Pages

Saturday, April 4, 2020

அழிவும் நீயே அன்பும் நீயே

ஶ்ரீருத்ரம் குறித்து எழுதியிருந்தேன் அல்லவா.

இன்றைய சூழலுக்கு பொருத்தமாக சில மந்திரங்களை படிக்க ஆச்சர்யமாக இருந்தது.

அதன் பொருள் பின்வருமாறு

மக்களும் பசுக்களும் நோய்ப்பட வேண்டாம்

நாங்கள் வாழ்வாங்கு வாழ்வோமாக


எங்கள் ஆயுள் மீது , விலங்குகள் மீது , பணியாட்கள் மீது கோபம் வேண்டாம்

உரிய பூஜைகள் செய்வோம்


ருத்திரரே  எங்கள் பெரியவர்களையும் குழந்தைகளையும் துன்புறுத்தாதீர்கள்

வாலிபர்களை துன்புறுத்த வேண்டாம்

சிசுக்களை துன்புறுத்த வேண்டாம்

தந்தைமார்களை தாய்மார்களை துன்புறுத்த வேண்டாம்

எங்கள் உடல் அவயங்களை துன்புறுத்த வேண்டாம்;

அழிவும் ஆக்கமும் உன்னால் விளைவது

கோப முகம் வேண்டாம். அன்பு முகத்தை எஙகள்பால் காட்ட இறைஞ்சி வேண்டுகிறோம்

கோபத்தால் ஏவப்பட்ட உன் கணைகள் எங்களை விட்டு விலகிச் செல்லட்டும்;

எதிரிகளை அழிக்கவல்ல ஆயுதங்களை வைத்துவிட்டு . அழகுக்காக மட்டும் அதை ஏந்திக் கொள்வீராக


பூமியிலும் பூமிக்கடியிலும் பூமிக்கு மேலும் உலவும் உனது ருத்திர கணங்கள் எங்களை அழிக்கலாகாது என வேண்டுகிறோம்




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]