Pages

Tuesday, May 28, 2019

திராவிட இயக்கம் - அவதூறுகளும் விளக்கமும்

திராவிட இயக்கத்தால்தான் தமிழ் நாடு கஷ்டப்படுகிறது... வரலாறு காணாத ஊழல்கள் நடக்கின்றன என்கிறார்கள் சிலர்


திராவிட இயக்கிய ஆற்றியுள்ள , ஆற்றி வரும் பணிகள் குறித்தும் திராவிட இயக்கம் பேணி வரும் கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு குறித்தும் பலர் அறியாததே இதற்கு காரணமாகும்


இன்னொன்றும் இருக்கிறது ,  டிராஜேந்தரின் லதிமுக , தினகரனின் அமமுக என யார் என்ன தப்பு செய்தாலும் பழியை திராவிட இயக்கத்தின்  மேல் போடுவதும் இதற்கு காரணம்..


சைதை துரைசாமி , பொன்னையன் போன்ற பழைய கால திராவிட இயக்கத்தினரிடம் பேசினால்தான் பல உண்மைகள் தெரியவரும்..

தமிழ் நாடு என்ற பெயருக்கே காரணம் திராவிட இயக்கம்தான்,,   இட ஒதுக்கீடு , போக்குவரத்து வசதிகள் என பல விஷ்யங்கள் அண்ணா , எம் ஜி ஆர் போன்றோரால்தான் சாத்தியமாகின


அண்ணா ஒரு முறை கல்லூரி கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்தார்.. சிம்மாசனம் போன்ற பெரிய நாற்காலி போடப்பட்டு இருந்தது..    இதில் நான் அமரும் தகுதி இல்லை.. மாணவர்கள்தான் மன்னர்கள் என பெருந்தன்மையாக பேசினார்

எம் ஜி ஆர் பேசுகையில் மாணவர்கள் நினைத்தால் பல மாற்றங்கள் நிகழும் என்றார்

அண்ணா மறைவுக்கு பின் திராவிட இயக்க பெருந்தலைகளான மதியழகனுக்கும் நெடுஞ்செழியனுக்கும் இடையே அடுத்து யார் என போட்டி நிலவியது

இவர்களுள் அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டவர் நெடுஞ்செழியன் தான்

ஆனால் சம்பந்தம் இல்லாமல் கலைஞர் தலைமைக்கு வந்தார்

காரணம் எம் ஜி ஆர் கொடுத்த ஆதரவு..கலைஞரின் தமிழ் மீதும் திறனை மீதும் எம் ஜி ஆருக்கு இருந்தது

ஊழலற்ற ஆட்சி என்பது மட்டுமே எம் ஜி ஆரின் நிபந்தனையாக இருந்தது

ஆனால் , கோதுமை ஊழல் , பாலம் கட்டுவதில் ஊழல் என பிரச்சனைகள் உருவெடுக்கவே , எம் ஜி ஆர் கணக்கு கேட்டு , அதிமுக பிறந்தது

அதன் பின் திராவிட இயக்க கொள்கைகளை அண்ணாயிசம் என்ற பெயரில் நிறைவேற்ரலானார் எம் ஜி ஆர்

ஓர் உதாரணம்..

முனு குறிப்பிட்ட கல்லூரி விழா மூலம் திராவிட இயக்கம் மீது ஈடுபாடு கொண்டு எம் ஜி ஆருடன் இணைந்து செயல்படலானார் பொன்னையன்

அதிமுக தேர்தலில் நிற்கும்போது மக்கள்  நலபணிகள் குறித்து இவருடன் விவாதித்தார் எம் ஜி ஆர்

கிராமங்கள் முன்னேறினால்தான்  மா நிலம் முன்னேறும்.. கிராமங்கள் முன்னேற நல்ல சாலைகள் தேவை என்றார் பொன்னையன்..பஸ் மேற்கூரைகளில் கிராம விளை பொருட்களை ஏற்றும் உரிமை வேண்டும் என்றெல்லாம் சொன்னார் அவர்

இதை நினைவில் கொண்ட எம் ஜி ஆர் , அதிமுக ஆட்சிக்கு வந்ததும்,  நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து என இரண்டையும் பொன்னையனிடம் கொடுத்தார்

இன்று தமிழகம் வட மானிலனங்களை விட சிறப்பான சாலைகள் பேருந்துகள் என இருப்பதற்கு காரணம் எம் ஜி ஆரின் திராவிட ஆட்சிதான்



என்னதான் குடும்ப ஆதிக்கம் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பெயரளவுக்காவது திராவிட இயக்க கொள்களைகளை கலைஞரும் நிறைவேற்றவே செய்தார்

தற்போது ஒதுங்கியுள்ள சைதை துரைசாமி , ஏ சி எஸ் போன்றோர் மீண்டும் களாமாட வரும் சூழலில் திராவிட இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]