Pages

Saturday, April 18, 2020

ஜெயமோகனின் சூழ்திரு சிறுகதை குறித்து...

சூழ்திரு என்றொரு சிறுகதை படித்தேன்.
ஜெயமோகனின் நல்லதொரு படைப்பு

அந்த கதை குறித்த என் பார்வை

...

அன்புள்ள ஜெ
சூழ்திரு கதை சற்றே பூடகமாக அமைந்திருந்தது..

அனைவருக்குமே குறிப்பிட்ட செல்வங்கள் அருளப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக இந்த கதையில் வரும் பையன் ஆனந்தனுக்கு சரஸ்வதி கடாட்சம் வாய்த்துள்ளது (லச்சுமி கடாச்சம் உண்டா?””அப்டி இல்லை. ஆனா அம்மைய மாதிரி கவிதை வாசிப்பு உண்டு…”லச்சுமியும் சரஸ்வதியும் ஒண்ணுல்லா)

இவனது உயரங்களை தந்தை அடையமுடியாமல்கூட போகலாம். அது தேவையுமன்று

அவர் தன்னை அறிந்தவர். தன் வாழ்க்கையை ஒரு அரசர் போல வாழ்கிறார். தனக்கு கிடைக்கவிருக்கும் நல்லனுபவம் தன் தோழர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவரை திருமணத்துக்கு அழைத்தவருடன் பெரிய நட்பு இல்லை என்றாலும் அழைத்தவர் உட்பட அனைவருமே அவரை உயர்வான இடத்தில்வைத்துப் பார்க்கின்றனர்;

தானும் தந்தைபோல உயர்ரசனைகளை பேண விரும்பும் பையன் ஸ்டைலான சட்டை அணிகிறான். சமையலில் எதைப்பாராட்ட வேண்டும் என தந்தைக்கு பாடமெடுக்க முயல்கிறான்

தான் தனது தந்தை கிடையாது. அவர் வேறு என்ற புரிதல் அவனை என்ன செய்திருக்கும் என யோசிக்க வைத்தது கதை. அவன் தனது சுயத்தை கண்டறிய இது ஒரு துவக்கமாக அமைந்திருக்கக்கூடும்.. இந்த திறப்பு நிகழக்கூடிய நுண்ணுணர்வு அவனிடம் உண்டு என்பதைத்தான் , தந்தை சமையல்காரரிடம் தவறாக பேசிவிடக்கூடாது என பதைபதைப்பு காட்டுகிறது. அது அவன்,வாழ்வின் ஒரு உச்சதருணம்

சிலர் தம்மை இலக்கியவாதிகள் என நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இருப்பார்கள். அனைவருக்குமே அது வெறும் பாவனை என தெரிந்து கேலியுடன் பார்ப்பார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியாது

அவரை சூழ்ந்துள்ள செல்வம் வேறு ஏதாவது ஒன்றாக இருக்கலாம். பேச்சாற்றல் , நிர்வாகத்திறன் , வியாபாரம் , பொதுச்சேவை என அவர்களை அவர்களுக்கு அடையாளம் காட்டும் தருணம் எடைமிக்கது. அப்படி ஒரு தருணத்தை இந்த கதையில் அந்த பையன் பார்வையில் காண முடிந்தது

என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]