Pages

Tuesday, February 11, 2020

இணைய எழுத்தாளர்களின் முன்னோடி . ஆர்னிகா நாசர்

சுஜாதா ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருப்பார்.

 " ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். சிலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு என்னருகே வந்து கேட்டனர் " நீங்கள் சுஜாதாதானே ?"  " தான் " என்றேன்


ஆமாம். நான் சுஜாதாதான் என எழுதுவதற்குப்பதிலாக  " தான் " என ரத்தின சுருக்கமாக எழுதுகிறார்

தொலைபேசியில் பேசினேன் − தொலைபேசினேன்,   அன்பளிப்பு வழங்கினேன் − அன்பளித்தேன்   என்றெல்லாம் விளையாட்டாக எழுதியது அன்று பெரிதும் ரசிக்கப்பட்டது..  சில ஆங்கில எழுத்தாளர்களின் பாணியை தமிழுக்கு அறிமுகம் செய்ய நினைத்து அப்படி செய்தார். மற்றபடி அவரது பலம் என்பது அந்த வார்த்தை விளையாட்டுகள் அன்று. அவரது அறிவாற்றல் , தேடல் , தமிழறிவு என அவரது வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு.

ஆனால் சுஜாதா போல எழுதுவதாக நினைத்துக் கொண்டு , சவரித்தேன் , பைக்கினேன் என்றெல்லாம் பலர் எழுதியதுண்டு. அதன்பின் அது வழக்கொழிந்தது

இணைய வருகையால் பலர் சுஜாதாவை புதிதாக படிக்க ஆரம்பித்ததன் விளைவாக மீண்டும் அந்த  சுஜாதா நடை புழக்கத்துக்கு வந்தது.  பல இணைய எழுத்தாளர்களிடம் இதைக் காணலாம்

 வணிகப்பத்திரிக்கை எழுத்தாளரான"ஆர்னிக்கா நாசரின் எழுத்துகளைப் படிக்கும்போது அவர் இந்த இணைய யுகத்தில் தன் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்து இருந்தால் இணைய பிரபலமாக உருவாகி அப்படியே இலக்கிய எழுத்தாளர் என்ற அடையாளத்தை பெற்றிருப்பார் என தோன்றியது..  சூரியனித்தேன் போன்ற சுஜாதா பாணி இணைய எழுத்துகளுக்கு இவர்தான் முன்னோடி

ஆர்னிகாவும் 1001 ஆவிகளும் என்ற அவர் நூலை படித்தேன்
சற்று வித்தியாசமான நூல்.  ஆவிகள் பற்றி மட்டும் எழுதாமல் தன் வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதி  தன் வாழ்க்கையில் ஆவிகளின் பங்களிப்பு குறித்து சிறப்பாக எழுதியிருக்கிறார்;
பிரபல சினிமா நிறுவனம் இவரை ஏமாற்றியது , பாலகுமாரன் கொடுத்த டிப்ஸ் , லாசரா , பகோபி , ராஜேஷ்குமார் போன்றோருடனான அனுபவங்கள் ஆகாயவற்றை பேய் அனுபவத்துடன் கலந்தது அருமை

இலக்கிய பதிப்பகங்கள் சில வெளியிடும் பல்ப் எழுத்துகளை ஒப்பிட்டால் இதை அற்புதமான நூல் என்றே சொல்ல வேண்டும்


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]