வரலாற்று பக்கங்களை சற்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ..
**************************************************************
இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி, உமர் ( ரலி ) அவர்கள் ஆட்சி காலம். ஜெருசலேமில் உள்ள கிறிஸ்துவ ஆலயம் ஒன்றில் , கிறிஸ்துவ நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்தார் அவர்..
மாலை ஆகி விட்டதால், தொழுகை செய்ய தன இல்லம் செல்ல விரும்பினார், உமர் (ரலி ).. நண்பர்களோ, அங்கேயே ம அவர்கள் ஆலயத்திலேயே தொழுமாறு கேட்டு கொண்டனர்..
உமர் தோழா மறுத்து காரணம் சொன்னார்..
இங்கேயே , பக்கத்தில் ஒரு இடத்தில் தொழ எனக்கு ஆட்சேபம் இல்லை... நான் தொழுது விட்டு சென்று விடுவேன்... ஆனால், உமர் தொழுத இடம் என இதற்கு பெயர் ஏற்பட்டு விட்டால், வருங்காலத்தில், விபரம் தெரியாத என் சமயத்தினர், முன்பு இது பள்ளிவாசலாக இருந்த ஒன்று... கிறிஸ்தவ ஆலயம் அல்ல. என வாதிட கூடும்... பிரச்சினையை நான் விடும்பவில்லை, என சொல்லி விட்டு, வேறு இடத்தில் தொழுகையை நிறைவேற்றினார்...
அந்த இடம் , மஸ்ஜிதே உமர் ( உமரின் பள்ளி ) என அழைக்க படுகிறது ....
***********************************************************************************************************
இவர் ஆட்சி காலத்தில், அமர் ( ரலி ) என்பவரை, எகிப்துக்கு கவர்னராக நியமித்து இருந்தார்,.,,
நல்லாட்சி நடந்து வந்தது... கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒறுமையாக நடந்து வந்தனர்...
அப்போது கசப்பான நிகழ்வு ஒன்று நடந்தது... அனைவராலும் நேசிக்கப்படும் இயேசு நாதரின் சிலையை யாரோ, சேத படுத்தி விட்டனர்.. முகம் சேதப்படுத்த பட்டிருந்தது...
கிறிஸ்தவர்கள் கொதித்து எழுந்தனர்... கவர்னரிடம் ம் முறை இட்டனர்...
வருத்தப்பட்ட அமர், நீங்கள் என்ன நஷ்ட இட்டு கேட்கிறீர்களோ, அதை தர உத்தர விடுகிறேன் என்றார்..
" என்ன நஷ்ட ஈடு தந்தாலும், எண்கள் கோபம் தீராது... முகமது நபியின் சிலையை நிறுவி அதை சேத படுத்துவதுதான் , எங்களுக்கு ஆறுதலாக அமையும் என்றனர் அவர்கள்...
பதறி போனார் ஆளுநர்... உருவ வழிபாடு கூடாது என்பதுதான் , எங்கள் கொள்கை... வேண்டுமானால், நான் பொது இடத்தில் நிற்கிறேன்... என் முகத்தை சேத படுத்தி கொள்ளுங்கள் : என்றார் அவர்.
அதே போல் பொது இடத்துக்கு வந்தார்... கத்தி தர பட்டது...
கூட்டதில் இருந்த உண்மை குற்றவாளிக்கு மனசாட்சி உறுத்தவே , அவரை ஒன்றும் செய்யாதீர்கள்,,, மத நல்லிணக்கத்தை கெடுக்க , நான் தான் அப்படி செய்தேன் " என கதறினான்...
அனைவரும் உண்மையை உணர்ந்தனர்....
***********************************************
இஸ்லாம் என்ற இனிய மார்க்கம் போதிப்பது அமைதியையும் அன்பையும்தான்....
பொறுமை.. தலைவரே.. பொறுமை...
ReplyDeleteநண்பரே.. சில விஷயங்களுக்கு காலம் பதில் சொல்லும்.. வெயிட்.. உணர்ச்சி வசப்படுதல் தான் தரம் தாழ்வதற்கான முதல் வீழ்ச்சி.. என்பதே என் கருத்து. அதை எழுதி மட்டும் வைத்திருக்காமல் கடை பிடிப்பவன்.
ReplyDeleteதமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete