Pages

Saturday, May 30, 2020

டிஎம்எஸ் − இளையராஜா பரஸ்பர அவமானங்கள்


ராணி மேரி கல்லூரியில் இளையராஜாவின் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.  பெண் மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
    ஒருவர் கேட்டார். உங்கள் முதல் நாட்டு வெளிநாட்டு விஜயத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்


  முதல் விஜயத்தில் எவ்வளவோ பாராட்டுகள் கிடைத்திருக்கலாம். இனிய நிகழ்வுகள் நடந்திருக்கலாம்

   ஆனால் இளையராஜா இப்படி பதிலளித்தார்

   ஆயிரக்கணக்கான மக்கள் முன் எனக்கு இசையறிவு போதாது என டிஎம்எஸ் மட்டம் தட்டி பேசி அவமானப்படுத்தினார். என் படங்களில் பாடிக்கொண்டே இப்படி பேசியதை மறக்க முடியவிநில்லை என்றார்

    வருத்தமாக இருந்தது.

டிஎம்எஸ் பின்விளைவுகள் தெரியாமல் அப்படி பேசக்கூடியவர்தான். ஆனால் ஒரு கணத்திலேயே அதை மாற்றிக் கொள்வார்

   நான் ஒரு ராசி இல்லாத பாடல்தான் தன் மார்க்கெட்டை அழித்தது என கோபமாக பேசுவார். அடுத்த கணமே , அவர்களை குற்றம் சொல்லவில்லை. என் குரல் பிடித்ததால்தான் பாட வைத்தார்கள் என்பார்

டிஎம்எஸ் அப்படி பேசி இருக்ககூடாது. இளையராஜாவும் அதை பெருந்தன்மையாக மறந்திருக்கலாம்

  ஆனால் பிற்காலத்தில் பதிலடி கொடுத்தார்

   நான் வாழ வைப்பேன் படத்தில்  எல்லோரும் பாடுங்கள் என ஒரு பாடல்.

சிவாஜியின் ஆஸ்தான பாடகர் டிஎம்எஸ் பாடினார்

உங்களுக்கு பாடத் தெரியவில்லை என சொல்லிவிட்டு அதே பாடலை எஸ்பிபி யை பாட வைத்தார் இளையராஜா.

முந்தைய அவமானத்துக்கு பதிலடி

மிக மிக வருந்ததக்க நிகழ்வு

அதன்பின் டிஎம்எஸ்சுக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை

எந்தன் பொன் வண்ணமே

பூப்போலே

நல்லவர்க்கெல்லாம்

அந்தப்புரத்தில் ஒரு

அம்மா நீ சுமந்த

அன்னக்கிளி உன்னை

தேன்மல்லி பூவே

நேரமிது நேரமிது

ஐம்பதிலும் ஆசைவரும்

எனபது போல பல பாடல்களை இந்த இணை கொடுத்தது

இவர்கள் பிரிவு நிகழ்ந்திராவிட்டால் மேலும் பல நல்ல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கும்








No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]