Pages

Monday, May 11, 2015

இணைய மொண்ணைகள் , நீதி கதை , கண்ணதாசன் - மிக்சர் போஸ்ட்

தனக்கு பின் தன் நிறுவனத்தை யாரிடம் ஒப்படைப்பது என யோசித்தார் முதலாளி.. மூன்று பேர் சம அளவு திறமையுடன் வாரிசாகும் தகுதியுடன் இருந்தனர்.. மூவரையும் அழைத்தார்.. சில விதைகளை கொடுத்தார்... மூவருக்கும் கொஞ்சம் நிலம் தரப்படும்... அதில் யார் அதிக விளைச்சல் காட்டுகிறீர்களோ அவனெ அடுத்த தலைவன்... மூவரும் ஒப்புக்கொண்டனர்,.
குறிப்பிட்ட காலத்துக்கு பின் முதலாளி போய் பார்த்தார்... அவர் கொடுத்த தானியம் ஒருவனது நிலத்தில் வளர்ந்து மணம் வீசியது.. இன்னொருவன் நிலமோ ஒன்றுமே இல்லாமல் சும்மா கிடந்தது..இன்னொருவன் நிலத்தில் அவர் கொடுக்காத இன்னொரு வகை தானியம் விளைந்து இருந்தது..
மூவரையும் அழைத்தார்.... நான் கொடுத்த விதைகள் வேக வைக்கப்பட்டவை...உங்கள் நேர்மையை சோதிக்கவே அப்படி செய்தேன்... எதுவும் விளைவிக்காமல் , காலி இடமாக வைத்து இருப்பவ்னே நேர்மையானவன்,,,, சரி, உங்க செயலை ஜஸ்டிஃபை செய்ய ஒரு சான்ஸ் ..சொல்லுங்க என்றார்.
பாஸ்.. அந்த விதையை விதைத்து தண்ணீர் பாய்ச்சினேன்..ஆனால் அது விளையவில்லை. போட்டியில் வெல்வதுதான் முக்கியம்...எனவே அதேபோன்ற விதையை கடையில் வாங்கி ரிசல்ட்ட்டை காட்டி விட்டேன்... என்றான் ஒருவன்
பாஸ்.. அதை பார்த்தவுடனேயே , அது வேக வைக்கப்பட்டது என தெரிந்து விட்டது...வேக வைத்த விதைக்கு என சில பயன்பாடுகள் உண்டு , அந்த பயன்பாடு இருப்பபர்களுக்கு அதை விற்றேன்..அந்த காசில் வேறு வகை விதை வாங்கினேன் என்றான் ஒருவன்..
நேர்மை , வெல்லும் ஆர்வம் , சம்யோஜித தன்மை..இதில் எது முக்கியம் என அவர் சிந்தனையில் ஆழ்ந்தார்

जो दिल के अच्छे होते है, दिमाग वाले अक्सर उनका जम के फ़ायदा उठाते है
ஜோ தில் கே அச்சே ஹோத்தே ஹை, திமாங்க் வாலே அக்சர் உன்கா ஜம் கே ஃபாய்தா உத்டே ஹை
இதயம் மென்மையாக இருப்போரை , புத்தி கூர்மையாக இருப்போர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்

கலைஞர் கட்சி சார்பற்ற சில நூல்கள் எழுதியுள்ளார்.. அதில் ஒன்றுதான் , பேச்சாற்றலை வளர்ப்போம் எனும் புத்தகம்...
அதில் ஒரு பகுதி
-______________________________________________
சபை அறிந்து பேசுவது முக்கியம்.. அந்த கால கட்டத்தில் எல்லா கட்சி கூட்டங்களுக்கும் என்னை அழைப்பார்கள்>. என்னையே அழைத்தால் எப்படி.. நீங்களும் பேச கற்றுக்கொள்ளுங்கள்>. நான் எப்படி பேசுகிறேன் என கவனியுங்க்ள் என சொல்லி, கட்சியினர் சிலரை ஒரு கூட்டத்துக்கு அழைத்து போனேன்..பேசினேன்..
உடன்பிறப்ப்புகளே..உங்கள் முன் நின்று பேசும் இந்த கருணானிதியை தலைவன் என நினைக்காதீர்கள்>. நான் உங்கள் செருப்பு போன்றவன்.. உங்கள் கால்களை சுற்றி வரும் நாய் போன்றவன்,,,, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன்..உங்களுக்காக உழைப்பேன்,,’
இப்படி பேசியதும் கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது
கட்சியினர் கவனித்தனர்
அடுத்த கூட்டத்தில் கட்சி தோழர் ஒருவர் பேசினார்.. நான் கவனித்தேன்..
உடன்பிறப்ப்புகளே..உங்கள் முன் அம்ர்ந்திருக்கும் கலைஞரை தலைவன் என நினைக்காதீர்கள்>.அவர் உங்கள் செருப்பு போன்றவர்.. உங்கள் கால்களை சுற்றி வரும் நாய் போன்றவர்,,,, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்..உங்களுக்காக உழைப்பார்
பேசியபின்புதான் கவனித்தார்..கூட்டத்தில் மயான அமைதி
எப்படி பேசக்கூடாது என்பதற்கு இது உதாரணம்,,’


தமிழர் ஒருவருக்கு இந்தோனேசிய அரசு வழங்கிய மரண தண்டனை வருத்தம் அளித்தது... அவர் என்னதான் குற்றம் செய்திருந்தாலும் , ஓர் ஓவியனாக உரு மாற்றம் அடைந்து , புதிய மனிதனாக மாறிய அவரை தண்டனைக்கு ஆளாக்கியதை ஜீரணிக்க முடியவில்லை...
அவருக்கு மரண தண்டனை என்பது அதீதம்தான்....
அதே நேரத்தில் , பெண் மீது ஆசிட் அடித்து கொன்றவனுக்கெல்லாம் மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற மொன்னைத்தனமும் சரிப்படாது...
மரண தண்டனைகளை முழுக்க ஒழிக்கக்கூடாது.. மன்னிப்பதா வேண்டாமா என முடிவு செய்யும் உரிமையை பாதிக்கப்ப்பட்ட குடும்பங்களிடம் விட்டு விடலாம்...இஸ்லாம் நாடுகளில் இந்த முறை இருக்கிறது...

பப்பீ..
கண்ணதாசனின் உயிரை மதுவருந்தியது..
அதை அறிந்தபின் மது வருந்தியது - வாலி

ட்ரெய்னில் செல்லும்போது பாட்டு கேட்பதில் மூழ்குவது , புத்தகம் படிப்பது , இணையத்தில் பிசியாக இருப்பது , செல்போனில் இருப்பது என எல்லாமே மொண்ணைத்தனம்தான்.. ஆனால் புக் படிப்பதை இதில் இருந்து மாறுபட்ட ஒன்றாக நினைக்க ஆரம்பிக்கையில் ஒரு மொண்ணை , இணைய மொண்ணையாக பரிணாம வளர்ச்சி பெறுகிறார்


கோடைக்காலத்துக்கும் பூமியின் நீள்வட்டப்பாதைக்கும் சம்பந்தம் இல்லை என முன்பே பார்த்தோம்... நீள் வட்ட பாதை காரணமாக பூமி சில மாதங்க்கள் சூரியனின் அருகில் இருக்கும்.. அதுதான் கோடை என சிலர் நினைக்கிறார்கள்... அதுவல்ல மேட்டர்.. பூமி தன் அச்சில் இருந்து சற்று சாய்ந்திருப்ப்பதே இதுக்கு காரணம்... ஜனவரி , ஜூலை ஆகிய இரு மாதங்களிலும் பூமி சூர்யனை விட்டு வெகு தொலைவில் இருக்கும்... ஆனால் வெப்ப நிலை மாறுபடுகிறது அல்லவா..
அச்சு , நீள் வட்டம் என இரன்டும் இருப்பதால்தான் வானில் பல சுவையான நிகழ்வுகள் நடக்கின்றன,,,, கண்ணுள்ளவன் காணக்கடவான்...

ட்ரைனில் என் இருக்கை இருக்கை எண்ணை தேடி சென்று அமர்ந்தேன்.. யாரேனும் தேவதை பக்கத்து சீட்டில் இருக்கும் வாய்ப்பு கிட்டுமா என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை... ஓர் இளைஞன் , இரு முதியவர்கள் என அந்த இடம் இருந்தது,,, அந்த இளைஞனை பார்த்தவுடனேயே மைல்டாக ஒரு டவுட் வந்தது,,,, அப்படி எல்லாம் இருக்காது என நினைத்தபடி ஒரு புக்கை எடுத்தேன்...
அட புக்கெல்லாம் படிப்பீர்களா.. எனக்கும் படிப்பு என்றால் உயிர் என்றான்... அப்போதுதான் எதிர் சீட்டில் பார்த்தேன்... என்னதான் கருப்புதான் நம் கலர் என சொல்லி ஆறுதல் அடைந்தாலும் சிவப்புக்கு நிகர் நிகர் மட்டுமே... அப்படி ஓர் அழகு சிலை... ஆர்ப்பாட்டம் அற்ற அழகு... அந்த நாசி..ச்சே... வாய்ப்பே..இல்லை... எதெனும் பேச்சு கொடுக்கலாமா என நினைத்த போது , சார், அமைப்பியலின் காலம் முடிந்து விட்டது என்ற கான்சப்ட் தப்பு என நினைக்கிறென்.. என்ன சொல்றிங்க் என்றான்... விளக்கினேன்.. சென்னையில்தான் வெயில் ..மற்ற இடங்க்களில் செம.. அதையும் ரசித்தேன்... ஆனால் முழுமையா ரசிக்கவிடாமல் , இலக்கியம் அரசியல் என விவாதிப்படி வந்தான் அவன்
கடைசியில்...
சார்.. நட்பு ரயில் நட்பு ஆகி விடக்கூடாது.. நான் முக நூலில் இருக்கேன்.. நீங்களும் என் நட்பில் சேர்ந்து விடுங்க்ள் என்றான்..
அடப்பாவி... என் சந்தேகம் சரியா போச்சே.. நீயும் ஓர் இணைய மொண்ணையா... அழகு சிலை.. இனிமையான மழை என ரசிக்கவிடாமல் செய்யும்போதே சந்தேகப்பட்டேனே என நினைத்தபடி , நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு முந்தைய ஸ்டேஷனிலியே இறங்கி மிச்ச தூரத்தை பேருந்தில் கடந்தேன்


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]