Pages

Sunday, September 11, 2016

புல்லாய் பிறந்தாலும்...


ஓர் இசைக்கச்சேரியில் இந்த பாடலை கேட்டேன்.. வெகு இனிமை




புல்லாய் பிறந்தாலும் மிருகாதி ஜனனங்கள்
பசியாறி மகிழும் அன்றோ
பூண்டாய் பிறந்தாலும் புலத்தியர்கள் கொண்டு சில
பிணி தீர்த்து கொள்வர் அன்றோ

கல்லாய் பிறந்தாலும் நல்லவர்கள் மிதி கொண்டு
காட்சிக் குருத்துமன்றோ
கழுதை உருவந்தாலும் ஆவெனக் கத்தினால்
கை கண்ட சகுனம் என்பார்

எல்லாம் இலாமலே இப்பிறவி தந்து என்னை
ஏங்கவிட்ட கல நின்றாய்

எத்தனை அன்னை பின் எத்தனை தந்தை
பின் எத்தனை பிறவி வருமோ
அல்லல் எனும் மாசு அறுத்து ஆட்கொளும் தெய்வமே
அப்பனே தில்லை நகர் வாழ்
அதிபதி ஜனகாதி துதி பதி சிவகாமி
அன்பில் உரை நடனபதியே

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]