Pages

Wednesday, June 16, 2021

எழுத்தாளனைத் தாண்டுதல்

 சாருவின் எழுத்தை ஏன் இன்னும் யாரும் தாண்டிச் செல்லவில்லை என்றொரு விவாதம் சாருவுடனான உரையாடலில் எழுந்தது

சமீபத்தில் ஜெயமோகன் வாசகர்களால் நடத்தப்பட்ட ஒரு சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் அனைத்தும் ஜெயமோகன் எழுத்தை போலி செய்ய முயல்பவை என்ற விமர்சனம் எழுந்தது

    ஜெயமோகனைத் தாண்ட வேண்டும் என்ற சிலரது விழைவு இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தியுள்ளது

   ஆனால் சாரு இந்த போக்கை ஊக்குவிப்பதில்லை

சமீபத்தில் சாருவின் நல்லதொரு வாசகரான காயத்ரி எழுதிய கதை ஒன்றை சாரு பகிர்ந்திருந்தார்.

பெரிதும் வரவேற்பைப் பெற்ற அந்த கதை , வித்தியாசமான கதைக்களம் கொண்டது.   வாழ்க்கை பற்றிய கேள்விகள் , மரணம் குறித்த பார்வை என ஆழமான கதை .  வித்தியாசமான சடங்குகள் ,  கலைச்சொற்கள் என புதிய அனுபவம் தந்த கதை.

சாருவைத் தாண்ட வேண்டும் , அவரை போலி செய்ய வேண்டும் என்ற எத்தனம் சிறிதும் இல்லாததால் வித்தியாசமான வாசிப்பனுபவம் தந்தது

அதேபோல ராம்ஜி நரசிம்மனின் சிறுகதை .  கதையின் கடைசி வரியில் நிகழும் திறப்பு என்ற சிறுகதையின் செவ்வியல் வடிவத்தில் கச்சிதமாக பொருந்தும் கதை.  

இதுவுமே சாரு பாணியில் இருந்து மாறுபட்ட கதை


அராத்து எழுதுவதில் சமகால பார்வை , சமகால உறவுச்சிக்கல்கள் என இருக்கும்,கதை சொல்லாடலில் சாருவுக்கே பிடிக்காத அளவுக்கு ஆங்கில கலப்பு இருக்கும் . அந்த பிழைகள் (?!) கதைக்கு ஒரு வித்தியாசமான பரிமாணம் கொடுப்பது வேறு விஷயம்.

இவருமே சாருவை போலி செய்ய முயல்வதில்லை

நிர்மலின் அறிவுப்பூர்வமான தர்க்கவியலான எழுத்து வேறுவிதம்

செல்வகுமார் கணேசன் , கருந்தேள் ராஜேஷ் ,  யாரையோ குளிர்விக்க சாருவிடம் கோபித்துக்கொண்டு பிரிந்து சென்ற சில எழுத்தாளர்கள் என யாருமே சாருவை தாண்டவோ அவரை நகல் செய்யவோ முயல்வதில்லை

திருக்குறளை தாண்ட முயலாமல் , தமிழுக்கு தத்தமது பாணியில் வளம் சேர்த்த புலவர்கள் போல ஜீரோ டிகிரியை , ராசலீலாவை , எக்சைல் நாவலை படித்து ஒரு உத்வேகம் பெற்று தமது பாணியில் எழுதுவதே நல்லது.   ஜீரோ டிகிரியை தாண்ட வேண்டும் என்பது வேண்டாம் என இவர்கள் நினைக்கிறார்கள்

அதற்காக எல்லோருமே இப்படி இருக்க வேண்டும் என்பதில்லை

சிலர் பாலகுமாரனை மாதிரி , சுஜாதா மாதிரி எழுதி பிரபலமாக இருக்கிறார்கள். ஜெயமோகனைத் தாண்ட விரும்புவோரும் உள்ளனர்


இரண்டு சிந்தனைகளுமே இருகககட்டுமே ? நல்லதுதானே




   



1 comment:

  1. யாரையோ குளிர்விக்க சாருவிடம் கோபித்துக்கொண்டு பிரிந்து சென்ற சில எழுத்தாளர்கள்///.....அவர்கள் குளிர்விக்கப்பட்டார்களா என்ற கேள்வியும் இருக்கு

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]