Pages

Monday, February 4, 2019

ரஜினி இயக்குனருக்கு ஏற்பட்ட சோகம்


80களில் அதிரடி சண்டைப் படங்களில் நடித்து வந்த ரஜினிக்கு சற்று வித்தியாசமாக அமைந்த படம் - தனிக்காட்டு ராஜா...

நான் தான் டாப்பு , மத்ததெல்லாம் டூப்பு என மாஸ் பாடல்கள் இருந்தாலும் நிலம் எங்கள் உரிமை என்பது போன்ற புரட்சிகரமான கருத்துகள் கொண்ட படம்..

அதில் ஒரு பாடல்

கூவுங்கள் சேவல்களே செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே சேரிக்குள்ளே
சூரியன் வந்தது இல்ல
புதுசூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர

கூவுங்கள் சேவல்களே செந்நிற கொண்டைகளே

அந்த படத்தின் இயக்குனர் விசி குக நாதன்

நல்ல சிந்தனையாளர்... தமிழார்வம் மிக்கவர்.. எம் ஜி ஆரால் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்... இவரும் பலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்

தனிக்காட்டு ராஜா வெற்றிக்கு பிறகு பல படங்கள் இயக்கும் வாய்ப்புகள் வந்தன,,, வெற்றிகரமான இயக்குனராக உருவாக தொடங்கினார்

ஆனால் இவர் வளர்ச்சி பாதியில் நின்று போனது .. அது ஏன் என்பதே இந்த கட்டுரை


ஒரு நாள் ஏ வி எம் நிறுவனத்தில் இருந்து போன் வந்தது.. இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பதால் அவர்கள் மேல் அன்பு கொண்டவர்.. உடனே புறப்பட்டு சென்றார்

அவர்கள் சொன்னார்கள்.. ஒரு படம் எடுத்து வருகிறோம்.. சரியாக வரவில்லை.. நீங்கள் பொறுப்பேற்றுக்கொண்டு அதை முடியுங்கள்

குக நாதனுக்கு திகைப்பு.. நாமே ஒரு தனி இயக்குனராக உருவாகி வரும்போது  , இதில் கை வைப்பதா என குழம்பினார்

ஆனாலும் நன்றிக்கடனுக்காக ஒப்புக்கொண்டார்

படத்தில் டைட்டிலில் இயக்கம் என்பதில் என் பெயரை போடாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.. காரணம் படம் அவருக்கு பிடிக்கவில்லை.. அதில் தன் பெயர் இடம்பெறுவதை விரும்பவில்லை

ஆனாலும் இவர் பெயருடனே படம் வெளி வந்து படு தோல்வி அடைந்தது’

 அவர் மார்க்கெட் அத்துடன் வீழ்ந்தது..

அந்த படம் - பாட்டொன்று கேட்டேன்

ரகுமான் , சித்தாரா , ரேகா உட்பட பலர் நடித்தனர்.. மரகத மணி இசை

 ஒருவருக்கு கெட்ட நேரம் எப்படி வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது...

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]