Pages

Sunday, June 4, 2017

இளையராஜா டிஎம்எஸ் தகராறு- நடந்தது என்ன

அன்னக்கிளி உன்னைத் தேடுதே இசையை கேட்ட டி எம் எஸ் என்னப்பா...கரடுமுரடா இருக்கே என்றார்.... கிராமிய பாடல்ணே....அப்படித்தான் பாடணும் என்றார் ராஜா.... இல்லப்பா.. மெருகேத்தி பாடணும் என சொல்லி தன் பாணியில்பாடினார்...  ராஜாவுக்கு  வருத்தம் என்றாலும் அவர் திறமையை மதித்தார்....தீபம் கவரிமான் உள்ளிட்ட சிவாஜி படங்களுக்கு டிஎம்எஸ்ஸை பாட வைத்தார்... பல பாடல்கள் ஹிட்... சிவாஜி நடிக்காத படங்களிலும் டிஎம்எஸ்சை பாட வைத்தார்... ரஜினிக்காகவும் சில பாடல்களை பாட வைத்தார்...
அந்த நேரத்தில் ஓரம் போ ஓரம் போ என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது.... ஆனால் அது வல்கராக இருப்பதாக சொல்லி சென்னை வானொலி நிலையம் அதை ஒலி பரப்ப தடை செய்திருந்தது... வானொலி பிரபலமாகஇருந்த காலம் என்பதால் இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது... ஒரு நிருபர் டிஎம்எஸசிடம் கருத்து கேட்டார்...கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் டிஎம்எஸ்....தனிப்பட்ட முறையில் சொல்லுங்கள்... பிரசுரிக்க மாட்டோம் என்றார் அவர்... டிஎம்எஸ் சில கடுமையாக கருத்தகளை சொன்னார் ( அதை இங்கு சொல்வது அறமாகாது என்பதால் தவிர்க்கிறேன் -பிச்சை) அந்த நிருபர் வாக்குறுதியை மீறி பத்திரிக்கையில் வெளியிட்டு விட்டார்.... இளையராஜா கடும் கோபத்துடன்இன்னொரு பத்திரிக்கையில் பதிலடி கொடுத்தார்...இவரும் திரும்ப பேசவே உறவு முழுக்க சேதமுற்றது...
அதன்பின் சிவாஜி படங்களில்கூட டிஎம்எஸ்சை பயன்படுத்தவில்லை

2 comments:

  1. தெரியாத விடயம்

    ReplyDelete
  2. இந்தமாதிரி அரிதான பதிவுகளை தொடர்ந்து போடுங்க

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]