Pages

Saturday, March 28, 2020

இயற்கை மீது நம் தாக்குதலும் அதன் பதிலடியும்


சாலைகளில் வாகனங்கள் குறைவு,,பறவைகளின் சிறகடிப்புக்கூட துல்லியமாய்க் கேட்கிறது. தூசி குறைந்து விட்டது

இயற்கையை எப்படியெல்லாம் கதறகதற சீரழித்திருக்கிறோம் என புரிகிறது

இயற்கையிடம் மன்னிப்புக்,கேட்க வேண்டிய நேரமிது

இயற்கையை ஒரு மனிதனாக தெய்வமாக உருவகப்படுத்தினால் மன்னிப்புக் கேட்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

 சினம் கொண்ட ருத்ரனாக உருவகப்படுநாத்திக் கொள்ள விரும்புவோரக்கு ருத்ரம் ஸ்லோகங்களின் ஒரு பகுதி ..,படியுங்கள்;
.......
ருத்ரனே வணங்குகிறேன்.பகைவர்களை இரக்கமின்றி,அழிப்பவன் நீ
ன் கோபத்தில் இருந்து எங்களைக் காக்க அன்னையை இறைஞ்சுகிறோம்
கருணைமிகு சிவனே. உம் சினத்தை எம்மீது காட்டாதீர்
நாங்கள் செய்த பிழைகள் மன்னிக்கப்படட்டும்
எம்மை அழிக்க வரும் அம்புகளை,உம் வலிய"கரத்தால் தடுப்பீராக
நல்லவர்கள் அழியக்கூடாது

வலிய பாம்பு தன் எதிரிகளை அழிப்பதுபோல எமைத்தாக்க வரும் வியாதிகளை அழிப்பீராக

எதிரிகள் மீது பாயும் உம் அம்புகள் ஒரு ஃப்ளோவில் எம்மீது பாய்ந்துவிடாமல் காப்பீராக

.....

நுண்ணுயிர்கள் இன்றி,நாம் இல்லை நமது கொடுமைகளால் அவை நமக்கு எதிராக திரும்பியுள்ளன

இயற்கைதான் மிகப்பெரிய வைத்தியன். அதை நம் எதிரியாக்கி நம் குழந்தைகளை மரண வரிசையில் நிறுத்திய கொலைகாரர்களாக இருக்கிறோம்

இந்த சவாலான கால கட்டத்தை நெஞ்சுரத்துடன் சமாளிப்பது உடனடி தேவை. கற்றபாடத்தை மறக்காதிருத்தல் நிரந்தர தேவை









No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]