Pages

Monday, April 27, 2020

காதலின் வகைகள்


கவிதா சொர்ணவல்லியின் நான் அவன் அது என்ற சிறுகதை படித்தேன்


நமக்கு காதல் குறித்து பல்வேறு கற்பிதங்கள் உண்டு

காதலே  பொய்யானது என்ற வகையினர் ஒரு விதம். அதில் பிரச்சனையில்லை


காதலை கொண்டாடுபவர்களிடம்தான் பல்வேறு போலித்தனங்கள்

காதல் தப்பில்லை. ஆனால் சுய ஜாதியாக பார்த்து , ஜாதக பொருத்தம் பார்த்து , வசதிவாய்ப்புகளை பார்த்து காதலிக்க வேண்டும் என்ற தரப்பு உண்ட

பணத்தை மட்டும் பாரத்தால் போதும் என்ற காதல் உண்டு

இன்ன சாதியினரை , இன்ன மதத்தினரை தவிர யாரை காதலித்தாலும் ஓகே என்ற முற்போக்கினர் உண்டு

முறைப்பெண்ணை முறைமாமனை காதலிக்கலாம் என்ற தாராளவாதிகள் உண்டு

தம்பி , இப்படி எல்லாம் அடங்குவதற்கு அது சிற்றாறு அல்ல. அது காதல் என சொல்லும் கதைதான் நான் அவன் அது


பெண்விடுதலை என்பது பெண்மைத்தனத்தை மறுதலிப்பது,என சிலர் நினைக்கிறார்கள். பூ வைப்பது , தன்னை அழகாக்கிக்கொள்வது , பூப்படைதலை கொண்டாடுவது போன்றவையெல்லாம் பெண்ணடிமைத்தனம் என நினைப்பவர்கள் உண்டு. ஆண்கள் போல ஆடை அணிந்து ஆண்களைப் போல இருப்பதுதான் ஃபெமினிசம் என ஆடவர் பார்வையில் பெண்ணியத்தை வரையறுப்போர் உண்டு

அட நாய்களா.  ஒரு பெண் தன்னை"தன் உணர்வுகளை பிறருக்கு அஞ்சாமல் கொண்டாடுவதுதான் இயல்பானது. அதை"நோக்கி வளர்வதுதான் ஆரோக்கியமானது என ஒரு சித்தி பாத்திரம் மூலம் குறிப்பால் உணர்த்துவது அழகு

ஓர் ஆண் தன் மீது கொண்ட அக்கறையை தாழம்பூ பறிப்பதன் மூலம் உணர்கிறாள் என்பதில் அவள் உணர்வும் ஊரின் பின்புலமும் சொல்லப்பட்டு விடுகிறது

அந்த காதல் கல்யாணத்தில் முடிய வாய்ப்பில்லை.  உடல் சாரந்த இன்பம் சாத்தியமில்லை. அதற்காக அது காதல் இல்லாமல் போய்விடாது.

காதல் எங்கும் எப்படியும் இருக்கலாம் என்பதை ஆற்றோரத்தில் வீசும் தென்றல் போன்ற நடையில் சொல்கிறது கதை

  அறியாத வயதில் தெரியாமல் ஏற்படும்ஈர்ப்பு காதலாகுமா என்ற கேள்வி வரலாம்

  அறிந்த வயதில் பல்வேறு கணக்குகள் போட்டு வருவதுதான் காதலா என்ற கேள்வியும் வருகிறது


காதல் என்ற பெயர் , இந்த கதை சூழலில் ,சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்

அவர்களையுமேகூட அந்த பெயரற்ற உணர்வை ரசிக்க வைக்கிறது கதை


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]