Pages

Sunday, February 16, 2020

வளத்தை தாங்கும் 8 தூண்கள் ஜேம்ஸ் ஆலன்

தொழில் நிமித்தம் அல்லது இலக்கிய மதிப்பு சார்ந்து படிப்பது ஒருவிதம். சும்மா படிப்பது வேறுவிதம்

இந்த சும்மா வாசித்தல்தான் முக்கியம். தப்பும் தவறுமான மொழியில் வெற்று அரட்டைக்காக எழுதப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் படிக்கலாகாது என்ற என் தீர்மானத்தின்படி
சமீபத்தில் ஒரு நல்ல நூல் படித்தேன். வளமான வாழ்வின் எட்டு தூண்கள் ... ஜேம்ஸ் ஆலன்
பிறந்து விட்ட அனைவருமே சிறப்பான வாழ்வை வாழ முடியும். ஆனால் முடிவதில்லை..வளமான வாழ்க்கைக்கு எட்டு விஷயங்கள்தான் அடிப்படையானவை என்கிறார் இவர்.

சுறுசுறுப்பு , பேச்சில் செயலில் அளவோடு இருத்தல் , தனக்கு உண்மையாக இருத்தல் , ஒரு முறைமையை உருவாக்கி அதை கடைபிடித்தல், பரிவு , அக்கறை , சுயநலமின்மை , தன்னை நம்பி செயல்படுதல் ஆகியவை அவர் சொல்லும் எட்டு தூண்களாகும்

இவை அனைத்தும் " அதுதான் எனக்குத் தெரியுமே " வகையிலான எளிதானவைகளாக தோன்றினாலும் அவற்றை நாம் கடைபிடிப்பதில்லை என்பதே உண்மை

அளவுக்கு அதிகமாக செல்போனை முகநூலை பயன்படுத்துதல் , தேவைக்கு அதிகமாக கருத்து ஃசொல்லல் , பேசுதல் போன்ற அனைத்துமே நம் இயல்பாகிவிட்டன. இது தவறு ( இரண்டாம் தூண் )

யாராவது வந்து செய்யட்டும் என நினைக்காமல் முதல் அடியை நாம் எடுத்து வைக்க வேண்டும். செய்வதில்லை

தெரிந்தே அநீதியை ஆதரித்தல் , தெரிந்தே நேரத்தை வீணடித்தல் நம்மிடம் உள்ளன ( 3)

ஒரு நாளில் இவ்வளவு நேரம்தான் செல்போன் , டிவி பயன்படுத்தலாம் , ஒரு மாதத்தில் இத்தனை நூல்கள் படிக்க வேண்டும் , இத்தனை சொற்கள் கற்க வேண்டும் போன்ற இலக்குகள் நிர்ணயித்து இருக்கிறோமா

இப்படி பல கேள்விகளை நம்முள் எழுப்புகிறது இந்த நூல்







No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]