Pages

Tuesday, December 2, 2014

எழுத்தின் மாயாஜாலம் - அனல் பறக்கும் எக்சைல் முன் பதிவு


ரஜினி படத்தின் முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கட் வாங்குவது சாருவின் எக்சைல் நாவலுக்கு ஏற்பட்ட பரபரப்பு உண்மையிலேயே ஆச்சர்யப்பட வைத்தது. ஒவ்வொருவரும் இரன்டு அல்லது மூன்று புத்தகங்கள் ஆர்டர் செய்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன் ..

சமீபத்தில் நிர்மல் சென்னை வந்திருந்தார் . புத்தகம் வரும் முன்பே அதன் சில பகுதிகளை படித்து விட்ட அதிர்ஷ்டசாலிகளில் அவரும் ஒருவர்.  இப்படி ஒரு புக் தமிழில் வந்ததே இல்லை என்றார் அவர். ஒரு விஷுவல் ட்ரீட் காத்திருக்கிறது என்றார்..  தக்காளி, இதென்ன சினிமாவா?  இதில் என்ன விஷுவல் என கேட்டேன்..  தமிழின் முதல் விஷுவல் நாவலாக இது இருக்கக்கூடும்.... அதுதான் எழுத்தின் ரச்வாதம் என்றார்..    அவர் சொல்லும்போது அவர் அடைந்த பரவசத்த்தை வார்த்தையில் வடிக்க முடியாது...  நாம் எப்ப வாசிக்க போகிறோம் என ஏங்க வைத்து விட்டார்.

இது வரை இல்லாத அளவுக்கு அதிரடி தள்ளுபடியில் முன் பதிவு என்ற திட்டம் தமிழ் இலக்கியத்தின் முக்கிய நிகழ்வாகும்..  லாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுக்க ஒப்புக்கொன்ட கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றி.. கிழக்கு பதிப்பக வரலாற்ரில் இல்லாத அளவுக்கு முன் பதிவு ஆர்டர்கள் குவிகின்றன என கேள்விப்பட்டது மன நிறைவு ஏற்படுத்தியது..

நாவல் குறித்து நிர்மல்


சாருவின் எக்ஸைலை எப்படி வாசிக்க வேண்டும்;

மற்ற நாவல்களைப் போல கோடிட்டுக் கொள்ள உங்களுக்கு பிடித்த வரிகள் எதுவும் இருக்காது.

மனதை பிசைய வைக்கும்

நெஞ்சை பிழியும் வார்த்தை ஜாலம் கிடையாது.

கதாபாத்திரங்கள் தனக்கு தானே பேசி தங்களை உங்களுக்கு புரிய வைத்தல் இருக்காது,

எங்காவது நாவலில் உங்களை திவை திருப்பி ஒருவித சஸ்பென்ஸ் இருக்காது.

இதுவரை யாருக்கும் புரியாத தமிழில் இருக்காது,

உங்களுக்கு அட்வைஸ் எதும் கிடைக்காது

திருப்புமுனைகள் என எதுவும் இருக்காது.

ஒவ்வரு பக்கத்தையும் ஒரு சினிமா பார்ப்பது போல இருக்கும்




 நாவல் குறித்து லக்கி யுவா 






சாருவின் ’புதிய எக்ஸைல்’, தமிழ் ஹிந்துவில் ஒரு பகுதி வாசித்தேன்.

கலக்கி விட்டார்.

ஃப்ளோரான்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் பின்நவீன நகர வாழ்வியல் சூழல். வளர்ப்பவளின் பெயர் அறுபதுகளின் அரதப்பழசான ‘பெருந்தேவி’. நவீனத்துக்கும், பின்நவீனத்துக்குமான முரண், போர், இணைப்பு என்று தொடரும் சாருவின் சலிக்காத முயற்சிகளில் அடுத்த மைல்கல்.


தனித்துவ மொழிக்காக அவர் நிரம்ப மெனக்கெடுவதில்லை. அதுவே சரளமாக வந்து விழுகிறது. அதை அடுக்குவதில் சாரு காட்டும் கச்சிதம்தான் அவரது அடையாளம்.

இந்த பகுதியை வாசித்தவரை சாரு மேஜிக் மீண்டும் நிகழ்ந்திருப்பதாகவே படுகிறது. வாழ்த்துகள்!

//நட்சத்திரங்களின் குளிர்மை, காற்று, மண்ணின் மணம், மரம், மகரந்தத் துகள், கடல், வானம், எரிமலை, பிரபஞ்ச வெளி, மேகம், மலையின் தனிமை, புல்லாங்குழலின் இசை, குழந்தையின் முதல் குரல், மரணமடைந்தவனைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும் எரிதழல், சூரிய ரேகை, நீரோடையின் சலன சங்கீதம், மழை, பூரண நிலவு, பசுவின் குரல், தவளைச் சத்தம், எரிந்து தணிந்த வனம், ஆலம் விழுது, அரச இலை, உறைபனி, அகல்விளக்கு, மலர், தென்றல்...//

சாருவின் மொழி அமரத்துவத்தை எட்டிவிட்டது. அதற்கு சாவே இல்லை.




____________________________________________________________________

 நாவல் ஆர்டர் செய்ய 

1.) கிழக்கு : https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html
தொடர்புக்கு: 9445901234, 9445979797
2.) Namma Books:
http://nammabooks.com/Buy-Charu-Nivedhi…/exile-new-pre-order
தொடர்புக்கு: 9843931463
3.) Chennai Shopping:http://www.chennaishopping.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%…/…/
தொடர்புக்கு: 044-43559493
4.) We Can Shopping:
http://www.wecanshopping.com/…/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%…
தொடர்புக்கு: 9003267399





No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]