Pages

Saturday, April 6, 2019

பூர்வ ஜென்ம நினைவுகளை மறக்காத வித்தை - பாபா


சத்ய சாய் பாபா உரையாடலை படித்த பலர் , இது போன்ற ஞான மார்க்கத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்றனர்,..

உண்மையில் ஞானம் , கர்மம் , பக்தி என்பதெல்லாம் ஒன்றுதான்.. உதாரணமாக உருவ வழிபாடு செய்த ராமகிருஷ்ண பரமஹம்சர் அடையாத ஞானமா.. செய்யாத சேவையா..

ஆகவே இந்த பிரிவினைகள் தேவை இல்லை

எல்லா இடங்களில் இருந்தும் நல்ல விஷ்யங்களை கிரகிப்பதே முக்கியம்

----------

வெளி நாட்டினர் சிலர் சாய் பாபாவிடம் நிகழ்த்திய உரையாடல்

ஸ்வாமி.. நினைவாற்றல் என்பது ஆன்மிக வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு அவசியம்?

பாபா- இறந்த கால சுமைகள் என்பது ஆன்மிகத்துக்கு தேவை இல்லை... கஷ்டப்பட்டு ஒன்றை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை.. ஆனால் உண்மையிலேயே ஆர்வம் இருப்பின் மந்திரங்கள் , குரு உபதேசம் மறக்காது


ஒரு முறை அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் கேட்டான்,,, எனக்கு கடந்த பிறவிகள் எல்லாம் நினைவு இல்லை.. உனக்கு மட்டும் எப்படி பூர்வஜன்ம நினைவுகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன

கிருஷ்ணன் கேட்டான்.. போன மாதம் காலை உணவாக என்ன சாப்பிட்டாய்?

அர்ச்சுனன் சொன்னான்.. மறந்து விட்டதே

போன வருடம் முதன் முதலாக யாரைப்பார்த்தாய்?

நினைவு இல்லையே

உனக்கு முதன் முதலில் வில் வித்தை கற்றுத்தந்தவர் யார்?

நினைவு இருக்கிறது

போன வருடம் , போன மாதம் நீ உலகில் இருந்தாய்.. ஆனால் உனக்கு அவை நினைவு இல்லை. நினைவு இல்லை என்பதால் போன வருடம் என்பது இல்லை என ஆகி விடாது

சில விஷ்யங்கள் உனக்கு நினைவு உள்ளது. காரணம் அவற்றின் மீது மட்டும் உனக்கு அக்கறை உண்டு

இப்போது புரிகிறதா... எனக்கு எதுவுமே மறப்பதில்லை.. காரணம் எனக்கு எல்லாவற்றின் மீதுமே அக்கறை உண்டு



1 comment:

  1. தொடர்ந்து இதுபோன்ற ஆன்மீக பதிவுகளை எழுதுங்க பிச்சை.மிக்க நன்றிகளுடன் Viki

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]