Pages

Monday, March 17, 2014

மேதைகள் சேர்ந்து எழுதும் அதிரடி கதை - தண்ணீர் தேவதை

ரிலே ரேஸ் கதை... பலர் தொடர்ந்து எழுதப்போகும் கதை... ஒருவருக்கு மூன்று வாய்ப்புகள்.. எழுத விருப்பம் இருக்கும் யார் எழுத வேண்டுமானாலும் எழுதலாம்.. தான் எழுதுவதை , யார் தொடர வேண்டும் என்பதை ( விருப்பம் தெரித்தவர்களிலிருந்து ஒருவரை ) , குறிப்பிட்ட பகுதியை எழுதியவர் சொல்வார்..
***********************************************
தண்ணீர் தேவதை

அத்தியாயம் 1 
எழுதியவர் Nirmal Mrinzo
இந்த கதையை நான் எனது நாவலுக்கான கருவாக வைத்திருந்ததிலிருந்து எழுதுகிறேன், இந்த கதையை எனக்கு சொன்னது ஒரு 150 வயது பாட்டி, ஆத்தங்கரையிலேதான் எப்பொழதும் இருக்கும், அது எப்ப பொறந்திச்சி, இங்கு வந்திச்சின்னு யாருக்குமே தெரியாது, அதுகிட்ட விஷேசமான மருத்துவ சக்தி இருதிச்சி, எங்க ஊருக்கு பக்கம் யாருக்கு மஞ்சள் காமாலை வந்தாலும் இந்த பாட்டிக்கிட்டதான் தூக்கிட்டு வருவாக. சின்ன புள்ள, புள்ளதாச்சி, கிழம், என எல்லோரும் பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட வருவாங்க. எனக்கு மஞ்சள் காமாலையில் இருக்கும் பொழுது நானும் அந்த பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட போனேன், மருந்து வாங்கி சாப்பிட்டேன், சரியான மழை, மழை விடுமென அந்த பாட்டி வீட்டிலேயே காத்துகிட்டிருந்ததில் நேரம் அதிகமாகி, அங்கே தங்கிவிட்டேன். அன்னிக்குதான் அந்த கதையை சொல்லிச்சி பாட்டி. அது அந்த பாட்டியை பற்றி யாருக்கும் தெரியாத கதை. சந்தோஷ வாழ்வை பற்றீய கதை........

அத்தியாயம் 2 
எழுதியவர் பிச்சை
" என்னடே கதை விடறே.. பாட்டியா.. 150 வயசா.. கதை சொன்னுச்சா ..ஹா ஹா.. ஏதாச்சும் கனவா ..ஹா ஹா.. “ வாய் விட்டு சிரித்த கணேசனை சற்று அலுப்புடன் பார்த்தான் நிர்மல்.
” இங்கே பாருடா.. A is A அப்படீங்கற கான்சப்ட் எல்லாம் வழக்கொழிஞ்சு போச்சு.. ஏ என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அப்படீங்கற யுகத்தில இருக்கோம்..truth can be stranger than fiction " என்றான் நிர்மல்..
” சரிடா.. அப்ப நான் ஒரு பேயை பார்த்தேன் அப்படீனு சொன்னா நம்புவியா “ குறும்பாக கேட்டான் கணேசன்.
இப்படி வேறு யாரேனும் கேட்டு இருந்தால் சூடாக பதில் கொடுத்து இருப்பான்.. ஆனால் ஏரலில் இருந்து சென்னைக்கு தன்னை பார்க்க வந்து இருந்து வந்து இருக்கும் பள்ளி நண்பன்..இதமாவெ சொல்வோம்
“ பேய் அப்படீங்கறது பொய்.. நான் சொல்வது வித்தியாசமான உண்மைகள்..ரெண்டும் வேற “ என்றான் நிர்மல்.
“ அப்ப அந்த பாட்டி பொய்னு நான் ஏன் சொல்லக்கூடாது “ விடவில்லை கணேசன்..
“ இருடா பேசலாம்... டீ எடுத்துட்டு வறேன் “ .. சமையல் அறை நுழைந்த போது போன் அடித்தது.. அப்பா.
“ நிர்மல்.. என்னடா போன் கிடைக்கவே இல்லை.. ஒரு பேட் நியூஸ்டா...”
” என்னப்பா “
“ ஃபாரின்ல வந்து இருக்கேனு கேள்விப்பட்டு உன்னை பார்க்க கிளம்பிய உன் நண்பன் கணேசன்... “
“கணேசன் ?”
“கார் ஆக்ச்சிடெண்ட் ஆகி ஸ்பாட்லயே..”
“ என்னப்பா உளறுரீங்க” பதட்டத்துடன் வெளியே ஓடி வந்தான் நிர்மல்
அங்கே கணேசன் இல்லை...
இது ஆல்டேர்னேட் ட்ரூத்தா அல்லது ட்ரூத்தா அல்லது இல்யூஷனா... திகைத்துப்போய் நின்றான் நிர்மல்.. அந்த பாட்டி சொன்ன விஷ்யங்களின் அழுத்தம் , அர்த்தம் புரிய் ஆரம்பித்தது

அத்தியாயம் 3 
எழுதியவர் நிஜந்தன் தோழன்
"கணசே" என வாய் கொழறியது நடப்பது என்ன என விளங்கிக்கொள்ளாமல் நிர்மல் திடுக்கிட்டான்..தான் இதுவரை படித்த நாவலில் கூட இப்படி திடுமென விளங்கிக்கொள்ள முடியாத கதைபோக்கை உணர முடியாததை கண்டு ஆசூயாய் உணர்ந்தான்.வைத்தியம் பார்க்க கிளம்பியதில் இருந்து பாட்டி சொன்ன கதை வரை மீண்டும் நடந்தவற்றை ஒரு முறை மனதில் ஓட்டி க்கொண்டிருந்தான் எல்லாம் தெளிவாக மறுமுறை ஊத்து பறிக்கும் போது வரும் நீரை போல மனதில் ஓடியது. பாட்டி சொன்ன கதை சொல்ல தொடங்கிய முன் ஏழு மோகினிகள் எக்ஸிமோக்கள் பற்றி பேசிய விஷயம் நினைவுக்கு வந்தது.. என்ன யோசித்தானோ தெரியவில்லை திடீரென நீச்சல் குளத்தில் இறங்கி நீந்த ஆரம்பித்தான் எதுமே நடக்காத மாதிரி நீரில் வசிப்பவனை போல நீந்தி கொண்டிருந்தான். குன்றக்கடி கோவிலில் இருந்து வந்துறங்கிய பிச்சை எல்லாவற்றை கண்டு திடுக்கிட்டான் தீடிர் விபத்து,நீந்திக்கொண்டே இருக்கும் நிர்மல் என எல்லாவற்றிர்க்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என சிக்கலை தீர்க்க நிஜந்தனைக் கூப்பிட்டான் பிச்சை...
அத்தியாயம் 4 
எழுதியவர் நறுமுகை தேவி

வாசல் கதவை யாரோ பலம் கொண்ட மட்டும் தட்டும் சத்தம் கேட்டு தடால் என்று எழுந்தான் பிச்சை.. ச்சே! இது என்ன குழப்பமான கனவு..கணேசன் செத்து விட்டதாக போன் வந்ததே..ஐய்யோ..! அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?நெஞ்சுக்குள் கொஞ்சமாய் கலவரம் சூல் கொண்டது.வெளியே காலிங்பெல் அடிப்பதும்,கதவு பலமாய்த் தட்டப்படுவதுமாய் இருந்தது.ஆனாலும்,நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த காரணத்தினால் கால்களில் இரத்தம் கட்டிக் கொண்டு உடனே பதறி எழமுடியவில்லை.மட்டுமில்லாமல்,கனவின் தாக்கத்தில் இருந்து மூளை உடனடியாக விடுபட மறுத்தது.சாவு பற்றிய கனவு கண்டால் திருமணச் செய்தி வருமாமே?உண்மையாய் இருக்குமோ? என்று எண்ணிக்கொண்டே நழுவ இருக்கும் லுங்கியைக் கைபற்றியபடி கதவு திறந்தான் பிச்சை.அங்கே..
வாச..லி…ல்..
பிரிந்து போன காதலி காயத்திரி கைப்பெட்டியுடன்..
என்ன..? அதிர்ச்சியில் நா குழறியது பிச்சைக்கு..

உள்ளே வரலாமா?என்றவள் பதிலுக்குக் காத்திராமல் சர்வ சுதந்திரத்துடன் உள் நுழைந்து இயல்பாகச் சொன்னாள்

பிச்சை..உன்னை விட்டு என்னால் இருக்க முடியலை..வீட்டில் இருந்து மொத்தமாகக் கிளம்பி வந்து விட்டேன்..
அத்தியாயம் 5 
சரஸ்வதி ஸ்வாமி நாதன்

என்ன நீ ஏதோ ஒரு முடிவோடதான் இருக்க போல பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் கோரை பாய் பின்னி நானும் பாட்டியும் பல கதை பேசியிருக்கோம் இப்ப நீ கதைக்கிறதெல்லாம் அவங்க நான் பேசுனதோட மிச்சம்.

ஏரல் நிர்மல் நீயும் இரட்டைகுழல் துப்பாக்கியா இலக்கியம் சுட கிளம்புங்க நான் வேணாங்கள ஆனா பாட்டி கிடந்து தவிக்குது பய புள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்கு நீ போய் கீரை வச்சு கொடு ன்னு சொல்லுக்கு..கட்டுப்பட்டு வந்தேன்.

உலக அறிவையெல்லாம் உன் மூளை உள் வாங்குதே அந்த மலைக்கோட்டை காவிரியில் பாலத்தில் விழுந்து போன தாத்தாவோட சாவு என்ன மாதிரி இந்த கிழவியோட வாழ்க்கையை திருப்பி போட்டுச்சு தெரியுமா ...

150 வருஷமா அதே கரையில் எங்க தலைமுறை அந்த தண்ணீர் கிழவனுக்கு படையல் வைப்போம் எல்லா மஹாளய அமாவாசைக்கு...

போன வருஷம் பாட்டி நம்ம கல்யாணத்துக்கு வேண்டிக்குச்சு நீ பிச்சை எடுத்துக்கிட்டு இங்க கிடக்க....


அத்தியாயம்6
ராம்ஜி யாஹூ


இப்பந்தான் டேய் நிர்மலு ஏறலு, சிருவைகுண்டம் னு தனித் தனியா பேரு வச்சு இருக்கீவ .
உங்க தாத்தா காலத்துல கரும்குளத்துல இருந்து முக்காணி வரை ஒரே ஊரு தான் .
அவுக கருப்பா இருந்தாலும் களையா இருப்பாவ. எனக்கு எட்டு வயசு அப்போ, உங்க தாத்தனுக்கு பன்னெண்டு வயசு . என்கிட்டே எதைப் பாத்து மயங்கினாவா தெரியலை . பெருமாள் சித்ரா பவுர்ணமி அன்னிக்கு ராத்திரி உன்னைய எனக்குப் பிடிச்சிருக்கு புள்ளை , கலியாணம் கட்டிக்கிடுவோம்னு சொன்னவா . அதைக் கேட்ட
எங்க அண்ணன் , உங்க தாத்தாவைப் பாத்து நீரு தேவமாரு நாங்க ஜெபகூட்ட ஆளு, எப்படியா பொருந்தும் சொன்னான் . அதெல்லாம் தெரியாதுவே ன்னு சொல்லி சைக்கிள் கேரியர்ல இருந்து அருவாளை எடுத்து அந்த பெருமா கோவிலு வாழை மட்டை நாரைக் கிழிச்சு அதையே எனக்குத் தாலியாக் கட்டினாவ. சைக்கிள்ள என்ன அப்போமே முன்னால வச்சுக் கூட்டிட்டு போனாவா . கல்யாணம் ஆன முதத் திருப்பு எங்களை வீட்டுக்குக் கூட்டிப் போய் பால், கலர், பர்பி வாங்கிக் கொடுத்தது நம்ம பேட்மா நகரத்து மைதீன் பாய் . என் வயசு 150 சொன்னதுக்கே முளிக்கயேடே , மைதீன் பாய் வயசு இப்போம் 180 தாண்டிருச்சு டேய் .

அத்தியாயம்7

ஸ்ரீநிவாச கோபாலன் வேதாந்த தேசிகன்

பிச்சை மீன் தொட்டியை வெறித்துக்கொண்டு இருந்தான். காயத்ரி குளியலறைக்குள் போனாள். பெண்டுல கடிகாரம் அரைமணி அடித்து ஓயவும் பிச்சையின் செல்போன் ஒலித்தது. மேசை மீது இருந்த செல்போனை எடுப்பதற்குள் வாசற்கதவைத் தட்டும் ஓசை கேட்டு கதைத்திறந்தான். இரண்டு போலிஸ் நுழைந்தனர். அதே கணத்தில் பாத்ரூமில் இருந்து 'டமால்' என்ற சப்தம். ஒரு போலிஸ் காயத்ரி வைத்த பையைத் திறந்தார். அதில் குருதி சொட்டும் தலை. பிச்சைக்குப் பித்து பிடித்துவிடும் போல

( தொடரும் )


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]