Pages

Sunday, December 20, 2015

ஊடக அறமும் இளையராஜா கோபமும்- முழு உண்மை



இளையராஜா இப்படி பேசுகிறார்.

இளைஞர்கள் இவ்வளவு தூரம் அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பது பெருமை அளிக்கிறது.  நம்மிடம் இருக்கும் மனித நேயத்தை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இறைவன் இப்படி ஒரு பிரச்ச்னையை நம் மீது ஏவி விட்டானோ என தோன்றுகிறது

( இப்படி சொல்லி விட்டு நிவாரண பணிகள் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார் )

ஒரு நிருபர் சம்பந்தமே இல்லாமல் வேறொரு பிரச்சனை ( சிம்பு பாடல் ) குறித்து கேட்கிறார்...டென்ஷனான ராஜா , உனக்கு அறிவு இருக்கா,, நாம் எதற்காக இங்கு வந்திருக்கிறோம்.. இந்த நேரத்தில் இதையா கேட்பது என்கிறார்..


வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ போகும் இடத்தில் இப்படி கேட்டால் வேறு யாராவதாக இருந்தால் இன்னும் கடுமையாக நடந்து இருப்பார்கள்... ராஜா ஓரளவு பொறுமையாகத்தான் பேசுகிறார்..

அறிவு இருக்கா என கேட்டவுடன் , அந்த நிருபர் சாரி சொல்லி இருக்கலாம்.. ஆனால் அறிவு இல்லாததால்தான் சார் கேட்கிறேன் என தொடர்ந்து இடக்காக பேசுகிறார்...

அந்த நிருபரிடம் இதற்கு மேல் பேசி பயனில்லை என சற்று கூலாக அறிவு இல்லை என எந்த அறிவை வைத்து கண்டு பிடித்தாய் என கிண்டலாக கேட்கிறார் ராஜா...

இதை கட் எடிட் செய்து , அறிவு இருக்கா என ராஜா கேட்பதை மட்டும் ஒளிபரப்பு செய்து அவர் தேவையில்லாமல் கோபப்பட்டதுபோல பிரச்சாரம் செய்கின்றன ஊடகங்கள்..இதுதான் ஊடக அறம்போலும்...

வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற செல்லும்போது இப்படி ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்??

2 comments:

  1. I will slap that journalist.

    ReplyDelete
  2. avare nethu raathiri yemmavukku music pottavar avrkitta poyiindha kelviyai keatta kovapadaama enna seivaar ?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]