Pages

Wednesday, June 2, 2021

ஓர் ஆவி ஆராய்ச்சி :)

 அறிவியலின் சுவாரஸ்யம் என்னவென்றால் சில அடிப்படையான விஷயங்கள்கூட நமக்குத் தெரியாது.  அது தெரியாது என்பதே எப்போதாவதுதான் தெரியும்

உதாரணமாக தண்ணீர் எந்த வெப்பநிலையில் ஆவியாகும் ?

  பலர் 100 டிகிரி செல்சியஸ் என்பர்.  

கொதிநிலை என்பது வேறு ,  ஆவியாதல் என்பது வேறு 

தண்ணீர் 100 டிகிரியில் கொதிக்க  ஆரம்பிக்கும்,,கொதித்து ஆவியாகும் அதற்குமேல்  என்னதான் சூடாக்கினாலும் வெப்பநிலை உயராது.    ( மலைகளில் இதை விட குறைந்த வெப்பநிலையில் கொதிக்க ஆரம்பிக்கும்.  சாதாரண வளி மண்டல அழுத்தத்தைவிட அதிக அழுத்தம் இருந்தால்   100 டிகிரியைவிட அதிக வெப்பநிலையில் கொதிக்கும்  − உதாரணம், , பிரஷர் குக்கர்  120 டிகிரி வரை தண்ணீர் தாக்குப்பிடிக்கும்)

ஆனால் ஆவியாதலுக்கு  அவ்வளவு வெப்பம் தேவையில்லை..   கொதிக்காமலேயேகூட  தண்ணீர் ஆவியாகலாம்்

கீழே சிந்திக்கிடக்கும் தண்ணீர் , தரை வெப்பத்தை பயன்படுத்தியேகூட ஆவியாகும்.  நமது உடல் வெப்பத்தை பயன்படுத்தியேகூட வியர்வை ஆவியாகிவிடும்

காற்றோட்டம் ,  தண்ணீரின் பரப்பளவு ,காற்றின்  ஈரப்பதம் , வெப்பம் ஆகியவை ஆவியாதலை தீர்மானிக்கினறன

மின்விசிறி சுழன்றால் துணி எளிதில் உலர்கிறது.  காரணம் காற்றோட்டம்

ஒரு குவளையில் இருக்கும் நீர் ஆவியாவதற்கு பல நாட்கள் ஆகும்.  அதே தரையில் கொட்டினால்  ( மண் தரை அல்ல ) உடனே உலரும்.   காரணம் பரப்பளவு


மழைக்காலங்களில் துணி உலர அதிக நேரம் ஆகிறது.  காரணம் காற்றின் ஈரப்பதம்

வெயிலில் உலர்த்தினால் அந்த வெப்பத்தில் விரைவாக உலர்கிறது


    கொதிநிலை ,  ஆவியாதலுக்கு இடையேயான வித்தியாசத்தை குழந்தைகளுடன் பேசுங்கள்;

     கொதிக்கும்போது ஆவியாகும்  ஆனால் அனைத்து ஆவியாதலுக்கும் கொதிப்பு தேவையில்லை






No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]