Pages

Wednesday, January 22, 2020

ஜெயகாந்தன் அயன்ராண்ட் -ஒப்பீடு

அந்த காலத்தில் நான் அயன் ராண்ட் ரசிகன்..
சோவியத் நூல்கள் படித்து வளர்ந்த எனக்கு அவரது வலதுசாரிக் கருத்துகள் புதுமையாக இருந்தன. அவரது மொழியாளுமை , வலுவான வாதங்கள் போன்றவை ஈர்த்தன

இத்தனை இருந்தும் அது இலக்கியம் ஆகாதுதான். பிரச்சார எழுத்து

ஜெயகாந்தன் புனைவு ஒன்றை வாசிக்கையில் அயன் ராண்ட் நினைவு வந்தது.  வலுவான வாதங்கள் , மொழி ஆளுமை என பல ஒற்றுமைகள் . ஆனால் ஜெயகாந்தனின் உக்கிரம் அவரிடம் இல்லை. அவரது பிரச்சாரம் ஜெகா விடம் இல்லை

பாரம்பர்யத்தில் நம்பிக்கை கொண்ட பிராமணர் அவர். நம் பாரம்பரியம் உயர்வானது,. சில சீர்திருத்தங்கள் தேவை என்பது அவர் நிலைப்பாடு. மனைவி இல்லாமல் தானே கஷ்டப்பட்டு வளர்த்த மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்.

அவர் வீட்டுக்கருகே கடவுளை மற. மனிதமே முக்கியம் என நம்பும் இடதுசாரி சிந்தனைகள் கொண்ட ஓர் இளைஞன் குடிவருகிறான்.. இவன் பிராமணன். ஆனால் தன்னை பிராமணனாக உணரவில்லை. விருப்பமும் இல்லை

பாரம்பரியமும் புதுமையும் அருகருகே. ஒருவரை தீமையும் வடிவமாக சித்தரிக்கும் வாயப்பை புறக்கணித்து விட்டு இருவரின் வாதங்களை நம் முன் வைக்கிறார் எழுத்தாளர்

இந்த சூழலில் வேறொரு சாதியை சேரந்த ஆனால் பாரம்பர்ய ஞானமும் தேடலும் கொண்ட இன்னொரு இளைஞன் அவருக்கு அறிமுகமாகிறான்

இந்த நான்கு கதாபாத்திரங்கள் கடைசியில் எதை அடைகிறாரககள் என்பதை சுவாரஸ்யமாக தர்க்கபூர்வமாக சொல்கிறது அந்த கதை

வெளிவந்த காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய எழுத்து.. இன்றும் படிக்க முடிகிறது
ஆனால் அயன் ராண்ட் சலித்துப்போய் விடும்


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]