" காலைல முதல் வேலையா ,அவளை பார்க்கணும் "
அவளை பார்க்க நண்பன் அழைத்தது, மகிழ்சிதான் என்றாலும் என்னால் முழுதாக மகிழ முடியவில்லை....
அவளை நான் லவ் செய்வதும் , ஆனால் காதலை சொல்ல தயங்கியதும், கடைசியில்நண்பன் உதவிக்கு வர சம்மதித்ததும் இப்போது தேவையில்லாத விஷயம்...
" நாளை காலை பார்க்க போகலாம் " என்று சொன்னானே , அதில் தான் சிக்கல்..
இரவு ரொம்ப நேரம் பேசிகொண்டிருந்தோம்... லேசா தண்ணி வேறு...அப்படியே தூங்கி விட்டோம்...
இப்போது எனக்கு என்ன குழப்பம் என்றால், " காலி அவளை பார்க்க போகலாம் " என்று உண்மையில் சொன்னானா , அல்லது கனவா ?
அவனை நேரடியாக கேட்கவும் மான பிரசின்னையாக இருந்தது....அனால், அது உண்மையாக இருந்தால், சீக்கிரம் கிளம்பியாக வேண்டும்...
என்ன செய்வது... அவனை , சுற்றி வளைத்து கேட்டேன் ..என்னடா,, இன்னிக்கு பிளான் மாற்றமில்லையே..
நான் சொன்னால் சொன்ன்னதுதான் , என்ற படி பேப்பர் படிக்க ஆரம்பித்தான் அவன்...
அவன் எந்த பிளானை சொல்கிறான்...அவளை பார்ப்பது என்றால், சீக்கிரம் கிளம்பவேண்டும்/... ஒரு வேலை வேறு எதாவது சொல்கிறானோ . நான்தான் கனவு கண்டு குழம்புகிறேனோ...
"கடவுளே ..காப்பாத்து " வாய் விட்டு அலறினேன்...
" என்னடா,,எதாவது கனவா"
நண்பர்கள் ஆர்வமாக அருகில் வந்தனர்..
அட..சீ...எல்லாம் கனவா...
மறுபடி குழப்பம்... இதுவாவது உண்மையா... அல்லது இதுவும் கனவா...
ஒரு வேளை , காலையில்கிளம்பு சொன்னதுதான் உண்மைய... இதுவெல்லாம் கனவா...
கனவு எப்போது கலையும்?
நடந்ததை அப்பிடியே பதிவிட தொடங்கினேன்,..
அனாலும் , இதுவும் கனவுதானோ என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது...
உண்மையா... அல்லது இதுவும் கனவா...
ReplyDelete