Pages

Tuesday, March 18, 2014

தண்ணீர் தேவதை 2 ( இணைய மேதைகளின் இணையற்ற படைப்பு )


முந்தைய அத்தியாயங்களை இதில் படிக்கலாம்

அத்தியாயம் 8

எழுதியவர் தேசாந்திரி வழிப்போக்கி
நாகராஜ் என்னப்பா ஊரே கலவராமிருக்கு?தோழர் வந்திட்டீங்களா?நம்ம கணேசனுக்கு துர்மரணம் சம்பவிச்ச நேத்து ராத்தியில இருந்து அவன் கூட்டாளிகளை சுத்தி சுத்தி வரான்.நிர்மல் யாரிடமும் பேசறதில்லை.சிரசாசனம் செய்தப்ப பிச்சைக்கு தெரிந்த காயத்ரி, முடிஞ்சதும் நம்ம கந்தசாமி வீட்டு கிழவியாத் தெரிஞ்சதாம்.ஊரே பயந்துபோய் கிடக்கு தோழரே.அட ஏன் எல்லோரும் இப்படி இல்லாத ஒன்னுக்காக பயந்து சாவறீங்க?மூனு பயங்களும் ஒன்னா சுத்திக்கிட்டிருந்த கூட்டு களவாணிங்க.ஒருத்தன் செத்ததும் மிச்சமுள்ளவனுங்க பயந்து போய் கிடக்காங்க.இல்லைங்க தோழரே கணேசன் வீட்டுக்குள்ள வித்தியாசமா சத்தம் கேக்குதாம்.அடப் போங்கய்யா நீங்க நம்பற ஈஸ்வரன் சுடலையா சாம்பல் பூசி ராத்திரி பூரா ஆடறாராம்,அவர்கூடவே பேய் பிசாசெல்லாம் சேர்ந்து ஆடி களைச்சு விழுந்து சுடுகாட்டிலேயே தங்குதுங்களாம்.ஈஸ்வரனை நம்புற நீங்க இதை ஏன்யா நம்ப மாட்றீங்க?.கடவுளை நம்பாத நாங்க இதைத்தானயா வெங்காயம்னு சொல்றோம்.தோழரே கணேசன் உடம்பு அடக்கமாகலயே.அதான் வீட்டையும், அவன் கூட்டாளிகளையும் ஆத்மா சுத்தி வருது போல.அவனை பெத்தவங்களே உள்ள போக பயந்து எதிர்வீட்ல உட்காந்திருக்காங்க பாருங்க தோழர்.அட வெங்காயங்களா எத்தனை பெரியார் வந்தாலும் திருத்தமுடியாதுய்யா உங்கள.இன்னைக்கு ராத்திரி நான் தங்கறேன் கணேசன் வீட்ல.ஊரில் இருக்க மொத்த ஜனம் தடுத்தும் தோழர் கணேசன் வீட்டுக்குள் போய் கதவை தாளிட்ட அதே சமயம் பூரணமா தெரிஞ்ச நிலவை கரும்மேகம் சூழத் தொடங்கியது.நிலவும் மர்மமா சிரிக்கற மாதிரியே இருந்தது!.....




*******************************************************************

அத்தியாயம்9

எழுதியவர் சரஸ்வதி ஸ்வாமினாதன்
Judgement day பற்றிய பயம் பிச்சைக்கும் நிர்மலுக்கும் கணேசன் அகால மரணம் தந்நது. அவன் செத்துப் போகல பேயா இருக்கான் என்ற நினைக்கல ஆனா அவன் அகப்பேய் என்ன என்ற கேள்வி விதைச்சுட்டு போயிட்டான் என்று இருவரும் அவர்கள் மனம் யோசிப்பதை தனித்தனியே உணர்ந்தனர். அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடு வித்தியாசமாய் இருக்க இன்னும் கலவரமானார்கள் அவர்களை சுற்றியிருப்போர்.

கணேசன் பற்றி அதிகம் தெரிந்தவர்களைவிட இந்த நண்பர்களின் மூலம் அறிமுக மானவர்களே அதிகம்.

கணேசன் பிச்சை நிர்மல் புத்தக கண்காட்சிக்காக சென்னை வந்து அப்படியே சாரு சாரை பார்த்துவிட்டு திரும்பி போனார்கள்.

பாலு சாரோட மரணம் பற்றிய சர்ச்சை பிச்சை எழுதியது பார்த்து கணேசன் எனக்கும் இப்படி ஒரு போஸ்ட் போடுவியா என்றான்.

உனக்கு போஸ்ட் இல்ல தொடர் நாவல் நம்ம வாசகர் வட்டம் எல்லாம் உனக்காக எழுதுவாங்க நம்ம சாரு சாரும் எழுதுவாரு...

விளையாட்டு பேச்சு நிஜமான அதிர்ச்சியில் நிர்மல் நீந்த துவங்கி உடல் களைப்பாக மனம் தூங்கும் என கணக்கிட்டு நீந்தி கொண்டிருக்க...தோழர் பைசாசம் பற்றிய விவாதத்தில் இருந்தார்.

நம் கணேசன் விட்டுவிட்டு சென்ற பணிகள் என்னவென்று பிச்சை மனதில் சிந்திக்க துவங்கினான்.
அவன் நாவல் கருப்பொருள் கணேசன் ஆனான். அவன் கலைந்து போன குடும்பம் பற்றிய அக்கறை அதன் பொருளாதார மீட்சி என்று மனம் திரும்பியது. பிச்சை down to earth வந்தான்.

பின் நவீனத்துவத்தின் பின்கோடே என்று பிச்சை பிறந்த நாளில் முன்மொழிய கணேசன் வழிமொழிய ஏரல் பற்றிய அருமையான பதிவு மட்டுமே கணேசனுக்கு அஞ்சலி என நினைத்தான்.

எழவு வீட்டுல காப்பித் தண்ணி கொடுங்க ஆறுதலாய் இருக்கும் என்று எவரோ இட்ட குரலுக்கு ஒரு அரை நிஜார் பையன் வந்தான்.

கணேசன் மிச்சமாய் பிச்சையும் நிர்மலும் கிளம்பினார்கள்.

அவர்கள் தீர்மானம் அந்த கண்களில் தெரிந்தது விடிந்த நேரம் கருமேகம் கலைந்து அகப்பேய் அகன்றது....

விடியல் இனியது என மனம் கூவியது.





******************************************************************




அத்தியாயம்10

எழுதியவர் Arel Arj
நிர்மல் பாட்டி சொன்னதை எல்லாம் மனதில் ஒருமுறை படம் போல ஓட்டி பார்த்தான். சட்டென்று அவன் கவனத்துக்கு ஒன்று தோன்றியது. 120 வருடங்களுக்கு முன் இருந்த ஒரு நோயை பற்றிய அபூர்வ சம்பவங்கள். அப்படி என்ன அபூர்வம், மர்மம்..? எல்லாருக்கும் அது மர்மமா தோன்றாது. சிலர் அதை 'இவ்ளோ தானா' என்று கூறி ஒரு மொன்னையான விஷயம் போல் ஆக்கி விடிவார்கள். ஆனால் நிர்மலால் அப்படி எடுத்து கொள்ள முடியவில்லை. அந்த நோய் வந்தால் நாம் அதை உணர மாட்டோம். நம்மை பார்ப்பவருக்கு நம் முகம் வாடி போனது போல் தெரியும், அவ்வளவாக பசிக்காது, மிக சாந்தமாக மாறிவிடுவோம், எந்த சலனமும் பதைபதைப்பும் நம்மில் எழாது, பிறரிடம் மிக பாசத்துடன் பழகுவோம். 'இதெல்லாம் என்னடா நோய் அறிகுறி' என்று அந்த பாட்டி சொல்லும் போது நிர்மல் நினைத்தான். இந்த நோய் வந்தவர்கள் ஆறு மாதங்கள் வரை இவ்வாறு இருந்து இறந்து போனார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் இறப்பவருக்கு நெருக்கமானவருக்கு, உண்மையாக அன்பு செய்பவருக்கு இந்த நோய் தொற்றிக்கொள்ளும். அவர்களும் நோய் அறிகுறிகளோடு இருந்து பின்னர் இறந்து போவார்கள். இறந்தவர்களின் ஆன்மா பிறரை எந்த விதத்திலும் தொல்லை செய்யாமல் தனக்கு பிடித்தவரை போய் சந்திக்கும், தன் சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும். யாரையும் அந்த நோயினால் இறந்த ஆன்மா தொல்லை செய்தததாக இதுவரை சான்று இல்லை. இந்த நோய் தாக்கிய பிறகு எவ்வாறு அதில் இருந்து விடுபடுவது என்பதையும் அந்த பாட்டி சொல்லி இருந்தார். நோய் அறிகுறிக்கு நேர்மாறான காரியங்களை செய்ய வேண்டும். வெறிகொண்டு சாப்பிட வேண்டும், கோவத்துடன் இருக்க வேண்டும், பரபரப்பாக இருக்க வேண்டும், கடுகளவு பாசம் கூட யாரிடமும் காட்டக்கூடாது. மனித தன்மையற்ற கொடூரனாக மாற வேண்டிய கட்டாயம் நிர்மலுக்கு இப்போது. அவனுக்கு தன்னை மட்டும் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. இந்த நோயுக்கு முற்றிலுமாக தீர்வு கண்டுபிடிக்கவே விரும்பினான். என்ன செய்ய என்று யோசித்த அவனுக்கு, பாட்டியை போய் சந்திப்பதே சரியான வழியாக தோன்றியது.




***************************************************************

அத்தியாயம்11

எழுதியவர் இலக்கியச்செம்மல் வெளங்காதவன்
இந்த வாழ்க்கைதான் எத்தனையெத்தனை திருப்பங்களை அடக்கியது என்று வியந்தவாறே ஒருக்களித்துப் படுத்திருந்தான் பிச்சை. கைகள் குறுக்கி, கால்கள் ஒன்றொன்று பின்னி, ஆதிசேஷனை படுக்கையாய்க் கொண்ட அந்தக் கடவுள் தன் பெண்ணாளுடனான புனைவின் ஆரம்ப நிலை தேட்டங்களை நினைவுறுத்தியது, பிச்சை படுத்திருந்த விதம்.

விதவிதமான ஆசைகளும் விசித்திரங்களும் சொல்லொண்ணாச் சித்திரங்களும் அடைபட்டிருக்கும் மனம் ஒரு குரங்குதான் என்று நினைத்தபோதே, அச்சிந்தினையிலிருந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளி முலாம் பூசியதைப்போன்ற, கீழே அரைவட்டமும் முக்கோணமும் கலந்த வடிவிலான பாட்டில்மீது தாவியது அம்மனக்குரங்கு.

அதைக் கைப்பற்றும் எண்ணமிருந்தாலும் பற்றற்ற நிலையில் பட்டுப்போன பட்டாம்பூச்சியாய், கால்கள் அகற்றிய அணிலாய், நுரைமேல் நீந்தும் தவளையாய், துளசியின் வாடை கண்ட கொசுவாய், வீற்றிருக்கும் கட்டிலாய், திறந்திருக்கும் சன்னலாய், அரைவட்ட முக்கோண பாட்டிலாய், எல்லாமே அவனாகி, அதுவும் அவனும் கலந்து, அதுவும் அவனும் எதுவுமற்ற நிலையாகும், ஒப்பில்லா முறையாகும் சடமாகித்தான் போய்விட்டது அவன் மனம்.

சடமாகிப்போன சடகோபனை நினைக்கவேண்டிய மனதில், திடீரென நிர்மலும், நூற்றைம்பது வருடமாகியும் சடமாகிவிடாத அந்தப்பாட்டியும் நிழலோடினார்கள். மின்னால் கீற்று வெட்டும் வேகத்தின் ஒன்பதின் ஒரு பங்கு வேகமாக, ஓடையின் இறுதித் துளியின் தரையடையும் லாவகமாகவும் நிர்மலும் அந்தப் பாட்டியும்;

கட்டிலிலிருந்து எழுத்துவிட்டான் பிச்சை.

பாட்டி சொன்ன தண்ணீர் தேவதை உண்மைதானா? என மனம் கேள்வி எழுப்பியது. மின்னலுக்குப்பின் வரும் இடியென, புயலென, மழையென அவன் மனம் குழம்பியது.

குழப்பம் நீக்க அவன், அந்தப் பாட்டிலை அணுகினான்.





************************************************************************




அத்தியாயம்12

எழுதியவர் சரவணன்
பிச்சையிடம் இது உண்மைதான என்று தெரிந்துகொள்கிற ஆர்வம் இல்லையில்லை வெறியே சூழ்கொண்டது. புட்டியை கையில் எடுத்தபோது அந்த கிழவி சொன்ன நிழல் உலகம் மற்றும் தண்ணீர் தேவதைகளின் விளக்கங்கள் நிழலாடியது.... அதை சொல்லியபோது கிழவியின் கண்கள் ஒரு அற்புதத்தை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் கண்களை போல் எப்பிடி விரிந்தது....

நிர்மல் கொன்சமும் நம்பமுடியாதவனாக கிழவியின் முன் அமர்திருந்தான். அன்று அந்த கிழவி சொன்ன கதை கேட்கும்பொழுது இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால்...ஹும்ம் இப்பொழுது என்ன புண்ணியம்...பிச்சையும் இதில் வந்து மாட்டிக்கொண்டு....விடை தேடி இப்பொழுது இருவரும் கிழவியின் முன் அமர்திருக்கின்றனர்...

கிழவி, "அவரு ஒரு அற்புதமான மனிதர்! நாங்கள் எல்லாம் அழிந்துபோன இசைவாணர் வம்சாவளியை சேர்ந்தவர்கள். ஊர் ஊராய் திரிவது எங்கள் சமூக வழக்கம். நிரந்தரமாக எங்கும் தாங்குவதில்லை. அந்த சம்பவம் அவருக்கு நேர்ந்த பிறகு நான் இங்கேயே தங்கிவிட்டேன்."

நிர்மல் "அழிந்துபோன கலையா? என்னது அது?"
"அவர் மிக அருமையாக கதை சொல்லுவார். கைகளில் உள்ள அந்த வாத்தியத்தை வைத்துக்கொண்டு வாசித்துக்கொண்டே பாட்டு போல் சொல்லுவார். திங்கடி என்று சொல்லுவார்கள் அந்த வாத்தியத்தை. மூன்று பூசணிக்காய்கள் ஒன்று சேர்த்து கட்டியது போல் இருக்கும் மேல வீணை போன்று..அந்த வாத்தியத்தின் ஓலீ ஒரு முறை கேட்டால் சில மணி நேரங்கள் காதுகளில் கற்பனையாக ஒளித்துகொண்டிருக்கும்"
பிச்சை "அந்த வாத்தியத்தில் அப்பிடி என்ன வித்தியாசம்?"
"இருக்கு தம்பி! இந்த காலத்தில் இதை நம்புவீர்களா என்று தெரியவில்லை ஆனால் உலகம் முழுவதும் இந்த கலை அன்று இருந்தாக அவர் சொல்லுவார். எங்களுடைய சனம்தாம் ஊரு ஊராக சென்று நாங்கள் போகும் வழியில் கேட்ட சம்பவங்களையும் கதைகளையும் சேர்த்து கட்டி ஒரு சுவாரசியமான கதையை போல் உரு போட்டு பாட்டாக பாடுவார்கள். இதில் அந்த சொல்லப்படப்போகும் கதையை இவர்கள் மிக கவனமாக மனத்தில் முதலில் உருவாக்குவார்கள், அதில் ஓசை, உணர்ச்சிகள், படங்களுடன் அந்த கதையை மனத்தில் உருவாக்குவார்கள். இனிக்கு வருதே சினிமா படம் போல மனத்தில் உருவாக்குவார்கள். அதை திரும்ப திரும்ப அந்த வாத்தியத்தை பயன்படுத்தி அதற்கான ராகத்தில் பாடியபடியே அதை மீண்டும் மீண்டும் நினைவில் இருத்துவர்கள்"

பிச்சை "அது சரி பாட்டி, இது என்ன பிரமாதம் பெரிசா ஒன்னும் இல்லையே?"

"தம்பி நிழல் உலகம் என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?

பிச்சை "தெரியாது"

நிர்மல் முகத்தில் அதிர்ச்சி கலவரம் இரண்டும் சேர்ந்த கலவை, ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் நம்ப முடியாது என்று சொல்லவும் முடியவில்லை.

"இன்னிக்கு விஞஙானம் என்று ஏதோ சொல்லுகிறீர்கள்! அந்த உலகம் இங்கேதான் இருக்கிறது நமது உலகத்தொடு ஒன்றோடு ஒன்றாக கலந்து கரைந்து இருக்கிறது. துணியில் உள்ள ஊடு பாவு போல...அதை நாங்கள் தண்ணீர் தேசம் என்று சொல்லுவோம்!"

நிர்மல் "தண்ணீர் தேசமா? நீங்கள் சொன்ன அந்த தண்ணீர் தேவதைகள் அந்த உலகத்தைத்தான் சேர்ந்தவர்களா?"

"ஆமாம்! அன்னிக்கு நீ கேட்டதால் நிறைய சொல்லவில்லை. அந்த உலகம் நம்மோடு தொடர்பில் உள்ளது

இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பிரிசினை என்றால் இங்கே உங்களுக்கு மனத்தில் அடித்துகொள்ளுமே அதற்கு காரணம் இந்த தண்ணீர் தேவதைகள்தான்!"

நிர்மல் "அப்போ நாம் பேசுவதையும், நினைப்பதையும் அவர்களால் பார்க்க முடியுமா?"

"பார்க்க மட்டும் இல்லை உங்கள் மனத்தில் ஒரு விசயத்தை அவர்களால் உருவாக்கவும் முடியும்! இந்த திங்கடி என்ற அந்த வாத்தியம் தண்ணீர் தேவதைகளுக்கு மிகவும் பிடித்தமான இசை! அந்த வாத்தியத்தை வாசிக்கும்போது கூட அமர்ந்து கேட்குமாம்..இவர்கள் உருவாக்கும் இந்த கதைகளை அந்த இசையோடு சொல்லும்போது அவை கூட அமர்ந்து கேட்குமாம்! இதை அவர்கள் நாங்கள் செல்லும் ஊர்களில் மாலை நேரங்களில் ராஜாசபையில் எல்லோரும் அமர்திருக்க படுவார்கள். அப்பொழுதும் அந்த தண்ணீர் தேவதைகள் அங்கே வருமாம் உட்கார்ந்து கேட்ட்க்கும்பொழுது இவர்கள் உருவாக்கிய அந்த காட்சிகளை, உணர்வுகளை இசை கேட்கும் மனிதர்களிடம் அப்பிடியே உருவாக்குமாம். எல்லா மனிதர்களும் ஒரே கட்சி ஒரே உணர்வு! ஆனால் யாருக்கும் புரியாது இது எப்படி என்று"

"சரி இந்த தண்ணீர் தேவதைகள் மனத்தில் காட்சிகள், உணர்ச்சிகளை உருவாக்கமுடியும் என்று சொல்லுகிரீர்களே! இசை சம்பந்தப்பட்டது மட்டும் தான் முடியுமா?

"இல்லை! எதுவேண்டுமானாலும் முடியும்! ஆனால் அதை முதலில் நீங்கள் பிசிறில்லாமல் கற்பனை பண்ண தெரியவேண்டும்! நீங்கள் இப்பொழுது அனுபவித்துகொண்டிருக்கும் பிரிசினை எல்லாத்துக்கும் காரணம் இந்த தண்ணீர் தேவதைகள்தான்!!!"




******************************************************************

அத்தியாயம் 13

எழுதியவர் இலக்கியச்செம்மல் விளங்காதவன்
விஜீநாதன் எனும் தந்துகிக்காரனும் கின்னாரன் எனும் திங்கடிக்காரனும் எமது சபையில் மேலான இசைக்கலைஞர்கள். கீர்த்தனைகளை விஜீநாதன் இசைக்க, பின்புல உயிரூட்டல் கின்னாரனால் நடைபெறும், அனுதினமும்.”

“குயிலின் ஓசையையும், மயிலின் அகவலையும் கேட்டறிந்து, பின்னொலி ரிதங்களையும்(வடமொழிச் சொல்) ஒலியோடை வேகத்தையும் அனுசாரித்து, உள்ளக்கிடக்கையின் சொல்வண்ணம் பூசி, மருகும் மாலையின் வெம்மையை எடுத்து, உருகும் பனியில் நீந்தவைத்து, கொக்கின் வெள்ளையில் நீலச்சாயம் பூசி காதில் வெல்லப்பாகைக் கலந்து ராகமாக்கி, நரம்பிலிருந்தும், விடும் மூச்சிலிருந்தும் தேவராகங்களை இசைப்பவர்கள் அவர்கள்.” அந்தப்பாட்டியின் கண்களின் பிரகாசம் கொப்பளிக்கப் பேசினாள்.

தந்துகிக்கும் தந்துபிக்கும் வித்தியாசமறியா இசைஞானி பிச்சையின் கண்கள், அந்தப்பாட்டியின் காதோரக் கமழங்களில் பதிந்திருந்தது. நிர்மல், தன் முகவாயைச் சொறிந்துகொண்டே, அவளிடமிருந்து வரும் வார்த்தைக் கோர்வைகளை உள்ளீடாக்கப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தான்.

“ஒரு பெண்புறா சிறகுகளை விரித்து மேலெழும்பும் ஓசைக்கென்று தனி ராகங்கள் வைத்திருந்தார்கள் எம் இசைக்கலைஞர்கள். விஜீநாதனும் கின்னாரனும் ‘இசைச்சொரூபிகள்’ என்றே அழைத்தனர் எம்முலகில்.”

“இசையின் சிருஷ்டிக் கோர்வைக்கும், உமது வயிற்றில் எழும் பசிக்கும் உண்டான நுண்கட்டமைப்பு வியாக்கியானங்களை எம்மனோர் ஆராய்ந்துகொண்டிருந்தனர்”

“இந்தக் கின்னாரனின் மூத்த மாணவன்தான், என் கணவன் ‘பாரிசீலன்’!”

எந்தப் பதற்றமுமின்றி அவள் பேசியது, இருவரின் காதிலும் சப்தித்து அடங்கியது.

தென்றல் தன் ஒப்பில்லா நறுமலர் மணத்துடன் வீசியது.





( தொடரும் )



No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]