Pages

Monday, December 28, 2020

நிலமும் பொழுதும் நூல்... ஒரு சின்ன உரையாடல்

 நிலமும் பொழுதும் நூலாசிரியர் நிர்மலுடன் ஒரு சின்ன உரையாடல்..


.   1 பூமியின் வரலாறு,  வரலாறை ஆராயும் ஆர்வம் ஏன் தோன்றியது , யாரெல்லாம் உழைத்தனர் என மூன்று வித தளங்களில்  நூல் பயணிக்கிறது.  ஏதேனும் ஒரு தளமேகூட தனி நூலாகும் தகுதி கொண்டவை என்றாலும் ஒரே நூலில் இவற்றை தொகுக்கும் எண்ணம் எப்படி தோன்றியது?

படைப்பின் நோக்கமே Anthropocene என்கிற தற்காலத்தை சொல்வதற்கே.. புத்தகத்தின் பெயர் ஆந்திரோபோசின் எனதான் வைத்திருந்தேன் ஆனால் புவியின் நீண்ட காலத்தில் ஆந்திரபோசின் ஒரு சிறிய பகுதி போல புத்தகத்திலும் அது சில பக்கங்களாகிவிட்டது




2 கற்பனைக் கதைகள் என்றாலும் அந்த கற்பனைத்திறன்தான் செப்பியன்ஸ்கள் ஆளுமைக்கு காரணம் என்ற சூழலில் அக்கதைகளை எல்லாம் எதிர்மறையாகவே சித்தரித்துள்ளீர்கள் என  தோன்றுகிறதே


எதிர்மறை அல்ல அதுதான் இன்னும் மனிதர்களின் நடவடிக்கை பலவற்றை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது அதே வரிசையில் அறிவியல் சொல்லும் புதிய கதையை சேர்த்துக் கொண்டால் நல்லது

அதனால்தான் புதிய கதை ந்னு அறிவியல் சொல்லும் வரலாற்றை வைத்துள்ளேன்

அறிவியல் சொல்வதும் ஒரு கதைதானே. 

லை ஆஃப் பை மாதிரிஎந்த கதை பிடிக்குதோ  எது தேவையோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எந்த மாற்றத்தையும் அறிவியல் மட்டுமே கொண்டு வர முடியாதுதானே

3 இதைப்படைக்க எத்தனை காலம் தேவைப்பட்டது.?


இரு வருடங்கள்.

 தினம் ஒரு நாள் கூட விடாமல் குறைந்தது நாலு பக்கங்களாவது இதைக் குறித்து வாசிப்பேன்.


4 இந்நுாலை எழுத தமிழில் முன்னுதாரணமாக நூல்  எதையும் எடுத்துக் கொண்டீர்களா


இல்லை

  Quest of an chronolgist to find the age of earth மாதிரி சொல்லிருக்கேன் ஆனால் அதில் ஐரோப்பிய மறுமலர்ச்சி இருக்காது

அறிவியல் பாட நூல் போல இருக்கும் அது. மேலும் அது காலகட்டமாகவும், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளைக் கொண்டு கடத்தி செல்வார். நான் நிகழ்வுகளை வைத்து கொண்டு சென்றேன்







No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]