Sunday, June 20, 2010

கனவே , கலையாதே - ஒரு குழப்பவாதியின் டைரி குறிப்பு

" காலைல முதல் வேலையா ,அவளை பார்க்கணும் "

அவளை பார்க்க நண்பன் அழைத்தது, மகிழ்சிதான் என்றாலும் என்னால் முழுதாக மகிழ முடியவில்லை....

அவளை நான் லவ் செய்வதும் , ஆனால் காதலை சொல்ல தயங்கியதும், கடைசியில்நண்பன் உதவிக்கு வர சம்மதித்ததும் இப்போது தேவையில்லாத விஷயம்...

" நாளை காலை பார்க்க போகலாம் " என்று சொன்னானே , அதில் தான் சிக்கல்..

இரவு ரொம்ப நேரம் பேசிகொண்டிருந்தோம்... லேசா தண்ணி வேறு...அப்படியே தூங்கி விட்டோம்...

இப்போது எனக்கு என்ன குழப்பம் என்றால், " காலி அவளை பார்க்க போகலாம் " என்று உண்மையில் சொன்னானா , அல்லது கனவா ?

அவனை நேரடியாக கேட்கவும் மான பிரசின்னையாக இருந்தது....அனால், அது உண்மையாக இருந்தால், சீக்கிரம் கிளம்பியாக வேண்டும்...

என்ன செய்வது... அவனை , சுற்றி வளைத்து கேட்டேன் ..என்னடா,, இன்னிக்கு பிளான் மாற்றமில்லையே..

நான் சொன்னால் சொன்ன்னதுதான் , என்ற படி பேப்பர் படிக்க ஆரம்பித்தான் அவன்...

அவன் எந்த பிளானை சொல்கிறான்...அவளை பார்ப்பது என்றால், சீக்கிரம் கிளம்பவேண்டும்/... ஒரு வேலை வேறு எதாவது சொல்கிறானோ . நான்தான் கனவு கண்டு குழம்புகிறேனோ...

"கடவுளே ..காப்பாத்து " வாய் விட்டு அலறினேன்...


" என்னடா,,எதாவது கனவா"

நண்பர்கள் ஆர்வமாக அருகில் வந்தனர்..

அட..சீ...எல்லாம் கனவா...

மறுபடி குழப்பம்... இதுவாவது உண்மையா... அல்லது இதுவும் கனவா...

ஒரு வேளை , காலையில்கிளம்பு சொன்னதுதான் உண்மைய... இதுவெல்லாம் கனவா...

கனவு எப்போது கலையும்?

நடந்ததை அப்பிடியே பதிவிட தொடங்கினேன்,..

அனாலும் , இதுவும் கனவுதானோ என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது...

1 comment:

  1. உண்மையா... அல்லது இதுவும் கனவா...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா