Pages

Friday, February 27, 2015

விறுவிறுப்பற்ற உலக கோப்பையும் ஒலவையாரும்


மயிலைப்பார்த்த வான் கோழி டான்ஸ் ஆட ஆசைப்பட்டது போல் , கால் பந்து உலக கோப்பை பாணியில் கிரிக்கெட் நடத்த முயன்று அசிங்கப்பட்டு விட்டார்கள்.

கால் பந்தில் கால் இறுதிக்கு எந்த எட்டு அணிகள் வரும் என்பதில் ஒரு பரபரப்பு இருக்கும்... ஆனால் கிரிக்கெட் ஆடுவதே எட்டு நாடுகள் என்பதால் , கால் இறுதிக்கு வரும் அணிகள் எவை என்பதில் பெரிய சஸ்பென்ஸ் இல்லை...

ஆனால் இந்த அளவுக்கு விளம்பரம் இல்லாமல் நடந்து வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

தமிழகம் - மகாராஷ்ட்ரா... மும்பை- கர்னாடகா அணிகள் அரை இறுதியில் மோதுகின்றன..

பல முறை இறுதி வரை வந்து கோப்பையை தவற விட்ட தமிழகம் இம்முறையாவது வெல்லுமா என பார்க்க வேண்டும்..

காலிறுத்க்கு வரும் எட்டு என்ற எண்ணிக்கை சித்தர் பாடல்களில் முக்கிய இடம் வகிப்பதை பார்த்திருக்கலாம்...

எட்டு எட்டாய் மனித வாழ்க்கையை பிரிச்சுக்கோ என பாட்ஷாவில் ரஜினி பாடுவாரே.. அது சித்தர் பாட தாக்கம்தான்..

ஒரு முறை ஒட்டக்கூத்தர் ஔவையாரை கிண்டலாக பேசி ஒரு விடுகதை போட்டார்.

அவ்வையும் சளைக்கவில்லை..கேலியாக பதில் சொன்னார்

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது




எட்டு என்பது தமிழில் அ என்ற எழுத்தையும் கால் என்பது வ என்ற எழுத்தையும் குறிக்கும்...


அதாவது அவ லட்சணமே..



எமனின் பரி என்பது எருமை..




பெரியம்மை எனும் மூதேவியின் வாகனம் கழுதை..

அவலட்சணமே,, எருமையே. கழுதையே..குட்டிச்சுவரே... யாரைப்பார்த்து என்ன பேச்சு பேசி விட்டாய்... என கேட்டார்.

அல்லது ஆரை என்பதே நீ கேட்டதுக்கு பதில் என சொன்னதாகவும் எடுத்துக்கொள்ளலாம்///



இந்த பாடலில் இருக்கும் சுவாரஸ்யம்கூட உலக கோப்பையில் இல்லை

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]