Pages

Friday, June 7, 2013

மனுஷ்யபுத்திரனின் பொன்மொழிகள் கவிதைகளாகுமா? - கவிஞர் றியாஸ் குரானாவுடன் உரையாடல்


     நண்பர் ராஜராஜனுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் பயங்கர படிப்பாளி.. நானோ துடைப்பாளி, அதிலும் கவிதை , இசை போன்றவை எனக்கு  பிடிபடுவதில்லை.

எனவே அவருக்கு பிடித்த கவிதை ஒன்றை சொல்ல சொன்னேன்.

அவர் சொன்னார். “ தோல்விகளை வேதனையாக நினைக்காதே,,  அவை சாதனைகள் செய்யும் முன் உனக்கு வைக்கப்படும் சோதனைகள் “ என்றார்.

அவர் சொன்ன பொன்மொழி எனக்கு பிடித்து இருந்தது,,

சூப்பர் பாஸ். சரி கவிதை சொல்லுங்க என்றேன்.

அட முட்டாளே என்பது போல என்னை பார்த்து, இது மனுஷ்யபுத்திரன் எழுதிய அருமையான கவிதை என்றார்

கவிதை மாதிரி தெரியலீங்க்ளே என பரிதாபமாக சொன்னேன்.,

இதை மேலிருந்து கீழாக படியுங்கள்...கவிதையாக தெரியும் என்றார்.

எண்ட்டர் கீ புண்ணியத்தில் மேலிரிந்து கீழாக மாற்றினேன்

தோல்விகளை 
வேதனையாக 
நினைக்காதே,,  
அவை 
சாதனைகள் 
செய்யும் 
முன் 
உனக்கு 
வைக்கப்படும்
 சோதனைகள்.

- மனுஷ்ய புத்திரன்


அப்படியும் எனக்கு அது கவிதையாக தெரியவில்லை.. பொன்மொழியாக தெரிகிறது என்றேன்,
கடுப்பான அவர் , சரி நல்ல கவிதை ஒன்றை நீங்கள்தான் எழுதிக்காட்டுங்களேன் ,,பார்ப்போம் என்றார்.

நான் கவிதையை கண்டேனா, கழுதையை கண்டேனா,,,  

இது சரிப்படாது என அவருக்கு பை சொல்லி விட்டு நண்பரும் , கவிஞருமான றியாஸ் குரானாவுடன் கவிதை குறித்து கொஞ்சம் பேசினன்.

*****************************************************

பிச்சைக்காரன்

கவிதை சார்ந்த உரையாடல் முக நூலில் அதிகம் இல்லை என நினைக்கிறீர்களா

றியாஸ் குரானா

இலக்கியம் சார்ந்த உரையாடலே இல்லை.
பொன்மொழிகள் மாதிரி, திடீரெனத் தோண்றி ஏதாவது சொல்லிவிட்டு மறைந்துவிடும் புத்திஜீவிகளே இங்கு அதிகமிருப்பதுபோல் தெரிகிறது.

நாவல் குறித்தாவது அவ்வபோது பேசுகிறார்கள்...கவிதை என்ற வடிவம் நம் மக்களுக்கு இன்னும் பரிச்சயம் ஆகவில்லை

ஆமாம், பேசுகிறார்கள். ஒத்துக்கொள்கிறேன். புதிதாக ஏதும் பேசுவதுபோல தெரியவில்லையே...
எழுத்துக்களில் குறித்தவகையினத்தை மாத்திரம் இலக்கியமாக கருதுவது தொடங்கி,,, இலக்கியம் குறித்து ஏதும் பேசுவதாக காணவில்லை. அல்லது, அவைகளை நான் சந்திக்கவில்லை...

அட்லீஸ்ட் நாவல் குறித்த அறிமுகங்கள் , சினிமா குறித்த அறிமுகங்கள் நடக்கின்றன.ஆனால் கவிதைகள் குறித்தோ, கவிஞர்கள் குறித்தோ அறிமுகங்கள் இல்லை
லத்தீன் அமெரிக்க நாவல்கள் குறித்து ஒரு சராசரி முக நூல் பயனாளனுக்கு தெரியும்.அகிரா குரசாவோ,கிம் கி டுக் என தெரியும்..ஆனால் ஒரு கவிஞர பெயர் கூட தெரியாது

அறிமுகங்கள் அவசியமானவைதான். அதைப் புரிந்துகொள்வதற்கான விமர்சன முறைமைகள் இங்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. அது சிறந்தது, அல்லது சிறப்பற்றது என தமது நீதியை அப்பிரதிகளின் மீது திணிக்கும் வாசிப்பு முறைகளினுாடாகவே, அறிமுகங்களையும் உள்வாங்க வேண்டியிருக்கிறது. இது, நமது பார்வையாளர்கள் எதிர்கொள்ளும் துரதிஷ்டமான ஒரு நிலைதானே....


அதேநேரம், இங்கு உருவாகியிருக்கும் நவீனத்திற்குப் பிறகான, கவிதைகள் குறித்த சரியான பேச்சுக்களும் இல்லை. கவனிப்புக்களுமில்லை. இதுவும் இன்றைய நிலையில் முக்கியமான குற்றச்ாட்டுத்தானே.....

ஆம்
உண்மையில் கவிதையில் என்ன நடக்கிறது என்பது ..சாதாரண வாசகனுக்கும்தெரிய வேண்டும்

விமர்சன முறைமைகளை அறிமுகப்படுத்தி, விவாதிக்காதவரை எந்த இலக்கியப் பிரதியை தமிழ் சந்தித்தாலும், அது எதற்கும் உதவப்போவதில்லை.
நாவல் எழுதிகள், கவிதை புனைவாளர்கள் உருவாகியிருக்குமளவிற்கு, பிரதி வாசிப்பாளர்கள் இங்கு இல்லை. அந்த இடைவெளி, தமிழின் இலக்கியப் பிரதிகளின் மீது (முக்கிய தற்கால) வசை பாடவும் புறமொதுக்கவுமே இடந்தரக்கூடியது.
அதே நேரம், மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பிரதிகள் முக்கியமானவையாக கொண்டாடப்படும் மோசமான ஒரு நிலைக்கும் இட்டுச் செல்லும். ஏன் சென்றுவிட்டது என்றே கூறலாம்.


பின் நவீன கருத்து நிலை நாவல் என்று ஏதுமில்லை என்றே நினை்கிறேன். பின்நவீன வாசிப்பு இருக்கிறது. அதுவும் பல்வகையானது...கவிதை குறித்து ஓரளவு உரையாடியிருக்கிறேன். நான்லீனியர், மற்றும் பின்நவீன வாசிப்புக்கு அனுக்கமானவர்கள் கவிதைப் பிரதிகளை ஓரளவு நெருங்க முடியும் என்றே கருதுகிறேன்....
தனிப்பட்ட கடமை என ஏதுமில்லை. ஆயினும், நீங்கள் சொல்லுவதில் அர்த்தமுண்டு. ஆனால், புனைவெழுத்தாளனாக (கவி) இருந்து கொண்டு அதைச் செய்தால் எனது கவிதைகளை முதன்மைப்படுத்துவதற்காக செய்வதாகவே கடைசியில் குற்றம் சுமத்தப்படுவேன். அதை எதிர்கொள்ள முடியதவனாக இருக்கிறேன்...



பொதுவெளியின் அனைத்துப் பார்வையாளர்களையும் எதிரில் வைத்து இலக்கியப் பிரதிகளை கொண்டுவருவதில்லை. அதுபோல, பெரும்பான்மை பார்வையாளர்களை கருத்தில் கொள்வதுமில்லை. அப்படிச் செய்தால் அது தவறும் அல்ல. ஆனால், முற்றிலும் வேறுபட்ட பார்வையாளர்களுக்காகவே நான் எழுதுகிறேன். அல்லது, கவிதைக்கு ஏலவே உள்ள பார்வையாளர்களிலிருந்து முற்றிலும் புதிய பார்வையாளர்களை உருவாக்குவதே எனது கவிதையின் பணி. பழக்கப்பட்டுப் போன பார்வையாளர்களுக்காக ஒரு பொருளை உற்பத்தி செய்வது புனைவாக இருக்காது.

குட் குட்

புத்திரன் போல பலர் வடை சுட்டபடி இருக்கிறார்கள். எனது பொருளுக்கு பெயரிடுவது கடினம். அதன் சுவையை இப்போதுதான் அறிய வேண்டி வருகிறது. ஆயினும், இது ஒரு ஏற்க்கக்கூடிய முன்வைப்பு அல்ல. இன்றைய பிரதிகளை புரிந்துகொள்ளத்தக்க வாசிப்பு முறைகளை கண்டடைய வேண்டும். அது விவாதிப்பதினுாடாகவே சாத்தியப்படக்கூடியது. விவாதிப்பதற்கு இங்கு யார் முன்வருகிறார்கள்?

இப்போதிய நிலையில் விவாதிக்கும் நிலையில் தமிழ் சூழல் இல்லை.கற்கும் நிலையில் உள்ளது..ஆனால் அதுகூட தெரியாமல் வெறும் வசையை விவாதம் என நினைக்கிறார்கள்

கற்கும் நிலை என்பது, மிகக் கடும் கோபத்திலிருந்து எழும் ஒரு முன்வைப்பு. ஏலவே, நிறை அம்சங்கள் தமிழில் இருக்கிறது. பல கருத்துநிலைகளைத் தமிழ் சந்தித்துமிருக்கிறது. அதைத் தொகுத்து, அவைகளிலிருந்து புதிய ஒரு வாசிப்பு முறையை கண்டடையவில்லை என்பதே இன்றைய நிலைக்கு காரணம்.
பெரும்பான்மையான ஆதரவு என்பதே ஒரு இலக்கியப் பிரதியின் வெற்றியாகவும் பாவிக்கப்படுவதே இங்கு பெரும் அபத்தமானது.


பொன்மொழிகளை கவிதை என சொல்லி ஏமாற்றுகிறார்களே...உங்கள் கருத்து?

நமது தமிழ் எவ்வளவு விசயங்களைத் தாங்கிவிட்டது. இதைத்தாங்குவதொன்றும் பெரிய விசயமா என்ன?

ஹா ஹா

மபு, இதை கவிதையாக கருதவில்லை. அவரின் எந்த புத்தகத்திலும் இந்த பொன்மொழி இல்லை.

ஹஹஹா

அவரை குற்றம் சொன்னால் , தமிழனாக இருந்து கொண்டு தமிழனை குற்றம் சொல்கிறாயே என்கிறார்களே

விஷயம் தெரியாதவர்களோடு உரையாடும் கலையை கற்றுவிடாதது நமது தவறுதான். அவர்கள் சொல்வது சரி. நம்மை குற்றம் சொல்லாது போனால்தான் நாம் கவலைப்பட வேண்டும். அவர்கள்  விஷ்யம் தெரிந்தவர்கள் என்றாகிவிடும்.

ம்ம்ம்

பட்டியல் கவிதை , விடுகதை கவிதை , பொன்மொழி கவிதை என்றெல்லாம் பல வித கவிதைகள் பெருகுவது ஆரோக்கியமானதா தீங்கானதா

அவைகள் இருப்பது ஒரு வகை ஆரோக்கியமானதா என்றால் இல்லை என்பதுதான் எனது உடனடியான பதில். ஆனால், அவை இருப்பது ஜனநாயனமானது. அதற்குரிய தேவையும் இருக்கிறதே.



அப்படி இருந்தால் ஓக்க்கே..ஆனால் பொன்மொழி , விடுகதை , பட்டியல் போன்றவற்றை கவிதை என சொன்னால் எப்படி?

நாம் சொல்வதில்லை. அவர்கள்தான் அவைகளை கவிதை என அழைக்கிறார்கள்.

சராசரி வாசகனும் அதை கவிதை என நினைப்பதுதானே பிரச்சினை..காலப்போக்கில் அவன் கவிஞன் என நிலைப்பெற்று விடுகிறார்னே

அறிஞர் என்றால் அண்ணாதான் என நமது மக்கள் நினைக்கவில்லையா? அப்படித்தான். அது பொது வெளி. அதற்கு மாற்றமாக சிந்திப்பவர்கள் அவைகளை ஏற்பதில்லை. அதுபோலதான் கவிஞன் என்ற அடையாளமும்.

  இவர்களை விமர்சிப்பது ஓகே,,,  எழுத்துலக பிதாமகர் நகுலனை விமர்சித்தது குறித்து?

நான் நகுலனின் அனைத்து கவிதைகள் குறித்தும் சொல்லவில்லை. சில கவிதைகள் குறித்த பேசினேன். அவருடைய கவிதைச் செயல் ஒருவகை உத்தி கொண்டதுதான்.

உத்தி என்பது கவிதைக்கு எதிரானதா

ஒரு பிரதியை கவிதையாக ஒன்றிலிருந்து வேறுபடத்தக்க ஒன்றாக மாற்ற பயன்படுத்தும் வழிமுறை. உத்தி என்பது கவிதையை தடங்காட்டாது. ஆனால், மற்ற கவிதைகளிலிருந்து வேறுபடுத்தி புரிந்துகொள்ள உதவும்.

அவர் கவிதை ஒரு வகை உத்தி கொண்டது என்பது பாராட்டா... விமர்சனமா

ஒருவகை உத்தி கொண்டது என்பது பாராட்டு. ஒரு உத்தி கொண்டது என்பது விமர்சனம். இரண்டையும் ஒரு வசனத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.



ஒருவகை உத்தி என்பதினுாடாக, மற்றவர்களின் கவிதைகளிலிருந்து வேறுபட்ட தனியான கவிதையை முயற்சித்திருக்கிறார் என்பது பாராட்டாகவும். அந்த ஒரேயொரு உத்தியை மாத்திரமே நம்பி காலாகாலத்திற்கும் கவிதை எழுதினார். ஆக, ஒரு கவிதையையே இவ்வளவு காலமாக எழுதினார். தனது இரண்டாவது கவிதையை எழுதவில்லை என்பது விமர்சனம். ஒரே வரியில்.

\

***********************************

இலக்கணத்தை மீறி எழுதப்படும் புதுக்கவிதைக்ளுக்கு வரைமுறைகள் தேவையா, சுஜாதாவின் பிற்போக்கு அடையாளங்களை மறைத்து அவரைக்காக்க , அவாளை மிஞ்சும் வகைகள் சிலர் செயல்படுவது குறித்து...
‘அடுத்த பகுதியில்

1 comment:

  1. தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]