Pages

Saturday, September 17, 2022

ஜெயமோகனும் சாருவும் கனிந்து விட்டார்களா?

 சாரு   கனிந்து  விட்டார்   ஜெயமோகன்   கனிந்து  விட்டார்  என  ஒரு வித  எதிர்மறைத்  தொனியில்   சிலர்  விஷ்ணுபுரம்   விருதை  முன்வைத்து  பேசுவதைக்  காண  முடிகிறது

      மனம்  கனிந்து  அதில்  அன்பு  நிறைந்திருந்தால்தான்  ஒருவன் எழுதவே முடியும்.  எனவே  ஆரம்பத்திலேயே  இருவரும்  பக்குவப்பட்ட  கனிந்த  நிலையில்தான்  இருந்திருக்கிறார்கள்

   ஜெயமோகனுக்கும்  சாருவுக்கும்  ஆகாது  ,   பரம்பரை  வைரிகள்  என்பவையெல்லாம்   பாமரத்தனமானவை

சில  ஆண்டுகள் முன் 

சாருவின்  நண்பரும்  எழுத்தாளருமான அராத்து  நூல்  வெளியீட்டில்  எடந்த, தயக்கங்களும்  இன்றி  கலந்து  கொண்டார்

அந்த நிகழ்வில்,,ஜெ  ஆற்றிய, உரையின் யூட்யூப் வீடியோ  இன்றளவும்  வெகுவாக பார்வையிடப்படுகிறது.    அது  தனியாகவே  நூல்  வடிவம் பெறத்தக்கது

அதில் ஜெயமோகனும்  சாருவும்  ஒருவர்மீது ஒருவர்  காட்டிய  அன்பும்  நெருக்கமும்  ஆச்சர்யம்  அளித்தது


      ஜெயமோகனை   தாழ்த்திப் பேசினால்  சாருவிடம் நெருக்கமாகிவிடலாம்  என  நினைத்த  ஒருவர்  ஜெயமோகனைப்பற்றி கேலியாக  சாருவிடம்  கேள்வி  கேட்டார்

    தன்னைக்  கேலி  செய்தால்கூட  லேசாக எடுத்துக் கொள்ளும்  சாரு  , ஜெயை கேலி  செய்தவரை  படு  ஆவேசமாக  வறுத்தெடுத்து விட்டார்

    ரத்தம்  சிந்தி  கையொடிய   அவர்  எழுதிய  விஷ்ணுபுரத்தைப்  படித்து விட்டு  அதைப் பற்றி  ஏதாவது  பேசு  . நான்  இலக்கியரீதியாக விமர்சிப்பது  வேறு.   அதற்காக  வருபவன்  போவனெல்லாம்  அவரை   தாழ்த்திப்  பேசினால்   நடப்பதே  வேறு  என  வெகு  கடுமையாகப்  பேசி  அவரை  நட்பு  வட்டத்தில்  இருந்து  வெளியேற்றினார்

       பத்து  ஆண்டுகளுக்கு  முந்தைய  சம்பவம்  இது.   மனம்  கனிந்த ( !?) தற்போதைய  சாரு  அல்ல

         ஒரு முறை  ஞாநி  சாருவை  மேடையில்  வைத்துக்  கொண்டே ,  அவரது சில  எழுத்துகள்  பிறரால் எழுதப்பட்டவை  என்கிறார்களே  என  இலக்கிய   வரம்புக்கு  அப்பாற்பட்ட  கேள்வி  எழுப்பினார

" ஜெயமோகன்  இதுபோன்ற   தாக்குதல்களை  ஒரு  போதும்  நிகழ்த்தியல்ல



      (  அந்தக்  குற்றச்சாட்டை  ஒரு  காலத்தில்  வைத்தவர் , தான்  அப்படி  சொல்லவே  இல்லை  என  சமீபத்தில்  பேசி, அதை முடித்து வைத்தது  வேறு விஷயம் )

       நான்  சம்பந்தப்பட்ட  ஒரு  நிகழ்வு

சாரு  வாசகர்  வட்ட  நிகழ்வில்  ஒரு தனிப்பட்ட  உரையாடலில்  சாரு  இசை  குறித்தும்  லத்தீன்  அமெரிக்க சினிமா குறித்தும் சில  விஷயங்கள்  சொன்னார்.  அப்போது  ஸ்மார்ட்  போன்கள்  கிடையாது.   எனவே  யாராவது  இதை குறிப்பெடுத்து  வைத்துக்  கொண்டு பிறகு  நினைவு  படுத்துங்கள்  எனறார்  என்னிடம்  பேப்பர்  பேனா  எப்போதும்  இருக்கும்  என்பதால்  நான் அனைத்தையும்  குறிப்பெடுத்தேன்

இரண்டு  நாட்கள்  கழித்து  அதை  டைப் செய்து  அவருக்கு  அனுப்பினேன்.

Dear  charu   , with  reference  to  our  discussion ,என்றெல்லாம்  விளக்காமல்  அவர்  பேசியதை மட்டும் அனுப்பினேன்

    அவர்  எனக்கு  பதில்  அனுப்பினார்;

அன்புள்ள  பிச்சை 

   உங்களது  கட்டுரை  அபாரம்.   உங்கள்  பெயரை  குறிப்பிட்டு , இதை  எனது  கட்டுரையில்  பயன்படுத்திக்  கொள்ள  அனுமதிப்பீர்களா

    அன்புடன்  சாரு


இதைப் படித்து  அதிர்ந்து போய் அவரிடம்  சொன்னேன்    இது  எனது  படைப்பு  அல்ல.   முழுக்க  முழுக்க உங்கள்  சிந்தனை  அது   நான்  சும்மா  குறிப்பு  எடுத்தேன்  என்றேன்

        இப்படி சின்ன  சின்ன  செயலில்கூட  நுட்பமாக  பெருந்தன்மையாக  நடந்து  கொள்பவர்  அவர்

        அவரது  எழுத்துகள்  அனைத்துமே  இந்த  சென்சிப்ளிட்டியைத்தான்  பேசுகின்றன

         அவர்  எழுத்துக்கும்  பேச்சுக்கும்  வாழ்க்கைக்கும்  எந்த  வேறுபாடும்  இருப்பதில்லை

    எழுத்து  எனும்  வேள்வியில்  தன்னையே  அர்ப்பணித்துக்கொள்பவர்  அவர்    கற்பனையான  ஒரு  ஃபேண்டசி  உலகை  அவர்  சமைப்பதில்லை

    ரத்தமும்  சதையும்  கண்ணீரும்  காதலும்  காமமும்   உண்மை  வாழ்வில் உள்ளபடியேதான்  நுரைத்துப்   பொங்கும்;

         வெண்முரசு   போன்ற  ஒரு  நாவலை  படைக்க  வேண்டியதில்லை

, ஒளரங்ஸேப்   நாவலைத்தான்   அவர்  படைக்க  முடியும்   அதுதான்   இலக்கியத்துக்குதேவை   அதற்காகத்தான்   இயற்கை  அவரை  உலகுக்கு  அனுப்பியுள்ளது

        அவர் எழுத்து  வேறு  வகையானது  என்பதைத்தான்  ஜெயமோகன்  அன்றும்  சொன்னார்  இன்றும்   சொல்கிறார்   நாளையும்   சொல்வார்

     திடீரென  கனிந்து போய்  தன்  மதிப்பீடுகளை  ஜெ மாற்றிக்  கொள்ளவில்லை

ஜீரோ  டிகிரி  வெளிவந்தபோது  அதை  மலம்  என  சுஜாதா  போன்றோர்  திட்டியபோது  அதற்கு  ஆதரவாக  இருந்து  அங்கீகாரம் அளித்த  ஜெ ( பாராட்டிப் பேசிய இன்னொருவர்  இ பா ) அந்த  அங்கீகாரத்தை  தற்போது வேறு  வடிவில்  காட்டுகிறார்   அவ்வளவுதான்


பெர்ப்யூம்களை  எப்படி  தேர்வு  செய்கிறேன்  என  சாரு  பல   சந்தர்ப்பங்களில்  எழுதி  இருப்பார்.

ஒரு முறை  மலம் நிறைந்த  வாளி  தன் மீது  அப்படியே கொட்டி விட்டதையும்  எழுதியிருப்பார்

       நிகழ்வுகளை  புனைவு  போன்ற  சுவாரஸ்யத்துடன்  புனைவை  உண்மை  நிகழ்வு  போன்ற  பாவனையுடன் எழுதி  புனைவு  அபுனைவு  எல்லைகளை  தொடர்ந்து  அழித்து  வரும் எழுத்து  அவரது

     மீன்கார  பாட்டி , துப்புரவுத  தொழிலாளர்கள்  ,  பிழைப்புக்காக  திருடக்கூடிய  சிறு  திருடர்கள் , பாலியல்  தொழிலில்  தள்ளப்பட்ட  அபலைகள்  போன்ற   விளிம்பு  நிலை  மக்களை  அவர்  எழுத்து   தொடர்ந்து  பேசி வருகிறது

உயர்தர  உணவுகள்  கேளிக்கை  விடுதிகள்  என  கொண்டாட்டங்களையும்  பேசுகிறது

        சாரு  எழுத்தை  படிக்கும்  ஒருவன்  யாரிடமும்  போய் ,   சட்டை  என்ன  விலை  கால்  பிறக்கும்பாதே  இப்படியா  அல்லது  விபத்தா   ..   என்றெல்லாம்  கேட்க  மாட்டான்      பூக்கார கிழவியிடம்  பேரம்  பேச  மாட்டான்      தெரியாமல்  இடித்துவிட்ட  பெண்ணிடம்  மீண்டும்  மீண்டும்  மன்னிப்புக்  கேட்டு  அவளை சங்கடப்படுத்த மாட்டான்

        முதல்  நாவலான  ஜீரோ டிகிரியில்  அப்பா  மகள்   பந்தத்தை  சொல்லி  , தொடரந்து  அன்பை  தன்  எழுத்துகளில்  வரும்  சாருவுக்கு  சமரசமற்ற மதிப்பீடுகள்  கொண்ட  ஜெயமோகன்  விருது  வழங்குவது  மிகவும்  மகிழ்ச்சிக்குரியது

          





2 comments:

  1. ஆத்மார்த்தமான பதிவு.

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு👌💐

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]