அது சதுரங்க வேட்டை..  இன்னொரு படம் வேலை இல்லா பட்டதாரி.. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது..

கிராமத்தில் இருந்து வந்த ஒருவன் முதன்முறையாக ஜூவில் யானையை பார்த்தான்.. இப்படி ஒரு விலங்கு இருக்க வாய்ப்பில்லையே என குழம்பினான். அதுபோல சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற டெம்ப்ளேட் சிந்தனையில் இருப்பவர்கள் , வேலை இல்லா பட்டதாரியின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் , புரிந்து கொள்ள முடியாமல் திகைக்கின்றனர்.. சுவாரஸ்யமான படம் என்றால் சில இலக்கணங்கள் வேண்டும் என எங்கேயாவது படித்து விட்டு , அதன்படி இந்த படம் இல்லையே..பிறகு எப்படி ஓடுகிறது என குழம்புகிறார்கள்..  அந்த இலக்கணங்கள்படி எடுக்கும் படங்கள் ஓடுவதில்லையே என்பதும் அவர்களுக்கு குழப்பமாக இருக்கிறது..

சராசரி ரசிகனின் பார்வையில் இரண்டு படங்களின் வெற்றியையும் அலசுவது முக்கியம்..

சதுரங்க வேட்டை படம் அதிரடியாக ஆரம்பிக்கிறது...ஆரம்பமே சுவாரஸ்யம்.. செட்டியாரை ஃபிராடு செய்து ஏமாற்றுவது அட என சொல்ல வைக்கிறது... ஆனால் அதை தொடர்ந்து சுவையான திருப்பங்கள் எதுவும் ஏற்படுவதில்லை..   அந்த எதிர்ப்பும் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோ செய்யும் ஃபிராடு வேலையின் தொகுப்பாக படம் செல்கிறது...

சோகமான அம்மா  ஃபிளாஷ்பேக் , ஹீரோயினின் அன்பால் ஹீரோ திருந்துவது என்பது போன்ற வழக்கமான காட்சிகளை வைத்து படத்தை ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்து விட்டார்கள்..  ஒரே பாடலில் பணக்காரன் ஆவது போல , ஒரே ஃபிளாஷ்புக்கில் சர்வ வல்லமை பொருந்திய அறிவாளியாகி விடுகிறார் ஹீரோ..

ஆனால் இந்த ஃபார்முலா படத்தை வித்தியாசமான படம் போன்ற தோற்றத்தை கொடுத்ததில் இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.. வசனங்கள் அபாரம்..

நான் யாரையும் ஏமாற்றவில்லை.. ஏமாற விரும்புபவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன்..

தமிழ் நாட்டை சிங்கப்பூர் ஆக்குவேன் என சொல்லி ஓட்டு வாங்குகிறார்கள்..ஆனால் செய்வதில்லை..அவர்கள் மேல் வழக்கு போட முடியுமா போன்ற வசனங்கள் கைதட்டல் வாங்குகின்றன..
ஆனால் இதெல்லாம் விஜயகாந்த் ஃபார்முலாதான்..

வேலை இல்லா பட்டதாரி எப்படி இருக்கிறது..

வேலை இல்லாத இளைஞர் , கண்டிப்பான அப்பா , பாசமான அம்மா, பக்கத்து வீட்டு இளம்பெண் என பல முறை பார்த்த கதை.. வித்தியாசமான படம் என பம்மாத்து செய்யாமல் எடுத்தது முதல் வெற்றி...  இன்னும் சொல்லப்போனால் அந்த ஃபார்முலாவை ஒவ்வொரு கட்டத்திலும் கிண்டல்தான் செய்திருக்கிறார்கள்...  சண்டை காட்சியில் சண்டையை கிண்டல் செய்வது , பாடலை கிண்டல் செய்வது செம ரகளையாக படம் இருக்கிறது.. அம்மா செண்டிமெண்டை வைத்து அழ வைக்க முயலவில்லை.. காதல் காட்சிகளும் வெகு இயல்பு,,,,  உன்னத காதல் என்ற பம்மாத்தெல்லாம் இல்லை... பாடல்கள் பட்டாசு,,,

இப்படிப்பட்ட படங்களும் தேவை... சதுரங்க வேட்டை போன்ற புத்திசாலித்தனமான படங்களும் தேவை...

புத்திசாலித்தனமும் இல்லாமல் , மக்களை கவரும் அம்சங்களும் இல்லாமல் வெளிவரும் ஃபேக் படங்கள்தான் ஒழிய வேண்டும்..




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]