Pages

Saturday, September 17, 2022

ஜெயமோகனும் சாருவும் கனிந்து விட்டார்களா?

 சாரு   கனிந்து  விட்டார்   ஜெயமோகன்   கனிந்து  விட்டார்  என  ஒரு வித  எதிர்மறைத்  தொனியில்   சிலர்  விஷ்ணுபுரம்   விருதை  முன்வைத்து  பேசுவதைக்  காண  முடிகிறது

      மனம்  கனிந்து  அதில்  அன்பு  நிறைந்திருந்தால்தான்  ஒருவன் எழுதவே முடியும்.  எனவே  ஆரம்பத்திலேயே  இருவரும்  பக்குவப்பட்ட  கனிந்த  நிலையில்தான்  இருந்திருக்கிறார்கள்

   ஜெயமோகனுக்கும்  சாருவுக்கும்  ஆகாது  ,   பரம்பரை  வைரிகள்  என்பவையெல்லாம்   பாமரத்தனமானவை

சில  ஆண்டுகள் முன் 

சாருவின்  நண்பரும்  எழுத்தாளருமான அராத்து  நூல்  வெளியீட்டில்  எடந்த, தயக்கங்களும்  இன்றி  கலந்து  கொண்டார்

அந்த நிகழ்வில்,,ஜெ  ஆற்றிய, உரையின் யூட்யூப் வீடியோ  இன்றளவும்  வெகுவாக பார்வையிடப்படுகிறது.    அது  தனியாகவே  நூல்  வடிவம் பெறத்தக்கது

அதில் ஜெயமோகனும்  சாருவும்  ஒருவர்மீது ஒருவர்  காட்டிய  அன்பும்  நெருக்கமும்  ஆச்சர்யம்  அளித்தது


      ஜெயமோகனை   தாழ்த்திப் பேசினால்  சாருவிடம் நெருக்கமாகிவிடலாம்  என  நினைத்த  ஒருவர்  ஜெயமோகனைப்பற்றி கேலியாக  சாருவிடம்  கேள்வி  கேட்டார்

    தன்னைக்  கேலி  செய்தால்கூட  லேசாக எடுத்துக் கொள்ளும்  சாரு  , ஜெயை கேலி  செய்தவரை  படு  ஆவேசமாக  வறுத்தெடுத்து விட்டார்

    ரத்தம்  சிந்தி  கையொடிய   அவர்  எழுதிய  விஷ்ணுபுரத்தைப்  படித்து விட்டு  அதைப் பற்றி  ஏதாவது  பேசு  . நான்  இலக்கியரீதியாக விமர்சிப்பது  வேறு.   அதற்காக  வருபவன்  போவனெல்லாம்  அவரை   தாழ்த்திப்  பேசினால்   நடப்பதே  வேறு  என  வெகு  கடுமையாகப்  பேசி  அவரை  நட்பு  வட்டத்தில்  இருந்து  வெளியேற்றினார்

       பத்து  ஆண்டுகளுக்கு  முந்தைய  சம்பவம்  இது.   மனம்  கனிந்த ( !?) தற்போதைய  சாரு  அல்ல

         ஒரு முறை  ஞாநி  சாருவை  மேடையில்  வைத்துக்  கொண்டே ,  அவரது சில  எழுத்துகள்  பிறரால் எழுதப்பட்டவை  என்கிறார்களே  என  இலக்கிய   வரம்புக்கு  அப்பாற்பட்ட  கேள்வி  எழுப்பினார

" ஜெயமோகன்  இதுபோன்ற   தாக்குதல்களை  ஒரு  போதும்  நிகழ்த்தியல்ல



      (  அந்தக்  குற்றச்சாட்டை  ஒரு  காலத்தில்  வைத்தவர் , தான்  அப்படி  சொல்லவே  இல்லை  என  சமீபத்தில்  பேசி, அதை முடித்து வைத்தது  வேறு விஷயம் )

       நான்  சம்பந்தப்பட்ட  ஒரு  நிகழ்வு

சாரு  வாசகர்  வட்ட  நிகழ்வில்  ஒரு தனிப்பட்ட  உரையாடலில்  சாரு  இசை  குறித்தும்  லத்தீன்  அமெரிக்க சினிமா குறித்தும் சில  விஷயங்கள்  சொன்னார்.  அப்போது  ஸ்மார்ட்  போன்கள்  கிடையாது.   எனவே  யாராவது  இதை குறிப்பெடுத்து  வைத்துக்  கொண்டு பிறகு  நினைவு  படுத்துங்கள்  எனறார்  என்னிடம்  பேப்பர்  பேனா  எப்போதும்  இருக்கும்  என்பதால்  நான் அனைத்தையும்  குறிப்பெடுத்தேன்

இரண்டு  நாட்கள்  கழித்து  அதை  டைப் செய்து  அவருக்கு  அனுப்பினேன்.

Dear  charu   , with  reference  to  our  discussion ,என்றெல்லாம்  விளக்காமல்  அவர்  பேசியதை மட்டும் அனுப்பினேன்

    அவர்  எனக்கு  பதில்  அனுப்பினார்;

அன்புள்ள  பிச்சை 

   உங்களது  கட்டுரை  அபாரம்.   உங்கள்  பெயரை  குறிப்பிட்டு , இதை  எனது  கட்டுரையில்  பயன்படுத்திக்  கொள்ள  அனுமதிப்பீர்களா

    அன்புடன்  சாரு


இதைப் படித்து  அதிர்ந்து போய் அவரிடம்  சொன்னேன்    இது  எனது  படைப்பு  அல்ல.   முழுக்க  முழுக்க உங்கள்  சிந்தனை  அது   நான்  சும்மா  குறிப்பு  எடுத்தேன்  என்றேன்

        இப்படி சின்ன  சின்ன  செயலில்கூட  நுட்பமாக  பெருந்தன்மையாக  நடந்து  கொள்பவர்  அவர்

        அவரது  எழுத்துகள்  அனைத்துமே  இந்த  சென்சிப்ளிட்டியைத்தான்  பேசுகின்றன

         அவர்  எழுத்துக்கும்  பேச்சுக்கும்  வாழ்க்கைக்கும்  எந்த  வேறுபாடும்  இருப்பதில்லை

    எழுத்து  எனும்  வேள்வியில்  தன்னையே  அர்ப்பணித்துக்கொள்பவர்  அவர்    கற்பனையான  ஒரு  ஃபேண்டசி  உலகை  அவர்  சமைப்பதில்லை

    ரத்தமும்  சதையும்  கண்ணீரும்  காதலும்  காமமும்   உண்மை  வாழ்வில் உள்ளபடியேதான்  நுரைத்துப்   பொங்கும்;

         வெண்முரசு   போன்ற  ஒரு  நாவலை  படைக்க  வேண்டியதில்லை

, ஒளரங்ஸேப்   நாவலைத்தான்   அவர்  படைக்க  முடியும்   அதுதான்   இலக்கியத்துக்குதேவை   அதற்காகத்தான்   இயற்கை  அவரை  உலகுக்கு  அனுப்பியுள்ளது

        அவர் எழுத்து  வேறு  வகையானது  என்பதைத்தான்  ஜெயமோகன்  அன்றும்  சொன்னார்  இன்றும்   சொல்கிறார்   நாளையும்   சொல்வார்

     திடீரென  கனிந்து போய்  தன்  மதிப்பீடுகளை  ஜெ மாற்றிக்  கொள்ளவில்லை

ஜீரோ  டிகிரி  வெளிவந்தபோது  அதை  மலம்  என  சுஜாதா  போன்றோர்  திட்டியபோது  அதற்கு  ஆதரவாக  இருந்து  அங்கீகாரம் அளித்த  ஜெ ( பாராட்டிப் பேசிய இன்னொருவர்  இ பா ) அந்த  அங்கீகாரத்தை  தற்போது வேறு  வடிவில்  காட்டுகிறார்   அவ்வளவுதான்


பெர்ப்யூம்களை  எப்படி  தேர்வு  செய்கிறேன்  என  சாரு  பல   சந்தர்ப்பங்களில்  எழுதி  இருப்பார்.

ஒரு முறை  மலம் நிறைந்த  வாளி  தன் மீது  அப்படியே கொட்டி விட்டதையும்  எழுதியிருப்பார்

       நிகழ்வுகளை  புனைவு  போன்ற  சுவாரஸ்யத்துடன்  புனைவை  உண்மை  நிகழ்வு  போன்ற  பாவனையுடன் எழுதி  புனைவு  அபுனைவு  எல்லைகளை  தொடர்ந்து  அழித்து  வரும் எழுத்து  அவரது

     மீன்கார  பாட்டி , துப்புரவுத  தொழிலாளர்கள்  ,  பிழைப்புக்காக  திருடக்கூடிய  சிறு  திருடர்கள் , பாலியல்  தொழிலில்  தள்ளப்பட்ட  அபலைகள்  போன்ற   விளிம்பு  நிலை  மக்களை  அவர்  எழுத்து   தொடர்ந்து  பேசி வருகிறது

உயர்தர  உணவுகள்  கேளிக்கை  விடுதிகள்  என  கொண்டாட்டங்களையும்  பேசுகிறது

        சாரு  எழுத்தை  படிக்கும்  ஒருவன்  யாரிடமும்  போய் ,   சட்டை  என்ன  விலை  கால்  பிறக்கும்பாதே  இப்படியா  அல்லது  விபத்தா   ..   என்றெல்லாம்  கேட்க  மாட்டான்      பூக்கார கிழவியிடம்  பேரம்  பேச  மாட்டான்      தெரியாமல்  இடித்துவிட்ட  பெண்ணிடம்  மீண்டும்  மீண்டும்  மன்னிப்புக்  கேட்டு  அவளை சங்கடப்படுத்த மாட்டான்

        முதல்  நாவலான  ஜீரோ டிகிரியில்  அப்பா  மகள்   பந்தத்தை  சொல்லி  , தொடரந்து  அன்பை  தன்  எழுத்துகளில்  வரும்  சாருவுக்கு  சமரசமற்ற மதிப்பீடுகள்  கொண்ட  ஜெயமோகன்  விருது  வழங்குவது  மிகவும்  மகிழ்ச்சிக்குரியது

          





Friday, September 16, 2022

பஞ்சாங்கம் இன்றி சிறுகதை எழுதாதீர்கள் − மாலன் சுவாரஸ்ய உரை

 

சிறுகதைப் பட்டறை முதல் பகுதி

    அதன் பிறகு  மாலன்  அதிரடியாகத்  தன்  பேச்சை  ஆரம்பித்தார் 


பாரதியார்  போன்ற  ஆளுமைகளால்  வளர்ந்த  சிறுகதை  இலக்கியம்  இன்று  மிகவும்  அவசியமான   ஒன்றாக  உருவாகியுள்ளது.


எனவே  இந்த  சிறுகதைப்பட்டறை   வரவேற்புக்குரியது.   ஆனால்  பட்டறை  என்ற   சொல் சரியாகத்   தோன்றவில்லை   சிறுகதைப்  பயிலரங்கு என்பது  சரியாக  இருக்கும்


ஒருமுறை  கதை  என்றால்  என்ன  என்பதற்கு  எழுத்தாளர் கல்கி  நகைச்சுவையாக  ஒரு  உதாரணம்  சொன்னார்


ஒருவன்  பட்டுக்கோட்டைக்கு  வழி  கேட்டானாம்   கொட்டப்பாக்கு  காசுக்கு எட்டு என்றானாம்  பதில்  சொன்னவன்


இது சிறுகதையா?


பஞ்சாங்கம்  இல்லாமல்  சிறுகதை  எழுதமுடியாது

எனன  பஞ்சாங்கம்


ஐந்து  அம்சங்கள்;

1  முதன்மைப்  பாத்திரம்.   (  நல்லவன்  என்பது  இல்லை)


2  எதிர்  பாத்திரம்  ( கெட்டவனாக  இருக்க  வேண்டியதில்லை) 


3 கதை  நிகழும்  களம்    .  சூழல்;

4  மையப்புள்ளி     plot

5 ஒரு  திருப்பம்  


கல்கி  சொன்ன உதாரணத்தில்  இவை  இருப்பதை  கவனியுங்கள்

ஊருக்கு செல்ல  விரும்பும்  முதன்மை  பாத்திரம்.  சம்பவம்  நிகழும்  களம் ,  ஒரு நகைச்சுவையான  திருப்பம் என  வந்து  விட்டது  அல்லவா


     ஹிப்பி  ஒருவன்  ஒற்றைச்செருப்பு  அணிந்து  நடந்து  கொண்டிருந்தான்


என்னாச்சுப்பா ?  இன்னொரு  செருப்பு  தொலைஞ்சுருச்சா  என  கேட்டார்  வழிப்போக்கர்


   ஒண்ணுதாங்க  கிடைச்சது  என்றான்  அவன்


இந்த  எதிர்பாராத  பதில் ,   முதன்மை  பாத்திரமான  ஹிப்பி குறித்த  பார்வை ,  களம் ,  மையப்புள்ளி என அனைத்தும் இதை ஒரு கதை  ஆக்குகிறது


  கதைக்கு ஆரம்பம்  வெகு  முக்கியம்;

உதாரணமாக  எம்  எஸ்  கல்யாணசுந்தரம் எழுதிய  தபால்கார  அப்துல்காதர்  சிறுகதையின்  ஆரம்ப  வரிகளைக்  கவனியுங்கள்


சென்ற வருஷம் பெர்னார்ட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது ‘இவ்வூரில் பார்க்கத் தகுதியானவை என்னென்ன ? ‘ என்று விசாரித்தார்.


‘நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடிநாதர் கோவில், பாண்டவர் சுனை என்னும் கொதி ஊற்று, தபால்கார அப்துல்காதர் ‘ என்றேன்.


தபால்கார  அப்துல்  காதர்  என்ற  கேரக்டர்  மீது  எப்படி  ஆர்வத்தை  ஏற்படுத்தி  மேற்கொண்டு  படிக்க  வைக்கிறார்  என்பது  கவனிக்க வேண்டியது


தமிழ்ச்சிறுகதை  வரலாற்றில்  முத்திரை  பதித்த  இன்னொரு  அற்புதமான  ஆரம்பம்


அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க..(  காஞ்சனை  −  புதுமைப்  பித்தன்)

(  பிச்சையின்  பின்குறிப்பு.   இந்த  ஆரம்ப  வரி்களுக்கு  ஏற்ப   சிறுகதை  ஒன்றை  எழுதச்செய்து ,  சுஜாதா  ராஜேஷ்குமார்  போன்ற பிரபலங்களிடம்  கதை  எழுதி  வாங்கி பிரசுரித்தது  அன்றைய  குமுதம்  வார இதழ்)


மறக்க  முடியாத  இன்னொரு  துவக்கம்


அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம்

இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.


”ஹோல்டான்! ஹோல்டான்!” என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். 

(  காலமும்  ஐந்து  குழந்தைகளும்   அசோகமித்திரன் )


அதேமாதிரி  முடிவும்  பளீர்  என  இருக்க வேண்டும்


உதாரணம்  பாருங்கள்   மறக்கவே  முடியாத  இறுதி  வரிகள்

என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!   (  புதுமைப்பித்தன்)


இப்படி  ஆரம்பமும்  முடிவும்  அமைந்துவிட்டால்   கதைக்கான,,நடை  அதுவாகவே  இயல்பாக  அமைந்து விடும்;

எழுதுபவன்  வாசகனுடன்  நேரடியாகப்  பேசுவது  கவிதை

எழுதுபவன்  தனது  பாத்திரங்களுடன்  உரையாடுவது  சிறுகதை

பாத்திரங்கள்  பார்வையாளனுடன்  பேசுவது  நாடகம்

இந்தத் தெளிவு முக்கியம்;

கதையை  சொல்லாதீர்கள்   கதையை  வாசகன்  முன்  நிகழ்த்திக்காட்டுங்கள்

ஏன்  என கேட்டன   மரபான   கதைகள்

(ஏன்  இத்தனை  துயர்கள்  என்பது  போன்ற  ஒரு விக்டிம்  கோணத்தில்)


ஏன்  கூடாது  என  திமிறுகின்றன  நவீன கதைகள்  (  இந்த  விதிகயை  மரபுகளை  ஏன்  உடைக்க்ககூடாது  என்பது  போல)

இந்தப்போக்குகளை  உள்வாங்க  வேண்டும்


ஒரு  உண்மை  சம்பவம்  கூறி  முடிக்கிறேன்  இதை  யாரேனும்  சிறுகதை  ஆக்குங்கள்  (  பிச்சையின்  பிகு   .   நான் எழுத  நினைத்தேன்  சூழல் அனுமதிக்கவில்லை)


ஒரு  சிறிய  இடைவெளிக்குப்பின்  என்  சொந்த  கிராமத்துக்கு சென்றிருந்தேன்.  ஊரே  அல்லோலகல்லோலப்  பட்டுக்  கொண்டிருந்தது


பதட்டமாக  இருந்த   அம்மாவிடம்  விசாரித்தேன்

நம்ம  ஊருல  வெள்ளம்  வந்துருச்சுப்பா  பக்கத்து  ஊருல பாதிப்பு  அதுதான்  ஹெல்ப்  பண்ண  போறோம்  என்றார்


வறட்சிக்குப்  புகழ் பெற்ற  நம்ம  ஊர்ல  வெள்ளமா  என   நம்ப  முடியாமல்  கேட்டேன்


மழை  வெள்ளமல்ல   அணையில்  உடைப்பு  ஏற்பட்டதால்  வெள்ளம்  என்றார்


சம்பவ  இடத்துக்கு  விரைந்தோம்


அந்த  கிராமம்  வெள்ளத்தால் முழுமையாக துண்டிக்கப்பட்டு  தீவு  போல  இருந்தது  .   உதவிப்பொருட்கள்  அவர்களை  அடைய  வழியே  இல்லை

  அப்போது   ராமகிருஷ்ண  மடத்தின்  இரு  துறவிகள்  துணிச்சலாக  ஒரு  முடிவுக்கு  வந்தனர்  மரத்தில்  ஒரு   கயிறைக்கட்டிவிட்டு   எதிர்  கரைக்கு  நீச்சலடித்து  சென்று   அங்கே  எதிர்முனையைக்கட்டினர்    அந்த  கயிற்றின்  வழியாக  இருவரும்  மாறி மாறி  பயணித்து  உதவிப்  பொருட்களை கொண்டுபோய்  சேர்த்தனர்

சற்றும்   ஓய்வற்ற  பணி   இதைக்கண்டு  பிறரும்  தைரியம்  பெற்று உதவிக்கு  வந்தனர்

மாலை வரை  பணி நடந்தது.   நீங்கள்  இல்லாவிட்டால்   நாங்களும்  குழந்தைகளும்  பசியால்  துவண்டிருப்போம்  என  துறவிகள்   கையைப்பிடித்து   கண்ணீர்  மல்க  நன்றி சொன்னார்கள்  கிராமத்தினர்

வெள்ளம்  வடிந்து  விட்டது  இனி  பயமில்லை  என  புன்னகையுடன் ஆறுதலாக  சொல்லிவிட்டுக் கிளம்பினர்  துறவியர்

      சற்று  தொலைவு  சென்றதும்  ஒரு  துறவி மற்றவரிடம்  பலவீனமாக  சொல்வது  எனக்கு  மட்டும்  கேட்டது

"  ஒரே பசி  மயக்கம்.  போயி ,  கொஞ்சமாவது  சாப்பிடணும்"

    ஓர்  ஊரின்  பசியையே   ஆற்றிய  இருவரும் அதுவரை ஒரு,  வாய் உணவுகூட  எடுத்துக்  கொள்ளவில்லை என்ற  உண்மை  உறைத்து ,  அதிர்ந்து  போய்  நின்றேன்

−−−

அதன்பின்  கேள்விகளுக்கு  எழுத்தாளர்கள்  பதிலளித்தனர்.  உணவு வழங்கலுடன்  நிகழ்வு   நிறைவுற்றது.   பங்கேற்பு   சான்றிதழ்  வழங்கப்பட்டது

............


வித்யா  சுப்ரமணியம்  குறிப்பிட்ட  உணர்வுப்பூர்வ   நிகழ்வு


என்  சிறுகதை  ஒன்று  பரிசுகளையும்  பாராட்டுகளையும் பெற்றது   அது  கற்பனைக்கதை  அல்ல   உண்மை  நிகழ்வு


என் கணவருக்கு  மதுப்பழக்கம் இருந்தது.   இதை  தொடர்ந்தால்  உயிருக்கே  ஆபத்து  என்ற   மருத்துவர்  எச்சரிக்கையை  அவர்  பொருட்படுத்தவில்லை

     ஒரு  நாள்  என்  வீட்டிலிருந்து  போன் வந்தது ,   என்  கணவர்  இறந்து  விட்டதாக .   இல்லத்திலேயே  மரணமாம்


  இதைக்கேட்டு  கலங்கிப்போய்  இருக்க வேண்டிய  நான்  ஒரு, வகை  மகிழ்ச்சி  அடைந்தேன்

அவர்  மரணம் எதிர்பார்த்த  ஒன்று   சாலையிலோ  பொது  இடங்களிலோ  அது  நடந்து  விடுமோ  என்பதுதான்  என்  பயமாக  இருந்தது.   இல்லத்திலேயே  இறப்பு  என்பது   நல்லதுதான்  என  தோன்றியது   இந்த  உணர்வை   இதில்  இருக்கும்  அவலத்தை  கதை  ஆக்கினேன்



Tuesday, September 13, 2022

தியாகராஜ பாகவதர் − திரிக்கப்பட்ட வரலாறு

 தியாகராஜ பாகவதர் – திரிக்கப்பட்ட வரலாறு

ஜனமேஜயன்


தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் சாப்பிட்டவர்.. கடைசி காலத்தில் வறுமையில் வாழ்ந்து இறந்தார். பொருட்செல்வஆர்வமூட்டியதும் நிலையற்றது.. அருட்செல்வத்தை தேடுங்கள் என தொலைக்காட்சியில் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அவர் சொன்னது எனக்கு . அவர் எப்படி தங்கத்தட்டில் சாப்பிடும் அளவுக்கு வாழ்ந்தார். பிறகு ஏன் வறுமையில் வீழ்ந்தார். அவர் அருட்செல்வம் தேடவில்லையா என தகவல்களை திரட்டலானேன். அந்த கால பெரியவர்களை விசாரித்தேன். சில புத்தகங்கள் படித்தேன். கிடைத்த பதில்கள் ஆச்சர்யமூட்டின. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடுவதன் அபத்தம் புரிந்தது. 


பாகவதரைப்பற்றிய பெரும்பாலான நூல்கள் எங்காவது கேள்விப்பட்டதை வைத்து எழுதப்பட்டு இருப்பதால் , அவற்றில் உண்மையை அறிய முடியவில்லை. விந்தன் எழுதிய , தியாகராஜ பாகவதர் கதை எனும் நூல் நன்கு ஆய்வு செய்யப்பட்ட நூலாகும் . ஆனால் அதை முழுமையான நூலாக கருத இயலாது.. சிறிய புத்தகம்.


இந்த நிலையில்தான் bhagavathar his life and times என்ற புத்தகம் படித்தேன். எழுதியவர் சுரேஷ் பாலகிருஷ்ணன். இவர் ஒரு வழக்கறிஞராவார்.


குண்டூசி , நாரதர் , விகடன் , மெயில் , சினிமா உலகம் , டாக் அ டோன்  என அந்த கால பத்திரிக்கை செய்திகள் , பலரது சந்திப்பு , சுரேஷ் பாலகிருஷ்ணனின் தந்தையார் ஒரு ரசிகனான சேகரித்து வைத்திருந்த பேப்பர் கட்டிங் போன்ற பல ஆதாரங்களை வைத்து முழுமையான ஒரு வரலாற்றை கொடுத்து இருக்கிறார் நூலாசிரியர்.


தொட்டதெல்லாம் பொன்னாகி தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர் பாகவதர்.  இதில் பெரும்பாலும் எல்லோரும் ஒத்துப்போகிறார்கள் . ஆனால் பொய்குற்றச்சாட்டு ஒன்றில் அவர் சிறை சென்றதுடன் அவரது சாதனைகள் முடிந்து விட்டதாகவும் மக்கள் அவரை புறக்கணித்து விட்டதாகவும் , அவர் யாருமற்ற அனாதையாக வறுமையில் வாழ்ந்து மறைந்ததாகவும்தான் பெரும்பாலும் எழுதி இருக்கின்றனர். அதை உண்மை என நினைத்துதான் , அந்த டீவி பேச்சாளர் பேசி இருக்கிறார்.


ஆனால் உண்மை நிலை வேறு என்கிறது புத்தகம். 

அவர் மீதான குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலை ஆனதும் நடந்தவை குறித்து புத்தகம் விரிவாக பேசுகிறது , தகுந்த ஆதாரங்களுடன்.


அவர் நடிகர் மட்டும் அல்லர். கர்னாடக இசை வித்வானும்கூட. குறிப்பாக தமிழ் இசையில் ஆர்வம் கொண்ட கலைஞர். அந்த இசைப்பயணம் முன்பை விட மிகுந்த வரவேற்புடன் தொடர்ந்தது

வானொலியில் அவர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்போது , அதை கேட்க கூடும் மக்கள் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

சினிமாவில் நடிக்கக்கூட நேரம் இன்றி பொது நல சேவையிலும் , அருட்செல்வம் தேடுவதிலும் ஈடுபட்டார்

சிறைக்குப்பின் வெளியான ராஜமுக்தி அவரது பழைய படங்கள் போல மாபெரும் வெற்றி பெறாவிட்டாலும் பெரிய தோல்வியும் அல்ல. சுமாராக ஓடியது

அடுத்து வெளியான அமரகவி வெற்றி பெற்றது. ( ராஜமுக்திக்கு பதிலாக இந்த படம் வெளியாகி இருந்தால் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கும் என பத்திரிக்கைகள் எழுதியதாக , வரலாற்று சுவடுகள் தொடரில் தினத்தந்தி சமீபத்தில் குறிப்பிட்டது )

பாகவதரை விட தெலுங்கு நடிகர்களுக்கான பகுதி அதிகம் இருந்ததால் , ஷியாமளா படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் பாடல்கள் வரவேற்பு பெற தவறவில்லை

தயாரிப்பு , இயக்கம் , நடிப்பு என பல வேலைகளை இழுத்துபோட்டு செய்ததாலும் , பல பொதுப்பணிகளில் ஈடுபட்டதாலும் , பாகவதரால் முழு கவனம் செலுத்த முடியாத புது வாழ்வு திரைப்படம் தோல்வி அடைந்தது.

இந்த இரண்டு படங்களும் நல்ல படங்கள் அல்ல என்பதால் தோல்வி அடைந்தனவே தவிர பாகவதரை மக்கள் புறக்கணிக்கவில்லை. 

இறக்கும்போதுகூட பங்களா , கார் என வசதியாகவே இருந்தார். வறுமையில் வாடவில்லை. மற்றவர்களுக்கு உதவும் இடத்தில்தான் இருந்தார்.


இப்படி பல தகவல்களை தருகிறது புத்தகம். அம்பிகாபதி என்ற படம் சிவாஜி கணேசனை கதா நாயகனாகக்கொண்டு தயாரிக்கப்பட்டது. அதில் சிவாஜியின் அதாவது அம்பிகாபதியின் தந்தை கம்பராக நடிக்க பாகவதரை அணுகினார்கள் . சிவாஜியை விட கூடுதல் சம்பளம் தருவதாக சொன்னார்கள். அதற்கு பதில் சொன்ன பாகவதர் “ சிவாஜியின் தந்தையாக நடிப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் இந்த படத்தில் வேண்டாம். நான் ஒரு படத்தில் அம்பிகாபதியாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் அப்பாவாக நடித்தால் ரசிகர்கள் மனம் புண்படும் , எனவே இந்த வாய்ப்பு வேண்டாம் ‘ என தேடி வந்த வாய்ப்பை கொள்கை ரீதியாக மறுத்தார் பாகவதர். 


இப்படி வாழ்ந்ததால்தான் , அவரும் கலைவாணர் என் எஸ் கேயும் சிறை சென்றபோது , திராவிட இயக்கம் அவர்கள் விடுதலைக்கு தீவிரமாக குரல் கொடுத்தது.


புரட்சி தலைவர் , இவரைப்பற்றி கூறும்போது..


ஒரு நிகழ்ச்சிக்கு பாகவதர் வந்தார்.  நான் கவனித்துக்கொண்டு இருந்தேன். அவர் வரும்போதே அவரைச்சுற்றி ஒளிவட்டம் சூழ்ந்து இருப்பது போல இருந்தது. அவருடன் பேச , கையெழுத்து வாங்க மக்கள் போட்டியிட்டனர். கொஞ்ச நேரத்தில் அவர் கிளம்பிவிட்டார்.  எத்தனையோ விளக்குகள் அங்கு ஒளிவிட்டாலும் , அவர் போனதும் அங்கு இருள்கப்பியது போல ஆகி விட்டது.

இப்படி சொல்கிறார் எம் ஜி ஆர்.


விகே ராமசாமி சொல்லும் ஒரு சுவையான சம்பவத்தை இங்கே பகிர விரும்புகிறேன்.


 அந்த காலத்தில் உச்ச நடிகர்களாக இருந்தவர்கள் , பாகவதரும் பியு சின்னப்பாவும்தான். இருவருக்குக்குமே தீவிர ரசிகர்கள் பலர் உண்டு. இருவரையும் சேர்த்து நடிக்க வைத்தால் அந்த படம் பெரும் வெற்றி பெறும் என நினைத்து பலர் முயன்றனர். ஆனால் அது உருப்பெறவில்லை.


ஆனால் ஒரு பொது நண்பர் இருவரையும் சேர்த்து ஒரு நாடகம் நடத்த ஒப்புதல் பெற்று விட்டார். பவளக்கொடி என்பது நாடகத்தின் பெயர். பாகவதர் அர்ஜுனனாகவும் சின்னப்பா கிருஷ்ணராகவும் நடித்தனர்.


நாடகம் பார்க்க பயங்கர கூட்டம். இரு சிகரங்கள் இணைவதால் ஒரே பரபரப்பு. பலருக்கு இருக்கை கிடைக்காமல் அரங்குக்கு வெளியேயும் பயங்கர கூட்டம். அந்த இரு கலைஞர்களுக்குமே ஒருவரை ஒருவர் வெல்ல வேண்டும் என மனதுக்குள் ஓர் ஆரோக்கியமான போட்டி.


 நாடகம் ஆரம்பித்தது. பாகவதர் தனக்கே உரித்தான இனிய குரலில் பாடியபடி அறிமுகம் ஆகும் காட்சி. அரங்கில் பயங்கர கரகோஷம் . உற்சாகம் , ஒன்ஸ்மோர் கோரிக்கைகள். மகிழ்ச்சியுடன் அடுத்தடுத்த காட்சிகளில் நடித்தார் அவர்.


சற்று நேரத்தில் சின்னப்பா அறிமுகம் ஆகும் காட்சி.  தன் பாணியில் கணீர் என பாடியபடி மேடையில் தோன்றினார் சின்னப்பா. சுமாரான கரகோஷம்தான். அந்த அளவுக்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆனாலும் ஏமாற்றத்தைக்காட்டிக்கொள்ளாமல் நடித்தார் சின்னப்பா. எப்படியாவது தன் முத்திரையை பதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.


ஒரு காட்சியில் அர்ஜுனன் இறந்து விடுவதாக நடிக்கிறான். கிருஷ்ணன் மோகினி வடிவெடுத்து , அவனை மடியில் போட்டு அழுவது போன்ற காட்சி.


சின்னப்பா , பாகவதரை மடியில் போட்டுக்கொண்டு , ஒரு ஒப்பாரி பாடலை இட்டுக்கட்டி , இசை நயத்துடன் பாட ஆரம்பித்தார். இப்படி க்ரியேட்டிவாக , அவ்வப்போது தோன்றுவதை பாடுவது அந்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.


இவரது ஒப்பாரியை எதிர்பாராத பாகவதர் சற்று திகைத்துபோய் , யோவ் சின்னப்பா.. என்ன இது என முணுமுணுத்தார். ‘ கொஞ்சம் பேசாம இரும் ‘ என அவரை அடக்கிவிட்டி , ஒப்பாரியை தொடர்ந்தார் சின்னப்பா.


அந்த ஒப்பாரிக்கு மக்களிடம் பயங்கர வரவேற்பு. கைதட்டல் விண்ணைப்பிளந்தது. ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என கேட்டு மீண்டும் மீண்டும் அவரை பாட வைத்தனர். சின்னப்பா என்றால் சின்னப்பாதான் என அனைவரையும் சொல்ல வைத்த மகிழ்ச்சி சின்னப்பாவுக்கு என்றால் சக கலைஞனுக்கு கிடைக்கும் பாராட்டில் பாகவதர்க்கும் மகிழ்ச்சிதான். இந்த சம்பவம் இருவர்க்கும் இடையே நட்பு ஏற்படுத்தியது.


இப்படி சக கலைஞனுக்கு மட்டும் அல்ல. பழைய நினைவுகளுக்கும் மதிப்பு கொடுப்பவர் பாகவதர்.


ராண்டார் கை ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்.


ஆல் இந்தியா ரேடியோவில் ஓர் இசை நிகழ்ச்சி. பாகவதர் பாடுவதற்காக செல்கிறார். ஓர் பக்க வாத்திய கலைஞரை பார்த்து அதிர்ச்சி. உடனே இவரை மாற்றுங்கள் . அப்போதுதான் பாடுவேன் என நிபந்தனை விதிக்கிறார். அனைவர்க்கும் குழப்பம். அந்த கலைஞர்க்கும் வருத்தம். ஒரு நிகழ்ச்சியும் வருமானமும் பறிபோகிறதே என வருத்ததுடன் கிளம்பிவிட்டார். பாகவதர் பாடி முடித்தவுடன் காரணம் சொன்னார். அந்த கலைஞரிடம அந்த காலத்தில் இசை கற்றேன். ஆகவே அவர் எனக்கு குரு போன்றவர். அவர் எனக்கு பக்கவாத்தியமாக இருப்பது மரியாதையாக இருக்காது என்பதாலேயே அவரை அனுப்ப சொன்னேன் என காரணம் சொன்ன பாகவதர் , அந்த குருவை சந்தித்து காரணம் சொல்லி விட்டு , தேவையான பணமும் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.


இசை மேதை ராம நாதன் ஒரு சம்பவத்தை சொல்கிறார்.


ஒரு நாள் இரவு இரண்டு மணி. என் கதவை தட்டினார் பாகவதர். காலை வானொலியில் ஓர் இசை நிகழ்ச்சி. உடனே இசை அமைத்து தாருங்கள் என்றார். நான் அப்போது ஆரம்ப நிலை கலைஞன். என்னைத்தேடி அவ்வளவு பெரிய திரை நட்சத்திரம் அந்த நேரத்தில் வந்தது ஆச்சர்யமாக இருந்தது . நான் இசை அமைத்து கொடுத்தேன். சில மணி நேரங்களில் அதை கற்றுக்கொண்டு , சிறப்பாக பாடி முடித்தார் பாகவதர்.


இப்படி சொல்கிறார் அவர்.



இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.


ஆனால் நாம் காணும் வரலாற்றில் திரித்தல்கள்தான் அதிகம்.


ஆக்ஸ்ஃபோர்ட் கம்பேனியன் ஆஃப் இந்தியன் தியேட்டர் (2004 ) என்ற புத்தகத்தில் , பாகவதர் முறைப்படியான படிப்போ , இசைப்பயிற்சியோ இல்லாமல் , முயற்சியால் முன்னேறியவர் என டெம்ப்ளேட்டாக எல்லோரையும் பாராட்டுவது போல பாராட்டி எழுதியுள்ளனர். ஆனால் பாகவதர் முறைப்படியான பயிற்சி பெற்ற கர்னாடக இசை வித்வான் ஆவார். அதுபோல அவர் நாடக நடிகருமாவார். இவற்றை பலர் குறிப்பிடுவதில்லை. ஒரு சினிமா நடிகர் என மட்டுமே நினைக்கிறார்கள்.


உதவும் பண்பு , கற்கும் ஆர்வம் , காண்போரை கவரும் அழகு , தோல்வியில் கலங்காத திடச்சிந்தை என வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தவர் பாகவதர். நல்லோரை காணலும் நல்லது , நல்லோரைப்பற்றி பேசலும் நன்று.


இவரைபோன்ற நல்லோரின் உண்மை வரலாற்றை தேடிப்படிப்பது நமக்கு , நம் மனதுக்கு , நம் வாழ்க்கைக்கு நல்லது. பொய் சுலபமாக கிடைக்கும், உண்மை தேடினால்தான் கிடைக்கும். தேடல் இருக்கும்வரை வாழ்வில் பசி  இருக்கும். பசித்து வாழ்ந்தால்தான் அந்த வாழ்வில் சுவை இருக்கும்.


Monday, August 1, 2022

கலைமகள் − ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதை பயிலரங்கு அனுபவம்

 கலைமகள்  மாத  இதழும்   ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம்  இதழும்  இணைந்து  சிறுகதைப்  பட்டறை  எனும் பயிலரங்கை  நடத்துகின்றன  என்ற செய்தி எனக்கு  சற்றே வியப்பளித்தது.

   ஆன்மிகம்  ,  ஞானத்தேடல் ,  சமூகத்தேடல்  என  பயணிக்கும்  ராமகிருஷ்ண மடம் ,   இலக்கியத்தில்  ஆர்வம் காட்டுவது சந்தோஷம் கலந்த  ஆச்சர்யம் அளித்தது

   இதில்  சுவாரஸ்யம்  என்னவென்றால் வேறு எங்கோ  போய்க்கொண்டிருப்பவர்கள்  தற்செயலாக நிகழ்ச்சி குறிந்து  அறிந்து  ,  சரி  போய்த்தான்  பார்ப்போமே என   கேஷுவலாக  வர முடியாது.

     ஒரு  மாதம் முன்பே  விண்ணப்பிக்க வேண்டும்   அதில்  தேர்வு  செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே  நிகழ்ச்சிக்கான  அழைப்பு அனுப்பப்படும்

       ராமகிருஷ்ண மடத்தில்  ஏசி ஹாலில்  மிகச்சிறப்பான  ஏற்பாடுகளுடன்  நிகழ்ச்சி  நடந்தது

    இனிமையான   ஆன்மிக  சூழலில்  இலக்கிய  நிகழ்வு  .   பெயரை  பரிசோதித்தபின்னே   அனுமதித்தனர்  அழகான  விவேகானந்தர் படம்,  அவரது  நூல் ,  பயிற்சிக் குறிப்பேடு , பேனா அடங்கிய  பொதி  அனைவர்க்கும்  வழஙககப்பட்டது


ஶ்ரீராமகிருஷ்ணருக்கு ஆரத்தி காட்டி  மந்திரங்கள்  சொன்ன  பிறகு  நிகழ்ச்சி தொடங்கியது

    எழுத்தாளர்கள்  வித்யா சுப்ரமணியம்  மாலன்  ,  தேவிபாலா  ஆகியோர்  சிறுகதை எழுதும்  நுட்பம்  குறித்து  வகுப்பெடுத்தனர்.


   கலைமகள்  ஆசிரியர்  கீழாம்பூர் சங்கரமணியன்  அவர்கள்  பேசியதை  தொகுத்துக்கூறி  மனதில்  பதிய வைத்தார்

       ராமகிருஷ்ண விஜயம்  ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர்  சென்னை  ராமகிருஷ்ண மடத்தின்  மேலாளர் சுவாமி  தர்மிஷ்டானந்தர் ஆகிய  ஆன்மிகவாதி்களுடம்கூட   சிறுகதைகள் குறித்து  சில  நிமிடங்கள்  பேசியது  சிறப்பாக இருந்தது

     அனைத்துக்கும்  சிகரமாக , உலகளாவிய  ராமகிருஷ்ண  மடங்களின்  துணைத்தலைவரான ஶ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மகராஜ்  அவர்களும்  அழகாக  ஆனால்  சுருக்கமாக  சிறுகதை குறித்த  தனது  நேரடி  அனுபவத்தை  பகிர்ந்து  கொண்டார்








       தனது  சிறுவயதில்  சிறுகதைப்போட்டி  ஒன்றில்  கலந்து  கொண்டு பரிசு பெற்றதை அவர் சொன்னது  சுவாரஸ்யம்.  ஒரு விஷயத்தை  சிறுகதை  போல  சொல்லும் தன் பாணி  பலரை  ஈர்த்து  வருகிறது  எனக்குறிப்பிட்டார்.    

         பேச்சுவாக்கில்  ஒரு  சிறுவனுடனான  ஒரு  அனுபவத்தை  ஆன்மிக  கருத்தை  வலியுறுத்துவதற்காக சொன்னார்.  அது  பிறகு மாலன்  தன்  பேச்சில் குறிப்பிட்ட  சிறுகதை பஞ்சாங்கத்துக்கு  முற்றிலும்  ஒத்துப் போனது..

  வரவேற்புரையாற்றிய சுவாமி அபவர்கானந்தர்  (  ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்  ஆசிரியர் )   தமிழ்ச் சிறுகதை வரலாற்றை  சுருக்கமாக பேசினார்

    செய்திகளை  மட்டுமே  வெளியிட்டுக் கொண்டு  இருந்த  அன்றைய  சூழலில்  பாரதியார்  தனது  சுதேசமித்ரன் இதழில் சிறுகதைகளுக்கு  இடமளித்து   தமிழில்  சிறுகதை  கலையை  ஆரம்பித்து  வைத்ததை  சொன்னார்  மாதவையா வவேசு  ஐயர் டிஎஸ்  சொக்கலிங்கம்  சிசுசெல்லப்பா  ராமையா  கநாசு  மெளனி என சிறுகதையை  வளர்த்த  முன்னோடிகளைப்பற்றியும்  சுஜாதா  சுரா  போன்றோர்  பார்வை  மணிக்கொடி காலகட்டம் என விரிவாக  பேசினார்;

சுருக்கம் , சுவை  , உணர்ச்சி/ நெகிழ்ச்சி வாசகனின் சிந்தனையை  தூண்டல்  போன்ற  சிறுகதைக்கு  தேவையான  அம்சங்கள்  குறித்துப்  பேசினார்.

  சிறுகதை  ஆசிரியனிடம்  ஆரம்பிக்கும்  சிந்தனை  வாசகனிடம்  தொடரும்படி எழுதப்படுவதே நல்ல  சிறுகதை என்றார்


அதன்பிறகு  பேசிய கீழாம்பூர்  சங்கரமணியன் சிறுகதைப்பட்டறையின்  தேவை  குறித்தும்  அதை  கலைமகள்  தொடர்ந்து  நடத்த நினைத்திருப்பதையும்  சொன்னார்.  தரமணியல்  தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து  முதல்,நிகழ்வு நடந்ததையும் இது,இரண்டாவது  நிகழ்வு என்பதையும் குறிப்பிட்டார்.

     உவேசா  ,   கிவாஜ  ஆகியோர்  வழியில்  கலைமகள்  இதழ்  தொடர்ந்து  தமிழ்ப்பணி ஆற்றும்  என்றார்


பிறகு  பேச வந்தவர்  எழுத்தாளர்  பாரதி சந்துரு


சிறுகதைகளின்  அவசியம்  குறித்துப்பேசினார்..  சிறுகதை  சமகாலப்பிரச்சளைப்  பேசுகிறது  அதிலிருந்து ,மீளும்  ஊன்று கோலாகவும்  சிறுகதைகள் உள்ளன என்றார்;

உதாரணமாக  சூடாமணி எழுதிய  அக்கா என்ற  சிறுகதை.


அக்கா எனும் கதையில், குழந்தை பெறாத ஒரு விதவை அக்கா தங்கையுடன் வசிக்கிறாள்

தனக்கு குழந்தை இல்லாத  சோகத்தை காட்டிக்  கொள்ளாமல்  தங்கையின் குழந்தையை  அன்பாக  கவனித்துக்கொள்கிறாள்.   அந்தக்குழந்தையும்  பெரியம்மா மீது  பாசமாக  இருக்கிறது  ,தங்கையும்  அன்பானவள்தான்

ஒரு  நாள்அவள் தங்கை வாய்தவறி ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறாள். அவள் வேண்டுமென்றே அதைச் சொல்லவில்லை. தங்கை குழந்தைக்குப் பால் புகட்டும் போது அது அழுகிறது. ‘உனக்கு இதெல்லாம் தெரியாதுக்கா. இப்படி எங்கிட்ட குடு’ என்று கூறி, குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக்கொள்ளுகிறாள். வாய்தவறி வந்து விழுந்த சொல் அது. அக்காவை அது புண்படுத்திவிடுகிறது. ஆனால் தங்கை அதை உணரவே இல்லை.

அக்கா  மன உளைச்சலில் வெளியே போய்ச் சுற்றிவிட்டு வருகிறாள். ‘எங்கே அக்கா போயிட்டே? இவ்வளவு நேரமாச்சேன்னு எனக்கு ஒரே கவலையாயிடுத்து..’ என்று தங்கை அங்கலாய்க்கும்போது அவளது அன்பு அக்காவுக்குப் புரிகிறது. தங்கையின் பெரிய குழந்தை, ‘பெரியம்மா! பசிக்கிறது!’ என்கிறாள்

பர்வதம் சிறிது தயங்கி. “குழந்தைகளுக்கு நீ வேணுமானால் சாதம் போட்றியா?” என்கிறாள். ‘

“ஏனாம்? நீயே போடுக்கா. உன் ஆசைக்கையால நீ போட்டு குழந்தைகள் எத்தனை தேறி இருக்கு, பாரு!” என்று தங்கை சொன்னதும் அக்காவின் இதயம் லேசாகி முகத்தில் சிரிப்புத் தோன்றுகிறது. குழந்தைகளூக்கு உணவு போடச் செல்லுகிறாள் என்று கதை முடிகிறது.

     ஒரு  வார்த்தை  உலகத்தையே  நரகமென  எண்ணவைக்கிறது  இன்னொரு  வார்த்தை  வாழ்வை  சொர்க்கமெனக் காட்டுகிறது   சூழல்கள்  மனிதர்கள் என  அனைத்தும்   கணம்தோறும் மாறும்  மாயத்தைச்  சொல்கிறது  கதை


சீசர்  என்ற  ஜெயகாந்தனின்  கதையை  அடுத்தபடியாக  பேசினார்

    ஜெயகாந்தனுக்கே உரிய  டிராமாட்டிக்  உச்சம்  கொண்ட     கதை  இது

    வாடகைக்கு  குடியிருக்கும் குடும்பத்தினர் நிறைந்த  ஒரு குடியிருப்பு  ஹவுஸ்  ஓனர் மகனின்  பார்வையில் நகரும்  கதை

       ஏன்  ஹவுஸ்  ஓனர்  பையனின்  பார்வை  என்றால்  அதுதான்  கதையை  இன்னும்  நெருக்கமாக்குகிறது.  பெரிய  அளவு  தீமையோ   பெரியஹீரோயிசமோ  செய்ய  முடியாத  ஒரு  சாட்சி  மட்டும்தான்  அவன்

          தமது  வீட்டில்  குடியிருக்கும்  ஒரு பெண்ணின் ஒழுக்கம்மீது   அபாண்டமாக  பழி  சுமத்தி ,  அவளது  கணவனை  அழைத்து வரச்சொல்கிறார் − ஆணையிடுகிறார் − ஹவுஸ் ஓனர். மற்ற குடித்தனக்காரர்கள்  எல்லாம்  சுவையான  மெகாசீரியலை  ரசிப்பது போல  அந்தப்பெண்ணின்  கதறலை  ரசித்தபடி  கள்ள  மெளனம் சாதிக்கின்றர்.

     


 மகன்  ஓடிப்போய்  கணவனை   அழைத்து  வருகிறான்.    கணவர் அமைதியாக  வந்து  என்ன  பிரச்சனை  என  விசாரிக்கிறார்.    என்  மனைவி  மீது  எனக்கு  நம்பிக்கை  இருக்கிறது   அனைவரும்  அவரவர்  வாழ்க்கைத்துணையை   நம்புங்கள்.  பிறர்  வாழ்வை  எட்டிப்பார்க்காதீர்கள்  என கம்பீரமாக  கூறுகிறார்.

     வேறு  வீட்டுக்குப்போய்விடலாம்  இது  மோசமான   மனிதர்கள்  வாழும்  இடம்  என்கிறாள்  மனைவி

    உலகம்  இப்படித்தான் இருக்கும்   பயந்தால்  வாழ  முடியாது என  ஆதரவாகப்பேசுகிறார்  கணவர்;

       சீசரின்  மனைவி  சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு  வாழ  வேண்டும்  என  பெண்களுக்கு  அட்வைஸ்  சொல்லாமல்  ஒரு, மன்னனுக்கு  உரிய  வீரம்  அமைதி  கண்ணியத்துடன்  பிரச்சனையை  சந்தித்த  அக்கணவன்  அந்த  இளைஞன் பார்வையில்  பேரரசர்  சீசராக  தோன்றுவதாக  கதை  முடிகிறது

    வாழ்க்கை  குறித்து  இப்படி  மேன்மையான  பார்வைகள்  உருவாக  சிறுகதைகள்  அவசியம்  என்று  பேசினார் பாரதி  சந்துரு


சிறுகதைகளை  எப்படி  வடிவமைப்பது 

சிறுகதைகளின்  வடிவங்கள் குறித்து வித்யா சுப்ரமணியம்  பேசினார்

           ராமகிருஷ்ண  மட நுாலகம்தான் தன்னை  நல்ல தொரு  வாசகியாக்கியது   நல்ல  வாசகன்தான்   நல்ல  எழுத்தாளன்  ஆக  முடியும்  என பேச்சை  ஆரம்பித்தார்

         திஜா எழுதிய  அம்மா  வந்தாள்  நாவல்தான்  எழுதத்துாண்டும்  உத்வேகம்  அளித்தது   என்றார்

     தானே  சொல்வது  போல  எழுதுதல்  ,  பல்வேறு  கதாபாத்திரங்கள்  சொல்வது போல எழுதுதல் ,   குளம்  மரம்  ஆகியவை  சொல்வதுபோல  எழுதுதல்  என   எப்படியும்  எழுதலாம்

    உருவகக்கதைகளும்  எழுதலாம்

ஆற்றங்கரை  பிள்ளையாரை  பாரததேசமாக  உருவகித்து  புதுமைப்பித்தன் ஒரு  கதை   எழுதியிருக்கிறார்    அந்த  பாதிப்பில்  நான்  எழுதிய  கதைதான்  "என்று தணியும்"  என்ற  கதை

       எளிய  விஷயங்களைக்கூட சிறுகதையாக்கலாம்     ஒரு  சிறுவன்  ரிக்ஷா  என்பதை  மழலை  மொழியில்  ரிஸ்கா என்பதை  சுவைபடக்கதை ஆக்கியிருக்கிறார்   அசோகமித்திரன்


அதேபோல  மிகப்பெரிய  துயரங்களை  இழப்புகளை   கதையாக்கலாம்    நான்  அப்படி  எழுதிய  கதை  ஒன்று  மிகப்பெரிய  புகழை  எனக்கு  ஈட்டித்தந்தது 

சிறுகதை  அதன் முதல் வரிக்கு முன்பே  ஆரம்பித்து  விட வேண்டும்   கடைசி வரிக்கு  பின்பும்  தொடர வேண்டும் என்றார்

அந்தக்கதைக்கு   அடிப்படையாக  அமைந்த  தனது  சோகத்தை   அவர்  சொன்னபோது  பலர்  கண்கள்  கலங்கின  அவர்  அதை   சொன்ன விதமும்  ஒரு  சிறுகதை   போல  இருந்தது


சிறுகதை எழுதும்போது  கவனிக்க  வேண்டியவை  குறித்து  தேவிபாலா  பேசினார்


தலைப்பிலேயே  பதில்  இருக்கிறது.  சிறுகதை  எழுதவேண்டுமானால்  கவனிக்கப்பழகுங்கள். சகமனிதர்களை  , சம்பவங்களை  கவனியுங்கள.   சும்மா  பார்ப்பது  அல்ல  கூர்மையான  கவனிப்பு தேவை

    எனது  முதல் சிறுகதை  கலைமகள் இதழில்  வெளியானது    அந்தவகையில்  கலைமகள்தான்  என்  தாய்வீடு

       சுமங்கலி பிரார்த்தனை  என்பது  அக்கதையின்  பெயர்.

    விகடன்  ஆசிரியர்  பாலசுப்ரமணியன்  அடிக்கடி  சொல்வார்      கண்ணையும் காதையும்  திறந்து  வைத்தால்  ஆயிரம்  கதைகள்  கிடைக்கும்;

   பேருந்துப்பயணத்தின்   போது   ஜன்னல்  வழியே  நான்  கண்ட  ஒரு  காட்சி − மடிசார்  அணிந்து ஒரு, பெண்  அதிவேகமாக ஸ்கூட்டரில்  பறந்த  ஒரு  காட்சி  − என் மனதில்  விதையாக  விழுந்து மடிசார்  மாமி  என்ற  புகழ்பெற்ற நாவல்  ஆனது

      எனவேதான் வாகன  வசதிகள்  வந்துவிட்ட பின்பும்கூட  பேருந்துகளில்  பயணிக்கிறேன்

    ஜவுளிக்கடை   உணவகங்கள்  என  எங்கும்  கதைகள்   கிடைக்கும்

   சின்னச்சின்ன  உணர்வுகளை  சின்னசின்ன  வாக்கியங்களில்  எழுதிப்பழகுங்கள்

        ஒரு  இளம்பெண்    நடந்து  கொண்டு  இருந்தாள்   நல்ல  மழை  பெய்து  கொண்டிருந்தது.  நனைந்துவிடாமல்  குடைபிடித்தபடி  போய்க்கொண்டிருந்தாள்

     இப்படி  எழுதாதீர்கள்

    குடைபிடித்தபடி  சென்று கொண்டிருந்த அவளுக்கு...     என  ஆரம்பித்து  அடுத்தடுத்து  செல்லுங்கள்

      குடை  அவள்   ஆகிய   இரு  சொற்கள்மூலம்  மழையையும்  ஒரு  பெண்  என்பதையும்  உணர்த்திவிட முடியும்

       ஊசி  போல   நறுக் என  மனதில்  பதிய  வேண்டும்

       ஆரம்பம்  முக்கியம்

    கோலம்  போட வாசலுக்கு  வந்தபோது , படமெடுத்து  ஆ டிக்கொண்டு  இருந்தது பாம்பு  என அதிரடியாய்  ஆரம்பியுங்கள்

அதேமாதிரி  முடிவிலும் ஒரு  பஞ்ச்  தேவை


வட்டார  பாஷை  வேண்டாம்  பொதுவான  தமிழில்  எழுதுங்கள்

வட்டார பாஷை தேவைதான்  ஆனால்  ஆரம்பகட்டத்தில்  வேண்டாம்

    தற்போது   பெண்கள்தான்   அதிகம்,,வாசிக்கின்றனர்  எனவே அவர்கள்  பிரச்சனைகளை  எழுதுங்கள்

  பெண்களால்  ஆனதுதான்  குடும்பம்  குடும்பங்கள்  சேர்ந்து  வீதி வீதிகள்  சேர்ந்தது  ஊர்     ஊர்கள் சேர்ந்ததுதான்  தேசம்  மற்றும் உலகம்

    என்னைப்பொருத்தவரை  திருவள்ளுவரை  மிகச்சிறந்த  சிறுகதை  ஆசிரியர்  என்பேன்.   எத்தனை  எத்தனை  கருத்துகள்   உவமைகள்

        அவசரமாக  கதை   வேண்டும்  என   பத்திரிக்கைகள்  கேட்டால்  உடனே  திருக்குறளைப்  புரட்டுவேன்

எந்தக்குறள்  கண்களில் படுகிறதோ அதை வைத்து  கதை  எழுதிவிடுவேன்

கனவுகளை   குறித்து  வைப்பது   நல்லது   சில  கனவுகள்  மறந்ததுபோல இருக்கும். யோசித்தால்  நினைவுக்கு  வந்து  விடும்.    குறித்து   வைத்தால்  கதை  எழுத  வித்தியாசமான   கருக்கள் கிடைக்கும்

        சின்னசின்னக்காட்சிகள்கூட சிறுகதைகளுக்கான  பொறிகளாக அமையலாம் 


ஒரு  வீட்டின் முன்  ஒரு,  ஜோடி செருப்புகள் கிடந்ததைக்கண்டேன்.


அவ்வளவுதான்    பத்திரிக்கையுலக பிதாமகன்  சாவி  அவர்கள்  பாராட்டி  தலைப்பிட்டு  (  தலைப்பு  வாசலில்  செருப்புகள்)  பிரசுரிக்கத்தக்க  ஒரு   கதை  தயாராகி விட்டது

      அந்த  கதை  இதுதான்

ஒரு  கணவன்  மனைவி..   கணவன்  மீது அளப்பரிய  அன்பும்  நம்பிக்கையும் கொண்ட  மனைவி.    

ஒரு  நாள்  கணவன்  அலுவலகம்  சென்ற பிறகு  இவள்  ஒரு   வேலையாக  வெளியே செல்கிறாள்.  அங்கே  ஒரு   பாலியல்  தொழில் நடக்கும்  வீட்டைக்கடக்கும்போது    செம   அதிர்ச்சி

கணவனின்  செருப்புகள் அவ்வீட்டு வாசலில்  கிடக்கின்றன

    அவன் மீதான  நம்பிக்கை  சுக்குநூறாக சிதறுகிறது    கண்ணீருடன்   வீடு  திரும்புகிறாள்

    இது  எதுவும்  அறியாத   கணவன் வழக்கம்போல   மாலையில்  வீட்டுக்கு வருகிறான்.    வந்தவன்  அதிர்ச்சியில் உறைகிறான்

   தாழிடப்பட்ட  அவன்வீட்டு  வாசலில் யாரோ ஒரு   ஆடவனின்  ஒரு  ஜோடி  செருப்புகள்

இந்தக்கதை   நல்ல   வரவேற்பைப்பெற்றது

என்ன  ட்விஸ்ட் என்றால்   தங்கள்  வாழ்வில்  நடந்த சம்பவத்தை  கதையாக  எழுதிவிட்டதாக   பக்கத்து வீட்டுக்காரர்கள்  சண்டைக்கு  வந்து விட்டார்கள்  (  அரங்கில்  பலத்த  சிரிப்பு )  கற்பனைக்கதை  என  சொன்னாலும்  நீண்ட  நாட்கள் என்னுடன்  பேசுவதையே  நிறுத்தி  விட்டார்கள்


        வர்ணனைகள்  அதிகம்  வேண்டாம்.  போதனைகளும்  வேண்டாம்

       ஒரு  பாத்திரத்தின்  குணாதிசயங்களை  தெளிவுற   வரையறுத்து விட்டால் ,  பல்வேறு  குணாதிசங்கள்  கொண்ட  பாத்திரங்களே கதையை எழுதி விடும்

நறுக்  என  சுருக்கமாக  சொல்லும்கலை  முக்கியம்  .   ஏழே வரிகளில்  ராமாயணம் ,  மகாபாரதத்தை  சொல்லி  வியப்பிவ்  ஆழ்த்தியவர்  கண்ணதாசன்


வரவு  எட்டணா  ,  செலவு பத்தணா ,  அதிகம் ரெண்டணா    கடைசியில்  துண்டனா  என ,படத்தின்  கதையை  பாடலின் சில  வரிகளில்  சொன்னதுபோல  கதையின்  முதல்  வாக்கியத்திலேயே  கதையை  சொல்லலாம்


ஒரு முறை   ஒரே  வார்த்தையில்  "கதை  எழுதச்சொன்னார்கள்

எழுதினேன்


கதை  :  ஐயோ


அவ்வளவுதான்  கதை..    பிறகு  விளக்கினேன்


(   அவரது  விளக்கம் ,    கதை  எழுத  தேவையான   பஞ்சாங்கம்  குறித்து  மாலன்  பேச்சு ,   கல்கி  குறித்த  சுவாரஸ்யம் ,    கெளதமானந்தர்  சொன்ன   கதை  ,   வித்யா  சுப்ரமண்யம் பகிர்ந்த "அவரது  கணவரின்  மறைவுச்  செய்தி    அடுத்த  பதிவில்)


இதன் தொடர்ச்சி












  




         



Tuesday, April 26, 2022

தனிமனித சுதந்திரமும் அரசுகளும்− ஜோகாவிச்

 ஆஸ்திரேலிய ஓப்ப


ன் டென்னிஸ் போட்டியில்  உலக நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்  கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது உலகமே அதிர்ந்தது

    கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் விளையாட முடியாது என்ற விதியில் இருந்து  யாருக்கும் விலக்கு தர முடியாது என்பது அரசின் முடிவு


 விதிகளை கண்மூடித்தனமான  பின்பற்றாதீர்கள்   ஒரு  வரலாற்று வீரனை இழந்தால் அந்தப் போட்டிக்குதான் இழப்பு என்ற குரலை அரசு கேட்கவில்லை.  பிடிவாதமாக  அவர் விசாவை ரத்து செய்து அவமானப்படுத்தினர்

    கடைசியில் அப்போட்டியில் நடால் வென்று உலக சாதனை புரிந்தார்


மெத்வதேவ் நடால் இறுதிப்போட்டி  அனல் பறந்த ஆட்டம் ,  வரலாற்றில் இடம் பெறும் போட்டி என்பது வேறு விஷயம்  .  ஆனால் அதில் ஜோகோவிச் இல்லாதது நடால் வெற்றியின் ஒளியை சற்றே மங்கச் செய்துவிட்டது

      எனக்கு தடுப்பூசி மீது வெறுப்பு இல்லை.   தடுப்பூசி கூடாது என்ற இயக்கத்தை நான் ஆதரிக்கவும் இல்லை  ஆனால்  மிரட்டலுக்கு அடி பணிந்து தடுப்பூசி நான் விரும்பவில்லை   தனி மனித சுதந்திரமா   பரிசுத்தொகையா எனறால் தனி மனித சுதந்திரமே முக்கியம்.    சாதனைகள் போனால் போகட்டும் என்று சொல்லிவிட்டார் ஜோகோவிச்


இந்த சூழலில் ,  விம்பிள்டன் போட்டியில் விளையாட  தடுப்பூசி கட்டாயம் கிடையாது என  அப்போட்டியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்

  தலைமை நிர்வாகி சால்லி போல்ட்டன் கூறுகையில்  அனைவரும்  தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது  ஆனால் அது நிபந்நனை அல்ல என்றார்


   இதே போல இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டியாளர்களும் அறிவித்துள்ளனர்;

  



Friday, April 22, 2022

இமையம் எழுதிய எங் கதெ ( நெடுங்கதை ) என் பார்வை

 

 எழுத்தாளர் இமையம் அவர்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பின்னணி கொண்டவை.

விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுப்பவர் , சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்பவர் என்பது உண்மை என்றாலும் இந்த அடையாளங்கள் இல்லாமல் பொதுவான மானுடம் , மனித உறவுகள் , அன்றாட வாழ்க்கை போன்றவற்றையும் இவர் எழுத்து பேசும்.

விளிம்பு நிலை  மக்களைக்குறித்த இவர் அக்கறை காரணமாக , இவர் எப்போதும் அவ்ர்களைப்பற்றியே எழுதுபவர் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது.


அப்படி இல்லாமல் தஸ்தயேவ்ஸ்க்கியின் வெண்ணிற இரவுகள் போல அழகான , பித்தேறிய காதல் கதைகளும் படைப்பவர்தான் இமையம்.

 நம் ஊருக்கு சூழலுக்கு தேவையான இவரது பெத்தவன் கதை ஒரு ஐரோப்பியனுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் இவரது என் கதெ என்ற  நெடுங்கதையை எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அவர்களால் அதில் விரவியிருக்கும் காதலை , ஆண் பெண் உறவின் மாய கணங்களை புரிந்து கொள்ள இயலும் . 


இது எங் கதெ.பத்து வருசத்துக் கதெ.என் ரத்தம்.என் கண்ணீர்.கதெ ஆரம்பிக்கறப்போ எனக்கு வயசு முப்பத்திமூணு.கதெ முடியறப்போ நாப்பத்திமூணு. இது என்னோடது மட்டுமில்ல. கமலாவோட கதெயும்தான்.


 இதுதான் கதை ,, இதுதான் கதையின் முடிவு என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டு கதை ஆரம்பிக்கிறது.


கதை முழுக்க முழுக்க வினாயகம் என்பவரின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது.

ஒருவர் பார்வையில் அதுவும் வட்டார பேச்சு வழக்கில் முழுக்கதையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதே முதலில் ஒரு பேராச்சர்யம்.


     உலகியல் பார்வையில் போதிய சாமர்த்தியம் இல்லாத , வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைஞந்தான் விநாயகம்.  அவ்வ்வூர் பள்ளியில் எழுத்தர் வேலையில் சேரும் கமலா மீது காதல் வயப்படுகிறான். அவள் கணவனை இழந்தவள் , இரு பெண் குழந்தைகள் .  இது தவறு  உனக்கு என ஒரு வாழ்க்கை தேவை     திரும்ணம் செய்து கொள் என பெற்றோர் சொல்வதை இவன் கேட்பதில்லை.


         அவள் பேரழகி என்பதால் ஊரே அவள் கடைக்கண்ணுக்கு காத்திருக்கிறது. ஆனால் அவளோ இவனை ஏற்கிறாள். 

அதற்கு காரணம் காதலா , காமமா , ஒரு பாதுகாப்பா , அல்லது சம்பளமற்ற வேலையாள் தேடுகிறாளோ என்பதெல்லாம் நமக்குத்தெரிவதில்லை .  காரணம் கதையில் அவளது எண்ண ஓட்ட்டங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்பது கதையின் மிகப்பெரிய அழகு. அவளை நியாயப்படுத்தியோ அவளை தரக்குறைவாகவோ சித்ர்கரிக்க வாய்ப்புகளை உருவாக்காமல் , கதை முழுக்க வினாயகம் பார்வையில் அவன் சொல்வதாகவே நகர்கிறது. 

  கமலா கிடைத்தது   தன் பாக்க்கியம்  , அவள் தன்னை ஏமாற்றுகிறாள் , தன்னை பயன்படுத்துகிறாள் , என அவனுக்கு அந்தந்த சூழலில் தோன்றும் எண்ணங்கள்தான் நமக்கு தெரிகின்றன. அவள் எதிர்வினைகள் , செயல்கள் நமக்கு அவன் மூலம் தெரிந்தாலும் , அவள் என்ன நினைத்து செய்கிறாள் என்பது வினாயகம் போலவே நமக்கும் புலப்படுவதில்லை.  


    மேலதிகாரி மிகவும் தொந்தரவு செய்கிறார் , எனவே சும்மா சில கொஞ்சல் குறுஞ்செய்திகள் அனுப்பினாலாவது அமைதியாக விலகி விடுவார் என நினைத்தேன் என மேலதிகாரி விவகாரம் வெடித்ததும் சொல்கிறாள். 


இது உண்மை போலவும் இருக்கிறது , உண்மை என்றால் விநாயகத்திடம் ஏன் மறைத்தாள் என்றும் அவனைப்போலவே நமக்கும்  தோன்றுகிறது ,  அவளுக்கு காசும் காமமும்தான் முக்கியம் என்றால் வினாயகத்தை விட ஆயிரம் பேர் கிடைப்பார்களே , ஏதோ ஒரு காதல் இருக்கிறதோ என்றும் தோன்றுகிற்து ( அவள் ஒரு போதும் காதல் போன்ற எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில்லை )   தன்னை காதலனின் சகோதரிகள் தேடி வந்து அவமானப்படுத்தியதைக்கூட கேலி கலந்த கிண்டலுடந்தான் சொல்கிறாள் “ இப்படி அப்படி இல்லை   செம திட்டு ஒரே கல்ல்யாண வீட்ல மூணு மைக் செட் கட்டுன மாதிரி இருந்துச்சு “ 

  அவனை சற்றும் பொருட்படுத்தாதவள் , எத்தனை நாள் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தாலும் சட்டை செய்யாதவள் . அப்படிப்பட்டவள் எத்தனை நாள் கழித்து வந்தாலும் அவனை ஏற்கிறாள் .   யாரிடமும் ஏமாறாமல் கச்சிதமாக கணக்குப்போட்டு காரியம் சாதித்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி  அப்படிப்படவள் , அவனை முழுமையாக நம்புவதும் , தன்னை கொல்ல வந்து இருக்கிறான் என்பது தெரியாமல் , ரத்தம் வருவதற்கு அவன் சொல்லும் லாஜிக் இல்லாத பொய்யை ( அவன் சொன்ன ஒரே பொய் )  நம்புவதும் அவளது வேறு ஒரு முகம் .  ஆனால் ஒரு போதும் அவள் தன் கணவனை மறக்கவில்லை. கணவன் இடத்தை இவனுக்கு தரவும் மாட்டாள் 

   எப்படி பலரால் நாஸ்தென்கா கதாபாத்திரத்தை மறக்க முடியாதோ அது போல இந்த கதையை படித்து முடித்தால் , கமலாவையும் மறக்க முடியாது.


  கவிதைகள் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட நுண்ணுண்ர்வு கொண்ட வினாயகம் கதை சொல்லும்போது நம்மிடம் நீதி கேட்கும் தொனியில் பேசுவதில்லை   ..  தன் மீதும் தவறு இருக்கலாம் என்பதை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறான். 

 


பணம் சம்பாதிக்கிறத்துக்காக எத வேணுமின்னாலும் செய்யுற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. பொட்டசிவுளுக்கு விதவிதமா நக வேணும். சீல வேணும்.. ...


நான்தான் நாட்ட திருத்தப்பொறன்னு ரயிலுக்கு குண்டு வைக்கிறவன் இருக்கான்... சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லன்னு தீச்சட்டிய ஏந்திகாட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஓலகத்திலெ இருக்கிற ஓவ்வொருத்தனுக்கும் ஓரு பைத்தியம். இந்த மாரி பைத்தியம் புடிக்காதவன் பொணந்தான். ஓலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்கு கமலா பைத்தியம்.

என்று தன்னிலை விளக்கம் அளிப்பவன் அவன்

கதை முழுக்க வட்டார வழக்குப் பேச்சு ரசிக்க வைக்கிறது 


இந்த விளையாட்டுக்கு நானாத்தான் போனேன் .,  அவ வேண்டாம்னுதான் சொன்னா   இது சாவுற விளையாட்டு ..  இது செகண்ட் சான்ஸ் கிடையாது


மொட்டைப்பாறையில் எம்மாம் மழை பேஞ்சி என்ன அவ காத்து நான் பஞ்சு


வாங்க போங்க  வா போ ஆகி வாடி போடி ஆச்சு..  குருத்து எல பழுத்த எலயா ஆய்டுச்சு


வெறி பிடிச்ச நாயா இருந்தாலும் உனக்குனு ஒரு நாய் இருக்கணும்


தம்பிக்கு தாழ்வாரத்துலதான் படுக்கணும்னு தலையில் எழுதி இருக்குனு அவளுக்குத் தெரியல


நான் கமலாகூட பானையும் மூடியும் போல ஆனதைப்பார்த்து ஊரே சொன்னுச்சு


அவனும் அவளும் கோழியும் கோழிக்கூண்டுமா இருந்தாங்க 


 நான் சொல்ற எதையும் ஏத்துக்காத மாதிரி இதையும் ஏத்துக்கல  விரியன் பாம்புக்கு இருக்கும் விஷத்துக்கு அதுவா பொறுப்பு


இப்ப ரெண்டு பேருக்கும்  இடையே பேச்சு வார்த்தை இல்லை... வார்த்தையாலதான் மனுஷங்க வாழறாங்க . வாழ முடியும்


     ஒரு பெண்ணின் அன்பு கிடைக்காதா ,  ஒரே ஒரு முத்தம் கிடைக்காதா என ஏங்கும் ஆண் , அவள் கிடைத்து விட்டால் அந்த சந்தோஷத்துக்கு நன்றியுடன் இருப்பதில்லை .


  அவள்: வேறு யாருடனும் பேசக்கூடாது  பேசினால் சிரித்தால் ஆசிட் வீச்சு , கத்திக்குத்து என வேறு ஒரு ஆளாக மாறி விடுகிறான்


ஆனால் வினாயகத்தின் மனதில் இருக்கும் காதலும் , அவன் படித்த நூல்களும் அவனை ஒரு காதலன் என்பதை தக்க வைக்கிறன்றன


       எனக்குக் காதல் எனும் அனுபவம் தந்தாய் . ஆண் என உணர வைத்தாய் இதற்கு மேல் என்ன... நீ யார் கூட வேணும்னாலும் இரு... எப்படி வேணும்னாலும் இரு . என நிறைவுடன் வாழ்த்து விட்டு விலகும்போது அமர் காதலர்களில் ஒருவனாக நின்று விடுகிறான்

       இமையம் எழுத்துகளில் மட்டுமல்ல....  தமிழ் நாவல்களில்  ஒரு வித்தியாசமான நாவக்ல் எங் கதெ 




Saturday, April 16, 2022

இடக்கை (எஸ்ரா ) ஒரு பார்வை



 உலகில்  அறவுணர்வு என  ஒன்று இருக்கிறதா என்பது புதிரான ஒன்று;

ரயிலில் பயணிக்கிறோம்.  ஒரு,நிமிஷம் சூட்கேசை பார்த்துக்கோங்க என யாரோ ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு  டீ,அருந்த செல்கிறோம்.  

99% வாய்ப்புகளில் நமது நம்பிக்கை காப்பாற்றப்படுகிறது. நமது சூட்கேஸ் பத்திரமாக இருக்கிறது;

இதற்கு நேர்மாறானவையும் உண்டு.  நாம் மதிக்கக்கூடிய  உயிரைத்தர சித்தமாக இருக்கக்கூடிய  ஒரு தண்பரிடம் திருமணம் ,  வீடு இடம் பாரத்தல் போன்ற பொறுப்புகளை ஒப்படைக்கிறோம்.  அவர் தனக்கு எது நல்லது என யோசித்து நமக்குப்பொருத்தமில்லா ஒரு முடிவை நம் மேல் சுமத்தி விடுகிறார். 


இந்த  இரண்டையும் நம்மில் பெரும்பான்மையினோர் அனுபவித்து,இருப்போம்


அறவுணர்வு  , நீதி என்பது உலகில்  இருக்கிறதா என்ற கேள்வியை வரலாற்றுப்பின்புலத்தில் அலசுகிறது இடக்கை நாவல்

அது என்ன இடக்கை ?


வலது கை இடது கை என இரண்டுமே நமக்குத் தேவையானவை. இரண்டும் சரியாக செயல்பட்டால்தான் நமது வேலைகளை சரிவரச் செய்ய முடியும்


ஆனால்  இடதுகை விருதுகள் , அவனை எல்லாம் லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணனும்  , அல்லக்கை ,  நொட்டாங்கை , இடது கால் முதலில் வச்சுறாதே என ஏன் இடதுகைப்பழக்கத்தினர் இழிவு செய்யப்படுகின்றனர் ?

   பூட்டு சாவி , சவரக்கருவிகள் , கதவு , வாகனங்கள் , டைப்ரைட்டர்கள் என ஏன் எவையுமே இடதுகையினரைப் பொருட்டாக நினைக்காமல் வடிவமைக்கப்பட்டுள்ளன ?


எல்லா தகுதிகளும் கொண்ட இடக்கை எப்படி தேவையின்றி சமூகத்தால் புறக்கணிப்புக்கு உள்ளாகிறதோ அதுபோல பால்ரீதியாக , மதரீதியாக ,  சாதிரீதியாக , வர்க்க ரீதியாக சமூகம் தொடர்ந்து இப்புறக்கணிப்புகளை செய்து கொண்டேதான்  வருகிறது.


நீதியுணர்வு,  இடக்கை புறக்கணிப்பு

என்ற இரண்டையும்  ஒருவித மாயாஜால கவிதை நடையில் பேசும் நாவல்தான் எஸ் ராமகிருஷ்ணனின் இடக்கை


    நீதி கிடைப்பது யாருக்குமே கடினமாகத்தான் இருக்கிறது

 ஒரு தந்தைக்கு இரு மகன்கள். ஒரு,பையன் தந்தை மீது எல்லையற்ற மரியாதையும் அன்பும் கொண்டவன்


இன்னொருவன் தந்தையை,மதிப்பதில்லை  எல்லாவித  அயோக்கித்தனங்களும் செய்கிறான் கடைசியில்  மனம் திருந்தி   தந்தையிடம் வருகிறான்


தந்தை அந்த வருகையை  பிரமாண்டமாக கொண்டாடுகிறார்.   அறுசுவை விருந்துகள்  கலைநிகழ்ச்சிகள் மகனுக்குப் புத்தாடைகள் என அம்ர்க்களம்


நல்ல  மகன் வருத்தமாய்  கேட்கிறான்  "எனக்கு நீங்கள் இப்படி சிறப்புகளை செய்ததே இல்லையே ?


தந்தை  சொன்னார்  


நீ எப்பவும் என்னுடன் இருக்கிறாய் அதில் எனக்கு பெரிய கிக் இல்லை .  வழிதவறிப்போய் திரும்பி  வந்தானே  அதில்தான் கிக் அதிகம்


தந்தை சொல்வது தர்க்கப்பூர்வ யதார்த்தம்தான்  ஆனால் தனக்கு அநீதி நிகழ்ந்ததாக ஒரு மகன் நினைக்கக்கூடும் அல்லவா

ஒரு கற்பனை உதாரணம்.. 

தனது தலைவரின் செல்வாக்கை உணராமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்காக தொண்டன் தீக்குளிக்கிறான் அவன் குடும்பம் திணறுகிறது


இதற்கிடையில்  தலைமை தவறை உணர்ந்து  தலைவருடன் இணக்கமாகி அவருக்குப் பதவிகள் தருகிறது.  தலைமைக்கு விசுவாசமாக இருப்பதுதான் தன் கடைமை  என்பதை  தலைவர் உணர்கிறார்;;

அத்தலைவருக்கு நீதி கிடைத்தது..  

 தீக்குளித்த தொண்டனுக்கு?

நீதி  , அறம் போன்றவை இன்றி மனித குலம் தழைக்க முடியாது,,  ஆனால் அறம் நீதி போன்றவற்றை  வரையறுத்தல் சிரமம்


  தனது ,கணவன்,தூமகேது சிறைக்கு சென்று விட்டதால் தன் புதல்வர்களுடன்,கஷ்டப்படுகிறாள் அவனது மனைவி நளா.


  நாயைப்பிடித்துக் கொடுத்தால் காசு கிடைக்கும் என்ற வாய்ப்பு கிடைக்கும்போது அந்த காசுக்கு ஆசைப்படாமல்  நாய்க்கு அடைக்கலம் தரும் மனநிலை கொண்டவள் அவள்


அப்படிப்பட்ட அவள் ,  கணவனின் தந்தையை  அநாதரவாக  வீட்டில் விட்டுவிட்டு  குழந்தைகளுடன் ஊரை விட்டு ஓடி விடுகிறாள்.

  காரணம் அங்கு இருந்தால்  ,  அவள் கைதாகி குழந்தைகள் அனாதைகளாகி விடும்.  முதிய மாமனாரை  அழைத்துக்கொண்டு ஓடுவதும் சாத்தியமில்ல

    அந்த சூழலில்  அந்த முதியவரை நிர்க்கதியாக விட்டுச் செல்வதுதான் அவளது,அறமாக இருக்க முடியும்.

      அந்த முதியவருக்கு அநீதி இழைக்கப்படுகிறதே என  யாரிடம் கேட்க முடியும் ?

      வாரிசுரிமைப்,போட்டியில்  மக்கள்,ஆதரவு,மிக்க  தனது சகோதரன் தாராவை  கொன்று  ஆட்சிக்கு வருகிறார்,ஒளரங்கசீப்.   இதுபோல அரசகுடும்ப, அநீதிகளுக்கு அதிக,முக்கியந்துவம் தராமல்  வரலாற்றில் பதிவாக  எளியவர்களுக்கு இழைக்கப்படும் கண்ணீரை  ,  அவர்களுக்கு கிடைக்காத நீதியைப் பற்றி பேசுவதுதான் இடக்கை நாவலின்  சிறப்பு

   இன்னொரு  சுவாரஸ்யம்..    அரச குடும்பம் சாமான்யர்களுக்கு இழைக்கும் அநீதி வழக்கமாக நடப்பது.  ஏதாவது ஒரு அபூர்வ கணத்தில் வரலாற்றைத்திசை திருப்பும் ஒரு சிறிய கருவியாக ஒரு சாமான்யனை  காலம் தேர்ந்தெடுக்கக்கூடும்   அப்படி ஒரு தருணத்தில் ஒரு சாமான்யன் இழைக்கும் அநீதியும் அழகாக பதிவாகியுள்ளது.

    குதிரைகள் ,  யானைகள் ,  படைகள் என பிரமாண்டங்கள் பேசப்படும் அளவுக்கு ஒரு புழு ,  தன்னைக் கடந்து செல்லும் படகைப் பாரக்கும் நீர்ப்பூச்சி போன்றவையும்  மனதில் நிற்கும்படி நாவலில் வருகின்றன


பேரரசர் ஒளரங்கசீப் இறந்ததும்  அவருக்கு மகளாக , தாயாக ,  அடிமையாக ,  உயிலில் இடம்பெறும் அளவு அவர் மனதில் இடம்பெற்றிருந்த அஜ்யா என்ற திருநங்கை  கைது செய்யப்படுகிறாள்.   அரசருக்கு எவ்வித தொடர்பும் இல்லாத தூமகேது எனும் தாழ்த்தப்பட்ட வஞ்சிக்கப்பட பிரிவைச் சேர்ந்த ஒருவன் கைதாகிறான்

        தவறே செய்யாத இவர்களுக்கு இழைக்கப்படும்  அநீதிதான் கதையா என்றால் இல்லை

      சாதீய ரீதியாக  பால் ரீதியாக  இடது கையாக நினைக்கப்படும் இவர்களது கதை மட்டுமல்ல

    பொதுவாக ஆணை வலது கையாகவும் பெண்ணை இடது கையாகவும் நினைககும் சமூகத்தில்  பேரரசரரின் மகள் ஜெப்புன்னிஷா என்ற கவிஞர் மக்பி  , தூமகேதுவின் மனைவி ,  சற்று நேரமே வந்தாலும் ஒளரங்கசீப்பிடம் விளையாட்டாகப்பேசி  அவருக்கு மறக்கமுடியாத ஞானத்தை வழங்கி ,  தனது அழகிய முகம் யானையால் சிதறிக்கப்பட்டு ,  பேரரசரின் கடைசித் தருணங்களில் அவரால் நன்றியுடன் நினைக்கப்படும் தாசிப்பெண் அனார் என பெண்களின் ஆளுமையை  அழுத்தமாகச் சொல்லும் நாவலும்கூட


    தனித்தனி  சிறுகதைகளாக விரிவாக்கம் செய்யக்கூடிய அளவுக்கு செறிவும் அழகும்கூட பல்வேறு பாத்திரங்கள்

      தனது வலது கையை வெறுக்கும் மனிதன் ,  இரட்டைத் தலை அரசன் ,  குள்ளமான தாசிப்பெண் ,  வசீகர ஓவிய ஆற்றல் கொண்டவன் ,  கண் தெரியாத இசைஞன் ,  வெறும் விளையாட்டுக்காக  கொள்ளை அடிக்கும்,அபூர்வ  இன மக்கள் ,  திருட்டை ஒரு அறம்மிக்க தொழிலாக கருதி அதற்குரிய அறத்துடன் அத்தொழிலை நடத்தும் ஆடு திருடன் ,  யார் ஆட்சியிலும் தமது நலனைப்,பேணிக் கொள்ளும் பண்டிதர்கள் ,  ஒளரங்கசீப்பின் கடைசி ஆசையை நிறைவேற்ற முயன்று உயிர்த்தியாகம் செய்யும் திருநங்கை ,  நான் முதலை மாதிரி தண்ணீர்தான் என பலம் என மதுக்கடையில்  ரகளை செய்பவன் ,  தனது பூனைக்கு எலி என பெயரிடம் ஒரு கலைஞன் ,  அந்தப் பூனை,

சமாதிப் பிளந்து வெளிவரும் மனிதக்கை எலும்பு,  விஷமேற்றும் இசை  என பக்கத்துக்குப் பக்கம் வண்ணமயமான  பாத்திரங்கள்


  நீதியை  அழிப்பதே  தமது  வாழ்க்கை எனக் கொண்டவர்கள்  பிஷாடனன் , ரெமியஸ்  ,   பண்டிதர்கள்  , விஸ்வாம்பரன் என்ற சாதி வெறியன் 

  நீதிக்கும்  அநீதிக்கும் இடையே சிக்கி அல்லாடுபவர்கள்  நளா ,  ஒளரங்கசீப் , சம்பு  போன்றோர்

    தமக்கான  அறத்துடன்  உறுதியாக,வாழ்ந்து மறைவோர் அஜ்வா , அனார் ,  பகுத்தறிவு பேசும் ஸச்சல் , சாகும் தருணத்திலும்  இளவரசனுக்கான பெட்டியை  சம்புவிடம் ஒப்படைக்கும் மர்ம நபர் .   அஜ்யாவின்  

விருப்பத்திற்கிணங்க பேரரசரின் தொப்பியை உரியவரிடம் அளிக்கும் முயற்சியில் உயிர் துறக்கும் அனுராதா, ஒடுக்கப்பட்டோருக்கு குரல் தரும் சக்ரதார்  போன்றோர்


இந்த  அறக்குழப்பங்கள் ஏதுமின்றி வாழ்ந்து மறையும்  எளிமையாக உடற்பசி , வயிற்றுப்பசி என வாழ்ந்து மறையும் மஞ்சா ,  காயத்ரி போன்றோர்


நம்மில் பெரும்பாலானோர் இவ்வகையில் ஒன்றாகத்தான் இருப்போம்


இவற்றைக் கடந்த ஒரு  பாத்திரமாக  இருப்பவன்தான் தூமகேது

     இவனும் அறக்குழப்பங்கள் அற்ற  அன்றாட தேவைக்கேற்ப வாழும் மனிதனாக இருந்தவன்தான். 

கதைகள்  அல்லது எழுத்து இவனுக்கு புதிதாக ஒரு வாழ்க்கை கொடுத்து மீட்சி அளிக்கிறது  என்பது இந்நாவலில் என்னை மிகவும் பாதித்த ஒன்று

     பேரரசரின்  தொப்பி  கடைசியில் இவனைத்தான்  வந்தடைகிறது   left hand has the last laugh


    தூமகேது  ,  வசீகர ஓவியன் நியோகி,  அபூர்வ சக்தி கொண்ட சிகிரி இன மக்கள்  ஆகியோர் இடது கையாளர்கள் என்பது  நல்லதொரு குறியீடு.

வற்புறுத்தலுக்காக இடது வகை ,   வலிமைக்காக இடது கை ,   தந்திரமான இடது கை என இடக்கைகளுக்குள் சுவையான சில பிரிவுகள்



பல  இடங்கள்  ஹைக்கூ படிப்பதுபோல இருக்கிறது

ஹைக்கூ கவிதைகளின்  கடைசி வரி ட்விஸ்ட்டை  கீழக்கண்ட  பத்தியில்  பாருங்கள்.  

     

     

     1 இன்னும்,சில நாட்கள் உயிர் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கோம். 


  2 எல்லாம் அல்லாவின் கருணை  என மனதுக்குள் நன்றி கூறிக்கொண்டாள். 

  கடைசி  வரி 

  3  உடலில் இருந்து ரத்தம் கொண்டிருந்தது


அதாவது  ,   ஒரு பணக்கார கிழவர்  உலக இன்பங்களை துய்க்க மேலும் ஆயுள் கிடைத்திருக்கிறது என  நன்றி  செலுத்துவது  வேறு

   சித்திரவதைக்கு உள்ளாகி  ரத்தம் சிந்தும்போதும் ,  கடவுளுக்கு வாழ்க்கைக்கு நன்றி செலுத்துகிறாள் என்பதுதான்  அவள் கேரக்டரை உயர்த்துகிறது

         நன்றி சகோதரர்களே என நிறைவுடன் தூக்குத்தண்டனை பணியாளர்களிடம் சொல்லி விட்டு விடைபெறும் அவளது மனநிறைவு  பெரிய மன்னர்களுக்கும் கிடைப்பதில்லை

     தூக்கில் தொங்கப்போகும் கடைசி தருணத்தில் அவளுக்கு  எதிர்பாரா அதிர்ஷ்டம்

     சாவதற்கு முன் ஒரு  நட்சத்திரம்தானே பார்க்க விரும்பினோம்   மூன்று  பார்க்க கிடைத்திருக்கிறதே  என்பதில் அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி

   இம்ரானாக இருந்த  அவனை  அஜ்வா என மாற்றிய தர்ஷன் பாத்திரத்தின்  கேரக்டர் curve ம் குறிப்பிடத்தக்க ஒன்று

       பெண்ணடிமைத்தனம் என்பதில் முக்கியப்பங்கு வகிப்பது  குழந்தை பிறப்பு.     குழந்தைகளுக்காக  பிடிக்காத  கணவனுடன்  அனுசரித்துச் செல்லும் பெண்கள் ,   திருமணததுக்கு முன் கர்ப்பம் அவமானம் என்ற  சூழலில்  தற்கொலைகள் , கருக்கலைப்பு சார்ந்த மரணங்கள் .   வேறு வழியின்றி பிடிக்காதவனை மணப்பது என  இது சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் .குழந்தைகளுக்காக  வாழ்வதை புனிதமாக்கி ,தாய்மை  என்ற பிம்பச்சிறையில்  மறைந்துபோன  எத்தனையோ மேரி க்யூரிக்கள் , அயன் ராண்டுகள் ,  இந்திரா காந்திகள் உண்டு


கர்ப்ப பை தான்  உன்னை  அடிமையாக்குகிறது என்றால்,அதை  அகற்றி எறி என பெரியார்முழங்கியது இதனால்தான்

குழந்தைகள்  தனி  உடைமைகள்  அல்லர் . அவர்களை  ஊர்தான்  வளர்க்க  வேண்டும்  தனி குடும்பம் என்ற  கர்ப்பிதமே  அர்த்தமற்றது என்ற  சூழல் வந்தால் உலகமே  இனிய உலகமாகி விடும்.   சொத்துச்சண்டைகள்  ,   சாதி மத,பேதங்கள்  என எதுவும் இராது.  விவாகரத்துகள் , கள்ளக்காதல்கள் , ஆணவக்கொலைகள்  போன்ற  சொல்லாடல்களே அர்த்தமிழக்கும் என்றொரு  பார்வை உண்டு 

இது சார்ந்து  ஒரு அற்புதமான  அத்தியாயம்  நாவலில் வருகிறது


ஆணாதிக்கம் குறித்த ஒரு சிறிய கதை வருகிறது

மண்ணால் ஆன ஒரு பெண்ணை ஒருவன் தவறுதலாக மணந்து விடுகிறான்.  ஆனாலும் பெருந்தன்மையாக அவளை  ஏற்கிறான். அவன் மனம் எப்படி திரிபடைகிறது.  அதனால்,அவள் எப்படி அழிகிறாள்" அவளை  அழித்து ரசிப்பதில் கிடைக்கும் போதை  ,   முழுதும் அழித்தபின் அடையும் சோகம் என ஒருகதை   இப்படி  ஆழமான குறியீட்டு ரீதியான  ஏராளமான சிறுசிறு பகுதிகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன

மனிதனின் அறவுணர்வு குறித்து எஸ்ராவின் சிறுகதை ஒன்றில் படித்திருப்போம்


பசிக்கொடுமை  வேறு வழியில்லாமல் கிழவி  தபால் செலவுக்கு கொடுத்த காசை வைத்து இருவர் சாப்பிடுகிறார்கள். அவளது பார்சலை கிழித்தெறிகிறார்கள்

அப்போது அவளது கடிதம் கண்ணில் படுகிறது.   தன்னைப்போல  கஷ்டப்படும்,ஒரு,சிநேகிதிக்கு  கிழவி கஷ்டப்பட்டு அனுப்பும் சில பரிசுகளும் ஐநூறு ரூபாய் நோட்டும் இருக்கிறது. அவளது சூழல் புரிந்ததும்தான்  அவளுக்கு தாங்கள் செய்த துரோகம் புரிகிறது    அந்த  500ரூபாயை அவர்களால் எடுத்துச்செல்ல முடியவில்லை

    இந்த இயல்பான அறவுணர்வு  சில  நேரங்களில் மறைந்து விடுவதுதான் விநோதம்    அதீதமான வறுமை  ,  அதீதமான  அதீகாரம் என அதுவும் இந்த அறப்பிழைக்கு காரணமாக  இருக்கலாம்;

      தன்னிடம் அன்பு  காட்டிய  ஒருவருக்கு செலுத்த வேண்டிய நன்றி  மன்னருக்கு தனது  ஆட்சிக்காலங்களில் நினைவில் இல்லை    மரணமடையும்போது  நினைவு வந்து  ஒரு  பரிசை அளிக்கச்சொல்லி உயில் எழுதி தன் உதவியாளரான அஜ்வாவிடம் பொறுப்பை  ஒப்படைக்கிறார்   கடும் சித்திரவதைகளுக்கு மத்தியிலும் இப்பொறுப்பில் இருந்து அவள் விலகவில்லை.   அவளிடம் இருந்து இப்பொறுப்பை, ஏற்ற அனுராதா என்ற திருநங்கையும்  இந்த பணியில்  உயிரத்தியாகம் செய்கிறாள்


இன்னொரு  புறம்

தன் கழுத்தில் கத்தி பாய்ந்து உயிர்பிரியவிருக்கும் கடைசி தருணத்திலும், இளவரசருக்கு சொல்ல வேண்டிய செய்தியை  சொல்லிவிட வேண்டும் என்ற  பொறுப்பில் வழுவாதிருக்கிறரர்  ஒருவர்


இவரிடம் இருந்து  அப்பொறுப்பை ஏற்கும் சம்பு அப்பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பதுதான் வாழ்வியல் வினோதம்  சம்பு  பொதுவாக அறப்பிழைகள் செய்பவனல்லன்.   தனது"கைகளில் இருப்பது இந்தியாவின் வரலாற்றையே  மாற்றக்கூடியது   அடுத்த மன்னனை  நிர்ணயம்  செய்யக்கூடியது  என  தெரிந்தாலும்  தற்காலிக பலனுக்காக  தன்னை  நம்பியவருக்கு துரோகம் செய்கிறான்.

   தனது பொறுப்புக்கு உண்மையாக இரு்ந்த  அஜ்யா மனநிறைவுடன் உயிர் துறக்கிறாள்.     துரோகம் செய்த சம்புவை  மரணம்வரை  அந்த  துரோகம் துரத்துகிறது.


இது  போல நாவலில்  கவனித்து  ரசிக்க வேண்டிய பகுதிகள் ஏராளம்





கண்டிப்பாக  படிக்க  வேண்டிய  நாவல்


தேசாந்திரி  பதிப்பகம்

    

  ரசித்த  சில வரிகள்


 பகல் மனிதர்களை பிரித்து வைக்கிறது. இரவு ஒன்று சேர்க்கிறது. உறக்கம் என்பது  இரவு புகட்டும் பால்.தாய் பால்புகட்டுவதுபோல இரவு உறக்கத்தை மனிதர்களுக்குப் புகட்டுகிறது

  


நல்லதை எடுத்துக்காட்ட ஒரு மனிதனை ஞானியாக்கும் கடவுள் ,  தீமையை அடையாளம் காட்ட தன்னை பாவையாக்கி கொண்டாரா



 




















Monday, April 4, 2022

திருவள்ளூர்புத்தக கண்காட்சி. சீறிய ஆட்சியர் நேரடி ரிப்போர்ட்

  கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சிறிய மாவட்டம்.  ஆனாலும்  சுரா , ஜெமோ என ஏராளமான இலக்கியவாதிகள் , அரசியல்வாதிகள் என அங்கிருந்து வந்து ஊர்ப்பெருமையைப் பேசுவதால் , கிஅனைவருக்குமே அம்மாவட்டம் குறித்த ஓர் அறிமுகம் உண்டு.
இப்படி எல்லா மாவட்டங்களையுமே சொல்லலாம் . பாரதிராஜா , இளையராஜா , வைரமுத்து , கவுண்டமணி , சத்யராஜ் , சாரு நிவேதிதா , எஸ் ரா , கோணங்கி என அனைவருமே அவரவர் மாவட்டங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர்

ஆனால் திருவள்ளூர் மாவட்டம் போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் தமது அடையாளத்தை இப்போதுதான் உருவாக்கி வருகின்றன

அந்த வகையில் முதல் புத்தக கண்காட்சி அங்கு இவ்வாண்டு முதல் நடக்கவிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று

    நான் சென்றிருந்தபோது நல்ல கூட்டம்
பொதுமக்கள் மட்டுமன்றி ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்

இத்தனை நூல்களை ஒருசேர பார்ப்பது அவர்கள் மனதில் நல்விளைவுகளை உருவாக்கி இருக்கும்

       ஆட்சியர் அலுவலகம் , RTO , தலைமை காவல் அலுவலகம் என முக்கியமான இடங்கள் அமைந்திருக்கும் பிசி ஏரியா என்றாலும் சென்னை நெரிசலைப் பார்த்த நமக்கு இந்த இடம் அமைதியான சூழலில் இருப்பதுபோல தோன்றுகிறது 
வரும் ஆண்டுகளில் சென்னைவாசிகளும் இதை தேடி வருவர், சென்னை புத்தக கண்காட்சியின் இரண்டாவது பாகம்போல அமையக்கூடும்

திருவள்ளூர் சுற்றுப்புறவாசிகளுக்கும் இது அரிய நிகழ்வு.

புத்தகக்கண்காட்சிக்கேற்ற சிறந்த இடம் திருவள்ளூர்

நான் சென்றிருந்தபோது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அங்கு வந்திருந்தார்

ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்குப்பின் முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் புத்தக கண்காட்சி நடத்துவதன் பரவசம் அவர் முகத்தில் தெரிந்தது.
பொறுமையாக ஒவ்வொரு ஸ்டாலையும் நின்று நிதானமாக பார்வையிட்டார்

என்ன நூல்கள் உங்களது தனிச்சிறப்பு ?
எதை வாசகர்கள் விரும்பி வாங்குகிறார்கள்  ..   எந்த எழுத்தாளர் விரும்பப்படுகிறார்   உங்களது அதிக பட்ச விலை புத்தகம் எது ?   எங்கே அதை எடுங்க பார்ப்போம் ? என வெகு தீவிரமாக ஒரு ( அந்தக்கால)   பத்திரிக்கையாளரின் முனைப்போடு பேட்டி எடுத்தார்

வண்ண புகைப்படங்கள்  கெட்டி அட்டை  ஆழ்ந்த கட்டுரைகள் என்பதால் இவ்விலையா? என்றார்

சார்  இதன் அசல் விலை 4000 .  நமது கண்காட்சிக்காக சிறப்பு விலையாக 1000 என விளக்கியதும் திருப்தியுடன் தலை அசைத்தார்

இலக்கியம் சார்ந்து இயங்குவதால் காலச்சுவடு ஸ்டாலில் சற்று அதிக நேரம் உரையாடினார்.  

இலக்கிய நூல்களை எல்லாம் மக்கள் வாங்குகிறார்களா என நம்பாமல் கேட்டார்  .  சார் , இப்போதெல்லாம் இலக்கிய நூல்கள்தான் அதிகம் விற்கின்றன என பதில் கிடைத்ததும் அவருக்கு மகிழ்ச்சி.

இது போன்ற தரமான ஸ்டால்களை அடுத்தமுறை அதிகரிக்க வேண்டும் என உதவியாளர்களிடம் பேசினார்
 
ஒரு காமெடி.   ஒரு  முக்கியமான பதிப்பகம் எந்த பரபரப்பையும் காட்டாமல் , அறிவிப்பு பதாகைகள்கூட இல்லாமல் சொற்ப புத்தகங்களுடன் தூங்கி வழிந்து கொண்டிருந்தது
என்ன இது என சற்று கோபமாக கேட்டார்.  புக்ஸ் , போஸ்டர்லாம் ரெடி சார். அரேஞ்ச் செய்ய நேரம் கூடி வரல என்பதுபோல சமாளித்தார் ஸ்டால்காரர்

இடம் கிடைக்காமல் பலர் முறையிடுகிறார்கள்   நீங்கள் கிடைத்த இடத்தை வீணடிக்கிறீர்களே என டோஸ் விட்டார்

ஆனால் மற்ற ஸ்டால்காரர்கள் தமது புத்தகங்களைக்காட்டி ,  அவற்றை விளக்கி அவரை கூல் செய்தனர்

பலருடன் போட்டோ எடுத்துக்கொள்ள முகம் சுளிக்காமல் சம்மதித்தார்

பாதுகாவலர்கள் இருந்தாலும் பொதுமக்கள்  வாசகர்கள் அவரை அணுக எவ்வித
கெடுபிடிகளும் இல்லை

பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகளக உரையாடினார்.    பல மாணவர்கள் அவரிடம் ஆசையாக ஆட்டோகிராப் வாங்கினர்

ஆட்சியாளர்களும் நிர்வாகமும் நினைத்தால்  நல்ல மாற்றங்களை கொணர முடியும் என்பதற்கு திருவள்ளூர் புத்தக கண்காட்சி உதாரணம்

அதன்பின்  மாவட்ட தலைமை நூலகம் சென்று விட்டு பிறகு நூல்களுடன் கிளம்பினேன்


    














 

Sunday, March 27, 2022

படிக்க வேண்டிய எட்டு ஷார்ட் & ஸ்வீட் நூல்கள்

 மழைமான்  நூல் குறித்த  உங்கள் பார்வை ஓரளவுக்கு  ஓகே  , மேலும்  நன்றாக எழுதும் அறிவை தங்களுக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை அல்லது  பிரபஞ்ச பேரியக்கத்தை வேண்டுகிறேன்

நிற்க ,   இதே போல இன்னும் ஒரு  நாலு நூல்கள்  சொல்லுங்களேன்  நாங்களும் படிக்கிறோம் என சில நண்பர்கள் கேட்கிறார்கள்

தமிழிலேயே  ஆகச்சிறந்த  நாலு நூல்கள் நான் படித்ததிலேயே பெஸ்ட்  ஃபோர் என்று இல்லாமல்    மழை மான் போல  ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக  அதே சமயம் ஆழமாக யோசிக்க வைக்கும் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்

இந்த எட்டில் நான்கை  ஷார்ட் லிஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

இது தர வரிசை அல்ல  .    ஒரு வசதிக்காக முதலில் ஆங்கில  நூல்,,  அடுத்து வரும் தமிழ் நூல்களை  அவற்றின் தலைப்பின் அடிப்படையில் அகர வரிசையில்...


1 Tuesdays with morris - Mitch Albom

   நோய் வாய்ப்பட்டு , கொஞ்சம்  கொஞ்சமாக மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தனது பழைய பேராசிரியரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசும் ஒரு ஆவணம் போன்ற நூல் அது.  மரணத்தையும் வாழ்வையும்  ஒரே நேரத்தில்  பார்க்கும் என் அனுபவம் உனக்கு உதவக்கூடும் என உற்சாகமாக தனது  பார்வையைப் பகிர்நது கொள்கிறார் பேராசிரியர்.   பல்வேறு விவகாரங்கள் குறித்த  ஆழமான பார்வைகள்


2 அஞ்சுவண்ணம் தெரு − தோப்பில் முகமது மீரான்


  இஸ்லாம் குறித்து  எதிர்மறையான நூல்கள் உண்டு   இஸ்லாமுக்கு  ஆதரவான பிரச்சார நூல்களும் உண்டு


 இஸ்லாமிய  கலாச்சாரத்தை  ,  அழகியலை ,   தொன்மங்களை , பொது சமூகத்துக்கு அது வழங்கும் அறிவுசார் கொடையை , கலைச்சொற்களை  பதிவு செய்யும் புனைவுகள் குறைவுதான்.    அஞ்சுவண்ணம் தெரு  வெகு அற்புதமாக"இப்பணியை இலக்கியரீதியாக செய்கிறது.    இஸ்லாமிய,பின்னணி என்றால் பொது,மானுடனின் இதயத்தை நோக்கிப்,பேசும் நாவல்


3,இரவு  −ஜெயமோகன்

    பகலில் உறங்கி இரவில் மட்டுமே விழித்திருக்கும்  ஒரு குழுவினர்  அவர்களது உலகம் என வித்தியாசமான ஒரு களத்தில் அமைந்த நாவல்.  நமது மனதின் இருளான பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது

4,ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு…

ஜீவ கரிகாலன்

இதை வெளிநாட்டு  கதைகளின் மொழி பெயர்ப்பு என சொன்னால் நம்பி விடுவோம்  அந்த அளவுக்கு புத்தம்புதிய கதைசொல்லல் யுக்திகள் ,  கச்சாப்பொருட்கள்  என அசத்தும் தொகுப்பு.   நூலின் எடை ,  கட்டமைப்பு,"வடிவம் போன்றவையும் உலகத்தரம்


5 கர்னலின் நாற்காலி  - எஸ் ரா


   கொரோனா  பொதுமுடக்க காலத்தை அர்த்தபூர்வமாக மாற்றியதில் எஸ்ராமகிருஷ்ணனின் குறுங்கதைகளுக்கு முக்கிய இடம் உண்டு.  மரணம் வந்தால் வரட்டுமே  இந்த,குறுங்கதைகளை படிக்கும்வரை வாழ்ந்தோமே  அதுவே போதும் என நிறைவளிக்கும் வகையில் அவர் நூறு குறுங்கதைகள் எழுதினார்.  பல்வேறு கருப்பொருட்கள்   பல்வேறு  நடை  என,மாயாஜாலம் காட்டினார்  அக்கதைகளின் தொகுப்பு


6 கன்னி,  பிரான்சிஸ் கிருபா

காதல் என்பதன் பித்து நிலையை  , ஒரு பெண் என்பவள் ஆணுக்கு எப்படி பொருள் படுகிறாள் என்பதை ஒரு வித பித்தேறிய கவிதை நடையில்,சொல்லும் நாவல்


7 நாடோடியின் நாட்குறிப்புகள் − சாரு நிவேதிதா

மின்னம்பலம் இணைய இதழில் வெளிவந்த  கட்டுரைகளின் தொகுப்பு. புனைவுக்கும்  நிஜத்துக்கும் இடையேயான இடைவெளியை அழிக்கக்கூடிய பின் நவீனத்துவ எழுத்தாளர் சாரு.  எனவே இவரது பல கட்டுரைகளில் புனைவுத்தன்மை இருக்கும்.    அந்தந்த கால கட்டத்தை ஆவணப்படுத்தினாலும் என்றென்றும் relevant ஆக இருக்க்கூடிய கட்டுரைகளின் தொகுப்பு


8 பெத்தவன்    இமையம்

   ஆணவக் கொலை என பேப்பரில் படிக்கிறோம்    அது போன்ற ஒரு  தருணத்தை இரு தரப்பினரின் பார்வையிலும் சொல்லக்கூடிய நாவல்.

இதை இமையம் தவிர வேறு யாரும் எழுதிவிட்டு உயிருடன் நடமாடி இருக்க,முடியாது

அந்தவகையில் பார்த்தால் இது போன்ற நாவல் வந்ததும் இல்லை  இனியும் வர முடியாது



Friday, March 25, 2022

வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான் − எஸ்ரா நூல் வாசிப்பனுபவம்



எஸ் ராமகிருஷ்ணனின்  மழைமான் சிறுகதை தொகுதி  சமீபத்தில் மனநிறைவளித்த ஒரு கதை தொகுப்பு


 எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது.

அறம் அழிவது அன்றாட செயல்பாடாகி வருகிறது;

என்ற  பின்னட்டைக்குறிப்புகள்  இந்த சிறுகதைத் தொகுதியை முடித்தபின்பு வேறோரு  பொருளைத்தருகின்றன


எளிய மனிதர்கள் என்பதே  ஒரு ரிலேட்டிவ் பதம்தான்;

உதாரணமாக  80களில்  எம்ஜிஆர் அசைக்க முடியாத சக்தியாக இருந்தபோது, கலைஞர் இனி வெல்ல வாய்ப்பில்லை என்றொரு சூழல் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்வை  ( கலைஞர் மீது அபிமானம் கொண்ட) நடிகர் ராஜேஷ் விவரித்திருப்பார்

ரயில் நிலையத்தில் தனது பெட்டியை தானே சுமந்து கொண்டு ,  தன் மனைவியாரோடு தன்னந்தனியாக கலைஞர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். என் மனம் கலங்கி விட்டது. எப்பேற்பட்ட அறிவாளி ,  தலைவர்   வரவேற்க்கக்கூட ஆள் இல்லாமல்  யாரோ ஒருவர் போல  வருகிறாரே  காலம் இவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குமா என  உருக்கமாக எழுதியிருப்பார்


அதே கலைஞர்  எம்ஜிஆர் மறைவுக்குப்பின் விஸ்வரூபம் எடுத்தது வேறு விஷயம்.   


ஒரு  பார்வையில்  மனிதர்கள் அத்தனைபேருமே  எளியவர்கள்தான்.  காலம்தான்  சிலரை  அவ்வப்போது ஒவ்வொரு இடத்தில் வைக்கிறது.ஒரு நிமிடத்தில்  மாறி விடக்கூடியதுதான்


போலீஸ் அராஜகங்களை  தம் ஆட்சியின்போது எகத்தாளமாக  நியாயப்படுத்துவதும், ,  ஆட்சி மாறியதும்  எளிய மனிதனாக  கதறுவதும்  சர்வ சாதாரணமான  காட்சி


இந்த தொகுப்பில்  நடுத்தர  வாழ்வு என்ற ஓர் உலகுக்குள் நடக்கும் இந்த  ஒரு  பரமபத விளையாட்டை  அழகாக பதிவு செய்துள்ளார்  எஸ்ரா


உயர் ரசனையுடன் ,  கம்பீரமாக வாழும் ஒரு குடும்பத்தலைவி  ஒரு கல்லூரி மாணவனின்  அத்துமீறல்  என்றொரு செயலால்மனம்நிலைகுலைவதும்  அந்த  சம்பவம் நிகழ காரணமாக அமைந்த மற்ற  நிகழ்வுகளும்  ஒரு  முழு வாழக்கையையே  பிரதிபலித்து விடுகின்றன; ( அவன் பெயர் முக்கியமில்லை சிறுகதை)

வாழ்க்கை என்பது  எண்ணற்ற  தற்செயல்களின்  விளைவுகள்.  நம்மை மீறிய  செயல்களே   நம்மை எளியவனாகவும் வலியவனாகவும் மாற்றிக்காட்டுகின்றன


ஒரு கணம் முன்பு  உண்டியல் விற்கும் தாத்தா முன்பு  வலியவளாக இருந்தவள்  அதே  நாளில் ஓர் விக்டிம் அல்லது அபலை ஆகிப்போகிறாள்

அந்த நிகழ்வு  வேறோரு,பெண்ணுக்கு  கிளுகிளுப்பானதாக  அவளது ஈகோவை  வலுவாக்கும்  சம்பவமாக  அமைந்திருக்கக்கூடும்

இதன் பின்னணியில் நிகழும்  ஒரு கொலை சம்பவமும் இந்த எளியவன் வலியவன்  இருமையை அடிக்கோடு இடுகிறது.   

இதில் தன்னை  வலியவனாக உணரும் மாணவன்  ஒரே ஒரு நிமிடத்தில்   எளியவனாகும் வாய்ப்பும் இருக்கிறது  


ஒழுங்கின்மைக்குள்  ஏதோ  ஒரு  ஒழுங்கு இருக்கிறது  என்கிறது அறிவியல்

அதுபோல  அறமின்மைக்குள்  வாழும் அறம்தான் உலகை  வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது


இன்னொரு ஞாயிற்றுக்கிழமை  கதையில்  வேலையில்லாமல்  நண்பன் அறையில்  தங்கி இருக்கும்  தாமோதாரன்  ஞாயிற்றுக்கிழமை  ஒரு நாளாவது  வயிறார  சாப்பிட விரும்புகிறான்.    அதற்கு  அவன்  ஒரு யுக்தி வைத்திருக்கிறான்.


யாராவது  ஒரு  வசதியான  பழைய  நண்பனை   நட்புரீதியாக  சந்திக்கசெல்வதுபோல   மதிய வேளை  சந்தித்து  சுவாரஸ்யமாக புகழ்ந்து பேசி  அப்படியே  சாப்பிட்டு விட்டு  வந்து விடுவான்


பாஸ்கர்  என்ற  நண்பனிடம் இந்த யுக்தி பலிக்கவில்லை   துச்சமாக  நடத்துகிறான்  பசி  தாங்க முடியவில்லை  பாஸ்கரின்  பாட்டி  கொரியர்  செய்ய கொடுத்த  50 ரூபாயில்  தனது  நண்பனுடன்  சாப்பிட்டு  விடுகிறான்

கதையின் வெடிப்பு  நிகழ்வது  அதற்குப்பிறகுதான்.    50 ரூபாய்க்கு  பாட்டியை  ஏமாற்றிவனால்  அந்த  கவரில் இருக்கும்  500 ரூபாயை  அபகரிக்க முடியவில்லை

வலியவன் எளியவனை வாட்டினால்  எளியவன்  தான் துன்புறுத்த  தன்னை விட எளியவன் ஒருவனை கண்டுபிடிப்பான் என்ற   அறவீழ்ச்சியால் சூழப்பட்ட ஒரு யுகத்தின் மத்தியில்  அவனது அறம் விழிக்கிறது

தனக்கு நிகரானவரை  தன்னை விட உயர்நிலையில் இருப்பவரை ஏமாற்றுவதை ஏற்கும் அவன் உள்ளம்,தன்னை விட கையறு நிலையில் இருக்கும்  ஒரு கிழவியை  − அதுவும் அவள்  தன்னிலும் எளிய ஓர் அபலைக்கு உதவ முனையும்போது −, ஏமாற்றுவதை ஏற்கவே முடியவில்லை

Games people play என்பதுபோல, மனிதர்கள்,விளையாடும் இந்தக்கருணையற்ற  விளையாட்டின் விளைவை அவன் கண் முன் பார்ப்பது அவனுக்கு ஒரு தரிசனமாக  ( vision)அமைகிறது



    அறம் என்பதையே  கேள்விக்குள்ளாக்குகிறது  ஓலைக்கிளி கதை

ஒரு காலத்தில்  ரவுடியாக  இருந்தவன்

 தற்போது திருந்தி விடுகிறான்  தன்

மகள் திருமணத்துக்கு கிட்டத்தட்ட பிச்சை எடுக்கிறான்.  


கடைசியில்  மகள் திருமணம் என்பதே பொய் என தெரி்கிறது.   வேண்டுமென்றேதான் செய்தேன்  எனக்கூறி  அதற்கொரு  லாஜிக்கலாக காரணமும் கூறி கடிதம் அனுப்புகிறான் குடும்பத்தினருக்கு அரிய பரிசு ஒன்றையும் அனுப்புகிறான்.அவன் செயலில் எவ்வித அறப்பிழையையும் நம்மால் காண முடிவதில்லை.    நமக்கே அவனைப்பார்க்க வேண்டும் என்ற  ஆசை ஏற்படுகிறது

  நம்மில் பலருக்கு உரிய சம்பளத்தை கேட்டுப்பெற பயம் ,   சாலை உடைசல் ,  குப்பை குவியல் இவற்றையெல்லாம் யாரிடம் முறையிடுவது என்று தெரிவதில்லை  தெரிந்தாலும் உரியவர்களிடம் முறையிட,தயக்கம்  , பயம் , சோம்பல்

இந்தக்கோழைத்தனத்தை  மறைத்து நம்மை நாமே  ஏமாற்றிக் கொள்ள ,  முகநூல் அவதாரம் எடுக்கிறோம்  .  விளாடிமின் புடின் ,   டிரம்ப் ,  மோடி , ஸ்டாலின்  ,  எடப்பாடி என அனைவரையும்  வீரமாக எதிர்க்கிறோம்.  வீரன்  சமூகப்போராளி  என  நம்மை நம்ப வைத்துக் கொள்கிறோம்.

இதை மழைமான் என படிமம் மூலம் அழகாக சொல்கிறது  மழை மான் கதை.   

சக பெண் ஊழியர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து  இன்ப அதிர்ச்சி அளித்து ஹீரோ ஆகும் முயற்சி அசட்டுத்தனமாய் முடிகிறது.  இப்படி அலுப்பூட்டும் வாழ்வில் சுவையாக ஏதேனும் செய்யும் பொருட்டு மான் ஒன்றை  பார்க்க  ஆசைப்படுகிறார் ஒருவர்  அந்த  தேடல் அனுபவத்தை  சாகசமாக ஆக்கிக் கொள்ளும்  சந்தர்ப்பங்களை  கோட்டை விடுகிறார். நிஜ மானை  தவற விட்டுவிட்டு  மழைமான் ஒன்றை  கற்பனையில் உருவாக்கி   மழை  நீர் மட்டுமே அருந்தும் கற்பனை  மானை  தான்  பார்த்ததாக  பிறரிடம்  அளந்து  விடுகிறார்.  அதை  தானும் நம்புவது மட்டுமல்ல   அதை  உண்மையில் பார்க்கவும் செய்கிறார்

ஆனால் மழைமான் கதையை  தன் மனைவியிடம் சொல்லும்போது அவள் சிரித்து விடுகிறாள்.  அவருக்கு  வலிக்கிறது.

முகநூலில் சமூக ஊடகங்களில் நாம் உருவாக்கி அலைய விட்டிருக்கும்  மழைமான்கள்  எத்தனை  எத்தனை


இந்த சிறுகதைத் தொகுப்பை  ஒரு  நான்லீனியர்  நாவலாகவும் வாசிக்க இயலும்.  

எளியவன்  வலியவன் எனும் இருமையை  இன்னொரு  கோணத்தில்  காட்டும் கதை ,  எதிர்கோணம்.   சிறந்த கேமிரா கலைஞனாக உருவாகி இருக்க வேண்டிய ஒருவரை  வாழ்க்கை பேருந்து நடத்துனராக ஆக்கி வைத்துள்ளது  அவரது வாழ்வின் ஒரு துளிதான் கதை.   எங்கோ பெற்ற அடியை  வேறு எங்கோ செலுத்தும் முடிவில்லா  அர்த்தமற்ற விளையாட்டு

இந்த விளையாட்டின் அபத்தம் நாம் முன்பு பார்த்த  கதையில் ஒரு கணத்தில் முகத்தில் அறைகிறது  இக்கதையில்  அந்த செயல்பாடு  நிகழ்கிறது


பாடல்களுக்கும்  நமக்குமான ( குறிப்பாக பெண்களுக்குமான ) உணர்வுப்பூர்வமான பந்தத்தைப்,பேசும் கதை ,   அபூர்வமான  பறவையை தேடும் அனுபவம்  முழுக்க முழுக்க  கவிதை நடையில் அமைந்த  மழைக்கதை என அனைத்தும்  அழியாத ஏதோ ஒன்றை  சொல்வதாகவே  தோன்றுகிறது

 வெறும் பிரார்த்தனை  கதையில் பொறுப்பற்ற   குடிகாரன ஒருவனால் குடும்பம்  அடையும்  மன உளைச்சல் காட்டப்படுகிறது   பொறுப்பற்ற  தந்தை  இரக்கமற்ற   வேலை சூழல்  கடுமையாக வேலை வாங்கும் முதலாளி என முழுக்க முழுக்க இருண்மையான வாழ்க்கை  ஆனால்  அந்த,முதலாளி ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு கிளம்பும்போதும் பத்திரமா போய்ட்டு வாம்மா என அன்பாக பேசி  ஒரு சாக்லேட் வழங்குவதில் அத்தனை வலியும் மறந்து போயவிடுகிறது

மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது

இந்த  தொகுதியின் செய்தி என எஸ்ரா எதுவும் உத்தேசித்து  இருக்க மாட்டார்  ஆனால் எனக்கு இத்தொகுதி  வழங்கிய"செய்தி இதுதான்

மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது


தூய வெளிச்சம் என்ற  கடைசிக்கதை எனக்கு  அவ்வளவு  நிறைவளித்தது.


எத்தனையோ கனவுகளுடன்  கலை உணர்வுடன்   ஒரு  மாளிகையை  எழுப்புகிறார்  குமாரசாமிப்பிள்ளை . வீட்டின் முகப்பில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் விளக்கு அந்த தெருவுக்கே இரவு முழுக்க நிலவு போல வெளிச்சமளிக்கும்


ஆனால்  குமாரசாமிப்பிள்ளையின் வாரிசுகளைப் பொருத்தவரை  அந்த வீட்டின்  கலையுணர்வோ   தூய வெளிச்சம் வழங்கும்  அவரது  நல்லெண்ணமோ பொருட்டில்லை..

பணம் மட்டுமே பொருட்டு.   எதற்கு  தெண்டமாக மின்விளக்கு என அந்த  விளக்கை  நிறுத்தி விடுகின்றனர்.  பிள்ளையின் மறைவுக்குப்பிறகு  அந்த வீடு இடிக்கப்படுகிறது

அப்படி  என்றால்  அவரது  ரசனை   நல்லெண்ணம் எல்லாம்  காரிருளில் மறைந்து  விட்டதா ? அந்த  வெளிச்சம்  யார் மனதிலும் இல்லாமல்  இணைப்புச்சங்கிலி  அறுந்து  விட்டதா என்பதற்கு  அற்புதமான   பதிலைத்தருகிறது கதை

     ரசனை   ,   நல்லெண்ணம் எனும் வெளிச்சம் என்றும் மறைவதில்லை  தனக்கான  கடத்தியை  தேர்வு  செய்து கொண்டு  அவை  காலம் காலமாக  தொடர்கின்றன

     ஒரு  திருடன்தான் இந்த வெளிச்சத்தை அடுத்த  தலைமுறைக்கு ஏந்திச் செல்கிறான் என்பது  சுவையான முரண்

அந்த  கட்டடத்தை   , அந்த  வெளிச்சத்தை  அணு அணுவாக  ரசிப்பவன்  அந்த  திருடன்.    அந்த  வீட்டிற்குள்  ஒரு முறையாவது  நுழைந்து பார்க்க வேண்டும் என திட்டமிட்டு  உள்ளே திருடச் செல்கிறான்

       வீட்டின் இருண்மை   அவ்வீட்டில் உள்ளோரின் மனநிலையை   அவனுக்கு  தெரிவிக்கிறது

    பிள்ளை  மரணத்துக்கு  இதயப்பூர்வமாக வருந்துபவன் அவன் மட்டுமே

      அந்த  வீடு இடிபட்டு தரைமட்டமாகும்போது அவ்வீட்டின் ஒரு சிறிய கல்லை  எடுத்துக் கொண்டு  அவன் செல்வதுடன் கதை  கவித்துவமாக முடிகிறது

       அந்த  தூய வெளிச்சம்  நம்முள்ளும் பரவுகிறது

    வித்தியசமான  துள்ளும் நடையில்  அனைத்து  கதைகளையும் படைத்துள்ளார்  எஸ்ரா . சும்மா  புரட்டிப்பார்க்கத்தான்  எடுத்தேன்   முடித்து விட்டுதான் வைத்தேன்

      இப்படி சுவையான நடையில் ஆழமான இலக்கிய நூல்கள் வருவது அரிது


தேசாந்திரி  பதிப்பகம் சிறப்பாக நூலை உருவாக்கியுள்ளது .  அட்டை ஓவியம் அருமை

      தொகுப்பின் பெயர்     மழைமான்

       பக்கங்கள்                       176

        விலை                                160