Pages

Sunday, March 1, 2020

இறகு சிறகு... என்ன வித்தியாசம்



வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
குருகு  உளர் இறகின்விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,
நெஞ்சிற்கு அணியரோதண் கடல் நாட்டே.

குருகு பறவை இறகை விரிப்பதுபோல பூக்கள் மலரும் இடத்தில் அவர் வசிக்கிறார்.  அந்த இடம் தொலைவில் உள்ளது. ஆனால் அவரோ என் இதயத்துக்கு அருகில்தான் இருக்கிறார் என அழகாக சொல்கிறது இந்தப் பாடல்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

என்கிறார் பிரமிள்

சென்ற பாடலில் இறகை விரித்ததாக பார்த்தோம்
இந்தப்பாடலில் சிறகில் இருந்து இறகு உதிர்வதாக படிக்கிறோம்

இறகு எப்படி உதிரும் ?  சரி .. உதிரக்கூடிய சிறு பகுதிதான் இறகு என்றால் , அந்த இறகை எப்படி விரிக்க முடியும் ?

விமானத்துக்கு இருப்பது சிறகா ? இறகா ?


இறகு  அல்லது இறக்கை தான் wings

அதன் சிறிய பகுதி என்பதால் , அதில் இருந்து ஈதிர்வது சிறகு..


பிரமிள் கவிதையில் இறகில் இருந்து பிரிந்த சிறகு என்றுதான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் பேச்சு வழக்கில் எழுதியிருக்கிறார்;

கவிதையில் இப்படி எழுதலாம்.  மயிலிறகு என பேச்சு வழக்கில் சொல்வதில் தப்பில்லை

ஆனால் தெரிந்து வைத்திருக்க வேண்டும்

இறகு..  பெரியது

சிறகு..  இறகின் சிறிய பகுதி






No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]