Pages

Wednesday, February 19, 2020

மிஷ்கின் என்னை அவமானப்படுத்தினார்.. பிரசன்னா,வேதனை

அன்பின் கரங்கள் , மனிதம் என்றெல்லாம் சிலர் கவிதை எழுதுவார்கள்.  ஆனால் சக எழுத்தாளனுக்குத் தர வேண்டிய நியாயமான ஊதியத்தை தராமல் அந்தக்காசில் உணவுண்டு வயிறு வளர்ப்பார்கள்.

அது போல மானுடம் குறித்தும் அன்பு குறித்தும் பேசும் இயக்குனர் மிஷ்கின் தன்னை அவமானப்படுத்துவார் என எதிர்பார்க்கவே இல்லை என நடிகர் பிரசன்னா வேதனையுடன் தெரிவித்துள்ளார்


இது குறித்து அவர் கூறியதாவது

கதாநாயகனாத்தான் நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் வாங்க வேண்டும் என கருதுகிறேன். அஜித்துடன் அருண் விஜய் நடித்த படம் அருண் விஜய்க்கு பெரிய திருப்புமுனையாய் அமைந்தது. அப்படிப்பட்ட படத்துக்காக காத்திருக்கிறேன்

அந்த அடிப்படையில்தான் துப்பறிவாளன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்

அதன் இரண்டாம் பாகத்தில் என் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தருமாறு கேட்டுக கொண்டேன். மிஷ்கின் ஒப்புக் கொண்டு அதற்கேற்ப திரைக்கதை எழுதினார்

படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தபோது இவர் யார் என என்னைப்பற்றி மிஷ்கினிடம் ஒருவர் கேட்டார்

" இவரா.. இவர் சின்ன சின்ன பாத்திரங்களில் நடிக்கும் துணை நடிகர்," என அலட்சியமாக சொன்னார் மிஷ்கின்

எனக்கு அவமானமாகி விட்டது. மிஷ்கினிடம் இதை எதிர்பார்க்கவில்லை

இவ்வாறு பிரசன்னா கூறியுள்ளார்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]