Pages

Friday, October 31, 2014

ஒரு மொண்ணை தன்னை மொண்ணை என உணர்ந்த கணம்

ஒரு மொண்ணை தன்னை  மொண்ணை என  உணரும்போது , உலகில் ஒரு மொண்ணையின் எண்ணிக்கை  குறைகிறது..


அந்த காலத்தில் கைகளால் தண்ணீர் எடுத்து பருகி வந்தனர். ஒரு நாள் குவளை கண்டுபிடிக்கப்பட்டது..  வீணாகாமல் குடிக்க முடிந்தத்தால் குவளை பிரபலம் ஆனது. காலப்போக்கில் குவளை இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டது.. ஆடம்பரமான குவளைகள் , குடிப்பதற்கான வழி முறைகள் , அதை சொலித்தரும் நிறுவனங்கள் என வளர்ந்தன..  தண்ணீர் குடிப்பதை விட குவளையே முக்கியமாக போனது..  குடிக்க தேவை இல்லாதபோது குவளையில் எதையாவது ஊற்றி குடிக்க ஆரம்பித்தனர்.

ஒருவன் இதையெல்லாம் பார்த்து சுஸ்த்தாகி விட்டான். இனி குவளை வேண்டாம் , சுடுகாட்டில் கிடைக்கும் மண்டையோட்டை பொறுக்கி வந்து அதில்தான் இனி குடிப்பேன் என ஆரம்பித்தான்.. அவனை  எல்லா மொண்ணைகளும் கிண்டல் செய்தனர்... அவன் பயப்படவில்லை..

அப்போது இன்னொருவன் வந்தான்.

” தம்பி நீ செய்வதை வரவேற்கிறேன். குவளையின் மீதான மூடத்தனமாக ஈர்ப்பை மறக்க செய்ய இது நல்ல வழி “ என்றான்.

“ அப்பாடா.. என்னை நீயாவது புரிந்து கொண்டாயே”

“ ஆமா. சரி.. ஆனா இப்படி மண்டை ஓட்டை தப்பு தப்பாக பயன்படுத்தக்கூடாது..   குறிப்பிட்ட அளவு , குறிப்பிட்ட வயது , குறிப்பிட்ட நிறம் கொண்ட மண்டை ஓடுதான் பயன்படுத்த வேண்டும் என விதி கொண்டு வர வேண்டும். 99 நாட்கள் குவளையில் இருந்து விடுதலை என்ற சவாலை ஏற்க தயாரா என அவர்கள் ஈகோவை தூண்டிவிட்டு, எல்லோரையும் இதற்கு மாற்ற வேண்டும் ..எப்பூடீ ? “ 

திகைத்தான் நம் ஆள்..

” ஒரு மொண்ணைத்தனத்தில் இருந்து இன்னொரு மொண்ணைத்தனத்துக்கு மாறுவது நிஜமான மாற்றம் அன்று “ என்றபடி மண்டை ஓட்டை எறிந்துவிட்டு , கைகளால் நீரை பருக ஆரம்பித்தான்..

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]