Pages

Thursday, February 14, 2019

படித்தவற்றில் பிடித்தவை - இரு கவிதைகள்

படித்தவற்றுள் பிடித்தவை

( சுமதி இராமசுப்ரமணியம் கவிதைகள்)

மருதமலை ஏறி

மாடிப்படி ஏறுகையில்
பயம் கொள்ளும் சிறுமியவள்

அப்பா இருசக்கர வாகனம் இயக்க
முன்னால் நின்றபடி

மருதமலை உயரம் ஏறி
கிழித்துப்போட்ட பேப்பர் துண்டுகளாய்
வீடுகள் தெரியும் அடிவாரம் நோக்கி

அலட்சியமாய் வீசி எறிகிறாள்

தன் பயத்தை’


---------------------

சிறுமியின் மரம் வளர்க்கும் ஆசை

அப்பாவின்

சிநேகிதர் வீட்டு திருமண விழாவில்

தாம்பூல பைக்கு பதிலாக

மரக்கன்று தரப்பட்டது

” அப்பா அம்மாவுக்கு ஒன்று போக
எனக்காக ஒன்று ”

ஆசையோடு கேட்டு வாங்கிக்கொண்டாள்

வாடகை வீட்டில் வசிக்கும் சிறுமி

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]